Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் தனி ஈழத்தை வலியுறுத்தவில்லையாம்: சொல்கிறார் விஜயகாந்த்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் தனி ஈழத்தை வலியுறுத்தவில்லையாம்: சொல்கிறார் விஜயகாந்த்

தமிழ்நாட்டில் வெளிவரும் கிழமை இதழுக்கு தேமுதிக கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த் அளித்த பேட்டியில் “பிரபாகரன் தனி ஈழத்தை வலியுறுத்தவில்லை” என்றுக்கூறியுள்ளார். அந்த இதழில் ஈழம் பற்றிய கேள்விக்கான அவரது பதிலை கீழே கொடுத்துள்ளோம்.

கேள்வி: இந்தத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினை ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா?

பதில்: ” நான் அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு கலைஞனாக என் மன்றத் தொண்டர்களுடன் இலங்கைப் பிரச்னைக்காக உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தியவன் என்ற முறையிலும் சொல்கிறேன். இந்த தேதலில் இலங்கைப் பிரச்னை நிச்சயமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்”.

கேள்வி: இலங்கைப் பிரச்னைக்காக கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததோடு தனி ஈழம் அமைத்தே தீருவோம் என்கிறார். ஆனால், ஆரம்பத்திலிருந்து இப்பிரச்னைக்கு குரல் கொடுத்து வந்த உங்கள் ரியாக்ஷ்சன் குறைவாக இருக்கிறதே?

பதில்:”கலைஞர் தனது தள்ளாத முதுமையிலும் இந்தப் பிரச்னையை மையப்படுத்தி உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், யாரைக்கண்டித்து அப்படி இருந்தார் என்பதும், எவ்வவளவு நேரம் இருந்தார் என்பதும் உலகத்துக்கே வெட்ட வெளிச்சமான தகவல்தான். அதே சமயம் உதட்டில் தண்ணீரைத் தடவியபடி டாக்டர்களை அழைத்து பல்ஸ் பார்த்த கலைஞரின் நிலையைப் பார்த்து வேதனையாக இருக்கிறது.

தனி ஈழம் பற்றி இலங்கையில் தோழர் செல்வநாயகம் ஆரம்பத்தில் கோஷம் எழுப்பினார். பின்னர் பிரபாகரன் கூட இதை வலியுறுத்தாத நிலையில், ஜெயலலிதா இதைக் கூறி அரசியலாக்குகிறார். ஆனால், நான் ஆரம்பத்திலிருந்தே இந்தப்பிரச்னைக்கு ஆக்கபூர்வமான யோசனைகளைச் சொல்லி வந்தேன். உணவு, மருந்துகளை அனுப்பி உதவ வேண்டும் என்பதில் தொடங்கி ஐ.நா. தலையிடக்கோரி மெயில் அனுப்பும்படி கூறி, மக்களுக்கு ஐ.நா. சபை மெயில் ஐ.டி.யை தெரிவித்தேன். ஆக, இந்தப்பிரச்னையை வைத்து ஆதாயம் பார்க்க விரும்பாத ஒரே கட்சி தே.மு.தி.க மட்டும்தான் என்பது எல்லா மக்களுக்கும் தெரியும்”

நன்றி : குமுதம் ரிப்பொர்ட்டர் (14.05.2009)

மூலம்: மீனகம்.கொம்

Edited by விடியல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை கொஞ்ச பழ(ல)ம்பெரும் அரசியல்வாத்தியளாலை எனக்கு ஏற்கனவே அரைவிசராக்கிப்போட்டுது. இனி இதோடை முழுவிசராக்கப்போகுது. :D

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இவரை ரஜனிகாந் தான் காப்பாற்ற வேண்டும். :D

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை கொஞ்ச பழ(ல)ம்பெரும் அரசியல்வாத்தியளாலை எனக்கு ஏற்கனவே அரைவிசராக்கிப்போட்டுது. இனி இதோடை முழுவிசராக்கப்போகுது. :lol:

குமாரசாமி அண்ணா எனக்கும் ஒன்றுமே புரியவில்லை :D

காமடி,கீமடி பண்ணுறாங்களோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியலில் இளம் ரத்தமான விஜயகாந்த் சீறிப்பாய்கிறது. உண்மையில் நான் அடித்து வைத்து சொல்வேன் விஜயகாந்தின் நடிப்பு கலைஞரை விட மிஞ்சியது. தமிழன் அடிச்சு வச்சு ஏமாறலாம் விஜயகாந்திடம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:):o எட நாசமாப்போவாரே பின்ன என்னத்துக்காக போராடுறம் ரெண்டு கிலோ அரிசிக்கும் ஒருகிலோ பருப்புக்குமே ....... சாதரண அடிப்படை அறிவு கூட ஈழப்போராட்டத்தை பற்றி இல்லை அதுக்குள்ளே கட்சியும் காவோலையும்
  • கருத்துக்கள உறவுகள்

....... சாதரண அடிப்படை அறிவு கூட ஈழப்போராட்டத்தை பற்றி இல்லை அதுக்குள்ளே கட்சியும் காவோலையும்

கப்டன் பிரபாகரன் என்று படம் எடுத்தவர்தானே அந்த அறிவு போதும்தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:):o எட நாசமாப்போவாரே பின்ன என்னத்துக்காக போராடுறம் ரெண்டு கிலோ அரிசிக்கும் ஒருகிலோ பருப்புக்குமே ....... சாதரண அடிப்படை அறிவு கூட ஈழப்போராட்டத்தை பற்றி இல்லை அதுக்குள்ளே கட்சியும் காவோலையும்

2 கிலோ அரிசி,1 கிலோ பருப்பு, கலர் டிவி க்காகவா இத்தனை இடர்கள்,இழப்புகள், போராட்டம்???

" விஞ்ஞானி விஜயகாந்த்" :D வாழ்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பது ஒரு வியாபாரமே. அதைப் பற்றி பேச என்ன இருக்கு" என்று சொன்ன ஆள்தான் இந்த விஜயகாந்த்.

ஆமான்யா....விஜயகாந்த் சொன்னது உண்மைதான் ........

.

.

.

.

.

.

.

.

.

ஈழம் முழுவதும் தமிழனுடயதுதானே! பிரபாகரன் நாட்டை பிரித்து கேட்கவில்லை தமிழீழத்தை அபகரித்தவனிடமிருந்து திரும்பத்தான் எடுக்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.