Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

* ஒரு நேரத்தில் சிதறடிக்கப்பட்ட சிங்கள இராணுவத்தை கால அவகாசம் கொடுத்து, மீண்டும் கட்டியெழுப்பச் செய்து, .... அழிந்தோம்!

* நாலுகால் மிருகங்கள் வாழாத கேவலங்கெட்ட நிலையில் எம்மக்கள் இன்று!

*........

*எல்லாவற்றுக்கும் மேலாக பணம், பணம், ................ பணம் என்று ........... உலகிலேயே வாங்கப்பட முடியாதென்றிருந்ததை ............... கூறு போட்டு விற்றோம்!!

எல்லாமே நல்லாக நடந்தது!!!!!!!!!!!!!!!!!!!

நடந்தவை நன்றாக நடந்ததா இல்லையா என்பது எனக்க தெரியாது. ஆனால் உங்கள் தற்கால கருத்துக்ளை வாசிப்தால்தான் சொல்கிறேன் நீங்கள் நன்றாக நடத்துகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் இனி சாத்திரத்தைக் கேட்டப் போட்டு சும்மா இருந்தா தமிழீழம் கிடைக்காது. அதற்காக உழைக்க வேண்டும்.

தலையிடிழும் காய்ச்சலும் எமக்கு வராமல் இருக்குமட்டும் நாம் எல்லாம் பேசுவோம் !! நாட்டை விட்டு ஓடி வெளிநாடு வந்து இருக்கும் எம் போன்றோரின் தியாகத்தால் தான் இன்று சிங்களம் வெற்றி வாகை சூடியுள்ளது. இதை யாரும் மறுக்க முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

சிங்களவனுக்குத் தான் நன்றாக நடந்தது. இவ்வருடத்தில் நாங்கள் இழந்தது அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை இயக் கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.

பிறந்தநாள் : 26-11-1954.

பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.

ஜென்ம லக்னம் : கும்பம்.

ஜென்ம ராசி: விருச்சிகம்.

ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.

திதி: பிரதமை திதி.

ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.

பாதசார விவரம்

அனுஷம் 3-ல் சூரியன்.

கேட்டை 1-ல் சந்திரன்.

அவிட்டம் 3-ல் செவ்வாய்.

விசாகம் 2-ல் புதன்.

பூசம் 2-ல் குரு (வக்ரம்).

விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).

விசாகம் 1-ல் சனி.

பூராடம் 1-ல் ராகு.

திருவாதிரை 3-ல் கேது.

மூலம் 3-ல் மாந்தி.

அவிட்டம் 3-ல் லக்னம்.

ஜனன கால மகாதசை - புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.

இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.

தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.

இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.

சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.

கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.

சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.

சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.

07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.

சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-

08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.

17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!

கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!

இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற - மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் "தனித் தமிழீழம்' என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.

நக்கீரன்

சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸில் இருந்து ஒலிபரப்பாகின்ற தமிழ்ஒலி வானொலியில் தோழர் மதிமாறன் பகுத்தறிவு நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நாடி சோதிடம் (காண்டம்) என்பது மோசடியான ஒன்று என தோழர் மதிமாறன் கூறிய பொழுது, தொலைபேசயில் தொடர்பு கொண்ட ஒருவர் நாடிசோதிடம் என்பது உண்மையானது என உறுதியாக வாதிட்டார். தான் இதைப் பற்றி மிக நீண்ட ஆராய்ச்சி செய்திருப்பதாக கூறிய அவர் ஒரு செய்தியையும் சொல்லிச் சென்றார்.

நாடி சோதிடத்தின்படி 2011இல் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்பதுதான் அவர் சொல்லிச் சென்று செய்தி.

இப்படியான நேரங்களில் பகுத்தறிவாளர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. 2011இல் தமிழீழம் மலராது என்று வாதிட முடியாது. நாளையே தமிழீழம் மலர வேண்டும் என்ற சிந்தனையோடு போராடிக் கொண்டிருப்பவர்கள் 2011இல் தமிழீழம் மலராது என்று வாதிட்டால், அது பொருத்தமாகவா இருக்கும்?

நாடி சோதிடத்தைப் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்திருப்பதாக கூறி, அதற்காக வாதிட்ட அந்த நபர் பெங்களுரைச் சேர்ந்தவர், ஒரு சிறந்த தமிழினப் பற்றாளர். தற்பொழுது ஜேர்மனியில் வசிக்கின்றார். அவருடைய குடும்பமே தமிழீழ விடுதலைக்கு பல உதவிகளை செய்திருக்கின்றது.

பல விடுதலைப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்த குடும்பத்தைச் சேர்ந்த அவர் நாடி சோதிடத்தின் மிகப் பெரிய விசுவாசி. கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், கிரக சோதிடம் என்று எதை வேண்டுமானாலும் பொய் என்று அவருடன் வாதிடலாம். அதை அவர் ஏற்றுக் கொள்ளவும் செய்வார். ஆனால் நாடி சோதிடத்தை மட்டும் பொய் என்று அவர் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

தமிழ்நாட்டின் தலைவர்கள் சிலரோடு மிக நெருங்கிய நட்பைக் கொண்டிருக்கின்ற அவர், அவர்களையும் நாடி சோதிடத்தை நம்பும்படி செய்திருக்கிறார்.

நாடி சோதிடம் குறித்து நானும் அவருடன் பேசியிருக்கிறேன். அப்பொழுது அவர் எமது தேசியத் தலைவர் பற்றி நாடி சோதிடத்தில் உள்ளதைப் பற்றி எனக்கு வாசித்துக் காட்டினார். தேசியத் தலைவரின் ஊர், பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என்கின்ற அனைத்து விவரங்களும் அதில் அப்படியே இருந்தது. அத்துடன் 2011இல் தேசியத் தலைவர் வெற்றி பெற்று தன்னுடைய இலக்கை அடைவார் என்றும் கூறப்பட்டிருந்தது.

அவருடைய வீட்டிற்கு சென்ற வேறு சிலரிடம் தேசியத் தலைவர் பற்றி நாடி சோதிடம் கூறுவதை வாசித்துக் காட்டியிருக்கிறார்.

இப்படியான நம்பிக்கைகள் சில வேளைகளில் தனிப்பட்ட நன்மைகளையும் கொடுக்கும். கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை நாம் படுகின்ற மனத் துன்பங்களை இவரைப் போன்றவர்கள் பட்டிருக்க மாட்டார்கள். சோதிடத்தை வாசித்து விட்டு தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று உறுதியாக நம்பிக் கொண்டு நிம்மதியாக உறங்குகின்றார்கள். நாம் நிம்மதி இழந்து அல்லலுறுகிறோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=60632

நக்கீரா நன்றாக என்னை பார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.