Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"உண்மைகள் பிடிவாதமானவை": 'நிலவரம்' ஏடு

Featured Replies

"உண்மைகளை எவராவது வெளிப்படுத்தா விட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்" என்று சுவிசில் இருந்து வெளிவரும் 'நிலவரம்' வாரமிருமுறை ஏடு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

"உண்மைகளை எவராவது வெளிப்படுத்தா விட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்" என்று சுவிசில் இருந்து வெளிவரும் 'நிலவரம்' வாரமிருமுறை ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 'நிலவரம்' ஏட்டுக்காக சண். தவராஜா எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஏசுவார்கள் எரிப்பார்கள்

உண்மையை எழுது

உண்மையாகவே எழுது" - யோகர் சுவாமிகள்

"எழுத்தாளனின் பணியென்ன அதில் என்னென்ன இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது பற்றித் தெளிவாகத் தெரிந்த நிலையில் சுவாமிகள் கூறிய கருத்து அது.

ஒரு எழுத்தாளனுக்கு, சமூகச் சிந்தனையாளனுக்கு எதிர்ப்புக்கள் உருவாவது இயல்பானதே. அவற்றைத் தடுத்துவிட முடியாது. வேறு வகையில் கூறுவதானால் அத்தகைய எதிர்ப்புக்களே எழுத்தாளன் சரியான திசையில் பயணிக்கிறான் என்பதற்கான காட்டிகள் எனலாம்.

உண்மைகள் பிடிவாதமானவை அவற்றை நீண்ட காலத்துக்கு மறைத்துவிட முடியாது. அமாவாசை நாட்களில் சந்திரன் மறைந்து போவதை வைத்துக்கொண்டு சந்திரனே காணாமற் போய்விட்டது எனக் கூறி விடலாமா? அது ஒரு சில நாட்களில் தானாக வெளிப்பட்டுத் தானே ஆகும்?.

அந்த வகையில் உண்மைகளை எவராவது வெளிப்படுத்தாவிட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்.

இன்று புலம்பெயர் தமிழ் மக்களிடையே ஒரு உண்மையை மறைத்து விடுவதற்குப் பகிரங்க முயற்சி நடப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இதற்காக சிறுபிள்ளைத்தனமான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு போய் விடும் என்ற அப்பாவித்தனமான எதிர்பார்ப்புடன் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

அண்மைக்காலக் களச்சூழல் பற்றிய ஆதாரமில்லாத செய்திகள் பல இன்று இணையத்தளங்களில் உலாவருகின்றன. அவற்றைச் செய்திகள் என்று கூறுவதைவிட வதந்திகள் என்று கூறுவதே சாலப் பொருத்தமானது. ஆதாரமில்லாதபோது அவை வதந்திகள் தானே?.

அதேவேளை, வேறு சில செய்திகள் இணையத் தளங்களில் வந்த வேகத்திலேயே மறைந்து போகின்றன. ஏனென்று புரியவில்லை. முன்னரெல்லாம் ஒரு பரப்பான செய்தி வந்து விட்டால் நான் நீ என்று போட்டி போட்டு செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் இணையத்தளங்கள் தற்போது எதுவுமே தெரியாதது போன்று மௌனம் சாதிக்கின்றன.

உண்மைக்கு முன்பு நடுநிலைமை என்று ஏதும் இல்லை எனக்கூறும் ஊடகங்கள் நடுநிலைமையுடன் நடக்கவும் இல்லை, உண்மையை வெளிப்படுத்தவும் இல்லை.

சிறிலங்கா அரசுடனான ஊடக யுத்தத்தில் உயிர்ப்பலியான மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் போன்றோர் பணியாற்றிய ஊடகங்கள் கூட இது விடயத்தில் சரியான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதே கவலைக்குரியது.

ஊடகங்கள் மட்டுமன்றி ஊடகவியலாளர்கள் பலரும் கூட ஆமைகளைப் போன்று தமது தலைகளை உள்ளே இழுத்துக்கொண்டுள்ளார்கள்.

மே மாதம் 17 ஆம் நாளுக்கு முன்னர் தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் போன்று தம்மைக் காட்டிக் கொண்டிருந்த பலர் இன்று தேடினாலும் கிடைக்க முடியாத நிலையில் உள்ளனர். மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ள இந்த நேரத்தில் வாய் திறக்க வேண்டிய இவர்கள் வாய்மூடி மௌனியாய் இருப்பது அப்பட்டமான சுயநலமே அன்றி வேறில்லை. இவர்கள் இன்று செய்ய வேண்டியது தெளிவான கருத்துக்களை முன்வைத்து மக்கள் செல்ல வேண்டிய சரியான பாதைக்கு வழிகாட்டுவதே ஆனால், அது செய்யப்படவில்லை.

ஊடகவியலாளர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கின்றது. அதனால் தான் அவர்கள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றார்கள். கௌரவிக்கப்படுகின்றார்கள். அந்தக் கௌரவமும் மதிப்பும் அவர்கள் கொண்டுள்ள பொறுப்புக்காக அன்றி அவர்கள் ஆற்றுகின்ற பணிக்காகவே தரப்படுகின்றது.

எனவே, அவர்கள் மீது சமூகம் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. அந்தப் பொறுப்பை மறந்து செயற்படுவது சமூகத்துக்கும் தமது மனச்சாட்சிக்கும் செய்யும் துரோகமாகும்.

இன்று இலங்கைத் தீவில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுள் சிங்கள ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் முன்னைவிட அதிகமாக உள்ளமையை அனைவரும் அறிவோம். அண்மையில் கூட சுதந்திர ஊடகவியலாளர் இயக்கத்தின் முக்கியஸ்தரான போத்தல ஜெயந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களால் தாக்கப்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தன.

வேறு சில சிங்கள ஊடகவியலாளர்கள் தமிழர்கள் ஒரு சிலரின் காட்டிக்கொடுப்பு காரணமாக வெளிநாடுகளுக்குத் தப்பியோடியுள்ளனர். அவ்வாறு தப்பியோட முடியாத ஒரு சிலர் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையிலும் கடந்த மே 27 ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 11 ஆவது சிறப்பு கூட்டத் தொடரில் சுதந்திர ஊடகவியலாளர் இயக்க இணைப்பாளர் சுனந்த தேசப்பிரிய ஆசிய மனித உரிமைகள் பணிப்பகத்தின் சார்பில் அறிக்கையொன்றை வாசித்து ஊடகவியாளர்களுக்குப் பெருமை சேர்த்தார்.

சமூகத்தின் வழிகாட்டி எனக் கருதப்படுகின்ற ஊடகவியலாளர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கு சுனந்த ஒரு முன்னுதாரணத்தைப் படைத்திருக்கின்றார். இது தமிழ் ஊடகவியலாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு மாதிரி.

தமிழ்ச் சமூகம் குறிப்பாக புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஆரோக்கியமான கருத்தாடல் எதுவும் இல்லாது இறுகிப் போய்க் கிடக்கின்றது. இந்த இறுக்கமான சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கான தருணம் இதுவே அந்தக் கலந்துரையாடல் ஊடாக எடுக்கப்படும் ஆரோக்கியமான முடிவுகள் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்துக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும்.

அதற்கான முன் முயற்சிகளை எடுக்க வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையுமே சார்ந்தது. உரிய காலத்தில் செய்யப்படாத எதுவுமே பயனற்றதாகி விடும். எனவே விரைந்து காரியங்கள் ஆற்றப்பட வேண்டியது அவசியம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinam.com/full.php?2b34OOA4b...cf1e02cceUcYI3e

"ஏசுவார்கள் எரிப்பார்கள்

உண்மையை எழுது

உண்மையாகவே எழுது"

உண்மைக்கு முன்பு நடுநிலைமை என்று ஏதும் இல்லை எனக்கூறும் ஊடகங்கள் நடுநிலைமையுடன் நடக்கவும் இல்லை, உண்மையை வெளிப்படுத்தவும் இல்லை.

சிறிலங்கா அரசுடனான ஊடக யுத்தத்தில் உயிர்ப்பலியான மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் போன்றோர் பணியாற்றிய ஊடகங்கள் கூட இது விடயத்தில் சரியான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதே கவலைக்குரியது.

தமிழ்ச் சமூகம் குறிப்பாக புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஆரோக்கியமான கருத்தாடல் எதுவும் இல்லாது இறுகிப் போய்க் கிடக்கின்றது. இந்த இறுக்கமான சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கான தருணம் இதுவே அந்தக் கலந்துரையாடல் ஊடாக எடுக்கப்படும் ஆரோக்கியமான முடிவுகள் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்துக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும்.

இன்று யாழ்களம் இதற்கு ஒரு முன்னுதாரணமாக செல்கிறது!!! யாழ்கள நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள், அச்சம், அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் துணிந்து .................. மீண்டும் நன்றிகள்!!!!

இதுவரை நாம் விட்ட மிக பெரிய தவறானது, விமர்சனங்களை முடக்கியது, அதனால் சரி, பிழைகள் தெரியவில்லை!!! இறுதியில் ........................

இனியும் வேண்டாம்!!

Edited by Nellaiyan

போச்சுதடாப்பா!!!!!!! நெருடல்களின் ரோ வரிசையில் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் இணையப் போகுது!! ......... இறுதியில் நெருடல்தான் ரோவில்லாமல் ராவாக மிஞ்சப்போகுது!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியை மீள் பிரசுரம் செய்த புதினம் இணையத்தளமே இந்த இணையத்தளம் பூடகமாகச் சொல்ல விரும்பும் செய்தியை இன்னும் உத்தியோக பூர்வமாக தனது செய்தியாகச் சொல்வதற்கு தயக்கம் காட்டுகிறது. கட்டுரைகளை மட்டும் போடுகிறது.பின்னால் எதும் பிரச்சனை என்றால் அது கட்டுரையாளரின் கருத்து என்று கழுவிற மீனில் நழுவிற மீனாகச் செயற்படுகிறது.ஆக சரியான ஆதார பூர்வமான செய்தி இல்லை என்பதே இந்தத் தயக்கத்திற்குக் காரணம்.உண்மை எது என்று தெரியாத செய்தியை எழுதுவதை விட பேசாமல் இருப்பதே நடுநிலமையாகும்.

ஆனால் கட்டுரையில் கீழ் வரும் வாக்கியங்கள் எப்பொழுதும் உண்மையாகும்.

"உண்மைகளை எவராவது வெளிப்படுத்தா விட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளைஇ உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்,

எந்த உண்மையைப் பற்றி இங்கே எழுதப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தலைவர் வீர மரணம் அடைந்ததைப் பற்றியா? அதுதான் மறைக்கப்படாமல் ஆளாளுக்கு மாறி மாறி அறிக்கை மூலம் தினமும் அவரைக் கொன்று வருகிறார்களே? பிறகென்ன மறைக்க முயற்சித்தார்கள் என்கிற குற்றச்சாட்டு? இதை எழுதியவர் எது மறைக்கப்பட்டதாகக் கவலைப்படுகிறார் என்று தெரியவில்லை. அல்லது புதினம் தான் முன்னர் பிரசுரித்த "வழுதி" யின் கட்டுரைக்கு பலம் சேர்க்க இதை பிரசுரித்திருக்கிறதா அல்லது அதற்கு எதிராக பிரசுரித்திருக்கிறதா என்று தெரியவில்லை.

புதினத்துக்கு, எதைச் செய்தாலும் சொந்த மூளையோடு செய்யுங்கள். மற்றவனின் வாய்க்குள் உங்கட சொற்களைக் கொட்ட வேண்டாம்.

புதினத்துக்கு, எதைச் செய்தாலும் சொந்த மூளையோடு செய்யுங்கள். மற்றவனின் வாய்க்குள் உங்கட சொற்களைக் கொட்ட வேண்டாம்.

முன்பு புதினம் லக்பீமா, தி நேசன், பொட்டமமைன்( சரியான பெயர் தெரியவில்லை), அவுஸ்திரெலியா வானொலி, விகடன், குமுதம், நிலவரம் ,புலிகளின் குரல், ஈழ நாதம் , தினக்குரல், கொழும்பு ஊடகம் போன்ற ஊடகங்களில் இருந்து செய்தி வெளியிடும் போது அவற்றை இரசித்துப் படித்தீர்கள். ஆனால் எங்களுக்கு ஏற்காத செய்திகள் வரும் போது புதினம் மீது பாய்கிறீர்கள்.

விகடன், குமுதத்தில் வந்த நடேசனின் பேட்டிகள், வன்னி ஊடகங்களில் வந்த அரசியல் பொறுப்பாளர்களின் பேட்டிகள் முன்பு புதினத்தில் வந்தது. அப்பொழுது நீங்கள் ஒன்றும் கேட்கவில்லை

மே மாதம் 17 ஆம் நாளுக்கு முன்னர் தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் போன்று தம்மைக் காட்டிக் கொண்டிருந்த பலர் இன்று தேடினாலும் கிடைக்க முடியாத நிலையில் உள்ளனர். மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ள இந்த நேரத்தில் வாய் திறக்க வேண்டிய இவர்கள் வாய்மூடி மௌனியாய் இருப்பது அப்பட்டமான சுயநலமே அன்றி வேறில்லை. இவர்கள் இன்று செய்ய வேண்டியது தெளிவான கருத்துக்களை முன்வைத்து மக்கள் செல்ல வேண்டிய சரியான பாதைக்கு வழிகாட்டுவதே ஆனால், அது செய்யப்படவில்லை.

ஏன் புதினத்தில் கூட கிளிநொச்சியை இராணுவம் பிடிக்க முன்பு வன்னியில் இராணுவம் பிடித்த இடங்கள் பற்றிய விபரங்களைச் சொல்லவில்லை. கிளிநொச்சி பிடித்தபின்பு தான் இராணுவம் சொன்னதாக சில செய்திகளை விட்டது.

அதற்கு முதல் இராணுவம் கிளிநொச்சியைப் பிடித்தால் நாங்கள் மதவாச்சியைப் பிடிப்போம் போன்ற செய்திகள் தான் வந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.