Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நாடே இல்லாத தமிழனிற்கு பல அரசுகள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள். ஒருசில கைத்துப்பாக்கிகள்..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் பலவாகி பல்லாயிரம் பிரச்சனைகளாகி பின்னர் ஒன்றாகி. பலவித படையணிகளுடன் பலம்வாய்ந்த புலியாகி..முப்பத்தி நான்காண்டு காலப்போராட்டத்தின் பின்னர் முள்ளிவாயக்காலில் முடிவாகிப்போய்விட்டது...

முடிவாகிப்போன ஆயுதப் போராட்டத்தினைப்பற்றி விடைதெரியாத பல இலட்சம் கேள்விகள்..விடுபடமுடியாத பல புதிர்கள்..சந்திக்கும் ஒவ்வொருதமிழரிடமும் பேசப்படும் சந்தேகங்கள்..இவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதின் சஞ்சலங்கள்.. அத்தனைக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லிநிற்கும்..

எம்மண்ணில் தனியரசிற்காக நடந்த ஆயுதப்போராட்டம் முடிவிற்குவந்து எம் நிலத்தில் பல இலட்சம் உறவுகள் புலம்பெயர்ந்தும் புலன் பெயர்ந்தும் முட்கம்பிவேலிக்குள் முடங்கிப்போயிருக்கும் இந்நேரம்..புலம்பெயர்தேசத்தில

ிருந்து நாடுகடந்த தமிழீழத்தனியரசு என்றொரு அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது..பல குழுக்களாக இருந்த ஈழவிடுதலை இயக்கங்கள் இல்லாது போய் இறுதியில் ஒரு விடுதலைப்புலிகள் அமைப்பாகி அதன் ஆயுதப் போராட்டமும் முடிவிற்கு வந்த பின்னர்..தற்போதைக்கு ஈழத்திலுள்ள தமிழர்களால் ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாத சூழலில் புலம்பெயர்ந்து தேசங்களில் வாழும் சிலர் தாமே ஈழத்தமிழினத்தின் அடுத்தகட்ட போராட்டத்தினை நகர்த்தப்போவதாகக்கூறிக்கெ

  • கருத்துக்கள உறவுகள்

.இந்திய அரசியல் வாதிகளையோ குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்பி எந்தமுக்கிய முடிவுகளையும் எடுத்தல் தவிர்க்கப்படவேண்டும்.. (இதற்கு கடந்தகால உதாரணங்கள் பலவுண்டு)

இந்தியத்தமிழ்நாட்டு அரசியல்வா(வி)திகள் இதுவரையும் செய்த உசுப்பல்களை தள்ளி வைத்துவிட்டு எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதுதான் நாடுகடந்த அரசை தமிழருக்கான பயனுள்ள அரசாக மாற்ற முடியும்.

செயற்குழுவின் ஆரம்பம் இனி செயற்பாட்டுக் குழுவுடன் இணைந்து செயலில் செய்து காட்டும் விடயங்கள் தான் எதிர்காலத்தில் ஈழத்தமிழரின் விதியை எழுதும்.

இருக்கிறார் இல்லையென்று தங்கள் இருப்பை உறுதிசெய்த அனைத்துலக செயலகம் 5ம் திகதி வரும் ஞாயிறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்போகிறார்களாம். அவர் இல்லையென்று. ஆனாலும் அந்தச் செயலகத்தின் யேர்மனியத்தலைவர் அப்படி முடியாது என முரண்பட்டுள்ளார். அவரில்லையென்றால் சனம் காசு தராது இருக்கிறார் என்பதை அப்படியே விடுங்கொ இல்லாட்டி தான் தனிக்கட்சியென முடிவாகக் கூறியுள்ளதாக ஒபகவுசன் மனைக்குள்ளிருந்து சில குரல்கள் தெரிவிக்கின்றனர். சிலவேளை நோர்வேயிலிருக்கும் மன்னர் அதிரடி முடிவுகளைத் தள்ளிப்போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசியல் வாதிகளையோ குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்பி எந்தமுக்கிய முடிவுகளையும் எடுத்தல் தவிர்க்கப்படவேண்டும்.. (இதற்கு கடந்தகால உதாரணங்கள் பலவுண்டு

ஆயிரத்தில ஒர் வார்த்தை

Edited by putthan

2)தற்சமயம் சில கலாநிதிகளை மட்டுமோ ஆலோசகர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்மைப்பில் என்னைப்போன்ற சாதாரண கல்லா..நிதிகளையும் அனைத்துமக்களையும் இவர்களது வேலைத்திட்டங்கள் சென்றடையும் விதத்தில் மக்களுடன் மக்களாய் வேலைசெய்யக்கூடிய இன்னொரு கட்டமைப்பு உருவாக்கப்படல் அவசியம்..

கலாநிதிகளுடன் கல்லாநிதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம். ஆனால்.. இப்போதும்கூட கல்லாநிதிகளின் கைகளிலேயே சகல அதிகாரங்களும் இருக்கின்றது என்று நினைக்கின்றேன். இன்னும் சொல்லப்போனால் கல்லாநிதிகளுடன் ஒப்பிட்டுப் பார்ர்கும்போது கலாநிதிகள் தாயகப்போராட்டத்தில் சரியாக உள்வாங்கப்படவில்லை என்று சொல்லலாம். புத்திசீவிகளின் பங்களிப்பு குறைவாக இருந்ததும் / உள்வாங்கப்படாமல் இருந்ததும் அழிவுக்கு காரணம் என்று கூறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லலாம். புத்திசீவிகளின் பங்களிப்பு குறைவாக இருந்ததும் / உள்வாங்கப்படாமல் இருந்ததும் அழிவுக்கு காரணம் என்று கூறவேண்டும்.

சிறிலங்காவின்சுதந்திரத்திற

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தில ஒர் வார்த்தை

முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரின் பொழுது 15 ந்திகதி பொதுமக்களையும் காயமடைந்த போராளிகளையும் காப்பாற்ற இந்திய மத்திய அரசிடம் கதைத்து ஏதாவது செய்யச் சொல்லி மத்தியஅரசில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழகத் தலைவரிடம் புலிகள் அமைப்பு நேரடியாகவும் வெளிநாடுகளில் உள்ள சிலர் ஊடாகவும் வேள்டுகோள் வைக்கப்பட்டது..அந்தத் தலைவர்உடனடியாக தன்னுடைய கைத்தொலைபேசியையும் நிறுத்தியது மட்டுமல்ல அவரது உதவியாளரிடமும் இதுபற்றி யாராவது கதைத்தால் தன்னுடன் தொடர்பு கொள்ள முடியாதென சொல்லி விடும்படி கூறிவிட்டு.் பின்னர் எல்லாமே நடந்து முடிந்த பின்னர்...5 ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்று அறிக்கை வேறை விடுறார்..இதுதான் இவர்களது ஈழத்தமிழ் ஆதரவு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.