Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் தலைவர் அழிந்து விட்டாலும் சர்வதேச மட்டத்தில் அவர்களில் 15 இலட்சம் பேருள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அழிந்து விட்டதால் யுத்தம் முடிவுற்றதாக எண்ணக்கூடாது. இன்னும் சர்வதேச மட்டத்தில் 15 இலட்சத்திற்கு மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரிவித்த மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மலையகத்திலும் பயங்கரவாதம் நீறுபூத்த நெருப்புப் போல உள்ளதெனவும் தெரிவித்தார்.

மாத்தளை, குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த கடற்படை மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கிய எட்டுப்பேரைக் கொண்ட கொள்ளை கோஷ்டியைக் கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் சுனில் ஏக்கநாயக்க தலைமையிலான எட்டுப் பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை புதிய பொலிஸ் நிலையக் கட்டிட கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்று வந்த யுத்தத்திற்கு முடிவு கட்டிவிட்ட போதும் நாட்டில் ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்று வந்த யுத்தத்திற்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை.

வேலுப்பிள்ளை பிரபாகரன் இல்லையென்பதால் யுத்தமும் முடிந்துவிட்டதாக எண்ணக்கூடாது. இன்னும் சர்வதேச மட்டத்தில் 15 இலட்சத்திற்கு மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் உள்ளனர். இவ்வமைப்பின் சர்வதேச அமைப்பாளர் கே.பி.என்பவரின் தலைமையில் இயங்கும் இவர்கள் சர்வதேச வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள 5,000 மில்லியன் டொலர்களைத் தமது உடமையாக்கிக் கொள்ளப் போராடி வருகின்றனர்.

எனவே, இவர்கள் எந்தநேரத்திலும் மீண்டும் போராடும் நிலை ஏற்படலாம். எனவே, யுத்தத்திற்கு முடிவு கட்டிவிட்டதாகக் கருதி நாம் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது.

விடுதலைப்புலிகளினால் சர்வதேச மட்டத்தில் எடுக்கப்பட்டு வந்த தீர்மானங்கள் வடக்கு, கிழக்கில் அமுல்படுத்தப்பட்டு வந்தது. எனவே, வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டதால், சர்வதேச மட்டத்தில் அவர்கள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கருதிவிட முடியாது.

பொலிஸார் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும். தகுதியும், திறமையும், ஒழுக்கமும் மிக்க சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைத்துக் கொள்வதன் மூலம் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். பொதுமக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் பொலிஸார் செயல்பட வேண்டும்.

மேலும், மலையகத்திலும் பயங்கரவாதம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. புலிகள் இல்லாவிட்டாலும் புலிகளின் ஆதரவாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சிற்ழியர்களாக, டாக்டர்களாக, வர்த்தகர்களாக, இன்னும் பல்வேறு துறைகளில் இருக்கின்றனர்.

எனவே, பொலிஸார் இவர்கள் தொடர்பான விபரங்களையும் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

http://www.swissmurasam.net/srilanka/15324---------15--.html

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சர்வதேச மட்டத்தில் 15 இலட்சத்திற்கு மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் உள்ளனர். இவ்வமைப்பின் சர்வதேச அமைப்பாளர் கே.பி.என்பவரின் தலைமையில் இயங்கும்

அப்ப புலத்தில இருக்கிற எல்லாதமிழனும் புலிதான் ...மாற்றுக்கருத்தாளர் உட்பட...15லட்சம்...

சர்வதேச வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள 5,000 மில்லியன் டொலர்களைத் தமது உடமையாக்கிக் கொள்ளப் போராடி வருகின்றனர்.

:icon_idea: :icon_idea: :wub: :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே, இவர்கள் எந்தநேரத்திலும் மீண்டும் போராடும் நிலை ஏற்படலாம். எனவே, யுத்தத்திற்கு முடிவு கட்டிவிட்டதாகக் கருதி நாம் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது.

http://www.swissmurasam.net/srilanka/15324---------15--.html

பாட்டி ஆமை வடை சுட்ட கதை மாரி சொல்லுறான்.. சின்ன பிள்ளை தனமாய்

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்திலும் பயங்கரவாதம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது

மலையக மக்களின் வாழ்கையிலும் புகுந்து விளையாட சிங்களம் தயாராகி வருகிறது என்பதை தான் இவரின் செய்தி சொல்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலில் விடிவெள்ளி முளைக்கும்மின்னல் வெடிக்கும் மீண்டும் புயலடிக்கும் உயிர்த்தெழுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறை என்பது நீளும் வரை அதற்கெதிரான போர் என்பதும் நீளும் என்பதை எங்கோயோ படித்துவிட்டார்போல். அதுதான் எண்ணிக்கையை சும்மா அள்ளி வீசீயுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.