Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி பிடிக்க விழையும் “எடியுகேற்றட் பீப்பிளின்” வலை எல்லாம் ஓட்டை

Featured Replies

தெருவில போன ஏபீக்களின்ட இயந்திரத்தை பறிச்சு கால்நடையாய் வீட்டபோ எண்டு நடுரோட்டில் விட்டுப்போட்டு.. பனை மரத்தில் ஏறுறதுக்கு இயந்திரம் செய் எண்டு உதவிகேட்டால் நல்லாய்த்தான் செய்வாங்கள். :rolleyes:

தவிர, ஏபீக்களை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளியமையும் ஓட்டைகள் ஏற்பட்டமைக்கு காரணம். நான் அறிய ஈ பீ ஆர் எல் எவ் இயக்கம் ஆயிரக்கணக்கில மண்டையன் குழு என்கின்ற பெயரில சனத்தை தெருத்தெருவாய் சுட்டு சாக்காட்டி அந்த இயக்கத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைவிட ஏபீக்கள் மீது கையைவைத்து அதனால் வி.பு.அ க்கு ஏற்பட்ட எதிர்ப்பு - பாதிப்பு ஏராளம்.

இதற்கு உதாரணமாய் நான் படிச்ச யாழ் பரியோவான் கல்லூரி அதிபரை சுட்டு சாக்காட்டியதமூலம் வந்த எதிர்ப்பை சொல்லலாம். அதிபரை சுட்டு சாக்காட்டியமையால் சாதிக்கப்பட்டது என்ன என்று தெரியவில்லை. ஆனால்.. அதிபர் இப்படி மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டதன் காரணமாக எவ்வளவு எவ்வளவு எதிர்ப்பு தோன்றியது, எவ்வளவு எவ்வளவு எதிரிகள் தோன்றினார்கள், எத்தனைபேர் புலி எதிர்ப்பாளர்களாக மாறினார்கள் என்று நான் அறிவேன். இந்த ஆத்திரத்தில் சிறீ லங்கா இராணுவத்தில் இணைந்த யாழ் பரியோவான் கல்லூரி மாணவர்கள்கூட இருக்கின்றார்கள். இந்த ஆத்திரங்கள் இன்றும்கூட தொடர்ந்துகொண்டு இருக்கின்றது.

இப்பிடி பல ஓட்டைகள் இருக்கிது. பலர் இங்கு ஓட்டைகளை அடைக்கும் வேலையைவிட ஓட்டைகளை மறைக்கும்வேலைகளையே செய்கின்றார்கள் என்பதற்கு கீழ்வரக்கூடிய கருத்துக்களும் உதாரணமாக அமையலாம். :D

  • Replies 58
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தெருவில போன ஏபீக்களின்ட இயந்திரத்தை பறிச்சு கால்நடையாய் வீட்டபோ எண்டு நடுரோட்டில் விட்டுப்போட்டு.. பனை மரத்தில் ஏறுறதுக்கு இயந்திரம் செய் எண்டு உதவிகேட்டால் நல்லாய்த்தான் செய்வாங்கள். :rolleyes:

தவிர, ஏபீக்களை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளியமையும் ஓட்டைகள் ஏற்பட்டமைக்கு காரணம். நான் அறிய ஈ பீ ஆர் எல் எவ் இயக்கம் ஆயிரக்கணக்கில மண்டையன் குழு என்கின்ற பெயரில சனத்தை தெருத்தெருவாய் சுட்டு சாக்காட்டி அந்த இயக்கத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைவிட ஏபீக்கள் மீது கையைவைத்து அதனால் வி.பு.அ க்கு ஏற்பட்ட எதிர்ப்பு - பாதிப்பு ஏராளம்.

இதற்கு உதாரணமாய் நான் படிச்ச யாழ் பரியோவான் கல்லூரி அதிபரை சுட்டு சாக்காட்டியதமூலம் வந்த எதிர்ப்பை சொல்லலாம். அதிபரை சுட்டு சாக்காட்டியமையால் சாதிக்கப்பட்டது என்ன என்று தெரியவில்லை. ஆனால்.. அதிபர் இப்படி மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டதன் காரணமாக எவ்வளவு எவ்வளவு எதிர்ப்பு தோன்றியது, எவ்வளவு எவ்வளவு எதிரிகள் தோன்றினார்கள், எத்தனைபேர் புலி எதிர்ப்பாளர்களாக மாறினார்கள் என்று நான் அறிவேன். இந்த ஆத்திரத்தில் சிறீ லங்கா இராணுவத்தில் இணைந்த யாழ் பரியோவான் கல்லூரி மாணவர்கள்கூட இருக்கின்றார்கள். இந்த ஆத்திரங்கள் இன்றும்கூட தொடர்ந்துகொண்டு இருக்கின்றது.

இப்பிடி பல ஓட்டைகள் இருக்கிது. பலர் இங்கு ஓட்டைகளை அடைக்கும் வேலையைவிட ஓட்டைகளை மறைக்கும்வேலைகளையே செய்கின்றார்கள் என்பதற்கு கீழ்வரக்கூடிய கருத்துக்களும் உதாரணமாக அமையலாம். :D

அதுதான் அவர் கட்டுரையின் ஆரம்பத்திலேயே ஏபீ கள் என்று சொல்லிவிடாரே? அதுகளுக்கு ஏன் எப்படி என்று பகுத்தாய்ந்து தேசத்தை நோக்கி உழைக்கும் எண்ணம் எப்படி வரும்?

ஆனால் ஒரு சந்தேகம்..... பட்டம் மட்டுமே பெற்றார்கள் ஆனால் எந்த புத்திசாலிதனமான செயலையும் செய்யவில்லை என்றுதான் கட்டுரையாளர் சொல்கின்றார். ஆனால் நீங்கள் சென்.ஜோன்சில் படித்த மாணவர்களையும் ஏபீக்களில் சேர்துவிட நினைக்கின்றீர்கள்...... ஏதாவது உள்நோக்கம் உண்டோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு ஆக்கம்..!

. இந்த ஆத்திரத்தில் சிறீ லங்கா இராணுவத்தில் இணைந்த யாழ் பரியோவான் கல்லூரி மாணவர்கள்கூட இருக்கின்றார்கள். இந்த ஆத்திரங்கள் இன்றும்கூட தொடர்ந்துகொண்டு இருக்கின்றது.

கலைஞன் ,சேர்ந்தவர்கள் சாதாரண சிப்பாய்(அன் எடிக்கேட்டட்)பணிபுரிந்தவர்க

அதுதான் அவர் கட்டுரையின் ஆரம்பத்திலேயே ஏபீ கள் என்று சொல்லிவிடாரே? அதுகளுக்கு ஏன் எப்படி என்று பகுத்தாய்ந்து தேசத்தை நோக்கி உழைக்கும் எண்ணம் எப்படி வரும்?

ஆனால் ஒரு சந்தேகம்..... பட்டம் மட்டுமே பெற்றார்கள் ஆனால் எந்த புத்திசாலிதனமான செயலையும் செய்யவில்லை என்றுதான் கட்டுரையாளர் சொல்கின்றார். ஆனால் நீங்கள் சென்.ஜோன்சில் படித்த மாணவர்களையும் ஏபீக்களில் சேர்துவிட நினைக்கின்றீர்கள்...... ஏதாவது உள்நோக்கம் உண்டோ?

ஓட்டையை மறைக்கும் வேலையை நீங்கள் எப்படி செய்கின்றீர்கள் என்பதற்கு உங்கள் பதிலே சாட்சி. மேலும்... உங்களுக்கு சென்.ஜோன்சுடன் தனிப்பட ஏதாவது கடுப்பு என்று அதற்கு பதில் கூறுவதற்கு ஆள் நான் இல்லை. அதற்கு வேறு எவரையாவது பாருங்கள். இங்கு அதிபரின்கொலையும் அதன்பின்னராக பாதிப்புமே மேலே கூறப்பட்டுள்ளது.

கலைஞன் ,சேர்ந்தவர்கள் சாதாரண சிப்பாய் (அன் எடிக்கேட்டட்) பணிபுரிந்தவர்களோ? அல்லது லெப்டினட்,கப்டன்,மேஜர் ,(ஏடிக்கேட்டட் ..ஏபீ) என்று சேர்ந்து கடமைசெய்கிறார்களோ?அல்லது சும்மா ஒட்டுக் குழு என்று இராணுவத்தோடு திரியினமோ?

இப்ப கொழும்புக்கு பயமில்லாமல் போரது என்றால் ஒட்டுக்குழுக்களுடன் சினேகிதமிருக்க வேணும் இல்லயென்றால் இராணுவ உயரதிகார்களுட்ன் தொடர்பிருந்தால் பயமில்லாமல் கொழும்புக்கு போகலாம் .அதுதான் கேட்டனான்

ஒட்டுக்குழுக்களில் எவராது இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. ஆனால் இராணுவ உயரதிகாரிகளாக இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கின்றேன். எல்லாப்பாடசாலைகளிலும் எல்லா வகையானவர்களும் இருப்பார்கள். வி.பு.அ இலும் தாராளமாக இருந்தார்கள். ஆனால்.. அதிபரை படுகொலை செய்தது அதிக எதிர்ப்பை தோற்றுவித்தது.

  • தொடங்கியவர்

வசி,

நீங்கள் முன்வைக்கும் உதாரணம் மிகவும் பொருத்தமான ஒன்றே. நன்றி.

கலைஞன்,

இத்திரியில் நீங்கள் முன்வைத்த கருத்துக்கள் எல்லாவற்றிலும் இழையோடுகின்ற ஒரு சொல்லாமல் சொல்லப்படும் கருத்து “எடியுகேற்றட் பீப்பிளை” சமூகம் தான் தாஜாபண்ணி உதவி பெறவேண்டும் (ஏனெனில் அவர்கள் சான்றிதழ் பெற்றவர்கள் என்பதால் மற்றோரைக்காட்டிலும் உயர்ந்தவர்கள்--ஏறத்தாள ஒரு ஆண்டான் அடிமை றேஞ்சிற்கு), எல்லாம் தெரிந்த எடியுகேற்றட் பீப்பிளை கோபப்படுத்தினீர்கள் என்றால் அவர்கள் உங்களுடன் கண்ணைக்கட்டிக் கோபம் போட்டு சேர்ந்து விளையாடாது விட்டுவிடுவார்கள் என்ற தொனியிலேயே அமைகிறது. ஆக கல்வி என்பது கண்ணைத் திறக்கவேண்டும் என்பதற்குப் பதிலாக சான்றிதழ் என்பது எவ்வாறு கண்ணைக்கட்டுகின்றது என்று காட்டுகின்ற ஒரு மனநிலை இது.

“இயந்திரத்தைப் பறித்ததால் தான் இயந்திரம் கண்டுபிடிக்க எடியுகேற்றட் பீப்பிள் உதவவில்லை” என்ற உங்களது கருத்து ஒரு அடிப்படை உண்மையை நன்கு விளக்குகிறது. அதாவது, இவ்வுதாரணத்தின் பிரகாரம், படித்தவர்கள் அன்றைய தேவைக்கான இயந்திரத்தை கண்டுபிடிக்கவில்லை என்பது இங்கு வாதத்தின் இரு பக்கத்தில் இருப்பவர்களும் ஏற்றுக்கொள்கின்ற ஒன்றாய் இருக்கின்றது. சிக்கல் எங்கு எழுகின்றது என்றால், நீங்கள் கூறுகின்றீர்கள் படித்தவர்களிற்கு எல்லாக் கண்டுபிடிப்பும் சர்வசாதாரணமாய் கைவரும் ஆனால் சமூகத் தலைமையுடன் இருந்த கோபத்தால் அவர்கள் தமது கண்டுபிடிப்புக்களைக் காட்டவில்லை என்று. ஆக, அவர்கள் கண்டுபிடிக்காதபோதும் (அன்றைய நிலையில் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்பது யாவரும் அறிந்தது) படித்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்களால் நிட்சயம் கண்டுபிடிக்க முடியும் என்ற உங்களது அடிப்படை நம்பிக்கை தான் இங்கு ஒரு வெறித்தனமாய் வெளிப்படுகிறது. அதாவது, சோதனையில் கேள்விக்கு, அதுவும் முன்னைய ஆண்டுகளிலும் கேட்கப்பட்டிருந்த மாதிரியான கேள்விகளிற்கு, அதுவும் பரீட்சைக்கு என்னமாதிரியான கேள்விகள் வரும் என்று ஒரு புரிதல் உள்ள கேள்விகளிற்கு பதிலளித்துப் பட்டம் பெற முடிந்த அவர்களால் நடைமுறைக்குத் தேவையான முன்னர் கண்டுபிடிக்கப்படாத புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த ஒருவேளை முடியாதுபோயிருக்கலாம் என்றும் ஒரு சாத்தியம் இருக்கலாம் என்பதை உங்களால் நினைத்தே பார்க்க முடியவில்லை. படித்தவன் கண்டுபிடிக்கவில்லை என்றால், கோபம் காரணமாக அவன் தனது கண்டுபிடிப்பை மக்களிற்குத் தரவிரும்பவில்லை என்பது மட்டும் தான் காரணமாக இருக்கும் என்று வாதிடுகிறீர்கள். ஆனால் மானுட வரலாற்றில் மானுடத்தின் உயர்விற்காய் உழைத்த கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் (இன, மொழி, கலாச்சாரம் கடந்து) பெற்றிருந்த மனவமைப்பானது எப்படியாவதும் தமது கண்டுபிடிப்பை எந்த ஆபத்துக்களிற்குள்ளாகவும் மக்கள் முன் முன்வைத்து விடவேண்டும் என்று தான் இருந்ததே அன்றி நீங்கள் சொல்லும் மனவமைப்பில் இல்லை.

மேலுள்ள எனது பின்னூட்டம் ஒன்றில் கார்வட் பல்கலைக்கழக முன்னைநாள் பேராசிரியரான இக்னாச்சியவ் நடைமுறைக்கும் ஏட்டுக்கல்விக்குமிடையேயான சிந்தனை பற்றி தனது சுய அனுபவத்தில் மனந்திறந்து பேசியமையும் இங்கு ஒரு உதாரணம்.

இத்திரியில் பேசப்படும் பொருள் என்ன என்பது பற்றியும் அப்பொருள் தொடர்பிலும் சொல்லக் கூடியன எல்லாம் ஓரளவிற்குச் சொல்லியாவிட்டது. வாசிப்பவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி அனைத்தையும் வாசிக்கக் கூடிய நிலை உள்ளது. எவ்வித புதிய முனையும் இன்றி திருப்பத்திருப்ப ஒரே விதமான வாதங்களை முன்னெடுப்பதில் ஆரிற்கும் எந்த நன்மையும் இல்லை. எனவே அனைவரதும் நேரத்தைக் கருத்தில் கொண்டு, இத்திரியில் இதுவே எனது இறுதிப்பின்னூட்டம்.

வாசித்துக் கருத்துக் கூறிய அனைவரிற்கும் நன்றிகள்.

வணக்கம் இன்னுமொருவன்,

எனது வாதத்தின் நோக்கம்.. ஏபீக்களுக்கு வக்காளத்து வாங்குவதைவிட... அவர்களின் தொண்டை திருகுப்படக்கூடாது என்பதே. வாய்திறப்பவர்கள் நன்றாகத் திறக்கட்டும். அது தேனீயாக இருந்தாலும் சரி கொசுவாக இருந்தாலும் சரி நுல்லானாக இருந்தாலும் சரி... அங்கு கூறப்படுபனவற்றில் இருந்து தேவையான ஆக்கபூர்வமான பின்னூட்டல்களை உள்வாங்கி ஓட்டைகள் மறைக்கப்படவேண்டும் என்பதைவிட அடைக்கப்படவேண்டும் என்பதே எனது அவா.

மேலும், ஏபீக்கள் என்று குறிப்பாய் சொல்வதை விட பொதுவாக தமிழ்மக்கள் அனைவருமே சுயநலவாதிகளே. ஏபீக்கள் மட்டும் சுயநலவாதிகள் என்று குறிப்பாய் சொல்வது தவறானது. அப்படிப்பார்த்தால் புலிகளும் சுயநலவாதிகளே. தமது அமைப்பு என்று மற்றும் தமது மக்கள் என்று இயங்குவதும்கூட ஒருவிதத்தில் சுயநலவாதமே. பிரிவினைவாதம் என்பது ஒட்டுமொத்த சுயநலவாதத்தின் மறுவடிவமே.

கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு. இது ஏபீக்களுக்கும் பொருந்தும், புலிகளுக்கும் பொருந்தும், எனக்கு, உங்களுக்கு என்று அனைவருக்கும் பொருந்தும். நானாக இருந்தாலும் சரி, நீங்களாக இருந்தாலும் சரி, ஏபீக்களாக இருந்தாலும் சரி, புலிகளாக இருந்தாலும் சரி.. எங்கள் ஓட்டைகள் அடைக்கப்படாதவரை நாங்கள் குறிப்பிட்ட நிலைக்குமேல் வளர்ச்சி அடையமுடியாது, முன்னேறமுடியாது.

எல்லோரிலும் பிழைகள் இருக்கின்றன. எனவே, நான், நீங்கள், ஏபீக்கள், புலிகள் என்று அனைத்து தரப்பினரும் எங்கள் ஓட்டைகளை மறைப்பதைவிட ஓட்டைகளை நிரந்தரமாக அடைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.

உங்கள் லிபரல் தலைவருடனான தொடர்பாடலுக்கு பாராட்டுக்கள். உங்கள் சேவைகள் தொடரட்டும். நன்றி! வணக்கம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இன்னுமொருவன்,

எனது வாதத்தின் நோக்கம்.. ஏபீக்களுக்கு வக்காளத்து வாங்குவதைவிட... அவர்களின் தொண்டை திருகுப்படக்கூடாது என்பதே. வாய்திறப்பவர்கள் நன்றாகத் திறக்கட்டும். அது தேனீயாக இருந்தாலும் சரி கொசுவாக இருந்தாலும் சரி நுல்லானாக இருந்தாலும் சரி... அங்கு கூறப்படுபனவற்றில் இருந்து தேவையான ஆக்கபூர்வமான பின்னூட்டல்களை உள்வாங்கி ஓட்டைகள் மறைக்கப்படவேண்டும் என்பதைவிட அடைக்கப்படவேண்டும் என்பதே எனது அவா.

மேலும், ஏபீக்கள் என்று குறிப்பாய் சொல்வதை விட பொதுவாக தமிழ்மக்கள் அனைவருமே சுயநலவாதிகளே. ஏபீக்கள் மட்டும் சுயநலவாதிகள் என்று குறிப்பாய் சொல்வது தவறானது. அப்படிப்பார்த்தால் புலிகளும் சுயநலவாதிகளே. தமது அமைப்பு என்று மற்றும் தமது மக்கள் என்று இயங்குவதும்கூட ஒருவிதத்தில் சுயநலவாதமே. பிரிவினைவாதம் என்பது ஒட்டுமொத்த சுயநலவாதத்தின் மறுவடிவமே.கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு. இது ஏபீக்களுக்கும் பொருந்தும், புலிகளுக்கும் பொருந்தும், எனக்கு, உங்களுக்கு என்று அனைவருக்கும் பொருந்தும். நானாக இருந்தாலும் சரி, நீங்களாக இருந்தாலும் சரி, ஏபீக்களாக இருந்தாலும் சரி, புலிகளாக இருந்தாலும் சரி.. எங்கள் ஓட்டைகள் அடைக்கப்படாதவரை நாங்கள் குறிப்பிட்ட நிலைக்குமேல் வளர்ச்சி அடையமுடியாது, முன்னேறமுடியாது.

எல்லோரிலும் பிழைகள் இருக்கின்றன. எனவே, நான், நீங்கள், ஏபீக்கள், புலிகள் என்று அனைத்து தரப்பினரும் எங்கள் ஓட்டைகளை மறைப்பதைவிட ஓட்டைகளை நிரந்தரமாக அடைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.

உங்கள் லிபரல் தலைவருடனான தொடர்பாடலுக்கு பாராட்டுக்கள். உங்கள் சேவைகள் தொடரட்டும். நன்றி! வணக்கம்! :D

தனது மனைவியுடன் தான்மட்டுமே படுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் அதை ஆமோதிப்பவர்களும் சுயநலத்தின் உச்சங்கள்!

சமூகம்கட்மைப்பு...... அரசியல்கட்டமைப்பு...... கலாச்சார கட்டமைப்பு....... குடும்ப கட்டமைப்பு........எல்லாவற்றையும் தாண்டி ஒரு கருத்தை நீங்கள் முன்வைக்கின்றீர்கள் என்பதை புரிய வைக்க எனக்கு வேறு வழியில்லை.

களநிலவரம் அதுதான் எண்டால் ஒன்றும் செய்யமுடியாது. உங்கள் பார்வையில் பார்த்தால்கூட அதே காரணத்தைகூறி ஏபீக்களின் சுயநலத்தை நியாயப்படுத்த முடியும்.

மற்றது, இதில சமூககட்டமைப்பு...... அரசியல்கட்டமைப்பு...... கலாச்சார கட்டமைப்பு....... குடும்ப கட்டமைப்பு........ இவற்றோட இன்னொன்றை மிகவும் முக்கியமானதை எங்கடை இதயத்தின் அடிநாதத்தை சொல்லமறந்து போனீங்கள்.

என்ன தெரியுமோ?

சாதிக்கட்டமைப்பு!

உதைக் கிளற வெளிக்கிட்டால் பிறகு வட்டம்மாதிரி திரும்பவும் ஆரம்பிச்ச அதே இடத்தில வந்து நிக்கவேண்டி வரும். :D

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.