Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானாட மயிலாட

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரணப்படுக்கையில் மறவர்களும்

மக்களும் முள்ளிவாய்க்காலில் இருந்த போதும்

மானாட மயிலாட பார்த்து

மோட்சம் பெறும் புலத்து தமிழன் நான்

மானாட மயிலாடவில்

இடைவேளை வரும் போது

ஈழம் பற்றி ஆய்வு செய்கிறேன்

ஈழத்து அவலத்தை மறந்(றைத்)து

எதிரிக்காய் எழுதிக்கொண்டிருக்கிறேன்

புலிகள் தேவைப்பட்டார்கள்

எம் பொதி சுமப்பதற்காய்

இன்று நான் ஜனநாயகவாதி

என் தவறை உணராது

தோல்விக்கு விடைதேடும் கட்டுரை ஆய்வாளன்

எந்த விமானம் எத்தனை பாகையில்

குண்டு போட்டது..

எத்தனை அடி ஆழத்தில் பள்ளம் வந்தது

எங்கேனும் தண்ணி வந்ததா என பார்க்கிறேன்

என்வீட்டு கதவை எதிரி தட்டுவதை மறந்து

ஏனென்றால் என்பெருமையை சொல்ல

இதை விட்டால் எனக்கு ஏது சந்தர்ப்பம்

நான் நாறுவதே தெரியாமல்

நாறிப்போகும் பட்டங்கள் என

நாட்டாமை செய்கின்றேன்

எவ்வாறு என் இனத்தை மீட்கலாம்

என்பதற்காய் என் பேனா எழுதாது

எப்படியேனும் வயிறு வளர்க்கவேணும்

என்பதற்காய் என்ன வேணுமானாலும் செய்யும்

என் பேனா...!

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து அவலத்தை மறந்(றைத்)து

எதிரிக்காய் எழுதிக்கொண்டிருக்கிறேன்...........

....

.........இதை உணர்ந்தும் திருந்துவார்களா.......பேனா ஈட்டியை விட கூர்மையானது என்பார்கள். ஆனால் லங்காபுரியில்

பத்திரிக்கை சுதந்திரம் இல்லயே . நீங்கள் எழுதியதை உணர்ந்தாவது திருந்தட்டும். உறைக்க ....வேண்டியவர்களுக்கு உறைக்க.... வேண்டும்.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.....

நீராவது மானட...மயிலாடவோடதான் நிக்கிறீர்.அது பறவாயில்லை.புலம் பெயர்ந்த நாட்டில் கூட வரும் புதிய படங்கள் பார்ப்பதற்காய் சாமம்...சாமம் அலைந்து கொண்டு திரிகிறார்கள்.இது மட்டுமா....?

நம் நாட்டில் நம் தழிழன் சாமத்தோடு சாமமாய் அகதியாய் ஊன்,உடை,உறைவிடம் இன்றி கண்ணிரோடு அலைகிறான்.இதை எல்லாம் யார் ஐயா கேட்க முடியும்...?

யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா, தாயகத்தில் மரணம்தான் வாழ்வென்று தீர்க்கமாகத் தெரிந்தபின்னும் புலம்பெயர் மக்களிடையே பல காட்சிப்பிழைகள் உருவாக்கப்பட்டதற்கு அரசியல் ஆய்வுகளும் காரணமாகியிருந்தன. இப்போது எந்த ஆய்வாளர்களினாலும் அடுத்த கட்டத்தைப்பற்றி அனுமானத்தைக்யோ... அல்லது ஏதேனும் ஒரு நம்பிக்கையையோ உருவாக்க முடியாத நிலையில்தான் எல்லாமே அமைந்து விட்டது. சரி நேற்றுவரை விடுதலைப்புலிகளின் தலைமை மீதான காழ்ப்புணர்ச்சியைக் கொட்டியவர்கள்கூட தமிழ் மக்களுக்கான எவ்வித உதவியையும் செய்யும் இலாயக்கற்றவர்கள் என்பதை காலம் அம்பலப்படுத்தியுள்ளது. சரி நேற்றைகளை மீள மீளப் பார்த்தல் ஏதாவது உருப்படியான நகர்விற்கு அழைத்துச் செல்கிறதா என்றால்....... கேவலம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிய கதையாகிக் கொண்டிருக்கிறது. பிரபலமும் பட்டங்களும் மக்கள் உணர்வுகளோடு கில்லியாடிக் கிளித்தட்டு விளையாடி மக்களை ஆடி ஓய்ந்த பம்பரங்கள் ஆக்கியுள்ளன. குதர்க்கங்களும், குரோதமும், பிரபலங்களும், பட்டங்களும் விடப்பட்டு எப்போது மக்கள் சக்தி முனைப்புப் பெறுகிறதோ அப்போதுதான் எல்லாவற்றுக்கும் வழி பிறக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா

பலபேரின் மனங்களை உங்கள் எண்ணங்களாகச் சொல்லியிருக்கிறீர்கள்... உண்மையிலே என்ன சொல்வதென்றே தெரியவில்லை....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்து அவலத்தை மறந்(றைத்)து

எதிரிக்காய் எழுதிக்கொண்டிருக்கிறேன்...........

....

.........இதை உணர்ந்தும் திருந்துவார்களா.......பேனா ஈட்டியை விட கூர்மையானது என்பார்கள். ஆனால் லங்காபுரியில்

பத்திரிக்கை சுதந்திரம் இல்லயே . நீங்கள் எழுதியதை உணர்ந்தாவது திருந்தட்டும். உறைக்க ....வேண்டியவர்களுக்கு உறைக்க.... வேண்டும்.

நன்றி உங்கள் கருத்துக்கு..

நாங்க எப்ப இன்னொருத்தரின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கிறோமோ,இன்னொருத்தரின் மனசை புரிஞ்சுக்கிறமோ அப்ப தான் எதுவும் சாத்தியம்.

இல்லாது விடின் நீ யார் இதை சொல்ல? உனக்கு என்ன தகுதி இருக்கு என்பார்களே :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாறிப்போகும் பட்டங்கள் என

நாட்டாமை செய்கின்றேன்

இந்த வரி வரும்வரை நானும் ஏதோ பொதுவாக புலம்பெயர் தமிழர் மீது கொண்ட ஆத்திரத்தினால் எழுதினீர்களாக்கும் என்று பார்த்தேன்.

சாத்திரியாரே.. உமக்காக ஒருவர் கவிதை எழுதுமளவுக்கு உயர்ந்துவிட்டீர்.. :lol:

தமிழன் இன்றுவரை திருந்தாதது இந்த தனிமனித தாக்குதல்களால்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வரி வரும்வரை நானும் ஏதோ பொதுவாக புலம்பெயர் தமிழர் மீது கொண்ட ஆத்திரத்தினால் எழுதினீர்களாக்கும் என்று பார்த்தேன்.

சாத்திரியாரே.. உமக்காக ஒருவர் கவிதை எழுதுமளவுக்கு உயர்ந்துவிட்டீர்.. :lol:

தமிழன் இன்றுவரை திருந்தாதது இந்த தனிமனித தாக்குதல்களால்தான்.

காட்டாறு அவர்களே சாதாரணமாக இன்று அனைவரும் புலிகளின் தோல்வி பற்றி ஆய்வு செய்கிறார்களே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்வதை பற்றி கதைக்கிறார்களா?

கதைச்சாலும் இப்படியானவற்றுக்கு கொடுக்குமளவு முக்கியம் கொடுக்கிறார்களா? என்ற ஆதங்கமும்,என்னை பாதித்த சில விடயங்களுமே தவிர யார் மீதான தனிநபர் தாக்குதலும் அல்ல தவிர நான் கவிதை எழுதுமளவிற்கு என் பெற்றோர்,காதலி,நண்பர்கள்,

கரும்புலிகள்,மாவீரர்கள்,தேசி

யத்தலைவர்,எமது சமூகம்,இயற்கை இன்னும் பொது விடயம் தவிர வேறு யாருக்காகவும் கவிதை எழுதுவதற்கு தகுதியானவர்கள் அல்ல என் கணிப்பில்.

நான் தனிநபர்களுக்காக எழுதின் அதுஎன் பெற்றோர்,காதலி,நண்பர்கள்,

கரும்புலிகள்,மாவீரர்கள்,தேசி

யத்தலைவர் இவர்களுக்காக மட்டும் தான். வேறு யாருக்காகவும் இன்று மட்டுமல்ல என்றைக்கும் எழுத மாட்டேன் இதை பகிரங்க சவாலாகவே சொல்கிறேன். அதைமீறி எழுதியதாக நிரூபித்தால்

நான் என் ஆயுள்முழுவதும் எழுதவே மாட்டன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.....

நீராவது மானட...மயிலாடவோடதான் நிக்கிறீர்.அது பறவாயில்லை.புலம் பெயர்ந்த நாட்டில் கூட வரும் புதிய படங்கள் பார்ப்பதற்காய் சாமம்...சாமம் அலைந்து கொண்டு திரிகிறார்கள்.இது மட்டுமா....?

நம் நாட்டில் நம் தழிழன் சாமத்தோடு சாமமாய் அகதியாய் ஊன்,உடை,உறைவிடம் இன்றி கண்ணிரோடு அலைகிறான்.இதை எல்லாம் யார் ஐயா கேட்க முடியும்...?

யாயினி.

நன்றி அக்கா...

யாரும் கேட்க முடியாது...இல்லை இப்போதைக்கு யாரும் கேட்கப் போவதுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா, தாயகத்தில் மரணம்தான் வாழ்வென்று தீர்க்கமாகத் தெரிந்தபின்னும் புலம்பெயர் மக்களிடையே பல காட்சிப்பிழைகள் உருவாக்கப்பட்டதற்கு அரசியல் ஆய்வுகளும் காரணமாகியிருந்தன. இப்போது எந்த ஆய்வாளர்களினாலும் அடுத்த கட்டத்தைப்பற்றி அனுமானத்தைக்யோ... அல்லது ஏதேனும் ஒரு நம்பிக்கையையோ உருவாக்க முடியாத நிலையில்தான் எல்லாமே அமைந்து விட்டது. சரி நேற்றுவரை விடுதலைப்புலிகளின் தலைமை மீதான காழ்ப்புணர்ச்சியைக் கொட்டியவர்கள்கூட தமிழ் மக்களுக்கான எவ்வித உதவியையும் செய்யும் இலாயக்கற்றவர்கள் என்பதை காலம் அம்பலப்படுத்தியுள்ளது. சரி நேற்றைகளை மீள மீளப் பார்த்தல் ஏதாவது உருப்படியான நகர்விற்கு அழைத்துச் செல்கிறதா என்றால்....... கேவலம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிய கதையாகிக் கொண்டிருக்கிறது. பிரபலமும் பட்டங்களும் மக்கள் உணர்வுகளோடு கில்லியாடிக் கிளித்தட்டு விளையாடி மக்களை ஆடி ஓய்ந்த பம்பரங்கள் ஆக்கியுள்ளன. குதர்க்கங்களும், குரோதமும், பிரபலங்களும், பட்டங்களும் விடப்பட்டு எப்போது மக்கள் சக்தி முனைப்புப் பெறுகிறதோ அப்போதுதான் எல்லாவற்றுக்கும் வழி பிறக்கும்.

உண்மைதான் இந்த பட்டங்களும்,பதவிகளும் தானே எம்மை ஒன்றுசேரவிடாது தடுக்கிறது.

*(கேவலம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிய கதையாகிக் கொண்டிருக்கிறது. பிரபலமும் பட்டங்களும் மக்கள் உணர்வுகளோடு கில்லியாடிக் கிளித்தட்டு விளையாடி மக்களை ஆடி ஓய்ந்த பம்பரங்கள் ஆக்கியுள்ளன. குதர்க்கங்களும், குரோதமும், பிரபலங்களும், பட்டங்களும் விடப்பட்டு எப்போது மக்கள் சக்தி முனைப்புப் பெறுகிறதோ அப்போதுதான் எல்லாவற்றுக்கும் வழி பிறக்கும்.)

இது தான் நிதர்சனமான உண்மை. நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு.

ஜீவா

பலபேரின் மனங்களை உங்கள் எண்ணங்களாகச் சொல்லியிருக்கிறீர்கள்... உண்மையிலே என்ன சொல்வதென்றே தெரியவில்லை....

நன்றி அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.