Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாகப் பேசுவோர் கைது செய்யப்படுவார்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலை தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் இன்று ஒரு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல் காண்பித்தல் ஆகியவை 1967ம் வருடத்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

எனவே பொதுக்கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் நடத்திய ஈழம் எழும் மாநாட்டு தொடர்பாக திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கொடுத்த நெருக்கடிகளைத் தொடர்ந்து புலிகளுக்கு ஆதரவாகப் பேசுபவர்களையும், தனி ஈழம், பேசுவோர் மீதும் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. வருகிற இருபதாம் திகதி உலகத் தமிழர் பிரகடனத்தை வெளியிடவும் சென்னையில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தவும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை தீர்மானித்திருக்கிற நிலையில் அவசர அவசரமாக இன்றைய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினால் வைகோ, ராமதாஸ், பழ.நெடுமாறன், தா. பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பிரபாகரன் படமோ, பேனர்களோ, கொண்டு வந்தாலே அதை வைத்தே இத்தலைவர்களைக் கைது செய்து விட முடியும்.

ஆனால் தடை செய்யப்பட்ட ஒன்றையல்லாது ஈழம் குறித்துப் பேசுவது எவ்வாறு தவறு ஆகும் என்று ஈழ ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் மீண்டும் இலங்கை அரசுக்கு ஆதரவாக மீண்டும் ஒரு முறை ஈழ ஆதரவாளர்களை தமிழக அரசு ஒடுக்கத் தயாராகி விட்டது என்பது தெரிகிறது.

மூலம் - GTN

தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாகப் பேசுவோர் கைது செய்யப்படுவார்கள்?

Tuesday, 18 August 2009

இன்று காலை தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் இன்று ஒரு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல் காண்பித்தல் ஆகியவை 1967ம் வருடத்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

எனவே பொதுக்கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் நடத்திய ஈழம் எழும் மாநாட்டு தொடர்பாக திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கொடுத்த நெருக்கடிகளைத் தொடர்ந்து புலிகளுக்கு ஆதரவாகப் பேசுபவர்களையும், தனி ஈழம், பேசுவோர் மீதும் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. வருகிற இருபதாம் திகதி உலகத் தமிழர் பிரகடனத்தை வெளியிடவும் சென்னையில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தவும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை தீர்மானித்திருக்கிற நிலையில் அவசர அவசரமாக இன்றைய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினால் வைகோ, ராமதாஸ், பழ.நெடுமாறன், தா. பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பிரபாகரன் படமோ, பேனர்களோ, கொண்டு வந்தாலே அதை வைத்தே இத்தலைவர்களைக் கைது செய்து விட முடியும்.

ஆனால் தடை செய்யப்பட்ட ஒன்றையல்லாது ஈழம் குறித்துப் பேசுவது எவ்வாறு தவறு ஆகும் என்று ஈழ ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் மீண்டும் இலங்கை அரசுக்கு ஆதரவாக மீண்டும் ஒரு முறை ஈழ ஆதரவாளர்களை தமிழக அரசு ஒடுக்கத் தயாராகி விட்டது என்பது தெரிகிறது.

http://www.paranthan.com/index.php?option=...9&Itemid=53

ஈழம் என்ற சொல்லுக்கு தடைவிதிக்கும் தமிழ்நாட்டு பொலிஸார்

சென்னையில் நேற்று இடம்பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டிலான ஆர்ப்பாட்டத்தின் போது ஈழம் என்ற சொல் பொறிக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை தமிழ்நாடு பொலிஸார் அவதானித்துள்ளனர்.

சென்னை நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளின் ஈழம் என்ற சொல்லுக்கு மேலாக பொலிஸார் வெள்ளை காகிதத்தை ஒட்டியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈழம் உருவாகும் அல்லது உருவாக்கப்படும் என்ற வாசகங்களின் இடையிலேயே இந்த வெள்ளைக் காகிதங்களை பொலிஸார் ஒட்டியுள்ளனர்.

அத்துடன் சென்னை நகரில் கொழுவப்பட்டிருந்த பல நவீன பதாதைகளையும் பொலிசார் அப்புறவு படுத்தியிருந்தாக தமிழ்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன

http://tamilseithekal.blogspot.com/2009/08...-post_7842.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி

பண்டைய காலத்திலிருந்தே அரசர்களாலும் புலவர்களாலும் ஈழம் என்றழைக்கப்பட்ட இராவணன் ஆண்ட இலங்கை பற்றி இலக்கியங்கள் பலவற்றில் நீங்கள் படித்திருப்பீர்கள்.

ஆனாலும் நீங்கள் அதை மறந்து ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டாம் என்று இலக்கியத்தமிழின் தலைவன் என்ற நிலையிலிருந்து நீங்கள் எவ்வாறு கூறமுடியும்

இதைப்பார்க்கும் போதே தெரியவில்லையா தமிழர் எல்லோரும் எங்கே நிற்கின்றோம் என்று

இங்கே நான் ஏன் உங்களிற்கு மரியாதை கொடுத்துக்கதைக்கின்றேன் என்றால்

நீங்கள் வயதிற்கு முத்தவர் என்பதால் தான். அல்லாவிடில் நீங்கள் உம்மினத்திற்கு இழைத்த கொடுமைகளையும்

துரோகங்களையும் நினைக்கும் போது பண்டார வன்னியன் காலத்தில் வாழ்ந்த காக்கை வன்னியன் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

இற்றைவரை எம் வரலாற்றில் உம்மை போன்ற எத்தனையோ பேரை நாம் பார்த்திருக்கின்றோம்

ஆனாலும் எம்தமிழ் இனம் துவண்டு விடாது

காலம் கனியும் வரை நாம் அயராது உழைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் விடுதலைப்புலிகளை சம்பந்தப்படுத்தி தமிழீழம் பற்றி பேசுவதை தடுத்தார்கள். இப்போ தான் இந்தியா என்ற வல்லாதிக்க சக்தியின் உண்மை சொரூபம் வெளிப்படையாக தெரிய வந்து இருக்கிறது..!

விடுதலைப்புலிகள் அல்ல இந்தியாவின் எதிரி.. தமிழீழம் என்பதே இந்தியாவின் எதிரி..! தமிழர்களே இந்தியாவின் எதிரி..!

இந்த நிலையில் இந்த உலகில் இந்தியா எனும் தேசம் எனியும் அவசியமா.. தமிழக உறவுகளே சிந்தியுங்கள்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் விடுதலைப்புலிகளை சம்பந்தப்படுத்தி தமிழீழம் பற்றி பேசுவதை தடுத்தார்கள். இப்போ தான் இந்தியா என்ற வல்லாதிக்க சக்தியின் உண்மை சொரூபம் வெளிப்படையாக தெரிய வந்து இருக்கிறது..!

விடுதலைப்புலிகள் அல்ல இந்தியாவின் எதிரி.. தமிழீழம் என்பதே இந்தியாவின் எதிரி..! தமிழர்களே இந்தியாவின் எதிரி..!

இந்த நிலையில் இந்த உலகில் இந்தியா எனும் தேசம் எனியும் அவசியமா.. தமிழக உறவுகளே சிந்தியுங்கள்..! :wub:

சரியாக சொன்னீர்கள் நெடுக்ஸ்அண்ணே. இங்கே சிலர் உண்மைகளை மற்ந்துவிட்டு புலிகளைபற்றி பினாத்துவார்கள். புலிகள்விட்ட பெரிய தவறு ராஜீவை கொன்றது என்றும் கதைவிடுவார்கள் அந்த அரக்கனை அழித்தால்தான் சில காலங்களுக்கு தமிழினத்தை அவர்களால் காக்க முடிந்தது என்பதே உண்மை. அது நடந்தாலும் நடக்காவிட்டாலும் தமிழின அழிப்பு என்பது இந்தியாவால் திட்மிட்டு நடத்தபட்டிருக்ககும் என்பது. திம்பு பேச்சுக்களின் போதே உண்மையான தமிழர்கள் புரிந்துகொண்ட ஒன்று. அரைகுறைகளுக்கு புரியவைப்பது என்பது எளிதான ஒன்றல்ல என்பதையே இப்போது புரிய கூடியதாக உள்ளது.

திம்புவில் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கடும் முயற்சியால் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து தமிழர்விடுதலை கூட்டணியுடன் அதை ஒன்றிணைத்து ஓரே அணியாக நின்று அற்பபான உரிமையையே முன்வைத்தார்கள். அதை கூட ஜே.ர் மறுக்கிறான் ஆனால் ஜே.ர்ருடன் ஒத்துழைக்கும்படி வற்புறுத்துகிறாhன் ராஜீவும் அவனது அறிவுரையாளன் பண்டாரியும்.

அந்த யுத்தநிறுத்த காலத்திலும் வவுனியாவில் பெரும் மனித படுகொலை ஒன்றை செய்கிறாhன் ஜே.ர். அத்தோடு தமிழர் தர்ப்பு வெளியேறியது. அதற்கு அன்ரன் பாலசிங்கம்தான் காரணம் என்று அவரை நாடு கடத்தினான் ராஜீவ். இதெல்லாம் இந்த அரைகுறைகளுக்கு புரியவைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாகப் பேசுவோர் கைது செய்யப்படுவார்கள்?

உலகத்தில் இப்படி ஒரு அசிங்கமான தமிழ் இனத்தை , கடவுள் படைத்து இருக்கக் கூடாது . :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் இப்படி ஒரு அசிங்கமான தமிழ் இனத்தை , கடவுள் படைத்து இருக்கக் கூடாது . :wub:

தமிழகத்தில் தமிழில் பேசுவோர்கள் கைதுசெய்யபடுவார்கள் என்று அறிவுக்கும் காலத்திற்கு முன்பு நாம் இறந்துவிடுவோம் என்று நான் நம்புகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தமிழில் பேசுவோர்கள் கைதுசெய்யபடுவார்கள் என்று அறிவுக்கும் காலத்திற்கு முன்பு நாம் இறந்துவிடுவோம் என்று நான் நம்புகிறேன்!

ஈழத்தில் , தமிழ் இனம் காட்டிக் கொடுத்தே ...... அழிந்தது .

தமிழகத்தில் ..... சினிமா , ஆங்கில மோகங்களால் தமிழன் அழிந்து கொண்டிருக்கின்றான் .

தனது தாய்மொழியையும் , தாய் நாட்டையும் நேசிக்காத இனம் ,

உண்மையில் உலகத்திற்கு பாரமானதே . உலகத்திற்கு தேவையில்லாதது .

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜியார் இருந்து இருந்தா இண்டைக்கு இந்த நிலைமை வந்து இருக்குமா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.