Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் - நோர்வேயில் பான் கீ மூன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியாளர் சத்தியன் 01/09/2009, 14:00

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் - நோர்வேயில் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நோர்வே பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க் மற்றும் நோர்வே நாட்டில்ன அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

காலநிலை மாற்றம் தொடர்பிலான ஆராய்ச்சிக்காக நேற்று திங்கட்கிழமை இரு நாள் பயணமாக நோர்வே நாட்டுக்குப் பான் கீ மூன் வந்திருந்தார்.

நோர்வே நாட்டுப் பிரதமருடன் நடந்த சந்திப்பின் போதே இலங்கை விவகாரம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் பான் கீ மூனுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சந்திப்புக்குப் பின்னர் பான் கீ மூன் மற்றும் நோர்வேப் பிரதமர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பான் கீ மூன் தெரிவிக்கையில்:

இலங்கை விவகாரம் இணைத்தலைமை நாடுகளுடன் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து பணியாற்றுகின்றது. இலங்கை அரசு அனைத்துலக சட்ட நியமங்களை மீறக்கூடாது. மனித உரிமைகள் அடிப்படையில் செயற்பட வேண்டும்.

மகிந்த ராஜபக்சவுடன் பல முறை தொடர்பை ஏற்படுத்தியுள்ளேன். பல தடவை தொலைபேசியில் உரையாடியுள்ளேன்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குள் வந்த போதும் இதுவரை அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த விடயத்தில் சிறீலங்கா அரசு கவனம் செலுத்த வேண்டும்.

பதிவு

மகிந்த ராஜபக்சவுடன் பல முறை தொடர்பை ஏற்படுத்தியுள்ளேன். பல தடவை தொலைபேசியில் உரையாடியுள்ளேன்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குள் வந்த போதும் இதுவரை அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த விடயத்தில் சிறீலங்கா அரசு கவனம் செலுத்த வேண்டும்.

எவ்வளவுதான் சொன்னாலும் ராஜபக்ச கேட்பதாக இல்லையே.

அப்ப என்ன செய்யலாம் ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவுதான் சொன்னாலும் ராஜபக்ச கேட்பதாக இல்லையே.

அப்ப என்ன செய்யலாம் ? :unsure:

இப்பிடி இழுக்கிறவன் பக்கமெல்லாம் ஜவ்வுமாதிரி இழுபட்டு அறிக்கைவிட்டுத் திரியலாம்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2ஆம் இணைப்பு:‐ தமிழர்கள் உட்பட அங்குள்ள சிறுபான்மையினருடன் அரசியல் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் பான் கீ மூன்:

2009-09-01 02:00:50 (BST)

இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. அனால் அதற்குமப்பால் செய்து முடிப்பதற்குப் பல முக்கியமான விடயங்கள் உள்ளன. தமிழர்கள் உட்பட அங்குள்ள சிறுபான்மையினருடன் அரசியல் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐநாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஐநாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அங்கு இடம் பெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில் போர் முடிவடைந்து விட்டாலும் அவசரமாகச் செய்வதற்குப் பல முக்கியமான பணிகள் உள்ளன. உடனடியாக தமிழர்கள் உட்பட ஏனைய சிறுபான்மையர்களுடனும் அரசியல் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறாத வகையில் இலங்கை அரசு செயற்பட வேண்டும். அவற்றுக்குத் தேவையான எல்லா வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பலமுறை சந்தித்திருக்கிறேன். என்னுடைய விஜயத்தின் பின்னர் நான் குறித்தக்காட்டிய விடயங்களைப் பின்பற்றுமாறு அவரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நோர்வே அரசாங்கமும் இணைந்து இலங்கையில் சமாதானத்தை எட்டுவதற்கான உடன்பாட்டில் ஈடுபட்டிருந்ததை நானறிவேன். இலங்கையின் சமாதானத்திற்காக நோர்வே இணைத்தலைமை நாடுகளின் கூட்டங்களின் போது அளித்த பங்கு பலராலும் பாராட்டப்பட்டது எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

இது தவிர நோர்வே ஐக்கியநாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றி வருவது குறித்து அவர் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா செயலாளர் நோர்வேயுடன் பேச்சுவார்த்தை :

இலங்கை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், நோர்வே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அந்நாட்டு பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை பான் கீ மூன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் மாரி ஒகாபே ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் அகதிகள் விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள அப்பாவி பொதுமக்களை மீளக் குடியமர்தல் மற்றும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுதல் போன்றவை குறித்து ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டுமென பான் கீ தெரிவித்துள்ளார்.

உலகில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், செனல்‐4 விவகாரம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும் என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் பிரதி ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், குறித்த வீடியோ காட்சிகளின் நம்பகத் தன்மை தொடர்பில் இதுவரையில் உறுதிப்பட எதனையும் குறிப்பிட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக செய்தி திரிபுபடுத்தப்பட்டதொன்றென இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உண்மையில் சொல்லப்பட்டிருக்கவேண்டியது:

"தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுள்ள அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் "

இலங்கைக்கான தனது விஜயத்தின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றது என ஐ. நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீமூன் தெரிவித்துள்ளார்.

பான் கீமூன் இலங்கை விஜயத்தின்போது அங்குள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அவர் தவறிவிட்டார் என்ற குற் றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கையி லேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் முதல் நான் தெரிவித்துவரும் விடயத்தையே மீண்டும் குறிப்பிட்டுள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் இன்னமும் செய்து முடிக்கவேண்டிய முக்கியமான பணிகள் அதிகம் உள்ளன என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன்.

அரசியல் நல்லிணக்கத்தை எட்டுவது மற்றும் சிறுபான்மை சமூகத்தினரை நோக்கி நேசக்கரங்களை நீட்டுவது முக்கியமானது.

மேலும் எந்தவித சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்களுக்காகவும் பொறுப்புக் கூறுதல் அவசியம். அவர்கள் இந்த அவசியமான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளவேண்டும்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பல தடவைகள் சந்தித்துள்ளேன்.

எனது விஜயத்தின்போது இணங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அவரைக் கோரியுள்ளேன். என்றார்.

http://parantan.com/pranthannews/

  • கருத்துக்கள உறவுகள்

போடா ஒம்போதுப் பயலே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உண்மையில் சொல்லப்பட்டிருக்கவேண்டியது:

"தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுள்ள அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் "

இதைத்தான் சொல்லுறதாக்கும் கண்துடைப்பு நாடகமெண்டு.தமிழரது அழிவில் மிகப்பெரும் பங்காளியானவன் எப்படியாம் பேசுவான்.

2001ல் யுத்த நிறுத்தம் கையெழுத்தாகி, சர்வதேச மத்தியஸ்தகத்துடன் தமிழர் பிரட்சனைக்கு பேச்சுவார்த்தை நடந்தது. தமிழர்களுக்கு பேச்சுவார்த்தையில் சம அதிகாரம் சர்வதேசம் வழங்கியது. அதற்கு ஒரே ஒரு எதிர்பார்ப்பையே சர்வதேசம் எதிர்பார்த்தது நம்மிடம் .... "ஆயுதப்போராட்டத்தை கைவிடுவது! .... இதனை அவர்கள் பலாத்காரமாக அழிக்க அச்சமயம் முற்படவில்லை!! காரணம் ... எமது பிரட்சனையை ஓரளவேனும் விளங்கி இருந்தார்கள்!!

நாம் அனைத்தையும் உதறி .... அழிந்து விட்டோம்!! இவ் அவல நிலைக்கு சென்று விட்டோம்!!!

தயவுசெய்து இனியும் தமிழர்களை இவ் அவலநிலைக்கு கொண்டு சென்ற தலைமை எமக்கு தேவையா??? சிந்திப்போம்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.