Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காவற்துறைக்கு யாழ்ப்பாணம் இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் நேற்று ஆரம்பம்

Featured Replies

காவற்துறைக்கு யாழ்ப்பாணம் இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் நேற்று ஆரம்பம்

காவல்துறை திணைக்களத்தினால் யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளை காவல்துறைக்கு இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் நேற்று ஆரம்பமாகின. நேர்முகப்பரீட்சைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் இணைத்துக்கொள்ளும் இந்த நேர்முகப் பரீட்சையில் ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டதாக காவல்துறைமா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளை காவல்துறைப் பணிகளில் இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் அந்த மாவட்டத்தின் ஐந்து இடங்களில் நேற்று ஆரம்பமாகின. நேர்முகப் பரீட்சையில் கலந்துகொண்ட இளைஞர், யுவதிகளில் தகுதியுள்ள சுமார் 500 பேர் காவல்துறைப் பணிகளில் இணைத்துக்கொள்ளப்படவிருப்பத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான்

"ஆடற் பருந்தும் பாடற் பைங்கிளியும் ஒரு கூட்டில் வாழும் உலகு" என்று நளவெண்பாவில் கூறியதோ? சில சொற்களே அல்லது முழு வரியுமே பிழையாக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு கருத்துப்பட வரியுண்டு..

செய்திபற்றி: அதை தீர்மானிப்பவர்கள் அங்குள்ளவர்களே.

  • தொடங்கியவர்

இதைத்தான்

"ஆடற் பருந்தும் பாடற் பைங்கிளியும் ஒரு கூட்டில் வாழும் உலகு" என்று நளவெண்பாவில் கூறியதோ? சில சொற்களே அல்லது முழு வரியுமே பிழையாக இருக்கலாம்,

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை யறம் கிடப்ப

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்- மாதர்

அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்

மொருகூட்டில் வாழ உலகு :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிழலி..

காலம் கடந்தும், கடல் கடந்தும் முழுப்பாட்டும் ஞாபகமாய் உள்ளது ஒரு கொடைதான்..உண்மையிலேயே எனக்கு இப்ப தேவாரங்களே மறந்துகொண்டிருக்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டேற்றாபேசில போட்டியளோ?

போடுங்கோ!

அவங்கடையோட உங்களதும் எடைக்கு எடை சரியா இருக்கவேணும். அப்பத்தான் போராட்ட சமநிலை பேணப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தவறென்று சொல்வதற்கு எதுவுமில்லை. வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்கள் என்ன செய்வார்கள்? இது அவர்களது வருமானத்திற்கு ஒரு வழி. பாதுகாப்பும் தரக்கூடியது. ஆகவே இணைகிறார்கள். இதன் பின்விளைவுகள் பற்றி அவர்களுக்கு சிந்திப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்குமோ என்னவோ?!

அரசியல் விழிப்பூட்டலில் நாம் கவனமாக இருந்திருக்க வேண்டுமோ என்று நினைக்கும்ப்போது எனக்கு நினைவிற்கு வருவது இன்றைய யாழ்ப்பாணத்து இளைய தலைமுறைதான்.

  • தொடங்கியவர்

நன்றி நிழலி..

காலம் கடந்தும், கடல் கடந்தும் முழுப்பாட்டும் ஞாபகமாய் உள்ளது ஒரு கொடைதான்..உண்மையிலேயே எனக்கு இப்ப தேவாரங்களே மறந்துகொண்டிருக்கு..

ஹி ஹி.... மற்றதெல்லாம் எனக்கு நினைவில் இல்லை...ஆனால் நளவெண்பா மாத்திரம் நினைவில் இருக்கு.......ரியூட்டரியில் தமிழ் அக்காவிடம் படிக்கும் போது கடைக்கண்ணால் வந்திருக்கும் பெட்டையளை பார்த்துக் கொண்டு காதல் ரசம் கொட்ட கொட்ட படித்ததை எப்படி மறக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

டேற்றாபேசில போட்டியளோ?

போடுங்கோ!

அவங்கடையோட உங்களதும் எடைக்கு எடை சரியா இருக்கவேணும். அப்பத்தான் போராட்ட சமநிலை பேணப்படும்.

உங்கள் தலைவன் டக்கிளஸ் காட்டிக் கொடுத்து காலை நக்கிவிடுவதிலும் பார்க்க வேலை வாய்ப்பற்ற சூழ்நிலையில் குறைந்த பட்ச பாதுகாப்பு தருகின்ற தொழிலுக்கு போவதில் எந்த தவறும் இல்லை.

அரசியல் என்றாலே தமிழனைக் காட்டிக் கொடுத்தல் என்று கொள்கை கொண்டு இன்று சிங்கள பேரினவாதத்திற்கு நியாயம் வாங்க யாழ் களத்திலும் வந்து விசுவாசம் காட்டும் உங்களை விட, கூலிக்கு தமிழனை கொல்லும் இராணுவ சிப்பாய் எவ்வளவோ மேல்

காவல் துறை இராணுவம் மற்றும் நிர்வாக சேவைகளில் காலத்தின் தேவை கருதி எம்மவர்கள் இணைவது இன்றியமையாதது.

500 பேரை காவல்துறையில் சேர்க்க முன்வந்ததுக்கு முக்கிய காரணம் ..புலிகளின் அடிதான் 30 வருடங்களுக்கு முதல் 20 பொலிஸ் காரனை எடுக்கிறது என்றாலே பெரிய விடயம் ஆயிரம் கேள்விகள் ,கொழும்பில இருந்து சிபாரிசுகள் இப்படி பல.... கொழும்புக்கு நேர்முக பயிற்சிக்கு போக வேண்டும். புலிகளின் அடிக்கு பிறகு தான் 500 பேரை யாழ்ப்பாணத்துக்கு வந்து தெரிவு செய்யினம் கொழும்பு அதிகாரவர்க்கம் .......என்னத்தை சொன்னாலும் புலிகளின் அடிக்கு பிறகுதான் சில விடயங்களை கஸ்டப்படு செய்யவேண்டிய நிலமை சிங்கள ஆளும் வர்க்கத்தினருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.