Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனிமடல்: தவறான பாவனை

Featured Replies

பதிலுக்கு நண்றி நிழலி. நீங்கள் எழுதிய முதல் கருத்து எனக்கு சுடவில்லை ஆனால் நியாயம் அற்றது எண்று எண்ணியதாலேயே எழுதி இருந்தேன். அதை உங்களின் இந்த பதிலும் நியாய படுத்தி இருக்கிறது.

நான் உங்களிடம் மிகவும் நட்போடுதான் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை கேட்டேன். இங்கு ஆண் எண்று சொல்லி கொண்டு பெண்ணும் பெண் எண்று சொல்லிக்கொண்டு ஆணும் வரும் வாய்ப்புக்கள் நிறையெவே இருக்கின்றன. எனக்கு இங்கு யாரையும் தெரியாது. ஆகவே நீங்கள் சொல்வது போல யார் பெண் எண்று அறிந்து அல்லது யார் ஆண் எண்று அறிந்து பாலியல் சொல்லாட முடியும் எண்று நான் நம்பவில்லை என்பதையே உங்களுக்கு மிகச்சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தேன்.

ஆனால் நீங்கள் ஏதோ உங்கள் மீது கொலைக்குற்றம் செய்ய பாய்ந்தவரை தாக்குவது போல தாக்குகிறீர்கள். இதைத்தான் நீங்கள் களநாகரீகம் என்கிறீர்களா ? மற்றவர்கள் செய்வது தவறு எண்று அறிவுரை சொல்லும் நீங்கள் அந்த தவறை செய்வதை எந்த வகையில் நியாயப்படுத்த போகிறீர்கள் ? ஒரு வகையில் நான் ஆணோ பெண்ணோ என்பது கூட உங்களுக்கு தெரியாது என்னை " மகாராஜா" எண்று வேறு அழைக்கிறீர்களே. இது ஒரு பெண்ணின் ஆண்மீதான பால் வக்கிரம் எண்று நான் சொல்லாம் இல்லையா ?

என்னை கோழை எண்று அடைமொழியோடு அழைத்து பொரிந்து தள்ளி இருக்கிறீர்கள். உங்களின் அந்தரங்கத்தை அறியத்துடித்த தாக மிகைப்படுத்தி குற்றம் சாட்டி இருந்தீர்கள். எந்த தவறுமே செய்யாது ஏற்பட்ட சந்தேகத்தை கேட்டமைக்காக முகம் தெரியா ஒருவர் மீது பாயும் நீங்கள் இனவக்கிரம் பிடித்த கோழை இல்லையா ?

மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதற்க்கு முன்னர் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். நீ(ங்கள்) திருந்து சமூகம் தானாக திருந்தும்.

நீங்கள் யாரையோ தடை செய்ய வேண்டும் எண்று எழுதி இருந்தீர்கள். சட்டங்களை போடுபவர்கள் மீறும் போது அவர்களே கட்டாயமாக தண்டிக்க பட வேன்டியவர்கள். ஆகவே உங்களைத்தான் முதலில் தடை செய்யவேண்டும்.

முதலில் நான் கேட்டதுக்கு நீங்கள் பதில் சொல்ல முயலுங்கள். நான் ஆணா பெண்ணா என அறிய ஏன் அவசியம் ஏற்படுகின்றது உங்களுக்கு? உங்களின் சந்தேகத்துக்கும் இந்த திரியில் மோகன் அண்ணா சொன்ன விடயத்திற்கும் என்ன சம்பந்தம்?

உங்களுக்கு யாரையும் தெரியாது, அவர்கள் ஆணா பெண்ணா என்பது தெரியவில்லையாயின் அது உங்களின் நிலை. ஆனால், யாழ் களத்தில் எல்லோரும் அப்படி அல்ல. முக்கியமாக கேவலமான தனிமடல் போடும், வக்கிரம் பிடித்தவர்களுக்கு அது துல்லியமாக தெரிந்து இருக்கின்றது. நான் என் இந்த திரியில் எழுதிய முதல் பதிலில் சொன்ன நிகழ்வுக்குரிய தனிமடல் பேர்வழிகளுக்கு அவை நிச்சயம் தெரிந்தே இருந்தது.

..இவ்வாறு தனிமடல் போடும் நபர்களுக்கு ஒன்றும் தெரியாது, பெண் என தவறாக நினைத்து அப்படி எழுதி தனி மடல் போட்டுட்டார்கள், ஆணா பெண்ணா என உண்மை தெரிந்து இருந்தால், முகவரியும் அடையாள அட்டையும் அறிந்து இருந்தால் அந்தக் கோழைகள் அப்படி செய்து இருக்க மாட்டார்கள் என சப்பை கட்டு கட்டும் உங்களைப் போன்றவர்களும் நிச்சயம் கோழைகளே. எந்த நேர்மையான சிந்தனை உள்ளவனும் தவறு செய்தவனுக்கு வக்காலத்து வாங்க மாட்டான்.

மற்றது...நான் யாரையோ தடை செய்ய சொல்லி எழுதவில்லை. எந்த நோக்கத்திற்காக தனிமடல் எனும் முறை அமுல்படுத்தப் பட்டதோ, அதற்கு நேரெதிராக எழுதியது மட்டுமன்றி, சக கருத்தாளரை பாலியல் ரீதியான அருவருக்கத்தக்க விமர்சனம் செய்த நபர்களைத்தான் தடை செய்ய வேண்டும் என்கின்றேன். இதில் மாற்றுக் கருத்து கிடையாது

காத்து,

தங்கள் வாதம் எதற்காக என்பது எனக்கே புரியவில்லை. ஒருவர் களத்தில் கருத்து வைக்கின்றார் என்றால், அவரின் கருத்து மட்டுமே முக்கியம். அவர் ஆணா, பெண்ணா என்ற ஆராய்ச்சி முக்கியமல்ல. அந்த வகையில் ஒருவரின் கருத்து மற்றவருக்கு பிடிக்காமல் போனால், அது பற்றிய பதில்க் கருத்தை வைக்கலாம். அதை விடுத்து களத்தில் வசைபாடுவதோ அல்லது தனிமடலில் கேவலமாக எழுதுவதோ யாருக்குக் கேவலம் ?? பலபேர் தங்களால் முறையாக கருத்தை வைக்க முடியாது போகும் போது தான், தரக்குறைவான கருத்துகளை எழுதுகின்றார்கள் என்பதை நானே பலமுறை களத்தில் கண்டிருக்கினறேன்.

மிகவும் கண்ணியமாக பதில் கேள்வி கேக்கிறீர்கள். நண்றி. பிரச்சினையை கண்ணியமாக அணுகி தீர்க்க வேண்டும் எனும் உங்களின் எண்ணம் மிகவும் வரவேற்க்க பட வேன்டியது.

எல்லாவற்றுக்கும் முன்னர் நான் ஒரு சிறு விளக்க குறிப்பை தரவிரும்புகிண்றேன். நானே நீங்களோ ஒரு பொதுவான விடயம் ஒண்று பற்றி ஒரே மனநிலையில் சிந்திக்க மாட்டொம் என்பதை நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள் என்பதை உங்களின் இந்த எழுத்து மூலம் புரிகிறது. அதன் படி இந்த விவாதத்தை மிகவிரைவில் ஒருமித்த கருத்தாக்க வேண்டும் எனும் உங்களின் எண்ணமும் புரிகிறது.

நான் நிழலியின் கருத்தை எதிர்த்த போது நீங்களும் அவருடன் ஒத்த கருத்து ஒண்றை அங்கு எழுதி இருந்தீர்கள். (கிட்டத்தட்ட நிழலியில் கருத்துடன் ஒத்து ஆனால் அவரின் மனநிலையில் இல்லை என்பதை சொல்லி கொள்ள வேண்டும்) ஆனால் அதுக்கான பதில் கருத்தை நீங்கள் எழுதிய முறைக்கும் , நிழலி எழுதிய முறைக்கும் நிறைய வித்தியாசம், கண்ணிய இடைவெளி இருப்பதையும் நீங்கள் மீண்டும் வாசித்தீர்கள் எண்றால் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

நான் என்ன சொல்ல வருகிறேன் எண்றால் ஒரே பிரச்சினையை நீங்கள் அணுகிய விதமும் நிழலி அணுகிய விதமும் வேறு பட்டு நிற்கின்றது. எனக்கு நிழலி மீது வெறுப்பும் உங்கள் மீது மரியாதையும் வருவதையும் மறுக்க முடியவில்லை. இங்கே பிரச்சினையே யாருக்கும் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனும் எண்ணத்தை விட மற்றவரை வெறுப்புக்கு உள்ளாக்கி விட வேண்டும் என்பதுதான் நிறைந்து நிற்கின்றது. இங்கு கருத்தாட வரும் போது ஒண்றை மட்டும் என்னால் திடமாக முடிவு எடுத்து வர முடிந்தது. எதுக்கும் பயந்து விடுவதில்லை எண்று.

இப்போ மீண்டும் உங்களின் கேள்விக்கு வருகிறேன் விடயம் சுலபம். இதை இங்கு சொல்ல எனக்கு முன்னர் விருப்பம் இருக்க இல்லை. இப்போ சொன்னால் என்ன எண்று நினைக்கிறேன். உங்களுக்கு நிழலியை நீண்ட காலமாக தெரிந்து இருக்கலாம் ஆகவே நீங்கள் அவருக்கு ஆதரவாக கூட பேசலாம் . அதுக்காக எனது கருத்தை நான் சொல்லக்கூடாது எண்று இல்லையே. ஏன் எண்றால் எனக்கு நிழலியை தெரியாது.

எனக்கு நிழலி எழுதிய அந்த முறைமையில் எங்களது தமிழ் சினிமா கதாநாயகன்கள் தான் ஞாபகத்துக்கு வந்தனர். இல்லாத தங்கைக்காக , தாயுக்காக , கதாநாயகிக்காக எண்று நடு வீதியில் நிண்று அறைகூவல் விடுவார்கள். அப்படித்தான் இருந்தது அவரின் அறைகூவலும். தன்னை ஒரு திரை நடுப்பாத்திரமாக நினைத்து தற்புகழ்ச்சியோடு அந்த அறிக்கையை விடுத்து இருந்தார்.

யாருக்கு எப்போது எங்கே என்ன நடந்தது எண்று கூட தெரியாது நாங்கள் இங்கே கைதட்ட வேண்டுமா எண்றுதான் முதலில் தோண்றியது. பாதிக்க பட்டவர் யார் என்பது தெரியாது ஏன் பாதிக்க பட்டார் என்பதும் தெரியாது. யாரால் என்பதும் தெரியாது. ஆனால் விடயம் மட்டும் நாங்கள் நம்ப வேண்டும் என்பது சின்ன பிள்ளை தனமாக இல்லையா ?

இங்கே நிழலியின் நிலைப்பாட்டில் இரண்டு விடயங்களை புரிந்து கொள்லாம்.

1) நிழலி தனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்காக ஒருவேளை போராடுகிறார். ஆனால் அந்த பெண்ணுக்கு பாலியல் வசை சொல் எழுதும் வண்ணம் என்ன தூண்டுதலை அந்த பெண் செய்தார் எண்று இருதரப்பையும் விசாரிக்காமல் தீர்ப்பு எழுதுகிறார். வசை செய்தவர் ஆணா பெண்ணா என்பது கூட தெரியாது. ஆனால் வசை செய்தவரை ஒரு குழுமத்துக்குள் அடைத்து அடை மொழி கொடுக்கிறார்.

2) மிகவும் அருவெருக்க தக்க முறையில் தன்னை ஒரு நடுநிலைவாதியாக பெணிய வாதியாக வேறு ஒரு தளத்தில் முக்கிய கதாபாத்திரமாக காட்டி தன்னை முதன்மை படுத்துகிறார். கொஞ்சம் கண்ணியமாக எண்றாலும் கடும் சொற்களால் வசை பாடுகிறார்.

இதவிட இன்னும் சுருக்கமாக சொன்னால் நிழலியில் எந்தவிதமான நம்பகத்தன்மையும் கிடையாது.

( நண்றி இதுக்கு மேலை இங்கு எழுத போவதில்லை. எனது கணணியில் பாமினி எழுத்துரு பிரச்சினை கொடுப்பதால் என்னால் எழுத்து பிழைகள் இருந்தால் திருத்த முடியாது. ஆகவே தயவு செய்து மன்னித்து திருத்தி படித்து கொள்ளுங்கள்)

Edited by காத்து

காத்து,

எனக்கு நிழலியை தங்களைப் போல் ஒரு சக கருத்தாளராகத் தான் தெரியும். மற்றும்படி தனிப்பட்ட முறையில் எனக்கு அவரைத் தெரியாது. நிழலி நீங்கள் நினைப்பது போல் பெண்ணுமல்ல. அவர் தன்னைப் பற்றி ஆரம்பத்தில் எழுதியவற்றை நீங்கள் பார்க்கவில்லைப் போலும். அத்துடன் அவரது தற்போதைய நிழலி என்ற பெயர் கூட இடையில் மாற்றப்பட்டதே.

மேலும் நான் எப்போதும் எனக்குச் சரியென்று பட்ட கருத்தை மட்டுமே களத்தில் வைத்து வருகின்றேனே தவிர, எவருக்கும் வக்காலத்து வாங்க கருத்து வைப்பது கிடையாது. நானும் இதனை விவாதமாக மாற்ற விரும்பவில்லை. எனவே நீங்கள் அவசரப்படாமல் எதையும் சற்று ஆறுதலாகச் சிந்தித்தால் புரிந்து கொள்வீர்களென நம்புகின்றேன். எனவே இத்துடன் இதனை முடித்துக் கொள்கின்றேன்.

இங்கே நிழலியின் நிலைப்பாட்டில் இரண்டு விடயங்களை புரிந்து கொள்லாம்.

1) நிழலி தனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்காக ஒருவேளை போராடுகிறார். ஆனால் அந்த பெண்ணுக்கு பாலியல் வசை சொல் எழுதும் வண்ணம் என்ன தூண்டுதலை அந்த பெண் செய்தார் எண்று இருதரப்பையும் விசாரிக்காமல் தீர்ப்பு எழுதுகிறார். வசை செய்தவர் ஆணா பெண்ணா என்பது கூட தெரியாது. ஆனால் வசை செய்தவரை ஒரு குழுமத்துக்குள் அடைத்து அடை மொழி கொடுக்கிறார்.

ஐயோ பாவம் நீங்கள்.............

இந்த திரியை ஆரம்பித்த யாழ் களத்தின் ஆசிரியர் மோகண் அண்ணாவுக்கும் சரி, அவரின் திரிக்கு பதில் எழுதிய எனக்கும் சரி, ஒன்றுமே தெரியாமல் தான் எழுதிக்கொண்டு இருக்கின்றோம்

நீங்கள் எந்த நபரை பாதுக்காக்க முற்படுகின்றீர்கள் என்றும், அவரின் ஈனச் செயலை ஆதரிக்கின்றீர்கள் என்றும் புரிகின்றது. ஒரு வேளை உண்மையையிலேயே அவரை உங்களுக்கு தெரியாவிடின், இந்த திரிக்கான பின்புலத்தை கொஞ்சம் கூட அறியாமல் கற்பனை வெளியில் நின்று ஈனர்களுக்காக வெற்று வாதம் செய்கின்றீர்கள்.

2) மிகவும் அருவெருக்க தக்க முறையில் தன்னை ஒரு நடுநிலைவாதியாக பெணிய வாதியாக வேறு ஒரு தளத்தில் முக்கிய கதாபாத்திரமாக காட்டி தன்னை முதன்மை படுத்துகிறார். கொஞ்சம் கண்ணியமாக எண்றாலும் கடும் சொற்களால் வசை பாடுகிறார்.

தனி மடல் மற்றும் வேறு எந்த முறையிலும் பாலியல் சேட்டை புரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், எடுக்குமாறு கேட்பதும் 'மிகவும் அருவருக்கத்தக முறை' என்றால், நிச்சயம் கோடி முறை அந்த அருவருக்கத்தக்க செயலை செய்வேன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் உந்த தனிமடலை அதிகம் பாவிக்கிறதில்ல. யாரேனும்.. மடல் போட்டால் அவசியம் என்று தோன்றினால் பதில் அளிப்பேன். மற்றும்படி.. இது நாள் வரைக்கும் என்னோடு யாரும் தனிமடலில் தகாத வழிகளில் செய்திகளை தகவல்களை பரிமாறியது கிடையாது. நானும் பரிமாறிக் கொண்டதில்லை.

நான் பலரோடும் கருத்துச் சண்டை எல்லாம் பிடிச்சிருக்கிறேன். ஆனால் எல்லோரும் நண்பர்களாக நண்பிகளாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு இந்தக் களம் நல்ல நண்பர்களை அளித்துள்ளது என்றே கொள்ள வேண்டும்..! :)

நிர்வாகத்துக்கு மட்டும் சில காரசாரமான (தகாத வழிகளில் அல்ல.) மடல்கள் எழுதி இருக்கிறேன். அங்க உள்ளவங்க என்ன பாவம் செய்தாங்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது இப்போது..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்துவிட்டேன்

தமிழ்ஸ்ரீ

நிழலி

மற்றும்

சுமங்களா

எனது கருத்தை...

எனது தவறானவர்மீதான சுட்டிக்காட்டுதலை....

திரும்பப்பெறுகின்றேன்

தவறுக்கு மன்னிக்கவும்

அதேநேரம்

இதனால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து எனக்கு தனி மடல் வந்துள்ளது

நன்றி

எனை ஒழுங்கமைத்ததற்கு...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தவறுதலாக பதிந்து விட் டேன்

மன்னிக்கவும்

நன்றி

Edited by விசுகு

நிர்வாகத்துக்கு மட்டும் சில காரசாரமான (தகாத வழிகளில் அல்ல.) மடல்கள் எழுதி இருக்கிறேன். அங்க உள்ளவங்க என்ன பாவம் செய்தாங்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது இப்போது..! :)

ஹி ஹி .... உதத் தான் நானும் அடிக்கடி செய்கின்றது... பாவம் மோகன் அண்ணா & Co... என்ன பாவம் செய்தார்களோ தெரியாது.. :D

அட நானும் யாழுக்கு அதிகம் வந்து போறனான் ,ஆனால் இவ்வளவு விளையாட்டுக்கள் நடக்குது என்று தெரியாமல் போய்விட்டது

.எடுத்துவிட்டேன் விசுகு அண்ணா

Edited by சுமங்களா

  • கருத்துக்கள உறவுகள்

நான் உந்த தனிமடலை அதிகம் பாவிக்கிறதில்ல. யாரேனும்.. மடல் போட்டால் அவசியம் என்று தோன்றினால் பதில் அளிப்பேன். மற்றும்படி.. இது நாள் வரைக்கும் என்னோடு யாரும் தனிமடலில் தகாத வழிகளில் செய்திகளை தகவல்களை பரிமாறியது கிடையாது. நானும் பரிமாறிக் கொண்டதில்லை.

--------- ஆனால் எல்லோரும் நண்பர்களாக நண்பிகளாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு இந்தக் களம் நல்ல நண்பர்களை அளித்துள்ளது என்றே கொள்ள வேண்டும்..! :)

-----

நெடுக்ஸின் இந்த கருத்துடன் நான் நூற்றுக்கு நூறு ஒத்துப்போகின்றேன் . அதே மனநிலையில் தான் நானும் உள்ளேன் .

இதுவரை நானாக விரும்பி நிர்வாகத்துக்கு மட்டுமே ...... சில தனிமடல்கள் அனுப்பியுள்ளேன் . அதுகும் சில யாழ் கள உதவிகள் சம்பந்தப்பட்ட யோசனைகளுக்காக மட்டுமே .

மற்றும் படி யாரும் தனிமடலில் என்னை தொடர்பு கொண்டால் .... நான் பதிலளித்துள்ளேன் .

எனக்கு எதையும் இரகசியமாக செய்ய விருப்பமில்லை . நான் வளர்ந்த வளர்ப்பு அப்படி .

இப்ப கொஞ்ச காலமாய் நான் களத்தில் எழுதும் எழுத்துக்கும் , நான் வாழ்க்கையில் வாழும் வாழ்வுக்கும் ஒருவரும் கற்பனையில் முடிச்சுப்போட்டு பார்க்க வேண்டாம்.

உண்மையில் நான் யாழ் களத்திற்கு வராத நாட்களே குறைவு . ஏனேன்றால் அங்கு வந்தால் எனது பல முகம் தெரியாத நண்பர் , நண்பிகளை பார்த்து விட்டு போன ஒரு மனத்திருப்தி ஒன்று கிடைக்கின்றது. :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு , உங்களின் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி விட்டீர்கள் . நன்றி. :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் நண்பர்கள் அதனால சமாதானமாய் இருக்கலாம் என்று என்னுடைய கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ஸ்ரீ

நிழலி

மற்றும்

சுமங்களா

எனது கருத்தை எடுத்துவிட்டேன்

தாங்களும் எடுத்தாலேயே அது முழுமையாக அழிக்கப்படும்

செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்

Edited by விசுகு

தமிழ்ஸ்ரீ

நிழலி

மற்றும்

சுமங்களா

எனது கருத்தை எடுத்துவிட்டேன்

தாங்களும் எடுத்தாலேயே அது முழுமையாக அழிக்கப்படும்

செய்வீர்கள் என எமிர்பார்க்கின்றேன்

...நானும் எடுத்துவிட்டேன்

நன்றி விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.