Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்மை நாமே தொலைக்கிறோமா? 1

Featured Replies

ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் பலவிதங்களால் இல்லது போயின

1. தமிழ் பௌத்தர்கள இருந்ததற்கான வரலாறு சிங்களவர் தமது என உரிமை கோரி அபகரித்துகொண்டனர்

2. இந்து/சைவ சமயம் சார் ஆதாரங்களான புராதன ஆலயங்கள் போர்த்துகேயர், ஒல்லாந்தரால அழிக்கப்பட்டு அம்மூலப்பொருட்கள் கோட்டைகள் கட்ட பயன் பட்டன.

அதற்கு இன்றும் உள்ள ஆதாரமாக திருகோணமலை கோட்டைசுவரில் உள்ள

முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை எனும் கற்வெட்டு.

3. போர் சூழலால் அழிக்கப்பட்டவை.

4. நாமெ அழித்தவை, அழித்துகொண்டிருப்பவை

இதில

நாமே அழித்தவை /அழித்துகொண்டிருப்பவை தான் வருத்ததிற்குரியதும் எமது இழி நிலையுமாகும்.

எம்மிடம் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடங்கள் தற்போது இல்லதுவிட்டாலும் சில நூற்வருடங்களுக்கு முற்பட்ட கட்டடங்கள் வீடுகள் ஆங்காங்கே காணப்படுகிறன. அவற்றையும் நாம் புதுவீடு கட்டுகிறோம் என்று இடித்து அழித்துகொண்டிருக்கிறொம். அவைதான் எமது கடந்த வரலற்றை பேசப்போகிறன என்பதை மறந்து இன்று எமது வெளி நாட்டு பணமும், புதிதாக்கல் எனும் அவாவும் எமது தொன்மையை நாமே குழிதோண்டி புதைப்பதாக அமைகிறது. ஏற்கனவே பல நூறு வீடுகள் அழிக்கப்பட்டு விட்டது. எஞ்சிய சிலவும் விரைவில் அழிக்கப்பட்டு நவீன வீடுகள் கட்டப்பட்டு விடலாம்.

இன்று மேற்கு நாடுகளில் குறிப்பக நான் இருக்கும் நாட்டில் அவர்கள் தமது தொன்மையான கட்டிடங்களை பேண மேற்கொள்ளும் நடவடிக்கைகள் , அவர்களிடம் உள்ள விழிப்புணர்வு எமது மக்களிடமோ அல்லது அது சார் துறையினரிடமோ இல்லாதது வருத்ததிற்குரியது. இங்கு பழைய வீட்டை புதிதாக்க போகிறார்கள் என்றால் அதன் முகப்பை அப்படியே பேணுவதற்குரிய முன் ஏற்பாடுகள் செய்துவிட்டு எஞ்சிய பகுதியை இடித்து புதிதாக்குவார்கள்.

இது நான் இருக்கும் நாட்டில் உள்ளா 1600 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட கோட்டை?

இதை தற்போது புதுப்பிக்க முயற்சிகள் நடக்கிறன.

bru57po1gw.jpg

bru79zl3fd.jpg

நாமோ அடியோடு கிளறி எறிந்துவிடுகிறோம்.

jaf10048us.jpg

மேலே படத்தில் காட்டப்பட்ட வீடு பருத்திதுறையில் கைவிடப்பட்டு இடிந்துள்ள வீடு.

இதே போல் கொக்குவில் பொற்பதிவீதியிலும் இரண்டுவீடுகள் இடிந்துகொண்டிருக்கிறன.

நல்ல நிலையில் இன்றும் உள்ள வீடுகள் சிலவற்றை சுழிபுரப்பகுதியிலும், காரைநகர்வீதி சங்கானையிலும் கண்டிருக்கிறேன். வட்டுகோட்டைபகுதியிலும் சிலவீடுகள் உள்ளன. அவற்றையாவது பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு ஆவது பாதுகாத்து எதிர்காலச்சந்ததிக்கு கொடுத்திமானால் அதுவே பெரிய காரியம்.

இதில் முக்கிய பங்காற்றவேண்டியது புலம்பெயர் மக்களே. ஏன் எனில் இன்கிருந்து போகும் கட்டளைகளுக்கு அமையவே அங்கு இடிப்பதுவும் கட்டுவதும் பெரும்பாலும் நடைபெறுகிறது.

சாவகசேரி இந்துகல்லுரியிலும் பாடசாலை ஆரம்பித்தகால சுண்ணம்பு கட்டடம் ஒன்று இருந்து.அதை அவர்கள் புத்தாக்கம் செய்து பேணிவைத்திருப்பது மிகவும் நல்லவிடயம். அதே போல ஏனைய பாடசாலைகளும், தனியாரும் செய்தால் சிலநூறு வருடத்து வரலாற்றையாவது காப்பாற்றலாம்.

போரால் சிதைந்த பழையவீடு

45a3me5bz.jpg

நாம் செய்வோமா?

யாழ்ப்பாண வீடுகளை பற்றி தெளிவாக விபரிக்கும் இணையபக்கம் இதோ

http://us.geocities.com/rmayooranathan/

நல்ல சிந்தனை குளம். யாராவது (பழைய வீட்டுச் சொந்தக்காரர்) இதைப் பார்த்துச் சிந்திக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை உதுகளை எங்கடையாக்கள் சிந்திக்க போகினம் வீடுகள் மட்டுமல்ல பழையகால பாவனை பொருட்களாவதுஇப்ப இருக்குமா என்பது சந்தேகமே எனக்கு தெரிஞ்சு அவற்றை பாது காக்கும் ஒரு ஒழுங்கான அருங்காட்சியம் எண்டு கூட ஒண்டுமில்லை (இப்ப இருக்கோ தெரியாது)இப்ப ஊரிலை ஒரு பித்தளை முக்கு போணி எண்டா என்ணெண்டு தெரியுமோ தெரியாது

அந்த பருத்தித்துறையில் இடிந்துள்ள வீடு எவடத்தில் இருக்குது? எதற்கு கிட்டவாக இருக்குது? :roll: :?:

எங்களுக்கு ஏன் இவை...நாங்கள் தான் புதுமை விரும்பிகள் ஆச்சே... பழையன கழிந்து மாற்றான் புதுமை புகுத்தனுமில்லா...அதுக்கு உதுகள் தடை எல்லோ...! எங்களுக்குத்தான் சொந்தமா என்று எதுவும் இல்லையே... எப்படியோ மாறிட்டீப் போறம்.. நாகரிகம் என்று...உடையை விட்டிட்டம்...நாட்டை விட்டிட்டம்...உணவ விட்டிட்டம்..வெட்டியா செய்யுறதுகளுக்கு நியாயம் சொல்லுறமில்ல...அப்புறம் வெறும் கட்டடம் எதுக்கு..??! அது ஏன் எங்க எதிர்கால சந்ததிக்கு...அதுகளுக்கு ஏன் பாழடைஞ்ச வீடு...???! அதுகள் நாகரிக உச்சில்ல...சந்திரல கல்லெடுத்து வீடு என்ன ஒரு கிரகமே கட்டி வாழுங்கள் தெரியுமோ...இப்ப நாசா கூட ஒரு ரகசிய ஒப்பந்தம் எழுதி இருக்கிறம்...அங்கையும் அசைலம் கொடுக்கிறதெண்டா..எங்களட்ட முதலில சொல்லிடுங்கோ என்று...றூட் பாத்து வைக்கத்தான்...! அங்கையும் புதுமை பேசனுமில்ல... எங்களுக்க யார் யார் வித்தியாசம் என்று காட்டனுமில்ல...! :wink: :P :lol:

  • தொடங்கியவர்

எம்மை நாமே தொலைக்கிறோமா? 2

முதற்பதிவில் எமது பழமையான வீடுகள் இழக்கப்பட்டு கொண்டிருப்பதைப்பற்றி ஒரு சிறு பதிவு செய்திருந்தேன். இது எமது வளம் இழக்கப்படுவது பற்றிய ஒரு பதிவு.

மிகவும் தரமான கண்ணாடி மணல் படிவுகள் யாழ்குடா நாட்டின் வடமராட்சியின் வல்லிபுரக்கோவில் முதல் சுண்டிக்குளம்? வரை விரவிக்கிடக்கிறது. அதே போல சாவகச்சேரி முதல் பளைக்கு அப்பால் வரையான கடற்கரைபிரதேசம். {அவற்றைவிட முதல் ஒரு பதிவில் படம் காட்டிய பூநகரியின் மன்னித்தலை, கௌதாரிமுனைப்பிரதேசங்களிலும

  • தொடங்கியவர்

அந்த பருத்தித்துறையில் இடிந்துள்ள வீடு எவடத்தில் இருக்குது? எதற்கு கிட்டவாக இருக்குது? :roll: :?:

பருத்தி துறை நகருக்கு அண்மையில் தான், வீதி ஞாபகம் இல்லை.

மற்றும் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி

நீங்க சொல்வது சரிதான் அண்ணா. அதோட காங்கேசந்துறைப் பக்கம் சுண்ணப்பாறைகளை வெட்டி எடுத்து சீமெந்து செய்தார்கள்... தொழிற்ச்சாலை வேலை செய்யவில்லை ஆதலால் நிறுத்தப் பட்டிருந்தாலும்.. திரும்பவும் ஆரம்பிப்பதற்கான சாத்தியங்கள் உண்டு..

அதோட திருமலை புல்மோட்டைப் பகுதில கடற்கரையை கிண்டி இரும்புமண் (இல்மனைற்) சீன நிறுவனம் ராணுவப் பாதுகாப்போட அள்ளிக்கொண்டு போகின்றது.. அதனால் மேலதிக பாதிப்புக்களும் உண்டு... மிகவும் வேதனையான விடயம்தான்..

  • 6 months later...

சிந்திக்கவேண்டிய கட்டுரை

சிந்தித்தாலும் வெளிநாட்டுபணம் தொகையாக போகும் போது எல்லாவற்றையுமே இடித்து தள்ளி புதிதாக கட்டித்தள்ள நினைக்கிறார்கள்.

அந்த சிதைந்த வீடுகளின் உரிமையாளர்கள் தனிப்பட்டவர்கள் என்பதால் யாரும் தடுக்கமுடியாதுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எரியிர வீட்டில எதையும் எடுக்கலாம் என்று சிந்திக்கும் மக்கள் பலர் எம்மில் இருக்கிறார்கள். அவையளுக்கு கடல்தண்ணி வந்தால் என்ன, மணல் போனால் என்ன, தான் சுகமாய் இருந்தால் சரி என்ற மனப்பான்மையோடு தான் வாழ்கிறார்கள். உண்மையில் இது வேதனையான விடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.