Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரமேஸ்வரன் சுப்ரமணியம் ‐ ஸ்கொட்லண்ட்யார்ட் ‐ UK பத்திரிகைகள் ‐ கறையை கழுவப்போவது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமேஸ்வரன் சுப்ரமணியம் ‐ ஸ்கொட்லண்ட்யார்ட் ‐ UK பத்திரிகைகள் ‐ கறையை கழுவப் போவது யார்? இது ஒரு GTNனின் தொகுப்பு

லண்டன் டெய்லி மெயில், த சண், ஈவினிங் ஸ்ரான்டர்ட் போன்ற பத்திரிகைகள் உட்பட லண்டன் பத்திரிகைகள் வெளியிட்ட ஒரு செய்தி இன்று சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் நேற்று வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட இரண்டு தகவல்களைக் கொண்டதாக அந்தச் செய்தி இருந்தது.

முதலாவது பரமேஸ்வரன் சுப்ரமணியம் என்ற தமிழ் இளைஞர் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதிக்கான பொலிஸாருக்கான மேலதிகக் கொடுப்பனவு 7.1 மில்லியன் பவுண்கள் என்பது. பரமேஸ்வரன் சுப்ரமணியம் உண்ணாவிரதம் இருந்த 72 நாட்களும் 24 மணிநேரமும் 29838 பொலிஸார் கடமையாற்றியதற்கான மேலதிகக் கொடுப்பனவே இது என்று அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இரண்டாவது பரமேஸ்வரன் சுப்ரமணியம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இரகசியமாக மக்டொனால்ட் பேகர் சாப்பிட்டார் என்பது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த யுத்தத்தை நிறுத்தக் கோரி புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர் போராட்டங்களை நடாத்தியிருந்தார்கள்.

லண்டனிலும் பாராளுமன்றிற்கு முன்பாக தமிழ் மக்கள் ஒன்றுகூடிப் போராட்டம் நடாத்தினார்கள். அதன் ஒரு அங்கமாக 28 வயதான பரமேஸ்வரன் சுப்ரமணியம் தொடர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொண்டு வந்தார்.

பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதி மொழியைத் தொடர்ந்து ஜுன் 17ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் கைவிடுவதாக அறிவித்தார். இன்று வரை பிரித்தானிய அரசு வழங்கிய உறுதி மொழி என்னவென்று எவருக்கும் தெரியாது.

பரமேஸ்வரன் சுப்ரமணியம் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில் ஸ்கொட்லண்ட்யார்ட் விசேட பொலிஸார் விசேட கண்காணிப்புக்கருவியைக் கொண்டு கண்காணித்ததில் பரமேஸ்வரன் ரகசியமாக மக்டொனால்ட்டின் பேகர் சாப்பிடுவதை தாம் அவதானித்ததாகவும் தம்மால் அதனை நம்பமுடியாமல் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த கூடாரத்துக்கு வெளியே மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்ததாலும், உடனடியாக அது பற்றிக் கருத்துத் தெரிவிப்பது வன்முறைக்கு வித்திடலாம் எனக் கருதியதாலும் தாம் அது பற்றி அப்போது எதுவும் பேசவில்லை என்றும் ஸ்கொட்லண்ட்யார்ட் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாகவும் அப்பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் இவ்விடயங்கள் தொடர்பாக ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் உத்தியோகபூர்வமாக கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை.

ஏப்ரலில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டுக்குப் பொலிஸாருக்குச் செலவிட்ட பணத்தை விடப் பலமடங்கு பணம் இந்தப் போராட்டத்தின் போது செலவிட நேர்ந்ததாகவும், 2006இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு செலவிட்ட பணத்தற்கு நிகரானது இந்தச் செலவு என்றும் அப்பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன. அதன் போது 7.3 மில்லியன் பவுண்கள் செலவிடப்பட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் போது பொலிஸாருக்கு 21. 7 மில்லியன் பவுண்கள் செலவிடப்பட்டிருந்தன என்றும் அப்பத்திரிகைகள் செலவுக்கணக்கு எழுதியிருந்தன.

இந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் எவையும் பரமேஸ்வரன் சுப்ரமணியத்துடன் தொடர்பு கொண்டு அவருடைய கருத்தை இது பற்றி கேட்டிருக்கவில்லை. ஆனால் இன்டிபென்டன்ட் மட்டும் இதில் விதிவிலக்கு.

இன்டிபென்டன்ட் இது பற்றி அவருடன் தொடர்பு கொண்ட போது அவர் இச் செய்தியை மறுத்திருக்கிறார். உண்ணாவிரத நேரத்தில் மக்டொனால்ட் பேகர் மட்டுமல்ல எந்த உணவையும் உண்ணவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது உண்ணாவிரதப் போராட்டத்தையும் அதன் பலத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு முயற்சி. ஓரு முழுமையான பொய் என்று குறிப்பிட்ட அவர் இது குறித்து தாம் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸாருடன் தொடர்பு கொண்டதாகவும் தாம் அவ்வாறான செய்தி எதனையும் வெளியிடவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இது இலங்கை அரசாங்கத்தின் ஒரு திட்டமிட்ட சதி என்று குறிப்பிட்ட அவர் இந்தப் பத்திரிகைகளுக்கு எதிராக தாம் வழக்குத் தொடர ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்குப் பின்னூட்டமிட்ட பிரித்தானியர்கள் பலர் இலங்கைத் தமிழர்கள் இதனூடாகத் தம்மை முட்டாள்களாக்கி விட்டதாகச் சினந்து கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தமது வரிப்பணம் இன்றுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில் அநியாயமாகச் செலவழிக்கப்பட்டிருக்கிறது என்கிற கோபம் இருப்பது அவர்களது எழுத்தில் வெளிப்படுகிறது.

இன்னும் சிலர் பிரித்தானிய அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டை மிக மோசமானது என்று கண்டித்திருந்தார்கள். அவர்களிலும் தீவிரமான சிலர் இலங்கைத் தமிழர்களுக்கு இப்போது அங்கு பிரச்சினை தீர்ந்து விட்டது தானே. எனவே அவர்கள் எல்லோரையும் திருப்பி இலங்கைக்கு அனுப்பி விட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதற்கு எதிராக வேறு சில அபிப்பிராயங்களும் இல்லாமல் இல்லை. ஸ்கொட்லண்ட்யார்ட் 7.1 மில்லியன் பவுண்களுக்குக் காட்டிய கணக்குத் தான் இது என்றும், போராட்டம் நடைபெற்ற போது வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டு லண்டன் நகரப்பகுதி இடரை எதிர்கொண்ட போது இந்தப் போராட்டத்தை முறியடிக்க பொலிஸார் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். அதற்குப் பதிலாக அதன் போது இந்த உண்மையை வெளியிட்டிருந்தால் இவ்வளவு நீண்ட நாட்கள் வீதித்தடைகள் இல்லாமல் போராட்டம் எப்போது முடிந்து விட்டிருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் போக்குவரத்து விதிகளை மீறினாலே போக்குவரத்துப் பொலிஸாரிடமிருந்து படத்துடன் தண்டம் கட்டச்சொல்லி கடிதம் அனுப்பப்பட்டு விடும். ஆனால் இவ்வாறான ஒரு பாரிய பிரச்சினைக்கு வெறுமனே அவர் பேகர் சாப்பிட்டார் என்று சொல்லியிருப்பது ஏன்? அவர் பேர்கர் சாப்பிடுவதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு விட வேண்டியது தானே என்றும் கேட்டிருக்கிறார்கள். அது மட்டுமன்றி இவ்வாறான ஒரு விடயத்தை வெளிப்படுத்த ஏன் இவ்வளவு காலம் எடுத்திருக்கிறது என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

மறுபுறத்தில் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கறையைக் கழுவி தமிழ் மக்களுடைய போராட்டத்தின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டியது பணி பரமேஸ்வரன் சுப்ரமணியத்தின் கைகளில் இருக்கிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1...15773&cat=1

ஒரு நேர உணவை இழக்க விரும்பாத நம்மிடையே தன்னை உண்ணாமல் உருக்கி தன்னினத்தை காப்பாற்றக் கோரிய ஒரு இளைஞனுக்கான பரிசு இதுதான். பரமேஸ்வரன் போல இல்லை இனியிந்த இனத்துக்காக யாரும் போராட வேண்டாம்.

ஒரு நேர உணவை இழக்க விரும்பாத நம்மிடையே தன்னை உண்ணாமல் உருக்கி தன்னினத்தை காப்பாற்றக் கோரிய ஒரு இளைஞனுக்கான பரிசு இதுதான். பரமேஸ்வரன் போல இல்லை இனியிந்த இனத்துக்காக யாரும் போராட வேண்டாம்.

என்ன இப்பிடி சொல்லீட்டீங்கள்...????? எவ்வளவு காசை எல்லாம் முதலீடு செய்து போட்டு காத்திருக்கினம்... யாராவது போராடி மந்திரத்தாலை மாங்காயை விழுத்தி இருக்க கூடதோ...???

  • கருத்துக்கள உறவுகள்

மறுபுறத்தில் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கறையைக் கழுவி தமிழ் மக்களுடைய போராட்டத்தின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டியது பணி பரமேஸ்வரன் சுப்ரமணியத்தின் கைகளில் இருக்கிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1...15773&cat=1

குற்றத்தை நிருபிக்க வேண்டியது எப்பொழுதும் குற்றம் சாட்டுபவரின் கடமையே தவிர குற்றம் சாட்டப்படுபவர் தனது கறையைக் கழுவிக்கொண்டிருக்கத் தேவையில்லை (The accused is innocent till proven guilty.)..!டெட்டோல் ஊத்திக் கழுவச் சொல்லும் முன்னர் நம் ஊடகவியலாளர்கள் இதைக் கவனத்தில் எடுப்பது நல்லது..! :wub:

Edited by Danguvaar

குற்றத்தை நிருபிக்க வேண்டியது எப்பொழுதும் குற்றம் சாட்டுபவரின் கடமையே தவிர குற்றம் சாட்டப்படுபவர் தனது கறையைக் கழுவிக்கொண்டிருக்கத் தேவையில்லை (The accused is innocent till proven guilty.)..!டெட்டோல் ஊத்திக் கழுவச் சொல்லும் முன்னர் நம் ஊடகவியலாளர்கள் இதைக் கவனத்தில் எடுப்பது நல்லது..! :rolleyes:

பூப்புனித நீராட்டு விழாக்கள், தண்ணி பட்டிகள், பிறந்தநாள் பாட்டிகள், எண்டு எல்லா பாட்டிமாரையும் ஒதுக்கி எவ்வளவு தியாக செய்து பணத்தை கொண்டு போய் முதலீடு செய்தவை.... அவை கேள்வி கேப்பினம் தானே....

அதுதானே தர்மம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதி மொழியைத் தொடர்ந்து ஜுன் 17ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் கைவிடுவதாக அறிவித்தார். இன்று வரை பிரித்தானிய அரசு வழங்கிய உறுதி மொழி என்னவென்று எவருக்கும் தெரியாது.//

:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::unsure::D<_<<_<

  • கருத்துக்கள உறவுகள்

இதை நிருபிக்க வேண்டிய பொறுப்பு குறிப்பிட்ட பத்திரிகைகளுக்கானது.ஸ்கொட்ல

ஸ்கோலன்ட் யார்ட் பொலிஸ் ஒழிக சிறிலங்கா பொலிஸ் வாழ்க என்று கத்தவேண்டியதுதானே..வெள்ளை ஊடகவியாளர் எல்லாம் ரெசிட் என்று புலம்பிகொண்டு திரிய வேண்டியதுதானே

ஜீ.எஸ்.பீ. பிளஸ் விவகாரத்தில் பாதிக்கப்படப்போகும் பிரித்தானிய வியாபாரிகள் இந்த பரப்புரையை செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. தாங்கள் இந்த விடியோ விடயங்களை சொல்லவில்லையென்று கூறியுள்ளார்கள் ஸ்காட்லாந்து யார்ட் போலீசார்

இலண்டனிலை எங்கடை அப்புக்காத்துமார் நிறைய இருக்கினமெல்லோ அவையள் சட்டத்தை கரைச்சு (?)குடிச்சவை ஏதாவது செய்யலாம்தானே? அவையளுக்கு காசு கொடுத்தால்தான் ஆரம்பிப்பினம். எல்லாரும் உங்களாலை முடிஞ்சதை தாங்கோ. அவையளை கெதியா பிடிப்பம். இல்லாவிட்டால் இலங்கை அரசாங்கத்திடம் காசு வாங்கிக்கொண்டு சாப்பிட்டது எண்டும் வாதாடுவாங்கள் நாதாரிபயலுகள்.

சரிசரி இந்த கறையை கழுவ யார்யார் எவ்வளவு தருவியள் என்றால் அவையளுடன் கதைக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமேஸ்வரன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லையென்றால். இதை நாம் சும்மா விடக்கூடாது. சண் பத்திரிகைக்கெதிராக வலுவான சட்ட நடவடிக்கை எடுக்க புலம்பெயர் உறவுகள் நாம் பரமேஸ்வரனுக்கு நிதியுதவி செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் வெல்லும்

இதன் மூலம் தமிழரின் நியாயத்தை மேலும்மேலும் உலகம் புரிந்து கொள்ளும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.