Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதன் தொலைக்காட்சிக் பதிவை தயவு செய்து யாரும் இணைக்கவும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

திகதி: 01.11.2009 ஃஃ தமிழீழம்

கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பலர் பார்த்திருக்கஇ பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்இ இனஇ மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும்இ சக நிறுவனங்களும்இ மனித உமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும்இ கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று இத்தகைய காட்டுமிராண்டி கலாசாரம் வேகமாக வளர்ந்து வருகின்றது. சட்டத் தையும்இ ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி ஒருவரே முன்னின்று இத்தகைய பாவ காரியத்தை செய்து முடித்திருப்பதை கண்டு முழு நாடுமே தலைகுனிய வேண்டியுள்ளது.

கையெடுத்து வணங்கி உயிர்ப் பிச்சை கேட்ட 26 வயது இளைஞரை அடித்து கடலில் தள்ளிய காட்சியை தொலைக்காட்சிகளில் செய்திப்படமாக பார்த்து அகில இலங்கையும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த சம்பவத்தின் காரணமாக கைது இடம்பெற்று இருந்தாலும்இ இத்தகைய அராஜகப் போக்கை நாம் கண்டிக்காமல் அமைதியாக இருப்போமானால்இ இது தொடர் கதையாக மாறிவிடும் என்றார்.

இதன் தொலைக்காட்சிக் பதிவை தயவு செய்து யாரும் இணைக்கவும்

இதன் தொலைக்காட்சிக் பதிவை தயவு செய்து யாரும் இணைக்கவும்

இந்த இணைபை நேற்று கேட்கும்போது, எனக்கு தந்துதவிய இசைக்கலைஞனுக்கு (டங்குவார்) நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பில் இருக்கிறது.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30533

பார்க்கவே மிகவும் கவலையாக இருக்கிறது. மரங்களைத் தறித்தால் குற்றம் என்று மேலை நாடுகள் சொல்கின்றன. சில பிராணிகளுக்கு தீங்கு விளைத்தால் அதிக தண்டனை விதிக்கிறது உலகம். நியூசிலாந்தில் டனிடனில் ஒட்டகோ பெனின்ஸ்சுலா என்ற இடத்தில் உள்ள கடற்கரை ஒட்டிய சில பகுதிகளில் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 வருடங்களாக மனிதர்கள் அங்கு செல்லவில்லை. காரணம் அங்குள்ள மஞ்சள் நிற மூக்கை உடைய பென்குயின்களின் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக தடைசெய்யப்பட்டிருக்கிறது. அப்பென்குயின்கள் சுதந்திரமாக இருப்பதற்கு மனிதர்கள் தடையாக இருப்பார்கள்.

ஆனால் கேடு கெட்ட சிறிலங்காவில் மனிதர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லை. அதுவும் தமிழன் என்றால்....

அகிம்சை என்பதற்கு அர்த்தம் என்ன வென்று தெரியாமல் பொய் வேடமிட்டு நடிக்கும் காந்தி தேசம் சிறிலங்காவிற்கு தனது சுய நலத்துக்காக ஆதரவு கொடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான பௌத்த சிங்களவர்கள் வெள்ளிக்கிழமை என்றால் ஒரு முட்டையை கூட உடைக்கமாட்டார்கள் .

ஏனென்றால் முட்டைக்குள்லும் ஒரு உயிர் உள்ளது , அதனை கொல்வது பாவம் என்பதால்.

அதனை விட தமிழனை அடித்துக் கொன்றால் பாவம் இல்லை என்று சிங்களவன் நினைக்கின்றான் போலும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பை தந்ததற்கு நிழலி கந்தப்பு இருவருக்கும் எனது நன்றிகள்

இந்த கேடு கெட்ட சிங்களவனை சாபமிடுவதை தவிர எங்களால் என்ன செய்ய முடியும்

ஒரு பெற்ற பிள்ளைகளை கூட அடிக்க கூடாது என்று சொல்கின்ற நாடுகள்

இப்படிப்பட்ட கொடுமைகளை பாத்து நிக்குதுகளே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பை தந்ததற்கு நிழலி கந்தப்பு இருவருக்கும் எனது நன்றிகள்

இந்த கேடு கெட்ட சிங்களவனை சாபமிடுவதை தவிர எங்களால் என்ன செய்ய முடியும்

ஒரு பெற்ற பிள்ளைகளை கூட அடிக்க கூடாது என்று சொல்கின்ற நாடுகள்

இப்படிப்பட்ட கொடுமைகளை பாத்து நிக்குதுகளே

இப்படியான செய்திகளை படிச்சு எங்களுக்குள்ள ஒப்பாரி வைக்கிறதோட எங்கட பாடு பொயிடுது.

இதுகளை சர்வதேச மயப்படுத்த வேற்று மொழி ஊடகங்களுக்கு வழங்க யாராவது முயல்கின்றோமா

(என்ன விட்டிடுங்க தமிழை தவிர எனக்கு வேறெந்த மொழியும் தெரியாது)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி கடலை ......

இதில போறதின் அர்தமே உங்களுக்கு விழங்கல 900 பாத்து இருக்கிறார்கள் அவர்களுக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்களா? இதை இங்கு இணைப்பதற்கு முன் வேறு சில இணையங்களில் வந்துள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி கடலை ......

இதில போறதின் அர்தமே உங்களுக்கு விழங்கல 900 பாத்து இருக்கிறார்கள் அவர்களுக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்களா? இதை இங்கு இணைப்பதற்கு முன் வேறு சில இணையங்களில் வந்துள்ளது

அக்கோய் நான் சொல்ல வாறத எண்ணண்ணா இதில இணைக்கிறதோட மட்டும் நில்லாம வேற்று இனத்தவங்களும் தெரிந்துகொள்ள வழி சமைக்கோணம் என்பதைத்தான.

கொலை செய்யப்பட்ட அந்த இளைஞன் மனநோயாளி என்பது, முதலில் தாக்கியவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இறந்த இளைஞனை அடையாளம் காட்ட வந்த அவரது தமையனார், சொன்ன பின் தான் அவர் ஒரு மனநோயாளி எனத் தெரிய வந்தது. தாக்கியவர்கள் அவர் தமிழன் என்பதனாலேயே இப்படி மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளாரென்பதை எவரும் மறுக்க முடியாது. ஏற்கனவே இது சம்மந்தமாக ஒருவரை கைது செய்துள்ளனர், இன்னொருவர் சரணடைந்துள்ளார். இறந்தவர் ஒரு மனநோயாளி எனக் காரணம் காட்டி பொலிசார் விசாரணையைத் திசை திருப்பவும் முயலலாம். முடிந்தவரை இவ்விசாரணை பற்றி டெய்லிமிரர் போன்ற பத்திரிகைகளில் வரும் செய்திகளை, அனைத்து வெளிநாட்டு ஆங்கில ஊடகங்களின் இணையத்தளங்களில் உடனுக்குடன் இணைப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்யப்பட்ட அந்த இளைஞன் மனநோயாளி என்பது, முதலில் தாக்கியவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இறந்த இளைஞனை அடையாளம் காட்ட வந்த அவரது தமையனார், சொன்ன பின் தான் அவர் ஒரு மனநோயாளி எனத் தெரிய வந்தது. தாக்கியவர்கள் அவர் தமிழன் என்பதனாலேயே இப்படி மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளாரென்பதை எவரும் மறுக்க முடியாது. ஏற்கனவே இது சம்மந்தமாக ஒருவரை கைது செய்துள்ளனர், இன்னொருவர் சரணடைந்துள்ளார். இறந்தவர் ஒரு மனநோயாளி எனக் காரணம் காட்டி பொலிசார் விசாரணையைத் திசை திருப்பவும் முயலலாம். முடிந்தவரை இவ்விசாரணை பற்றி டெய்லிமிரர் போன்ற பத்திரிகைகளில் வரும் செய்திகளை, அனைத்து வெளிநாட்டு ஆங்கில ஊடகங்களின் இணையத்தளங்களில் உடனுக்குடன் இணைப்பது நல்லது.

நல்ல விடயம். இதே போல வேலைத்தளங்கள், பாடசாலை, பல்கலைக்கழகங்களில் எமக்குத் தெரிந்த தமிழர் அல்லாதவர்களுக்கும் அனுப்ப வேண்டும்.இப்பொழுது அகதிகளை சில நாடுகள் திருப்பி அனுப்ப முயற்சிக்கிறார்கள். அகதிகளைத் திருப்பி அனுப்பினால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய உயிர் ஆபத்து பற்றி அந்தந்த நாடுகளுக்குப் பொறுப்பானவர்களுக்கும் அனுப்ப வேண்டும்.

கொஞ்ச நாட்களுக்கு பின்பு செம்மணி கிருசாந்தி வழக்குப் போல இவ்வழக்கும் காணாமல் போய்விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.