Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறைமையின் அடிப்படையில் தனித்தேசமாக இலங்கைத்தீவில் வாழ அனுமதிக்க வேண்டும் - பாராளுமன்றில் கஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறைமையின் அடிப்படையில் தனித்தேசமாக இலங்கைத்தீவில் வாழ அனுமதிக்க வேண்டும் - பாராளுமன்றில் கஜேந்திரன்

பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசர காலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஐா கஜேந்திரன் அவர்கள் சிங்களதேசம் தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் அவர்கள் தனித்தேசமாக தங்களை தாங்களே ஆள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுடன் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளதாக பதிவு இணையத்தின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்து முக்கிய கருத்துக்கள் வருமாறு:

பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசர காலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஐா கஜேந்திரன் அவர்கள் சிங்களதேசம் தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் அவர்கள் தனித்தேசமாக தங்களை தாங்களே ஆள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுடன் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

யுத்தம் முடிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யுத்தம் முடிக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னரும் தொடரும் இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு என்பது தொடர்ந்தும் தமிழ் மக்களை பாதிப்புறச் செய்வதாகவே உள்ளது.

குறிப்பாக வன்னியில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட 350,000 திற்கும் அதிகமான மக்கள் மீண்டும் அவர்களுடய ஊர்களிலே சென்று சுதந்திரமாக குடியமர முடியாதபடி இந்த அவசரகாலச்சட்டம் தடையாக இருக்கின்றது.

இராணுவம் இல்லது அரசாங்கம் விரும்புகின்ற இடங்களுக்கு மட்டும் அந்த மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ9 வீதிக்கு கிழக்குப் பக்கமும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதிகளிலும் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை.

அப்பகுதியில் பெருமளவான பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயங்களாகவே காணப்படுகின்றது. பெருமளவான நிலங்கள் பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்காகவும் கையகப்படுத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்னமும் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அந்த மக்கள் மீளக் குடியமர எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும்.

கடந்த காலத்தில் யுத்தம் நடைபெற்றபொழுதிலும் சரி அல்லது அதற்குப் பின்னரும் சரி விடுதலைப் புலிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.

இன்னமும் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மிகுந்த மன உழைச்சலுடனும் அடிப்படை வசதிகள் இன்றியும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக சொந்த இடங்களில் சென்று குடியமர அனுமதிக்கப்படல் வேண்டும்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வெறுமனே நடமாட்ட சுநத்திரம் மட்டும் வழங்கப்பட்டால் போதாது அவர்கள் விரும்பிய இடங்களில் சென்று தாம் விரும்புவது போன்று குடியமர அனுதிக்கப்படல் வேண்டும்.

அடுத்த ஐனாதிபதி தெரிவு சம்பந்தமான போட்டியிலே நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் அழிக்கப்பட்ட அவலத்திற்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு பற்றிய எந்தக் கரிசனையும் யாருக்கும் இல்லை.

இன்று முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தெருவிலே விடப்பட்டவர்கள் போன்றே விடப்பட்டுள்ளனர். அந்த மக்கள் தாம் முகாம்களில் இருந்து வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்காக தமது உறவினர்களின் உதவியுடன் முகாம்களில் இருந்து வெளியேறிச் சென்றிருந்தாலும் கூட அவர்கள் வெளியேறிச் சென்று தங்கியியுள்ள இடங்களில் ஒரு வேளை உணவு உண்பதற்கு கூட வசதியில்லாமல் குந்தியிருப்பதற்கு இடமில்லாமல் அவலப்படுகின்றனர்.

அழிக்ப்பட்ட மக்களுக்கு முழுமையான நஸ்ட ஈடு வழங்கப்படல் வேண்டும் வீடுகளை இழந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளை கட்டிக் கொள்வதற்கும் இழந்த சொத்துக்களை மீண்டும் பெற்றுக் கொள்வாற்கு ஏற்ற வகையில் முழுமையான நட்ட ஈடு வழங்கப்படல் வேண்டும் இது உடனடியான தேவையாக உள்ளது.

இன்று போர் முடிந்த பின்னர் இலங்கையில் இருந்த எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது போலவும் கடந்த 33 வருடங்களாக மட்டுமே இலங்கையில் பிரச்சினை இருந்து வந்தது என்பது போலவும் 33 வருடங்களாக இருந்து வந்த பிரச்சினையை தீர்த்துள்ளதன் மூலம் இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டது போலவும் கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஐனநாயகத்தினை ஏற்படுத்தப் போவதாகவும் சிவில் நிருவாகத்தினை ஏற்படுத்தப் போவதாகவும் கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுடய இனப்பிரச்சினை என்பது வெறும் 33 வருடப் பிரச்சினை அல்ல அது புலிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினையும் அல்ல அது 48 ம் ஆண்டில் இருந்து எழுந்த பிரச்சினை அதற்கு முன்னிருந்து 1833ல் ஆங்கிலேயர்களால் தமிழ் இராச்சியம் சிங்கள இராச்சியத்துடன் இணைக்கப்ட்டதன் மூலம் எழுந்த பிரச்சினை.

1948 ம் ஆண்டில் இருந்து 75 ம் ஆண்டுவரை தந்தை செல்வா அவர்கள் ஸ்ரீலங்கா என்ற நாட்டிற்குள்ளே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அரசியல் உரிமைகளை பெற்று வாழ்வதற்கான முழு முயற்சிகளையம் மேற்கொண்டார். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் 1975ம் ஆண்டிலே ஓர் தெளிவான உரையை ஆற்றிவிட்டுச் சென்றார்.

இந்நிலையில் நாங்களும் கூறுகின்றோம் நீங்கள் யுத்தத்தினை முடித்திருந்தாலும் கூட தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை. எங்களுடய அரசியல் பிரச்சினைக்கான தீர்வு என்பது எங்களது தனித் தேசம் என்பது அங்கீகரிக்கப்படுவதன் ஊடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அதாவது தமிழர்கள் ஓர் தனித்துவமான ஒரு தேசம் எங்களுக்கு இறைமை உள்ளது எங்களுக்குள்ள இறைமையின் அடிப்படையில் எங்களை நாங்களே ஆளுவதற்கான முழு உரிமையும் எங்களுக்கு உண்டு. எங்களது இறைமை பறிக்கப்பட்டு எங்கள் மீது உங்களது இறைமை திணிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமிழ் மக்களின் பூரணமான சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பதன் மூலம் எங்களது அரசியல் உரிமைகளை நீங்கள் அங்கீகரிக்க முயல்வது தான் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் அமைதி நிலவுவதற்கான ஒரே வழியாக இருக்கும்

மாறாக சீனாவினுடய இராணுவ உதவிகளுடன் வடகிழக்கில் இராணுவ முகாம்களை அமைத்து தமிழ் தேசத்தினை ஓர் சிங்கள பிரதேசமாக மாற்ற முயல்வதன் மூலம் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை நசுக்கி விடுவதற்கோ அல்லது சிங்கள தீவாக மாற்றி விடுவதற்கோ நீங்கள் முயற்சி செய்தால் அது ஒரு பொழுதும் வெற்றியளிக்காது.

ஏனெனில் இன்று நீங்கள் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்றால் அது கொடூரமான முறையில் முடிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்திலே கிட்டத்தட்ட 60000 திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளது இது நடைபெற்றமைக்கு காரணம் இந்தப் பிராந்தியத்திலே தமது ஆதிக்கத்தினை நிலை நிறுத்துவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் உதவிதான் இவ்வாறன கொடூரமான முடிவுக்கு வாய்ப்பாக அமைந்தது.

ஆனால் தொடர்ந்தும் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை கொடுக்க மறுத்து சீனாவின் உதவிகளோடு தமிழர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை நீங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்தால் அதே பிராந்திய சக்திகள் மீண்டும் இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி இலங்கைத்தீவில் மீண்டும் ஓர் பிரச்சினையை உண்டு பண்ண முயல்வார்கள் இந்த யதார்த்தத்தினை புரிந்து கொண்டு தமிழ் மக்களாகிய எங்களுக்கு தரவேண்டி உரிமைகளை எங்களுடய தேசம் என்ற அடிப்படையில் எங்களுக்கு தந்து இந்த தீவிலே தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சந்தோசமாக வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கு நீங்கள் முன்வரவேண்டும்.

நீண்டகால இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக எங்களது தமிழ் தேசம் தனித் தேசமாக அங்கீகரிக்ப்பட்டு எங்களது இறையாண்மையின் அடிப்படையில் நாங்கள் எங்களை ஆட்சி செய்வதற்கான உரிமை எங்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.

என்று அவரது உரையில் இடம் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/4504/54/.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சரியோ

தப்போ

இவரது துணிச்சலை மெச்சாமல் இருக்கமுடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் பேசி தீர்வு கிடைக்கும் என்றிருந்தால் ஏன் பிரபாகரனும் புலிகளும் தோன்றப் போகிறார்கள்.

இது செவிடன் காதில் ஊதும் சங்கு. :)^_^:lol::)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ்

கனநாளைக்குப்பின் சந்திப்பதில் மகிழ்ச்சி

நான் சொன்னது

இன்றும் இவரது துணிச்சலை

பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசர காலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஐா கஜேந்திரன் அவர்கள் சிங்களதேசம் தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் அவர்கள் தனித்தேசமாக தங்களை தாங்களே ஆள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுடன் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளதாக பதிவு இணையத்தின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

புலத்தில் புதிதாய் புறப்பட்ட இராசதந்திரப் போராளிகள் பேரம்பேசி, அறிக்கை வெளியிட்டும், காணொளியில் பட்டி மன்றம் நிகழ்த்தியும் தனியரசை நோக்கி நகரலாம், தம்பின்னால் அணிதிரளுமாறு, புலத்துத் தமிழரை அணி பிரிப்பதற்கான முற்றுகைப்போர் மட்டுமே, நிகழும் காலத்தில்.

சிறிலங்கா பாராளுமன்றத்தில், இக்காலத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய கருத்தை இளையவர் பதிவு செய்துள்ளார்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் புதிதாய் புறப்பட்ட இராசதந்திரப் போராளிகள் பேரம்பேசி, அறிக்கை வெளியிட்டும், காணொளியில் பட்டி மன்றம் நிகழ்த்தியும் தனியரசை நோக்கி நகரலாம், தம்பின்னால் அணிதிரளுமாறு, புலத்துத் தமிழரை அணி பிரிப்பதற்கான முற்றுகைப்போர் மட்டுமே, நிகழும் காலத்தில்.

சிறிலங்கா பாராளுமன்றத்தில், இக்காலத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய கருத்தை இளையவர் பதிவு செய்துள்ளார்.

"ஓடைகள்தான் ஊற்றுகள்தான் உலகில் நதியாகின்றன."

இதை நல்ல எண்ணம் இருந்தால் ஊக்குவிக்லாம்............... அவர்களோடு சேர்ந்து அதன் பயணத்தை வேகமாக்கலாம்.

தவிர குழம்பும் எண்ணங்கள் இருந்தால்தான் உங்களின் வார்த்தைகள் வரும்...................இதில் நீங்களும் குழம்பியுள்ளீர்கள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள்தான் மேலே எழுதியிருக்கினறீர்கள்.

இன்றைய நிலைமையில், துணிச்சலுடன் இவர் சொன்ன கருத்துக்களுக்கு நாம் நன்றிசொல்ல வேண்டும். அவ்வாறான கருத்தினை சொல்லவேண்டியது அவர் கடமையும் கூட. ஆனாலும், இப்படியாக... வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் தமது கருத்துக்களை தமது இனத்துக்கான வேண்டுகோள்களை முன்வைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மூத்த அரசியல்வாதிகள் யாருமே இல்லையா...?

அவர்களெல்லாம் எம் இனத்தினை, எமது விடுதலைப் போராட்டத்தினை அடியோடு வேரறுத்த இந்தியாவின் அறிவுரையைத்தான் கேட்டு நடப்பார்களோ????????!!!!!!!!!!!

அந்தவகையில் , திரு.கஜேந்திரன் அவர்களை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

இதை நல்ல எண்ணம் இருந்தால் ஊக்குவிக்லாம்............... அவர்களோடு சேர்ந்து அதன் பயணத்தை வேகமாக்கலாம்.

தவிர குழம்பும் எண்ணங்கள் இருந்தால்தான் உங்களின் வார்த்தைகள் வரும்...................இதில் நீங்களும் குழம்பியுள்ளீர்கள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள்தான் மேலே எழுதியிருக்கினறீர்கள்.

குழப்பியதும், தொடர்ந்தும் குழப்புவது, குழம்ப மறுப்பதும் தானே புலத்தில் நடை பெறும் அரசியல்.

தாக்குதலும் ,தற்காப்பும்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால அரசியலுக்கும் இவரின் பேச்சுக்கும் பெரிய இடைவெளி தெரிகிறதே.

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......... வீராதிவீரன்!! என்னா பேச்சு, அதுவும் சிங்கள குகைக்குள் இருந்து கனைத்திருக்கிறார்!!! .... அடியா விசில்!!!!!!!!

அங்கு மூச்சு விடுகிறவங்களையும், சிங்களவன் விடுகிறான் இல்லை, குதிரை மட்டும் எகிறிப் பாயுதாம்?????? ... அதுவும் புலிச்சாயம் பூசிக்கொண்டு பாயுது!! ... நம்பச்சொல்கிறீங்கள்????????

... சில மாதங்களுக்கு முன்னுக்கு, வேறொரு நாட்டில் இருந்து லண்டனுக்கு வந்திருந்த சிலர், குதிரையை சந்தித்திருக்கிறார்கள். குதிரை கூறியதாம் ..."நான் உயிர் ஆபத்துகளுக்கு மத்தியில் கொழும்பில் இருந்து செயலாற்றுகிறேன்" என்று ..... சந்திப்பை முடித்து வந்தவர்கள் கூறினார்களாம் ..."குதிரைக்கு எந்தக்காலமும் சிங்களவனால் உயிருக்கு ஆபத்து வராது" என்று ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......... வீராதிவீரன்!! என்னா பேச்சு, அதுவும் சிங்கள குகைக்குள் இருந்து கனைத்திருக்கிறார்!!! .... அடியா விசில்!!!!!!!!

அங்கு மூச்சு விடுகிறவங்களையும், சிங்களவன் விடுகிறான் இல்லை, குதிரை மட்டும் எகிறிப் பாயுதாம்?????? ... அதுவும் புலிச்சாயம் பூசிக்கொண்டு பாயுது!! ... நம்பச்சொல்கிறீங்கள்????????

... சில மாதங்களுக்கு முன்னுக்கு, வேறொரு நாட்டில் இருந்து லண்டனுக்கு வந்திருந்த சிலர், குதிரையை சந்தித்திருக்கிறார்கள். குதிரை கூறியதாம் ..."நான் உயிர் ஆபத்துகளுக்கு மத்தியில் கொழும்பில் இருந்து செயலாற்றுகிறேன்" என்று ..... சந்திப்பை முடித்து வந்தவர்கள் கூறினார்களாம் ..."குதிரைக்கு எந்தக்காலமும் சிங்களவனால் உயிருக்கு ஆபத்து வராது" என்று ....

சம்பந்தனால் 35 வருடமாக எப்படி இலங்கையில் வாழ முடிகிறது என்ற கேள்வியும் உள்ளது? :wub:

... சில மாதங்களுக்கு முன்னுக்குஇ வேறொரு நாட்டில் இருந்து லண்டனுக்கு வந்திருந்த சிலர்இ குதிரையை சந்தித்திருக்கிறார்கள். குதிரை கூறியதாம் ..."நான் உயிர் ஆபத்துகளுக்கு மத்தியில் கொழும்பில் இருந்து செயலாற்றுகிறேன்" என்று ..... சந்திப்பை முடித்து வந்தவர்கள் கூறினார்களாம் ..."குதிரைக்கு எந்தக்காலமும் சிங்களவனால் உயிருக்கு ஆபத்து வராது" என்று ....

நோர்வேயில் இருந்தா சிலர் வந்தார்கள்?

குதிரை சவாரி செய்ய மறுக்குதோ, தொடர் தாக்குதல் செய்கின்றீர்கள்.

Edited by kalaivani

சம்பந்தனால் 35 வருடமாக எப்படி இலங்கையில் வாழ முடிகிறது என்ற கேள்வியும் உள்ளது? :wub:

ஐயா நுணா, சம்பந்தனுக்கும், குதிரைக்குக்கும் உள்ள வித்தியாசங்கள் ஆயிரம்!! ....

90களில் யாழை சிங்களம் கைப்பற்றியபின், யாழில் காலூன்றிய ஈ.பி.டி.பிக்கு எதிராகவும், தமிழ் தேசியத்தை ஆதரித்தும் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள்(பொங்கு தமிழ் போராட்டங்கள் உட்பட)மறக்க முடியாதவை! ... ஆனால் அவைகளும் ஏன் நடைபெற்ற பின்னனி தொடர்பாக பலத்த சந்தேகங்கள் இன்று ஏற்படுகின்றது.

நீங்கள் கதை விடுங்கோ சுமா லேசனா ஆளா? தேவை இல்லாம ஒருவர் மீது குற்றம் சாட்ட முற்படதிர்கள் புலிகள் இருந்த கலத்தில் கஜேந்திரன் போன்றோர் தங்கள் உயிர் பொன்னாலும் பற்வாய் இல்லை புலிகள் பார்த்து கொள்ளுவார்கள் என்று உயிரை துச்சமாக மத்தித்து செயற்பட்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.