Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரியாலை மற்றும் தென்மராட்சியில் உயர்பாதுகாப்பு வலயம் நீக்கம்! - இன்று பொங்கலை கொண்டாடவும் ஏற்பாடு

Featured Replies

அரியாலை மற்றும் தென்மராட்சியில் உயர்பாதுகாப்பு வலயம் நீக்கம்! - இன்று பொங்கலை கொண்டாடவும் ஏற்பாடு

தென்மராட்சி கிழக்கு மற்றும் யாழ்.நகர், கிழக்கு அரியாலை, கொழும்புத்துறை உயர்பாதுகாப்பு வலயத்தில் நேற்று மீள்குடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தமது பிரதேசத்திற்குள் நேற்றுப் பிர வேசித்து தத்தமது வீடுகளைப் பார்வையிட்டனர். அப்பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.

ஏ-9 வீதி வழியாகவும் யாழ். கேரதீவு வீதி வழியாகவும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா முன்செல்ல அவரைத் தொடர்ந்து பின்னால் சென்று அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்தனர்.

இச்சமயம் வீதியில் அமைக்கப் பட்டிருந்த அனைத்து தடைகளும் அகற்றப்பட்டிருந்தது. சைக்கிள்கள் மோட்டார் சைக்கிள்கள் வைத்திருந் தோர் அந்தந்த வண்டிகளிலேயே உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்தனர். உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்கலாம் என்ற செய்தி வெகுவேகமாக பரவத் தொடங்கியதும் மேலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு சென்றனர்.

இந்நிகழ்வின் போது அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நான் சொன்னதைச் செய்வேன் செய்வதைச் சொல்வேன். இங்குள்ள வீடுகளில் அனேக மானவை சேதமடைந்துள்ளன.

பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்போடு முதற்கட்டமாக உங்கள் காணிகள் வளவுகளை சுத்தம் செய்யுங்கள். முக்கியமாக மிதிவெடி அபாயம் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள்.அத்துடன் கிணறுகளை இறைப்பதற்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை ஆளுநர் பெற்றுத்தரவுள்ளார். பின்னர் வீடுகளை திருத்தம் செய்து உடனடி யாகவே குடியேறலாம் என அறிவித்தார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=1885

தேர்தல் தரும் பயன்களிவை. தேர்தல் முடிந்தபின்பு? மக்கள் இதனால் சந்தோஷமடைந்தாலும் ஏமாளிகளாகக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் எங்கள் உரிமையான சொத்துக்கள் அதை மகிந்த தன் சொந்தப் பொருளில் இருந்து தரவது போலவும் டக்ளஸ் அதைக் கஸ்ரப்பட்டு பெற்றுத் தந்தது போலவும் நாடகமாடுகிறார்கள்.மக்களே உங்கள் சொந்த உடமைகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.உங்கள் வாக்கை மறந்தும் மகிந்தவுக்கு போட்டு விடாதீர்கள்.

விடுவிக்க பட்ட போராளிகளில் அனேகர் மீண்டும் கொண்டு சென்று அடைக்கப்பட்டு உள்ளார்கள்.... பத்திரிகைகளில் பெயர் அறிவிக்க பட்டு பெயர் விபரத்தோடு வெளியில் விடப்பட்டவர்கள் அனைவரும் உறவினர்கள் வந்திருந்தனர் கூட்டிச்செல்வதுக்கு அவர்கள் அனைவரையும் உறவுகளுடன் வைத்து படங்கள் எடுத்தபின் அனைவரும் மீண்டும் கொண்டு செண்று அடைக்கப்பட்டு உள்ளனர்... விடுதலை செய்யப்பட்ட பட்டியலில் இருக்கும் இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பாட்டாலும் ஆதாரம் கிடையாது... இந்த விடுதைலை பட்டியலில் அடங்கி இருந்த அனைத்து போராளிகளும் சிங்களத்துக்கு எதிரான போர்களில் விழுப்புண் பட்டவகள்...

தகவல் சொன்னவர் விடுதலை செய்யப்படுவதாக சொல்லப்பட்ட உறவை அழைத்து செல்ல போய் இருந்த எனது உறவினர்...

Edited by தயா

விடுவிக்க பட்ட போராளிகளில் அனேகர் மீண்டும் கொண்டு சென்று அடைக்கப்பட்டு உள்ளார்கள்.... பத்திரிகைகளில் பெயர் அறிவிக்க பட்டு பெயர் விபரத்தோடு வெளியில் விடப்பட்டவர்கள் அனைவரும் உறவினர்கள் வந்திருந்தனர் கூட்டிச்செல்வதுக்கு அவர்கள் அனைவரையும் உறவுகளுடன் வைத்து படங்கள் எடுத்தபின் அனைவரும் மீண்டும் கொண்டு செண்று அடைக்கப்பட்டு உள்ளனர்... விடுதலை செய்யப்பட்ட பட்டியலில் இருக்கும் இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பாட்டாலும் ஆதாரம் கிடையாது... இந்த விடுதைலை பட்டியலில் அடங்கி இருந்த அனைத்து போராளிகளும் சிங்களத்துக்கு எதிரான போர்களில் விழுப்புண் பட்டவகள்...

தகவல் சொன்னவர் விடுதலை செய்யப்படுவதாக சொல்லப்பட்ட உறவை அழைத்து செல்ல போய் இருந்த எனது உறவினர்...

இவைகள்தான் அங்கு நடக்கிறது ... இவைகளைப்பற்றி ஒரு ஊடகங்களிலாவது ...????, இல்லை ததேயின் ஊடகங்களிலாவது ....?????? ....... மெல்ல அல்ல, வேகமாக ...அழிகிறது எம்மினம் ... கேட்பாரில்லாமல்!

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் எங்கள் உரிமையான சொத்துக்கள் அதை மகிந்த தன் சொந்தப் பொருளில் இருந்து தரவது போலவும் டக்ளஸ் அதைக் கஸ்ரப்பட்டு பெற்றுத் தந்தது போலவும் நாடகமாடுகிறார்கள்.மக்களே உங்கள் சொந்த உடமைகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.உங்கள் வாக்கை மறந்தும் மகிந்தவுக்கு போட்டு விடாதீர்கள்.

உண்மை.

எமது சொத்து.

எங்களது சொத்துகளை எங்களிடம் கையளிப்பதே ஒரு செய்தி. இது கூட ஒரு பரப்புரை உத்தியே.

இந்நிகழ்வின் போது அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நான் சொன்னதைச் செய்வேன் செய்வதைச் சொல்வேன். இங்குள்ள வீடுகளில் அனேக மானவை சேதமடைந்துள்ளன.

அதைவிட வசனம் வேறை.

Edited by nochchi

அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமது வீடுகளை பார்வையிடச் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

[ வியாழக்கிழமை, 14 சனவரி 2010, 02:41.02 PM GMT +05:30 ]

யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமது வீடுகளை பார்வையிடச் சென்ற இடம்பெயர்ந்தோர் தமது நோக்கம் நிறைவேறாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் சுமார் 300 இடம்பெயர்ந்தோர், 2000 ஆம் ஆண்டில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள தமது வீடுகளை பார்வையிட அழைத்து செல்லப்பட்டனர்.

எனினும் அரியாலையில் உள்ள பூம்புகார் சந்திக்கு அப்பால் அவர்களை செல்வதற்கு படைத்தரப்பு அனுமதிக்கவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதற்காக இதைப்போன்ற பல வாக்குறுதிகள் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற போதும், அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமது வீடுகளில் குடியமர்வதற்கான உரிய திகதிகள் எவையும் இதுவரையும் அறிவிக்கப்படவில்லை என இடம்பெயர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

அரியாலை வடக்கின் பாரிய பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப்பகுதிகளில் உள்ள தமது வீடுகள் படையினரால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக இடம்பெயர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமது வீடுகளை பார்வையிட வலிகாமம் வடக்குப் பகுதி மக்களும் கடந்த செவ்வாய்கிழமையன்று அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனவரி 23 ம் திகதி கல்மடுக்குளம் உடைச்சு போட்டால போய் பிடிச்ச இடங்கள் உந்த உயர் பாதுகாப்பு வலய பிரதேசங்கள். உதெல்லாத்தையும் எப்ப திரும்ப ஆமி பிடிச்சது? :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.