Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.கே. நாராயணன் ஆளுநராகிறார்-அவரது பதவியில் மேனன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.கே. நாராயணன் ஆளுநராகிறார்-அவரது பதவியில் மேனன்

டெல்லி: பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள எம்.கே.நாராயணன் மேற்கு வங்க ஆளுநராக நியமி்க்கப்படவுள்ளார். இதையடுத்து பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

முன்னாள் இன்டெலிஜெஸ் பீரோ (ஐ.பி.) தலைவரான நாராயணன், காங்கிரசுக்கு மிக நெருக்கமானவர் என்பதால் அவர் கடந்த 7 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார்.

பிரதமர், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், உளவுப் பிரிவுகள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பதவி இது.

தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது, இலங்கை விவகாரத்தை கையாண்ட முறை என முக்கிய விவகாரங்களில் நாராயணனின் செயல்பாடுகள் சர்ச்சைக்குரியவையாகவே உள்ளன.

மேலும் டெல்லி அதிகார மையத்தில் மலையாளிகளை 'திணித்து' மத்திய அரசை இயக்குவதே கேரளா தான் என்ற பிரமையையும் ஏற்படுத்தியதிலும் நாராயணனுக்கு முக்கிய பங்கு உண்டு.

இந் நிலையில் அவரை மேற்கு வங்க ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், மேற்கு வங்க ஆளுநராக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவரை நியமி்க்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், மேற்கு வங்கத்திலும் அதை ஒட்டிய வட கிழக்கு மாநிலங்களிலும் மாவோயிஸ்டுகள் தலை தூக்கி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாராயணனை ஆளுநராக்க பிரதமர் விரும்புவதாகத் தெரிகிறது.

மேலும் சீனாவின் ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருவதால் வட கிழக்குப் பிராந்தியத்தை கண்காணிக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் நாராயணன் அந்தப் பகுதியில் இருப்பது நல்லது என மம்தாவிடம் பிரதமர் கூறியுள்ளார்.

ஆனால், மம்தா பானர்ஜி பிடிவாதமாக இருந்தால் நாராயணன் மகாராஷ்டிரம் அல்லது ஆந்திர ஆளுநராக்கப்படுவார் என்கிறார்கள்.

நாராயணன் விலகுவதால் காலியாகும் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இன்னொரு மலையாளியான சிவசங்கர மேனன் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இவர் கிட்டத்தட்ட நாராயணனின் நிழல் தான்.

இந்தப் பதவிக்கு அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ரொனென் சென்னின் பெயரும் அடிபட்டது. ஆனால், அவர் தனக்கு இந்தப் பதவியி்ல் விருப்பமில்லை என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை எதிர்த்த பாஜக-இடதுசாரிகளை 'தலையில்லா கோழிகள்' என்று வர்ணித்து சர்ச்சையில் சிக்கியவர் சென் என்பது குறிப்பிடத்தக்ககது.

ஆளுநராக சிவராஜ் பாட்டீல்:

இந் நிலையில் முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆந்திரா அல்லது பஞ்சாப் மாநில ஆளுநராக நியமி்க்கப்படலாம் என்று தெரிகிறது.

ஆந்திர ஆளுநராக இருந்த என்.டி. திவாரி செக்ஸ் புகாரில் சிக்கி ராஜினாமா செய்யததால் அந்தப் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியை சட்டீஸ்கர் மாநில கவர்னராக உள்ள ஈ.எஸ்.எல்.நரசிம்மன் கூடுதலாக கவனித்து வருகிறார்.

ஆந்திராவில் சகஜநிலை திரும்ப அவர் எடுத்த சில நடவடிக்கைகள் பலனளிக்க ஆரம்பித்துள்ளதால் அவரையே ஆந்திராவின் கவர்னராக நியமி்க்கலாமா என்றும் மத்திய அரசு யோசித்து வருகிறது.

அதே போல காங்கிரஸ் மூத்த தலைவரான சந்தோஷ் மோகன் தேப் ஏதாவது ஒரு மாநில ஆளுநராக்கப்படுவார் என்று தெரிகிறது.

பரூக் கவர்னராகிறார்?:

அதே போல ஜார்க்கண்ட் அல்லது சட்டீஸ்கர் மாநில கவர்னராக முன்னாள் மத்திய அமைச்சரும், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சருமான எம்.ஓ.எச். பரூக் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

இவர் கடந்த 2007ம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் அவருக்கு 3 முறை பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. சமீபத்தில் இந்தப் பதவி காலம் முடிந்து அவர் நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மோஷினா கித்வாயையும் ஆளுநராக்க சோனியா விரும்பியதாகத் தெரிகிறது. ஆனால், அவர் தீவிர அரசியலில் நீடிக்க விரும்புவதாகக் கூறிவிட்டார்.

- தட்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

எம்.கே. நாராயணன் ஆளுநராகிறார்-அவரது பதவியில் மேனன்

..மேலும் டெல்லி அதிகார மையத்தில் மலையாளிகளை 'திணித்து' மத்திய அரசை இயக்குவதே கேரளா தான் என்ற பிரமையையும் ஏற்படுத்தியதிலும் நாராயணனுக்கு முக்கிய பங்கு உண்டு.

-தட்ஸ் தமிழ்

ஒரு சனி போய்ச்சேர்ந்தாலும், சொம்படித்து அடுத்த சனியை அந்த இடத்தில் இருத்திவிட்டுச் செல்லுவதில் மல்லுகளுக்கு நிகர் இன்னொரு மல்லுவே. இந்நிலை ஐ.நாவின் உயர் பதவிகளிலும் தொடர்வது தமிழனின் சாபக்கேடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாராயணன் போனால் என்ன மேனன் வந்தால் என்ன???

உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் இருந்து என்ன கிழித்து விட்டார்.

இதில் அந்நியர்களிடம் எதை எதிர் பர்ப்பது அதுவும் ஒரு பார்பனிய தேசத்திடம் இருந்து?????

  • கருத்துக்கள உறவுகள்

நாராயணன் போனால் என்ன மேனன் வந்தால் என்ன???

உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் இருந்து என்ன கிழித்து விட்டார்.

இதில் அந்நியர்களிடம் எதை எதிர் பர்ப்பது அதுவும் ஒரு பார்பனிய தேசத்திடம் இருந்து?????

உங்க ஊரு சிதம்பரமும், நம்ம ஊரு ஒட்டுக்குழு மாதிரியா? :D

  • கருத்துக்கள உறவுகள்

நாராயணன் போனால் என்ன மேனன் வந்தால் என்ன???

உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் இருந்து என்ன கிழித்து விட்டார்.

எவ்விடம் சென்றாலும், அந்நாட்டை தம் ஆட்களால் புல்லாக நிரப்புவது மல்லுவின் குணம்.

எவ்விடம் சென்றாலும் தம் வீட்டை தம் கல்லாவை புல்லாக நிரப்புவது பாண்டிகளின் மணம்.

காகங்களுக்கும், எருதுகளுக்கும் குணங்களில் ரொம்ப வித்தியாசம் உண்டு! :D

  • கருத்துக்கள உறவுகள்

கொலை(மலை)யாளிகளை பற்றி தோழர்கள் புரிந்துவைத்திருப்பதற்கு நன்றி.. அது குறித்த எனது பதிவை இதே உலக நடப்பிலே இட்டுள்ளேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க ஊரு சிதம்பரமும், நம்ம ஊரு ஒட்டுக்குழு மாதிரியா? :D

மாதிரி அல்ல நண்பரே....

இவரும் ஒரு ஒட்டுண்ணி தான்....

போருக்கு முன்னும் இவர் தான் உள்துறை அமைச்சர், போருக்கு பின்னும் இவர் அதே பதவியில் தான் இருக்கிறார்....

ஆனால் ஒன்றும் கிழிக்கவில்லை....

இந்திய தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியது மட்டும் இல்லமல் இன்னும் எங்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.