Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் திட்டத்தினை இலகுவாக அடைய தமிழர்கள் உதவப்போகின்றார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அடிபட்டு இப்ப என்ன செய்யபோறிங்கள்?

இந்த தேர்தலை நடத்தி தமிழர்களை கூறுபோட நினைத்தார்கள் நடந்தது... அதுக்கு ஆதாரம் இதுதானா?

கொஞ்சம் பொறுங்கோ... நீங்கள் இருவரும் சனங்களின்ர கிடக்கையை பிரதிபலிக்க முடியாது... விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவு வரும்வரை அமைதி காக்கவும்....

முடிவு வந்த பிறகு தனித்திரி வைத்து கொளுத்தலாம்..

:wub::lol::lol:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அடிபட்டு இப்ப என்ன செய்யபோறிங்கள்?

இந்த தேர்தலை நடத்தி தமிழர்களை கூறுபோட நினைத்தார்கள் நடந்தது... அதுக்கு ஆதாரம் இதுதானா?

கொஞ்சம் பொறுங்கோ... நீங்கள் இருவரும் சனங்களின்ர கிடக்கையை பிரதிபலிக்க முடியாது... விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவு வரும்வரை அமைதி காக்கவும்....

முடிவு வந்த பிறகு தனித்திரி வைத்து கொளுத்தலாம்..

வெடி எல்லாம் ரெடியா வாங்கி வைச்சிருக்கிறன்.

fireworks.gif

நீங்கள் அடிபட்டு இப்ப என்ன செய்யபோறிங்கள்?

இந்த தேர்தலை நடத்தி தமிழர்களை கூறுபோட நினைத்தார்கள் நடந்தது... அதுக்கு ஆதாரம் இதுதானா?

கொஞ்சம் பொறுங்கோ... நீங்கள் இருவரும் சனங்களின்ர கிடக்கையை பிரதிபலிக்க முடியாது... விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவு வரும்வரை அமைதி காக்கவும்....

முடிவு வந்த பிறகு தனித்திரி வைத்து கொளுத்தலாம்..

கூட்டமைப்பு செய்த இரண்டகத்தால் மகிந்த வெண்றாலும் சரத் வெண்றாலும் தோல்வி தமிழர்களுக்குதான்....

தயா

இந்த தேர்தலால் தமிழர்களுக்கு ஆகப்போவது எதுவும் இல்லை....

என்றைக்கு புலிகள் மக்கள் முன்னிருந்து மறைந்தார்களோ அன்றிலிருந்தே தமிழ் மக்கள் எடுப்பார் கைப்பிள்ளைதான்...

இது சிங்களத் தேர்தலாக இருந்தாலும் இதில் தமிழ் மக்களின் வாக்குகளை வைத்து அவர்களின் நிலைப்பாட்டை அளவிட முடியும்.. வாக்களிக்காவிட்டாலும் அறியமுடியும்.

புலிகளுக்கு முன்னைய காலத்தில் நான் வாழவிள்ளையாயினும் மூத்தோர்களின் கருத்துப்படி பார்த்தால் நாங்கள் ஒரு முப்பது முப்பத்தைந்தாண்டுகள் பின்னுக்குப் போயுள்ளோம். இழப்புக்களையும் சேர்த்துப்பார்த்தால் இன்னும் எவ்வளவோ பின்னுக்கும் போயிருக்கிறோம்...

புலிகள் காலத்திலும் சரி... எங்களுக்கு உண்மையாக உழைக்கக்கூடிய ஒரு தலைமையை புலிகளும் உருவாக்கவில்லை அல்லது தானாகவும் உருவாகவில்லை. இருக்கும் தலைமைகள் அமைப்புக்கள் அனைத்தும் புளிகளைப்போன்ர ஒரு நிலைப்பாட்டில் இருக்கவும் இல்லை இருக்கபோவதுமில்லை.. இருக்கவும் முடியாது.

சரி... இப்ப புலிகளும் இல்லை நல்ல ஒரு மைப்பும் இல்லை... இருப்பதுகளும் சரியில்லை... இப்ப எங்களுக்கு என்னதான் இருக்கு? எங்குதான் போவது? என்னதான் செய்வது? தமிழனாக வாழ நினைப்பதால்தான் இந்த நிலையா? சனங்கள் தங்களைப் பாக்குங்களா தமிழையும் இனத்தையும் பாக்குங்களா?

சரியான சந்தர்ப்பம் பார்த்து சரியான விஷயத்தை சிங்களவன் செய்கிறான்... அவன் போருக்குப்பின் எப்படி எங்கள் இனத்தின் அடையாளங்களை சிதைக்கமுடியுமோ அத்தனை வேலைகளையும் செய்கிறான். இப்பிடியே நாங்கள் ஆளையாள் குறைப்பட்டு குற்றம் சொல்லித்திரும்போது எம்மினமே எமக்கு சொந்தமில்லாமல் போகும்.

இதுதான் முடிவோந்தேரியாது.

தயா

இந்த தேர்தலால் தமிழர்களுக்கு ஆகப்போவது எதுவும் இல்லை....

என்றைக்கு புலிகள் மக்கள் முன்னிருந்து மறைந்தார்களோ அன்றிலிருந்தே தமிழ் மக்கள் எடுப்பார் கைப்பிள்ளைதான்...

இது சிங்களத் தேர்தலாக இருந்தாலும் இதில் தமிழ் மக்களின் வாக்குகளை வைத்து அவர்களின் நிலைப்பாட்டை அளவிட முடியும்.. வாக்களிக்காவிட்டாலும் அறியமுடியும்.

புலிகளுக்கு முன்னைய காலத்தில் நான் வாழவிள்ளையாயினும் மூத்தோர்களின் கருத்துப்படி பார்த்தால் நாங்கள் ஒரு முப்பது முப்பத்தைந்தாண்டுகள் பின்னுக்குப் போயுள்ளோம். இழப்புக்களையும் சேர்த்துப்பார்த்தால் இன்னும் எவ்வளவோ பின்னுக்கும் போயிருக்கிறோம்...

புலிகள் காலத்திலும் சரி... எங்களுக்கு உண்மையாக உழைக்கக்கூடிய ஒரு தலைமையை புலிகளும் உருவாக்கவில்லை அல்லது தானாகவும் உருவாகவில்லை. இருக்கும் தலைமைகள் அமைப்புக்கள் அனைத்தும் புளிகளைப்போன்ர ஒரு நிலைப்பாட்டில் இருக்கவும் இல்லை இருக்கபோவதுமில்லை.. இருக்கவும் முடியாது.

சரி... இப்ப புலிகளும் இல்லை நல்ல ஒரு மைப்பும் இல்லை... இருப்பதுகளும் சரியில்லை... இப்ப எங்களுக்கு என்னதான் இருக்கு? எங்குதான் போவது? என்னதான் செய்வது? தமிழனாக வாழ நினைப்பதால்தான் இந்த நிலையா? சனங்கள் தங்களைப் பாக்குங்களா தமிழையும் இனத்தையும் பாக்குங்களா?

சரியான சந்தர்ப்பம் பார்த்து சரியான விஷயத்தை சிங்களவன் செய்கிறான்... அவன் போருக்குப்பின் எப்படி எங்கள் இனத்தின் அடையாளங்களை சிதைக்கமுடியுமோ அத்தனை வேலைகளையும் செய்கிறான். இப்பிடியே நாங்கள் ஆளையாள் குறைப்பட்டு குற்றம் சொல்லித்திரும்போது எம்மினமே எமக்கு சொந்தமில்லாமல் போகும்.

இதுதான் முடிவோந்தேரியாது.

பிறகு எதுக்கு ஒரு சிங்களவனை தெரிவு செய்து எதையோ மாற்றி விடுவோம் எண்டு கதை விடுகினம் எண்டதையும் சொல்லுங்கோவன்....??? அப்படி கதையை நான் சொல்ல இல்லையே...

மகிந்தவை விட சரத் குறைந்த கொலைகாறன் எண்று தமிழர்கள் வாக்கை போட்டு அங்கீகரிப்பது மட்டும் என்னத்தை தந்துவிட போகிறது....??

4 நாட்கள் இருக்கின்றது. புதிய புனைக்கதைகள் புனைவதற்கு.

Edited by kalaivani

பிறகு எதுக்கு ஒரு சிங்களவனை தெரிவு செய்து எதையோ மாற்றி விடுவோம் எண்டு கதை விடுகினம் எண்டதையும் சொல்லுங்கோவன்....??? அப்படி கதையை நான் சொல்ல இல்லையே...

மகிந்தவை விட சரத் குறைந்த கொலைகாறன் எண்று தமிழர்கள் வாக்கை போட்டு அங்கீகரிப்பது மட்டும் என்னத்தை தந்துவிட போகிறது....??

உண்மைதான்..

ஒரு சிங்களவன் சரியில்லை என்று என்னொரு சிங்களவனிட்ட போறம்...

அடிப்படையில் இரண்டுபேருக்கும் பேர்தான் வித்தியாசம்... கொள்கையளவில் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

நாங்கள் ஒரு சிங்களவனிட்ட இருந்து இன்னொரு சிங்களவனிட்ட போவதை சொல்லும் போதுதான் இன்னொன்றும் நினைவு வந்தது. நாங்கள் புலிகளின் காலத்தை தவிர எப்பவும் ஒரு சிங்களவனுக்கு கீழதான்

இருந்தோம் என்று.

புலிகள் தேர்தலில் நின்றுருந்தால் நிச்சயமாக அவர்களை ஆதரித்திருந்திப்பேன்... இப்ப எங்கள் நிலைமை இரண்டும் கேட்டானத்தான் இருக்குது... சரத்தை ஆதரிச்ச்துக்காக கூட்டமைப்பையும் ஒதுக்கி வைத்தாலும் எனக்கு ஒருசிங்களவன் தான் தலைவனாக இருக்கபோறான்.

எங்களால் புலிகளின் நிழல் அரசுபோல அல்லது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு என்ற ஒன்றை சிறிய ஒருகாலப்பகுதிக்குள் கொண்டுவரமுடியாது... அது இல்லாமல் நாங்கள் யாரையும் எதிர்த்து எந்தபலனும் இல்லை.

சூறாவளி... நாங்கள் முஸ்லீம்களை போல , இன்னும் கொஞ்சம் அதிகமாக போய் பிளையானை போல , கருணாவை போல , டக்கிளசை போல செயற்படுகிறோம் எண்று சொல்வதுதான் உண்மையாகவும் இருக்கும்...

இதுக்குள் சிலர் வந்து தமிழர்களில் அக்கறை உள்ளவன் கூட்டமைப்பின் நல்ல நடவடிக்கையை எதிர்க்க மாட்டான் எண்று அறிக்கை விடுகிறார்கள்...

கூட்டமைப்பு வெளிப்படையாக இதுதான் தமிழர்களால் இப்போதைக்கு முடிந்தது எண்று வெளிப்படையாக சொல்லட்டும்... அதைவிடுத்து ஒற்றையாட்ச்சி அதன்கீழ் சுயாட்ச்சி எண்று யாரை ஏமாற்ற முயல்கிறார்கள்... ஒருவிடயத்தை வெளிப்படையாக சொல்பவனுக்கும் மக்களை முட்டாளாக்க முயல்பவனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது... கூட்டமைப்பு புலிகளின் பெயரை பாவித்து மேலே வந்து இப்போது மக்களை முட்டாளாக்க நிக்கிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எடுத்த முடிவு சரியோ பிழையோ கூட்டமைப்பினர் தாயகத்தில இருக்கினம். சுதந்திர தமிழீழ குடியரசு உருவாகுமட்டும் ஆரோ ஒரு சிங்களவன் தான் ஜனாதிபதியா வரப்போறான். புலிகள் 2005 தேர்தலை பகிஸ்கரிக்க சொன்னது மகிந்த நல்லவர் என்பதற்காகாவா? இல்லையே ரணிலின் பழிவாங்கவேண்டும் என்பதற்காகத்தானே. அப்ப புலிகள் இருந்தினம் அவர்களின் சொற்படி செய்தம் அப்ப அது ஒரு சிறந்த அரசியல் காய்நகர்த்தலாக எல்லாரும் புகழ்ந்து தள்ளிச்சினம்.

இப்ப புலிகள் மௌனித்துள்ள நிலைமையில் கூட்டமைப்பினர் தான் தாயகத்தில் தலைமைப் பொறுப்பை எடுத்திருக்கினம். அது சரியோ தவறோ இன்று அவர்கள் எடுத்த நிலைப்பாட்டை மக்கள் ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இன்று கூட்டமைப்பின் முடிவு தவறு என்றால் 2005இல் புலிகள் எடுத்த முடிவும் தவறாகும். இன்றைய நிலையில் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு அளிக்காவிட்டால் அப்ப தெரியவரும் மக்கள் யார் பக்கம் என்டு. சும்மா கணினிக்கு முன்னர் இருந்துகொண்டு கத்துறதை விட இங்க கொட்டுற கருத்துக்களை தாயகத்துக்கு வந்து சொன்னா நல்லாயிருக்கும். இப்ப சரத் வெல்லுறதோ மகிந்த வெல்லுறதோ முக்கியம் இல்லை. கூட்டமைப்புக்கு மக்கள் ஆதராவா இல்லையா என்பதுதான் இப்ப பிரச்சினை. அதை ஜனவர் 26 மக்கள் தீர்மானிப்பார்கள். ஏனென்டா இப்ப கூட்டமைப்பின் கையில ஆயுதம் இல்லை தானே. 2005 இல என்டா கூட்டமைப்பின் பின்னுக்கு ஆயுதம் தாங்கிய புலிகள் அமைப்பு இருந்தது(இது ஒரு தர்க்கரீதியான கருத்து மட்டுமே). பாப்பம் தாயக மக்கள் என்ன செய்யப் போகினம் எண்டு.

Edited by நல்லூரான்

மன்னிக்கவும் ஜனவரி 26 ஆம் திகதி தேர்தலினை வைத்து கூட்டமைப்பினை மக்கள் ஆதரிக்கின்றார்களா இல்லையா என அறியமுடியாது. அதாவது உங்கள் கருத்தின் படி சரத் பொன்சேகாவுக்கு மக்கள் வாக்களித்தால் அது கூட்டமைப்பின் வெற்றியாகவும் ஆதரவாகவும் நீங்கள் கருதுகின்றீர்கள். இது தவறு.

வன்னிப்பகுதிக்கு கூட்டமைப்பின் எந்த கூட்டங்களும் நடக்கவில்லை இன்று நான் கிளினொச்சி, கோட்டைகட்டிய குளம், தர்மபுரம் மக்களுடன் கதைத்தேன் அவர்களுக்கு வாக்கு சீட்டினை கிளி நொச்சியில் வந்து எடுக்கும் படி இராணுவத்தினர் இன்றுதான் கூறியுள்ளனர். ஆனால் கூடுதலானோர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறியுள்ளனர்.

கிழக்கு மாகாணமும் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இல்லை அதாவது பிறரின் மிரட்டல் செல்வாக்கில் இருக்கின்றன. இதனைவிட இடம்பெயர்ந்த மக்களின் மூன்று இலட்சம் வாக்குகளில் 45,000 வாக்கு சீட்டுக்களே இன்றுவரை வினியோகிக்கப்பட்டுள்ளன.

யாழ் மாவட்டத்திலும் 50 வீதமான வாக்குகளே மக்களின் வழமையான வாக்களிப்பு வீதத்திற்குள் இருக்கின்றது. இந்த நிலையில் கிடைக்கின்ற வாக்களிப்பினை வைத்துக்கொண்டு கணிப்பீடுகளை செய்ய முடியாது. தென்மராட்சியில் கூட்டமைப்பினரை விட அரச சார்பு கட்சிகளின் பிரச்சாரங்களே அதிகமாக உள்ளன என்பது இன்று எனது நண்பர்களுடன் பேசியபோது தெரிய வந்தது.

ஆனால் நான் கதைத்தவர்கள் அனைவரும் மஹிந்த மீதும், டக்ளஸ் மீதும் ஆத்திரம் வைத்திருக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது. சரத் பொன்சேகாவுக்கு அதிகம் வாக்குகள் வடபகுதியில் விழுந்தால் இந்த ஆத்திரங்களே காரணமாக அமையும்.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

நான் கதைத்தவர்கள் அனைவரும் மஹிந்த மீதும்இ டக்ளஸ் மீதும் ஆத்திரம் வைத்திருக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது. சரத் பொன்சேகாவுக்கு அதிகம் வாக்குகள் வடபகுதியில் விழுந்தால் இந்த ஆத்திரங்களே காரணமாக அமையும்.

நன்றி தங்களது நேரடித்தகவல்களுக்கு.....

நான் இதுவரை நினைத்திருந்தேன்

தாங்கள் தமிழக உறவென்று....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.