Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘விஷமத்தனமான கருத்தைப் பரப்புகிறார்!’ – குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Featured Replies

‘விஷமத்தனமான கருத்தைப் பரப்புகிறார்!’ – குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், “பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். ஒரு படித்த ஆண் தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குஷ்புவை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 23 வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நடிகை குஷ்பு உயர் நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் வழக்குகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் பல நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த எல்லா வழக்குகளையும் சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து குஷ்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில் எனக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனவே அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார். அதே நேரம், தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களையே அவர் கூறி வந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய தலைமை நீதிபதி, “பெண்கள் குறித்த குஷ்புவின் கருத்துக்கள் ஏற்க முடியாதவையாக உள்ளன. அவரது கருத்துக்கள் ஜீரணிக்க முடியாதவை. உள்நோக்கம் கொண்டவை,” என்று கூறியதோடு இது குறித்து இரு வாரங்களில் விளக்கமளிக்குமாறு குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே, தன்னை எதிர்த்து வழக்கு தொடுத்த அத்தனை அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளையும் தாறு மாறாக விமர்சித்தவர் குஷ்பு என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.envazhi.com/?p=15407

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: அவர் சொல்வதில் என்ன தவறிருக்கிறது ? இங்கே இந்தியப் பெண்கள் போடும் ஆட்டத்தைப் பார்க்கட்டும். பின்பு தீர்ப்புக்கூறட்டும். இந்தியாவிலே நடக்கும் விடயங்கள் தெரிந்திருந்துமா இந்த வழக்கெல்லாம் வருகிறது ?? வீட்டிலே இதெல்லாம் சகஜமப்பா, ஆனால் வெளியிலே வந்துவிட்டால் இந்தியர்கள் எல்லாம் புனிதர்களாகி விடுகிறார்கள்.

குஷ்பூ இப்படி ஒரு நாள் சொல்லுவார் என்று முன்னமே தமிழ் நாட்டு மக்கள் அறிஞ்சு தான் குஷ்பூக்கு கோயில் கட்டினார்களோ என்னவோ? :rolleyes:

குழந்தை(கள்) விபச்சாரமும், பாலியல் வல்லுறவும், பெண்கள் மீதான அதீத வன்முறையும் மிக மலிந்து போன இந்திய தேசத்தின் போலித்தனமான முகத்தை காப்பாற்ற இருக்கும் ஒரே அங்கி இந்துவத்துவமும் பார்ப்பன சிந்தாந்தங்களும் தான். இந்தியாவின் இந்த போலித்தனத்தை காப்பாற்றுவதில் என்றுமே இந்திய நீதிமன்றங்கள் பின்னின்றதில்லை

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா.. குறைந்தபட்ச பேச்சு சுதந்திரம் கூட உந்த நாட்டில் இல்லையா? உச்சநீதிமன்ற நீதிபதி இப்படிச் சொன்னது வெட்கக்கேடு. இந்தியா உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்வது அதைவிட வெட்கக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்

"படித்த ஆண்கள் தமது மனைவி கற்போடு இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்க கூடாது"

நாங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்...... ஆனால் குஸ்பூவின் மேலுள்ள வசனம் சர்ச்சைக்கு உரியதே. ஒரு சமூக கட்டமைப்பை சீர்குலைத்துவிட தூண்டும் வார்த்தைகள். ஆக பெண்கள் திருமணத்திற்கு முன்பு யாருடனும் போகலாம் என்பதே இதன் மறுபக்கமாக உள்ளது. பல ஆண்களுடன் படுத்து வந்த பெண் திருமணத்திற்கு பின் ஒரு ஆணுடனேயே இருப்பாள்? என்பது எவ்வளவு சாத்தியம்?

ஆக திருமணத்திற்கு முன்னமான பெண்களின் வாழ்க்கையை சிதைக்க தூண்டும் வார்த்தையாக மட்டும் அல்லாது எக்காலத்திலும் ஒரு சீரளிவை பெண்கள் கந்திகட்டும் என்பதற்கு கொடுக்கும் உத்தணம்தான் இந்த கருத்து.

நிலையான நிலை என்பது கலாச்சாரத்தில் இல்லைதான்.

அதற்காக நாகரீக வளர்ச்சியில் மனிதன் பின்நோக்கியும் போகவேண்டுமா? இது தனிபட்ட குஸ்பூவின் கருத்தாகவே உங்களால் பார்க்கமுடிகின்றது. ஆனால் இதற்கான பின்தளங்கள் வேறு அதனால்தான் போராட்டங்கள் நடக்கின்றன. மேலiநாட்டு குப்பைகள் மற்றும் எந்த உப்பு புளியும்மில்லாத வாரவெளியீடுகள் (புத்தகங்கள்) போன்றவற்றை வியாபாரம் ஆக்குவதற்கு இந்திய கலாச்சாரம் தடையாக உள்ளது. அதற்கு முதலில் பெண்களை சீர்குலைக்க வேண்டும் அதன் பின்னணியில்தான். இவையெல்லாம் அரங்கேறுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சுரிமை இருக்கிறது என்பதற்க்காக எதை வேண்டுமானாலும் பேச கூடது....

“பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். ஒரு படித்த ஆண் தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு”

இது தான் குஷ்பு கூறியது...

அதாவது தவறு செய்யுங்கள் ஆனால் அதற்க்கான தடயங்களை விட்டு வைக்காதீர்கள் என்பது தான்....

எவ்வளவு அபத்தமான கருத்து இது....

இதற்க்கு இந்தியா சாயம் பூசுவதை விட்டு கொஞ்சம் சுயமாக சிந்தித்தால் நமக்கே புரியும்....

அன்று கலச்சாரத்தில் கொடி கட்டி பறந்த தமிழன் எங்கே இன்று குஷ்புவின் கருத்துக்கு துணை போகும் நாம் எங்கே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.