Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.மாவட்ட மக்கள் வாக்களிக்க மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் தேர்தல் ஆணையாளரிடம் சம்பந்தன் கோரிக்கை

Featured Replies

யாழ்.குடாநாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் இச்சம்பவங்களால் யாழ்.மாவட்ட வாக்களிப்பு பாதிக்கப்பட்டால் அங்குள்ள வாக்காளர்கள் தமது வாக்குரிமையை சுதந்திரமான முறையில்

பயன்படுத்துவதற்கு தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இரா.சம்பந்தனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் தேர்தல் ஆணையாளருக்கு பக்ஸ் மூலம் முறையிட்டுள்ளனர். மூன்று சம்பவங்கள் குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பற்றிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது; யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று செவ்வாய் காலை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவங்களினால் சிலர் பாதிக்கப்பட்டனர் என்று சொல்லப்படுகின்றது. வாக்காளரிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி நியாயமானதும் சுதந்திமானதுமான தேர்தலை தடுக்கும் திட்டமிட்ட நோக்குடன் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைவரம் யாழ்ப்பாண வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதைத் தடுக்க முடியும். யாழ்.தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் தங்களுக்கு எதிராக வாக்குகளைப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணிய அக்கறையுள்ள குழுக்களே இக்குண்டு வெடிப்புச் சம்பவங்களை மேற்கொண்டன என்பது வெளிப்படை. இவை குறித்துத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். இவ்வாறான சம்பவங்களால் யாழ்.மாவட்ட தேர்தல் வாக்களிப்பு பாதிக்கப்பட்டால், யாழ் வாக்காளர்கள் சுதந்திரமாகத் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்குத் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாவது முறைப்பாடு, வவுனியாவில் உள்ள ஆனந்த குமாரசாமி முகாம் மற்றும் வலயம் 2 முகாம் ஆகியவற்றின் வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதற்கு போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்காதது பற்றியதாகும்.

அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

முகாம்களுக்கு வெளியே காலை ஏழு மணியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கு பஸ்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு நிற்பதாக வவுனியா ஆனந்தகுமாரசாமி முகாம், வலயம் இரண்டு முகாம் ஆகிய வற்றைச் சேர்ந்த வாக்காளர்கள் முறையிட்டுள்ளனர். அவர்களுக்குப் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும் என்று தேர்தல் செயலகமும் வவுனியா அரச அதிபரும் உறுதியளித்திருந்தனர். இரண்டு பஸ்கள் மூலம் 140 வாக்காளர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். 3000 வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்கான பஸ்கள் நண்பகல் 12 மணி வரை சென்றடையவில்லை. இதனால் காத்து நின்ற வாக்காளர்கள் முகாம்களுக்குத் திரும்பியுள்ளனர். உங்களுடன் வவுனியா அரச அதிபருடன் இவ்விடயம் குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளேன்.வாக்காளர்களை முகாம்களுக்குச் சென்று பஸ்களில் ஏற்றிச் செல்லப்படுமென எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இவ் பஸ்கள் உரிய நேரத்துக்கு சென்று பெருந்தொகையான வாக்காளர்களை ஏற்றிக்கொண்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு சரியான நேரத்தில் விடுவார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாக்காளர்கள் வாக்களிக்க சட்ட பூர்வமான உரித்துடையவர்கள். இவர்கள் இன்று வாக்களிக்க முடியாது போனால் தேர்தலின் இறுதி முடிவை அறிவிக்கும் முன்பதாக இவ்வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்படுவதை தயவு செய்து உறுதிப்படுத்துங்கள்.

மூன்றாவது முறைப்பாடு வன்னி தேர்தல் மாவட்டத்தில் பண்டாரிக்குளம் வாக்களிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட கிரனேற் தாக்குதல் பற்றியதாகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் பண்டாரிக்குளம் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்த போது இரண்டு கிரனேற்றுக்கள் வீசப்பட்டுள்ளன. இதனால் வாக்களிப்பு பாதிக்கப்பட்டது. வாக்களிப்பு தங்களின் வேட்பாளருக்கு சாதகமாக இல்லை என்பதை தெரிந்து கொண்டவர்களே வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் இத்தாக்குதலை மேற்கொண்டனர் என்பது வெளிப்படை. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலே தேவை எனவே இது குறித்து ஒழுங்கான விசாரணை நடத்தி முறையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று மூன்றாவது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=245:2010-01-27-03-15-24&catid=34:ceylonnews&Itemid=71

ஒருமுறை உடைபட்டது போதுமப்பா. இரண்டாம் முறையும் தேவையோ?

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியை ஏற்கன மனமில்லாட்டி இப்படித்தான் உளர வேண்டும். அதிகாலை 5 மணிக்கு பின் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்கவில்லை என்றுதான் சனம் சொல்லுது

போனமுறை வாக்களிக்காமல் விட்டதுக்கு தலைவரை குறை சொன்ன சம்பந்தர் ஐயாவுக்கு இம்முறை சத்த வெடிகள்தான் சாட்டாக போயிட்டு

அரசியல் அநாதைகளாக்கப்பட்ட தமிழர்களுக்கு தலைமைத்துவம் கொடுக்கின்றோம் என்று சொல்லி புலிகளையும் குற்றம் சொல்லி வாக்கு கேட்ட சம்பந்தர் மீண்டும் தமிழர்களை அரசியல் அநாதைகளாக்கியது தான் இந்த தேர்தலில் அவரின் 'சாணக்கியத்துக்கு' கிடைத்த நன்மை

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்iடத்தைத் தீர்மானத்திற்கான மீள் வாக்களிப்பு நடத்துங்கப்பா.மகிந்த குண்டுகளைப்போட்டே அதையும் கவிழ்த்திடுவான்.கூட்டமைப்பின் அரசியல் தற்கொலையைத் தடுக்கவேண்டுமாயின் இந்தியாவின் எண்ணத்திற்கு ஆடுவதை விட்டு தமிழ்த்தேசியத்தின் விடுதலையை நோக்கமாகக் கொண்டு தடம் மாறாமல் அரசியல் செய்ய வேண்டும்.உண்மையில் தமிழ் மக்களின் மனதறிந்த தலைவர் எங்கள் தேசியத் தலைவர்தான்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

சரியான முன் நோக்கிய பார்வையில்லாமல் மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் மீது ஆளுந்தரப்பினரை வெறுப்படைய வைக்கும் அரசியற்போக்கை தமிழர் கூட்டணித் தலைமை கைவிடுவது இந்தச் சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமானது.

ஏதோ ஆதரவு கொடுத்து விட்டோமென்பதற்காக அரசியல் எதிர்காலமேயில்லாத சரத்திற்கு வக்கலாத்து வாங்கிக் கொண்டிருக்காமல் அவரை இனிமேலாவது கைகழுவி விட்டுவிட்டு ஆகவேண்டியதைக் கவனிப்பதே சாலச்சிறந்தது.

அரசியல் தொடர்புகளற்று வெறும் இராணுவ அதிகாரியாகத் தனது காலத்தைக் கழித்துவிட்ட சரத்திற்கு எங்காவது ஓடித்தப்புவதைவிட வேறு மாற்றுவழியேதும் இருக்கப்போவதில்லை.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் தேர்தலில் பங்கெடுத்திருந்தாலும் இனிமேல் எந்தவொரு கட்சியும் அவரைத் தமது தலைவராக ஏற்று அரசியலில் ஈடுபடுத்தப்போவதில்லை. அப்படிச் செய்தால் இவ்வளவுகாலமும் தங்களது கட்சிகளைக் கட்டிவளர்த்த தலைவர்களின் கதியென்னாவது.

சிங்களமக்கள் சரத் தமிழர்களுக்குச் செய்த அனியாயங்களை நெடுங்காலம் மனத்தில் வைத்திருக்கப்போவதில்லை. இந்தத் தேர்தலுடன் அவரின் வீரதீர சாகசங்களின் அத்தியாயம் முடிந்துவிட்டது.

இனிமேல் அரசியல் வானில் அவர்பிரகாசிக்கப் போவதில்லை.

இந்த நிலையில் சரத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அவரை நம்பித் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் படுகுழியில் வீழ்த்தாமல் சம்பந்தர் ஐயாவும் கூட்டணியும் தங்களைச் சுதாரித்துக்கொண்டு அரசியற் சாணக்கியத்துடன் ஆSம் தரப்பினரின் சினத்தைக்கிளறிவிடாமல் செயற்படுவதே சாலச்சிறந்தது,

Edited by karu

சரியான முன் நோக்கிய பார்வையில்லாமல் மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் மீது ஆளுந்தரப்பினரை வெறுப்படைய வைக்கும் அரசியற்போக்கை தமிழர் கூட்டணித் தலைமை கைவிடுவது இந்தச் சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமானது.

ஏதோ ஆதரவு கொடுத்து விட்டோமென்பதற்காக அரசியல் எதிர்காலமேயில்லாத சரத்திற்கு வக்கலாத்து வாங்கிக் கொண்டிருக்காமல் அவரை இனிமேலாவது கைகழுவி விட்டுவிட்டு ஆகவேண்டியதைக் கவனிப்பதே சாலச்சிறந்தது.

மகிந்தரின் அமோக வெற்றிக்கு, சம்பந்தர் குழுமத்தின் கோசங்கள் துணைபுரிந்துள்ளது.

Edited by kalaivani

ஏன் திரும்பவும் வாக்களிக்கப்படவேண்டும்?

கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு முடிவைத்தானே உள்ளூராட்ட்சித் தேர்தலிலும் வடபகுதி மக்கள் வாக்களித்தார்கள்.

எத்தினதரம் தான் சனங்கள் திரும்பத்திரும்ப ஒரு விஷயத்தை சொல்லமுடியும்?

கூட்டமைப்பு சொல்ல வருவது தமிழ் மக்களுக்கு ஜனநாயக மறுக்கப்பட்டு இருக்கிறது என்பதானால், கூட்டமைப்பு இப்படி சொல்வது ஒருவகையில் நல்லதுதான்... இதுக்காக (துணிவு இருந்தால்) கூட்டணி நீதிமண்றம் வரைக்கும் செல்லலாம்... ( ஒருவகையில் இது உண்மையும் கூட)

சர்வதேச தூதரகங்களை நாடியும் முறையிடுவதும் நல்லது... எரியிற நெருப்பிலை எண்ணையை ஊத்துறது மாதிரி...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.