Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரம்

Featured Replies

'லங்கா' வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘லங்கா’ வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை குறை கூறியது தொடர்பாக இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் வெள்ளிகிழமையன்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml

பிபிசி தமிழா இது...?? நம்ப முடியவில்லை...! இந்தியா மகிந்தவுக்கு எதிர் எண்று எடுக்கலாமா...??

Edited by தயா

:rolleyes::(:rolleyes:

இது மகிந்தவின் காலந்தான். இந்தியா என்னன மேற்கத்தய நாடுகள் எதிர்த்தாலும் இது தொடரத்தான் போகிறது. மீண்டும் புலிகளின் நடவடிக்கைகள் என்ற நிலை தோற்றுவிக்கப்படலாம்

  • தொடங்கியவர்

இது மகிந்தவின் காலந்தான். இந்தியா என்னன மேற்கத்தய நாடுகள் எதிர்த்தாலும் இது தொடரத்தான் போகிறது. மீண்டும் புலிகளின் நடவடிக்கைகள் என்ற நிலை தோற்றுவிக்கப்படலாம்

இலங்கயில் நட்ப்பதும் நட்ந்ததும் ஜனநாயகம் இல்லை... கொடுங்கோன்மை எண்று உலகம் சொல்லும் நன்னாள் வரவேண்டும்...

இந்த தேர்தல் கூட மகிந்தவின் அராஜகம் என்பதுதான் உண்மை எண்றாலும் அதை இலங்கையில் இருந்து சம்பந்தப்பட்ட எதிர்க்கட்ச்சியினர் சொல்ல இன்னும் முயலவில்லை... சொல்லும் போது உலகம் ஈரானையும் சூடானையும் பர்மாவையும் பார்க்கும் பார்வை இலங்கை மீதும் படியும்...

சிங்களவர்களுக்குள்ளேயே கொடுங்கோண்மை, அராஜகம், எனும் சிக்கலுக்குள் போதும் போது தமிழர்களின் பிரச்சினை வேறு விதமாக அணுகப்படும்...

எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். நல்லதே நடக்குமென்று.

மக்களை கூட்டி தெருவுக்கு அழைத்து இது அராஜகத் தேர்தல் என்று சொல்ல கூட துப்பில்லாத எதிரணி, சிங்கள மக்களை ஒன்றுபடுத்தி தமிழருக்கு தீர்வு பொதி வேறு தருமாம்.

இதை வேறு, நாங்கள் நம்பவேண்டுமென எங்கள் தலைகள்,மன்னிக்கவும் தலை இல்லாததுகள் சொல்ல நாங்கள் வோட்டு போட வேணுமாக்கும்,

போங்கடா..நீங்களும் உங்கள் அரசியல் பித்தலாட்டமும்.

Edited by vimalk

இந்த தேர்தல் கூட மகிந்தவின் அராஜகம் என்பதுதான் உண்மை எண்றாலும் அதை இலங்கையில் இருந்து சம்பந்தப்பட்ட எதிர்க்கட்ச்சியினர் சொல்ல இன்னும் முயலவில்லை... சொல்லும் போது உலகம் ஈரானையும் சூடானையும் பர்மாவையும் பார்க்கும் பார்வை இலங்கை மீதும் படியும்...

இதை ஒருக்கா வாசியுங்கள் தயா

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=20291&cat=1

  • தொடங்கியவர்

இதை ஒருக்கா வாசியுங்கள் தயா

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=20291&cat=1

ஒரு பத்திரிகையாளன் எழுதியது இது...

இங்கை மிகமுக்கியமாக கவனிக்க வேண்டியது... இரணில் இதுவரைக்கும் தேர்தல் முறைகேடு பற்றி வெளிப்படையாக பேசவில்லை... அதோடு JVP யினரும் கூட... சரத் பொன்சேகா இப்போது ஒரு தனிமனிதன்... தனது தோல்வியை மறைக்க புனைகதைகள் சொல்ல முடியும்... ஆனால் ஆதரவாளர்கள் பலர் நிறைந்த கட்ச்சி அதுவும் எதிர்க்கட்ச்சி என்பது வேறு... அவர்களின் குரலுக்கு பலம் உண்டு..

இரணிலும் JVP யும் வாயை துறக்கவில்லை எண்றால் அதுக்கு மிகவும் முக்கியமான காரணம் உண்டு அது தங்களின் நாட்டின் மீதும் இனத்தின் மீதும் வேண்டாத ஒரு பழிப் பெயர் உலக அரங்கில் வந்து விழுந்துவிடும் என்பதினால் தான்... அதை அழிக்க முடியாது போய்விடும் என்பதும் ஒருகாரணம்....

தமிழர்களுக்கு இல்லாத ஒரு நல்ல குணம் சிங்கள எதிர்க்கட்ச்சியினரிடம் இருக்கிறது அது இதுதான்... தங்களின் இனத்துக்கும் நாட்டுக்கும் ஒரு கேடு எண்றாலும் தங்களுக்குள் நடந்ததை அவர்கள் வெளியில் சொல்லி கரி பூசிக்கொள்வது இல்லை...

அவர்களுக்கு தெரியும் அடுத்த பாராளுமண்ற தேர்தலிலும் சரத் பொன்சேகா இல்லாவிட்டால் மகிந்தவை எதிர்த்து வெல்ல முடியாது என்பது... அப்படியானால் ஐதேகவும் JVP யும் சரத்துக்கு எதிரான அனீதிக்கு குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள் எண்றால் காரணம் இல்லாது இல்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பத்திரிகையாளன் எழுதியது இது...

தமிழர்களுக்கு இல்லாத ஒரு நல்ல குணம் சிங்கள எதிர்க்கட்ச்சியினரிடம் இருக்கிறது அது இதுதான்... தங்களின் இனத்துக்கும் நாட்டுக்கும் ஒரு கேடு எண்றாலும் தங்களுக்குள் நடந்ததை அவர்கள் வெளியில் சொல்லி கரி பூசிக்கொள்வது இல்லை...

உண்மை. அவர்கள் தமிழர்கள் போல் இல்லை. சிங்களத் தேசியமே அவர்களுக்குப் பெரியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பத்திரிகையாளன் எழுதியது இது...

-----

இரணிலும் JVP யும் வாயை துறக்கவில்லை எண்றால் அதுக்கு மிகவும் முக்கியமான காரணம் உண்டு அது தங்களின் நாட்டின் மீதும் இனத்தின் மீதும் வேண்டாத ஒரு பழிப் பெயர் உலக அரங்கில் வந்து விழுந்துவிடும் என்பதினால் தான்... அதை அழிக்க முடியாது பொய்விடும் என்பதும் ஒருகாரணம்....

-------

அவர்களுக்கு தெரியும் அடுத்த பாராளுமண்ற தேர்தலிலும் சரத் பொன்சேகா இல்லாவிட்டால் மகிந்தவை எதிர்த்து வெல்ல முடியாது என்பது... அப்படியானால் ஐதேகவும் JVP யும் சரத்துக்கு எதிரான அனீதிக்கு குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள் எண்றால் காரணம் இல்லாது இல்லை...

ஒரு நாளைக்கு மூன்று அறிக்கை விடும் JVP யும் மூச்சுவிடாமல் இருக்கின்றது.

இதில் எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்லைதான். விளைவுகளுக்காக பயப்படாமல் எதிர் நடவடிக்கையினை மேற் கொள்ளும் ஒரு ஆட்சியாளர் கூட்டம் ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது. தேசியம் என்ற போர்வையில் ஒடுக்குதல்கள் வெளிப்படையாகவே நடைபெறுகிறது. அதற்குப் பக்கத்துணையாக ஏதோ பல பலம்வாய்ந்த சக்திகள் இருக்கின்றன என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது. இவைகளெல்லாம் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டபின்புதான் சிங்களவர்களுக்கு சிந்திக்கும் எண்ணம் வரும். அப்படி எண்ணம் வந்தாலும் அவர்களை செயற்பாட்டுக்குள் கொண்டு செல்வதற்கு இந்த சக்திகளே துணை நிற்கும்.

எந்த அராஜகச் செயலையும் நிறைவேற்றக் கூடிய ஆட்சியாளர்கள் இன்றைய ஆட்சிபீடத்தில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.