Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளின் தடுப்புக்காவலை முடிவுக்கு கொண்டுவருமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை!

Featured Replies

முன்னாள் போராளிகளின் தடுப்புக்காவலை முடிவுக்கு கொண்டுவருமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை! .

.போரின் பின்னர் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11 ஆயிரம் பேர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களின் காலவரையறையற்ற தடுப்புக்காவல் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த எட்டு மாதங்களாக மர்ம முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த செயலானது சர்வதேச விதிகளை மீறும் நடவடிக்கையாகும். சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடம் சிறிலங்கா அரசினால் தெரியப்படுத்தப்படவேண்டும். அவர்களை அவர்களின் உறவினர்களும் சட்ட அலோசகர்களும் சென்று சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படும் சாத்தியங்கள் இருப்பின் அதனை உடனடியாக ஆரம்பித்துவிட்டு, குற்றம் புரியாதவர்கள் என்று இனம்காணுபவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

பன்னாட்டு அமைப்புக்களோ உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புக்களோ உறவினர்களோ சென்று சந்திக்க முடியாத வகையில் இந்த 11 ஆயிரம் பேரும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதால், இவர்களில் எத்தனைபேர் படையினரால் கைது செய்யப்பட்டார்கள்? எத்தனைபேர் சரணடைந்தார்கள் போன்ற விவரங்களை பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்த கைதிகள் விடயத்தில் சிறிலங்கா அரசு காண்பிக்கும் வெளிப்படையற்ற போக்கு, அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அல்லது காணாமல்போகும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்த கைதிகளின் உரிமைகள் உரிய விதத்தில் மதிப்பளிக்கப்படாவிட்டால், சிறிலங்காவுக்கு உதவும் சர்வதேச நாடுகள் எந்த விதத்திலும் இந்த கைதிகளை தடுத்துவைத்திருக்கும் சிறிலங்கா அரசின் தடுப்புமுகாம்களுக்கு உதவி செய்யப்போவதில்லை.

ஆகவே, சர்வதேச விதிமுறைகளை மீறும் இந்த காலவரையறையற்ற தடுப்புக்காவலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

- இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

ஈழநேசன்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புகளும், போராட்ட அமைப்புகளும் முற்றாக மறந்து விட்ட ஒரு விடயத்தை நியூயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகமாவது நினைவில் வைத்திருந்து கேட்பது ஆறுதலாக இருக்கு

இவர்கள் அனைவரும் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள். அவர்கள் அனைவரும் இளைஞர்களாக இருப்பதினால்தான் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை எவர் மறந்திருப்பர். விடுவிக்கப்படாமல் தமது அழுத்தங்களுக்கான தேவைகளுக்காச் சிங்களப் பேரினவாதம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த போராளிகளுக்கு கூட்டமைபு எதாவது செய்ததா எண்டு கூட்டமைப்புக்கு வால் பிடிக்கிற அண்ணை மார் ஒருக்கா சொல்ல வேணும்...

மகிந்தவுக்கு சால்வை போட்ட கிசோர் தனிப்பட செய்தவர் எண்ட கதை வேண்டாம்...

Edited by தயா

வேறுயார் இவர்களுக்கு உதவினவர் எண்டதையும் அண்ணைமார் சொன்னால் நல்லாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

நாமல் ராஜபக்சவுடன் நெருங்கிய நட்பாக இருக்கும், லண்டன் எமில் காந்தன் போன்றவர்களும் இவர்களின் விடுதலைக்கு முயற்சி செய்யவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.