Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை அழிக்க உதவிய'விஜயபாகு' இளைஞர் படை

Featured Replies

புலிகளை அழிக்க உதவிய'விஜயபாகு' இளைஞர் படை

பிப்ரவரி 06,2010,00:00 IST

கொழும்பு :விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தின் "விஜயபாகு' படைப்பிரிவினர் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை:ராணுவத்தில் "விஜயபாகு' என்ற படைப்பிரிவு உள்ளது. முற்றிலும் இளைஞர்களை கொண்ட இந்த படைப்பிரிவு, முன்பு இலங்கையை ஆண்ட விஜயபாகு மன்னரின் பெயரில் ஏற்படுத்தப்பட்டது. கடந்தாண்டு மே மாதம் நடந்த புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போது, இந்த படைப் பிரிவினர் அசாத்திய திறமையுடன், துணிச்சலாக செயல்பட்டனர். குறிப்பாக, விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் முல்லைத் தீவில் இருந்து தப்பிச் செல்லும் முயற்சியை இவர்கள் முறியடித்தனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இலங்கை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், "முல்லைத் தீவில் நடந்த இறுதிக் கட்ட சண்டையின்போது, விஜயபாகு படைப் பிரிவினர், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற சிறிய எண்ணிக்கையிலான விடுதலைப் புலிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில், புலி தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மனைவி மதிவதனி ஆகியோரும் அடங்குவர்' என, தெரிவித்துள்ளது.

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4772

  • கருத்துக்கள உறவுகள்

சரத்தின் அறிக்கையின் படி இறந்த 27000 பேருக்குள் இவர்களும் அடங்குகிறார்களோ? அல்லது சாகா வரம் பெற்றவர்களோ? :lol:

இப்படி வீரமானவர்கள் எல்லா வசதியும், படையும் இருந்தும் ஏன் இரசாயன ஆயுதம் பாவித்தார்கள் கோழைகளாக.அதற்குள் வீர வசனம் வேறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்ம்ம்ம்....சொரிஞ்ச படை.... மணிக்கு 5000 கிளஸ்டர் செல்லை அடிச்ச பயந்தான்கொள்ளி கூட்டம் பெரிய வீர கூட்டமாம். இவையல்ல 65000 பேரை தூக்கிட்டு தான் புலியிண்ட 10000 மரபு போர் அணி மடிந்தது. ஒரு நாள் சார்லஸ் இறந்த யுத்தத்திலேயே இந்த பசுக்களில 5000 சரி.

  • தொடங்கியவர்

இலங்கை ராணுவத்திற்கே தலைவரை பற்றி எதுவுமே தெரியாதென்பற்கான பதில்தான் இந்த செய்தி மூலம் அம்பலமாகின்றது.இது தொடர்பான முரண்பட்ட செய்திகளை பாருங்கள்.

http://www.srilankaguardian.org/2009/10/major-gen-jagath-dias-butchered.html

அடுத்த செய்தி..

http://www.puthinappalakai.com/view.php?20100205100442

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிக்க உதவிய'விஜயபாகு' இளைஞர் படை

இந்தியாவும், சீனாவும் கோவிக்கப் போகுது.

அப்ப தலைவரை பிடித்து கொலை செய்ததாக சில மேதாவிகள் சொல்லி திரிந்தினமே...??? அப்ப அதுவும் பொய்யோ...??

  • கருத்துக்கள உறவுகள்

தன்னாலே வெளிவரும் தயங்காதே!-ஒரு

தலைவன் இருக்கிறான் மயங்காதே!

தன்னாலே வெளிவரும் தயங்காதே!-ஒரு

தலைவன் இருக்கிறான் மயங்காதே!

தலைவர் சம்பந்தனை தானே சொல்கிறீர்கள்...??? இருக்கிறார் இருக்கிறார்... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரர் விமல், பதிவிற்கு நன்றி. இதில் இருந்து என்ன தெரிகிறதென்றால் ஸ்ரீ லங்கா இன அழிப்பு ஆயுததாரி கும்பல் எல்லோரும் எங்கள் தலைவரை கொன்றார்கள். கொஞ்ச நாள் பொறுங்கள், மாட்டு பல்லன் நிமல் ராஜபக்சே தண்ட வெறும் கையால 1000 புலி காவலர்களை அடித்து போட்டு தலைவரை கொன்றதாக அவிழ்த்து விடுவான். சிங்களவனுக்கா பொய் சொல்ல சொல்லிக்குடுக்கோணும்? எடுத்துகுடுக்க தமிழ் கூசா தூக்கிகள் வேறு அலைகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டுக்கு வெளியே மட்டுமல்லாமல், உள்ளேயும் கூட சிலர் பழைய காலத்துக்குப் போக விரும்புகின்றனர். ஆனால் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாடு பின்னோக்கிப் போவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

பிரபாகரன் இப்போது இல்லை. அதை அனைவரும் மனதில் வைத்துக் கொண்டு செய்லபட வேண்டும் என்றார் ராஜபக்சே.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்கள் மனதில் நிற்பவர் யார்?

தாயகம் காப்போர் தமிழினம் காப்போர்

சரித்திரம் தனிலே நிற்கின்றார்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்

ஆதவன் மறைவதில்லை

அணைகள் இட்டே யார் தடுத்தாலும்

அலைகடல் ஓய்வதில்லை!

2007/08 யாழ்ப்பாணத்திலும், 2008/09 வன்னியிலும் அகப்பட்ட, சரணடைந்த, .... தமிழரை கொன்று ஊழிக் கூத்தாடிய அணி, கொலைப்பாயவின் - சரத்தின் பிரியமான அணி தான் இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்படை தோற்றது சிங்களவனின் வீரத்தால் அல்ல.

விஜயபாகு படையணி ஏன் இதை முன்னர் சாதிக்கமுடியவில்லை.

தமிழர்கள் தோற்றது துரோகத்தால்தான். நயவஞ்சகமான முறையில் மலேசியாவில் இருந்து சிங்களபடைகளுக்கு தகவல்கள் வழங்கப்பட்டது.எறும்புசேர்ப்பது போல மெதுமெதுவாக சேர்க்கப்பட்ட பலமும் படையணிகளும் அந்த மனிதரால் மிகவும் ஆண்மையற்றமுறையில் காட்டிக்கொடுக்கப்பட்டது.

காட்டிக்கொடுத்தவருக்கு சிங்களம் நன்றியுடன் இப்போது சேவகம்செய்து நிற்கிறது.

சிலவேளை விஜயபாகு அணியே அவருக்கு காவலுக்கு நிற்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.