Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாட்டு தமிழரின் பணத்தில் தெற்கு அபிவிருத்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு தமிழரின் பணத்தில் தெற்கு அபிவிருத்தி: யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுக்கும் சிறிலங்காவின் வங்கிகள்

[ புதன்கிழமை, 20 சனவரி 2010, 01:59 GMT ] [ கார்வண்ணன் ]

யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் சேமிப்புகளை முதலீடாக்கிக் கொள்வதில் சிறிலங்காவின் வங்கிகள் போட்டி போடத் தொடங்கியுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் கிளைகளை அமைத்து தமிழ் மக்களின் சேமிப்புகளை முதலீடாக்கும் முயற்சிகளில் பெரும்பாலான சிறிலங்கா வங்கிகள் இறங்கியுள்ளன.

நேற்று ஒரே நாளில் இரண்டு வர்த்தக வங்கிகள் யாழ்ப்பாணத்தில் தமது கிளைகளைத் திறந்துள்ளன. சனச வங்கி, வர்த்தன வங்கி ஆகியனவே நேற்று யாழ்.நகரில் கிளைகளை ஆரம்பித்துள்ளன.

அதே வேளை, போர் முடிவுக்கு வந்த பின்னர் இதுவரையில் சுமார் இருபதுக்கும் அதிகமான புதிய கிளைகளை சிறிலங்காவின் பல்வேறு வங்கிகளும் திறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். நகர் தவிர சாவகச்சேரி, மானிப்பாய், சங்கானை, சுன்னாகம், நெல்லியடி, பருத்தித்துறை, அச்சுவேலி போன்ற சிறுநகரப் பகுதிகளை மையப்படுத்தி இயங்கி வந்த வங்கிகள் இப்போது கிராமங்களுக்கும் தமது கிளைகளை விரிவாக்கத் தொடங்கியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் சுமார் 60 வரையான கிளைகளைத் திறப்பதற்கு சிறிலங்காவின் மத்திய வங்கி அண்மையில் அங்கீகாரம் வழங்கியதை அடுத்தே இந்த நிலை உருவாகியுள்ளது.

யாழ்ப்பாண மக்களின் சேமிப்புகளை குறி வைத்து வடக்கே படையெடுக்கும் இந்த வங்கிகளின் பிரதான நோக்கம் முதலீடுகளைச் சுரண்டுவதே என்று பொருளியல் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மக்களிடம் இருந்து பெறப்படும் சேமிப்பு வைப்புகளை தென் பகுதிக்குக் கொண்டு செல்வதே இந்த வங்கிகளின் நோக்கமாகும்.

யாழப்பாண மக்களின் சேமிப்புகளை உள்ளுரில் வாடிக்கையாளருக்கு கடனாக வழங்குவதில்லை என்றும், யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்காக அவற்றை செலவிடுவதில்லை என்றும் சிறிலங்காவின் வங்கிகள் மீது நீண்டகாலமாக குற்றசாட்டு இருந்து வருகிறது.

அத்துடன் கடந்த காலங்களில் யாழ்ப்பாண மக்களிடம் இருந்து திரட்டிய சேமிப்பு வைப்புகளை அரச மற்றும் தனியார் வங்கிகள் தமிழ் மக்களுக்கு எதிரான போருக்குப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடனாக வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்களின் மூலம் மாதாந்தம் பல பில்லியன் ரூபா சிறிலங்காவுக்குள் வருவதால், அதைக் குறிவைத்தே சிறிலங்கா வங்கிகள் அங்கு படையடுத்து வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் காலூன்றும் பல வங்கிகள் கொழும்பு தவிர்ந்த தென் பகுதியின் பிரதான நகரங்களில் கூட கிளைகளைக் கொண்டிராதவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, விரைவில் வடக்கு அபிவிருத்தி வங்கி என்ற பெயரில் புதிய வங்கியொன்றை உருவாக்கப் போவதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

நன்றி - புதினப்பலகை

Edited by nochchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனவே புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளுக்காக என்ற தேவைகள் சிறிலங்காவின் உயர்வுக்காகவும் என்பதே உண்மை. எனவே இனியாவது புலத்திலிருக்கும் தமிழர்கள் தெளிவான பொருண்மியத் திட்டங்களை, தமிழினம் தொடர்பாக ஆராய வேண்டியது அவசியமாகும்.

தொடர்புடைய திரியாக இருப்பதால் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/...showtopic=67441

எனவே புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளுக்காக என்ற தேவைகள் சிறிலங்காவின் உயர்வுக்காகவும் என்பதே உண்மை. எனவே இனியாவது புலத்திலிருக்கும் தமிழர்கள் தெளிவான பொருண்மியத் திட்டங்களை, தமிழினம் தொடர்பாக ஆராய வேண்டியது அவசியமாகும்.

தொடர்புடைய திரியாக இருப்பதால் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/...showtopic=67441

புலத்து பூனைகளிடம் நிதியாக கொடுத்தால் அவர்கள் இலங்கை அரசுடன் நேரடியாக கொடுப்பார்கள்.

புலம்பெயந்தவை கொழும்பிலை தாங்களாக இதுவரைக்கும் முதலீடு செய்தார்கள்... காணிகள் வீடுகள் எண்று வாங்கி சிங்கள பொருளாதாரத்தை தூக்கி வைச்சு இருந்தினம்... இப்ப பிரச்சினை இல்லை ஆகவே யாழ்ப்பாணத்திலை காணிகள் வாங்கினாலும் எண்டு அங்கை வங்கியை வைச்சு காத்திருக்கிறாங்கள்.... ஆனாலும் கொழும்பிலை இருக்கிற வீட்டை விட யாழ்ப்பாணத்திலை வீடு எனக்கு இருக்கு எண்டு சொல்லுறது இங்கை இருக்கிற எனக்கு அவ்வளவு பெருமையாக இல்லை... கொழும்பிலை வீடு வைச்சு இருக்கிறன் எண்டதுதான் என் ( இல்லாத) மரியாதையை இருக்கிற மாதிரி காட்டுது...

வெளிநாட்டு தமிழரின் பணத்தில் தெற்கு அபிவிருத்தி: யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுக்கும் சிறிலங்காவின் வங்கிகள்

[ புதன்கிழமை, 20 சனவரி 2010, 01:59 GMT ] [ கார்வண்ணன் ]

நன்றி - புதினப்பலகை

இது ஏற்கனவே தெரிந்த விடயம்தான் .யுத்த காலத்தில் பல்லாயிரம் தமிழர்கள் கொழும்புக்கு இடம் பெயர்ந்தனர்.இதன் மூலம் கொழும்பில் ஈயடித்துக் கொண்டிருந்தவர்களெல்லாம்( கண்டவன் நிண்டவன் ) நிறைய பணம் உழைத்தார்கள். ஆட்டோக்காரன்,

கொம்னிக்கேஷன்,குட்டி வீடு வாடகைக்காரர் கீரைவிற்பவன், கடைக்காரர்,தரகர்கள் என்று சொல்லிக்கொண்டேபோகலாம்.இப்போ யாழ்ப்பாணத்துக்காரர் அனேகமானோர் திரும்பிச் சென்றுவிட்டார்கள். இப்ப பழையபடி கொழும்பு காயத்தொடங்கி விட்டது

மண்டையை சொறிஞ்சு கொண்டிருக்கின்றார்கள்,இதன் விழைவாகவே யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கை வியாபாரிகள் படையெடுத்தார்கள்.யாழ்ப்பாணத்துக்காரன் பணக்காரனென்று நன்றாகவே தெரியும். சாதாரண மக்களே இப்படியென்றால் வங்கியும்

அரசாங்கமும் விடுவார்களா.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தற்போது வீட்டு விலை கூடி விட்டதாம்...அத்தோடு வாடகைக்கு வீடு எடுப்பதும் சரியான கஸ்டமாம்...மகிந்தா ஒரு மாதிரி போரை முடித்து கொழும்பில் இருக்கிற சனத்தை கொஞ்சம் கொஞ்சமாக துரத்தி விடுகிறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் தற்போது வீட்டு விலை கூடி விட்டதாம்...அத்தோடு வாடகைக்கு வீடு எடுப்பதும் சரியான கஸ்டமாம்...மகிந்தா ஒரு மாதிரி போரை முடித்து கொழும்பில் இருக்கிற சனத்தை கொஞ்சம் கொஞ்சமாக துரத்தி விடுகிறான்.

என்னதான் நடந்தாலும் கொட்டில்வீட்டுக்கும் குடில்களுக்கும் வாடகைக்காசு கூட்டுறதெண்டால் நடக்காத வேலை

சுகபோகம் வேணுமெண்டால் காசை இழக்கத்தான் வேணும்

நல்லவிசயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.