Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்குமா? – த ரெலிகிராஃப்

WEDNESDAY, 10 FEBRUARY 2010 01:11

சீனாவில் உருவாகிய மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் தற்போது புதிதாக கொழும்பில் உருவாகி வருகின்றது. உலக விவகாரங்களில் சீனா கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை தற்போதாவது பார்க்க வேண்டும் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த டெய்லி ரெலிகிராஃப் (09.02.2010) நாளேட்டில்

எழுதிய பத்தியில் பீற்றர் போஸ்ரர் (Peter Foster) தெரிவித்துள்ளார்.

அதன் தமிழ் வடிவம் வருமாறு:

ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ததன் மூலம் ஜனநாயக வழிகளில் தெரிவுசெய்யப்பட்ட சிறீலங்கா அரசு மீண்டும் ஒருமுறை எதிர்க்கட்சிகள் மீதான தனது வெறுப்பை காட்டியுள்ளது. நடைபெற்று முடிந்த அரச தலைவர் தேர்தலில் பொன்சேகா மகிந்தாவை எதிர்த்து போட்டியிட்டிருந்தார்.

பொன்சேகா எப்படியான ஒரு வன்முறையான வழியில் கைது செய்யப்பட்டு இனம்தெரியாத இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என எனது நண்பர் டீன் நெல்சன் விரிவாக தெரிவித்திருந்தார். இராணுவத்தினர் அவரை கைது செய்து இழுத்துச் சென்றிருந்தனர்.

சிறீலங்காவில் முன்னேற்றமடைந்துவரும் அருவருப்பான செயற்பாடுகளின் பிந்திய தொடர்கதை இது. கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களாக நடைபெற்றுவரும் நிகழ்வுகள் மூலம் சிறீலங்கா சர்வாதிகார நாட்டின் நிலையை அண்மித்துள்ளது. இது இனவாத சிந்தனையுள்ள மகிந்தாவின் காலத்தில் நிகழ்ந்துள்ளது.

தனக்கு எதிரானவர்களை ஏற்றுக்கொள்ளாத தன்மை சிறீலங்கா அரசிடம் அதிகரித்து செல்கின்றது. உலகிலேயே ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு சிறீலங்காவாகும். அதனை ஒரு வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. “எனது மரணத்தின் பின்னர்” என எழுதிவைத்துவிட்டு சென்ற லசந்தா விக்கிரமதுங்கா படுகொலை செய்யப்பட்டார். நான் அதனை அனுப்பியுள்ளேன், நீங்கள் முன்னர் படிக்காது விட்டால் அதனை உடனடியாக படிக்குமாறு கேட்டுக்கொண்டார் எனது நண்பர்.

இதில் ஏதாவது சீனாவின் நடவடிக்கையுடன் பொருந்திப்;போகின்றதா? ஆம், அதிகமானவை உண்மையானது, சீனாவில் உருவாகிய மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் தற்போது புதிதாக கொழும்பில் உருவாகி வருகின்றது. உலகின் விவகாரங்களில் சீனா கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்துள்ளதற்கு இது ஒரு முக்கிய உதாரணம்.

உலக விவகாரங்களில் சிறீலங்கா சின்னதாக இருக்கலாம், ஆனால் தென்ஆசிய பிராந்தியத்தின் ஜனநாயகம் என்பது சிறீலங்காவை போல ஊழல்கள் மிக்கதாக, சர்வாதிகார போக்கு கொண்டதாக சீனாவின் ஆதரவுடன் மாற்றம் பெற்று வருகின்றது. அது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று.

சிறீலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடுவதில் இருந்து சீனா பல தசாப்தங்களாக விலகியே இருந்தது. இந்தியாவை நெருக்கடிக்குள் தள்ள அது விரும்பவில்லை. ஆனால் இந்த அணுகுமுறை 2007 ஆம் ஆண்டு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்துடன் மாற்றமடைந்துள்ளது.

அதன் பின்னர் சீனா கடன் உதவிகளையும், படைத்துறை உதவிகளையும் சிறீலங்காவுக்கு அதிகளவில் வழங்கி வருகின்றது. இரு நாடுகளும் இணைந்து பிரிவினைவாதங்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக போராடப்போவதாக கூட்டாக அறிவித்தல்களை விடுத்திருந்தன.

அதனை விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் மகிந்தா உறுதிப்படுத்தியிருந்தார். சீனாவின் அரச நிறுவனமான சீனா துறைமுக பொறியியல் நிறுவனம் தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை பகுதியில் துறைமுகம் ஒன்றை விரைவாக நிர்மாணித்து வருகின்றது. அங்கு அது புதிய விமான நிலையம் ஒன்றையும் அமைத்து வருவதுடன், அங்கிருந்து கொழும்புக்கு விரைவு நெடுஞ்சாலையையும் அமைத்து வருகின்றது.

இதேபோன்ற நடவடிக்கைகளை சீனா ஆபிரிக்க நாடுகளிலும் மேற்கொண்டு வருகின்றது. சீனா அரசின் பெருமளவான நிதி நேரடியற்ற முறையில் ஆளும் கட்சியை பலப்படுத்துவதில் செலவிடப்படுகின்றன (அதற்கு சீனா சபாரி என்ற பத்திரிகை ஒரு உதாரணம்). எனவே அம்பாந்தோட்டை பிரதேசம் மகிந்தாவின் பலத்திற்கான பிரச்சாரம் என்பதில் எந்த ஆச்சரியங்களும் இல்லை.

சிறீலங்கா பின்னோக்கி செல்வதை ஐரோப்பாவும், அமெரிக்காவும் எதிர்த்து வருகின்றன. ஆனால் அவர்களால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் சிறீலங்காவுக்கு சீனா வழங்கும் பணத்துடன் ஒப்பிடும் போது புறக்கணிக்கத்தக்கது.

அண்மையில் முடிவுக்கு வந்த போரில் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளையும் சீனாவும், ரஸ்யாவும் தடுத்துள்ளன. சிறீலங்காவின் புதிய நண்பன் ரஸ்யா, அது தற்போது சிறீலங்காவுக்கு 300 மில்லியன் டொலர்களை ஆயுதங்களை கௌ;வனவு செய்வதற்கான கடனாக வழங்கியுள்ளது. சீனாவின் முக்கிய நட்பு நாடான ஈரானும் சிறீலங்காவுக்கு அதிகளவான கடன்களையும், மலிவாக எண்ணையையும் வழங்கி வருகின்றது.

பிரித்தானியா தனது எதிர்ப்புக்களை தெரிவித்து, உதவிகளை நிறுத்தியுள்ளது. ஆனால் அதன் அளவு மிகவும் குறைவானது. எனவே அதனை கொழும்பு இலகுவாக புறக்கணித்துள்ளது. அமெரிக்கா தொடர்ச்சியாக தனது கவலைகளை தெரிவித்து வருகின்றது. ஆனால் அடிப்படையில் அது முக்கியமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

இறுதியாக சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வெள்ளிக்கிழமை (5) அறிவித்துள்ளது. சிறீலங்காவில் மோசமடைந்துள்ள மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆனால் சீனா வழங்கும் நிதி உதவிகள் அதனை ஈடுசெய்துவிடும்.

சிறீலங்காவின் சமூக உறுதித்தன்மை பேணப்படவேண்டும் என சீனா விரும்புவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் மா சாஒசூ கடந்த மாதம் சிறீலங்கா தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்திருந்தார்.

சீனாவை பொறுத்தவரையில் அரசுக்கு எதிரானவர்களை வெள்ளை வான்களில் கடத்தி செல்வதுண்டு. அதுவே கடந்த சில வருடங்களாக மகிகிந்தாவின் விருப்பமான தொழிலாகவும் உள்ளது.

எனினும் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இறுதியான கடத்தலுடனாவது உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்க வேண்டும். ஆனால் அது நடைபெறுமா என்பது கூட சந்தேகமாகவே உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி ...........தினமுரசம்

Edited by நிலாமதி

வரும் தேர்தலில் ஐ. தே. க. வின் தலைமை வேட்பாளராக ரணில் நிற்பதற்கு பொன்சேகா பெரும் தடையாக இருந்ததால், வட இந்திய பயங்கரவாதிகள் ஆலோசனைப்படி ரணிலின் திரை மறைவு ஆதரவுடன் தான் இந்தக் கைது நடந்ததாகவும், ரணிலின் முகத்தில் நீண்ட நாட்களாக இல்லாத மகிழ்ச்சி இப்போது தெரிவதாகவும், சில அரசியல் ஆய்வாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.

உலகம் ஒண்ணும் தூக்கத்தில இல்ல.தூங்கிற மாதிரி நடிச்சுக் கொண்டிருக்கு அவ்வளவுதான்.ஜெமகாத குள்ளர்கள் தூங்கவே மாட்டான்கள்:

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் ஒண்ணும் தூக்கத்தில இல்ல.தூங்கிற மாதிரி நடிச்சுக் கொண்டிருக்கு அவ்வளவுதான்.ஜெமகாத குள்ளர்கள் தூங்கவே மாட்டான்கள்:

சாவுக்கு வரசொன்னால் கருமாதிக்கு வருவதெ சர்வதேச சமுதாயம்- அதை புரிந்து கொண்டு தமிழீழ தோழர்கள் நீண்ட கால தொலை நோக்கோடு ராஜ தந்திரதோடு தமிழீழ தோழர்கள் களமிறங்க வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்குமா?

தூக்கம் கலைஞ்சாலும் பாக்கிறதுக்கு கண்ணுமெல்லே இருக்கோணும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலகத்தின் தூதவராக தேர்தலில் நிறுத்தப்பட்டவரே சரத். இன்று ஆசியாவில் ஒரு கூட்டமைப்பு உருவெடுத்து இருக்கின்றது.

மேற்குலகம் தூக்கத்தைக் கலைத்தாலும் கண்மூடித்தான் இருக்கவேண்டும். தூக்கத்திலிருந்தபடியே பார்வையாளராக முடியும்.

உள்ளே புகமுடியாத நிலைமை மேற்குலகத்திறகு இருக்கின்றது. ஆசியாவின் கூட்டுக்கு ராஜபக்ஷ தலைமையாக இருப்பதே இந்தச் சிக்கல்களுக்குக்;காரணம்.

தமிழரைககொல்லும்போது தூக்கம் போல் பசாங்கு செய்தவர்கள் இன்று தூக்கத்தைக் கலைக்கமுடியல்ல. பொய்யான தூக்கம் நிரந்தரம் ஆகுதுங்க.

இப்போ காரணம் தேடுறாங்க. அதற்குள்ள ராஜபக்ஷ காரணம் காட்டி சரத்தை புடிச்சுட்டான். சரியான விவரம் தெரிஞ்சாள் போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.