Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யு.எஸ்.பல்கலைக்கழகத்தில் விபரீதம் - பேராசிரியை சுட்டு இந்தியர் உள்பட 3 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யு.எஸ்.பல்கலைக்கழகத்தில் விபரீதம் - பேராசிரியை சுட்டு இந்தியர் உள்பட 3 பேர் பலி

சனிக்கிழமை, பிப்ரவரி 13, 2010, 11:40[iST]

ஹன்ட்ஸ்வில்லி: அலபாமா பல்கலைக்கழகத்தின் ஹன்ட்ஸ்வில்லி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியப் பேராசிரியர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஒரு பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்குள்ள உயிரியல் பிரிவு கட்டடத்தில் இந்த சம்பவம் நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 உயிரியல்

பேராசிரியர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் மாணவர்கள் யாரும் காயமடையவில்லை என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ரே கார்னர் தெரிவித்தார்.

துப்பாக்கியால் சுட்டதாக பிடிபட்டுள்ள பேராசிரியையின் பெயர் அமி பிஷப். இவரும் உயிரியல் பேராசிரியைதான். இந்த சம்பவம் தொடர்பாக அமி பிஷப்பின் கணவரும் பிடிபட்டுள்ளார்.

பிடிபட்ட அமி பிஷப் மற்றும் அவரது கணவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த 2003ம் ஆண்டு இந்த வளாகத்தில் பணியில் சேர்ந்தார் அமி பிஷப். அவரது கணவர் பெயர் ஜிம் ஆண்டர்சன். இருவரும் இணைந்து சிறிய செல் இன்குபேட்டர் கருவியைக் கண்டுபிடித்து அதற்காக பரிசையும் வென்றவர்கள் ஆவர்.

நியூரிஸ்டர் என்ற பெயரிலான சைபர்நேட்டிக்ஸ் ஆய்வுத் திட்டத்தில் பணியாற்றி வந்தார் அமி பிஷப். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், அமி பிஷப்புக்கும் இடையே, அவரது கண்டுபிடிப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்ததாக தெரிகிறது. இதுதான் துப்பாக்கிச் சூடுக்குக் காரணமாக இருக்கும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்த மூவரில் கோபி கே. போடிலா இந்தியர் ஆவார். இவர் உயிரியல் அறிவியல் துறை தலைவராக இருந்து வந்தார். மற்ற இருவரும் பேராசிரியர்கள் மரியா ராக்லேன்ட் டேவிஸ் மற்றும் அட்ரியல் ஜான்சன் எனத் தெரிய வந்துள்ளது.

இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் மொத்தம் 7500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகம், அறிவியல், பொறியியல் பிரிவுகளில் சிறப்பான கல்வியைத் தரும் நிறுவனமாகும். நாசாவுடன் இணைந்தும் பல்வேறு ஆய்வுகளை இது மேற்கொண்டு வருகிறது.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

உலகுக் துப்பாக்கிகளை விற்று வளர்ந்த அமெரிக்கா அனுபவிக்கிறது பலனை.... இதைத்தான் தன் வினை தன்னைச் சுடுமென்பதோ.

இந்த முறை மாணவர்கள் அல்ல, பேராசிரியர்கள் கணக்குகளை தீர்த்து கொண்டார்கள். இது மிக வருந்தத் தக்கது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த துன்பியல் நிகழ்வில் உயிரிழந்த பேராசிரியர்களான மரியா ராக்லேன்ட் டேவிஸ் மற்றும் அட்ரியல் ஜான்சன் ஆகிய இருவருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசிரியர்கள் தானே சிறந்த முன்னுதாரணங்கள் அவர்களே இப்படி நடந்து கொள்வது வருத்தமாக தான் இருக்கிறது.....

உயிரிழந்த மற்ற பேராசிரியர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.....

நம்ம ஊரில சுண்டல் விக்கிற மாதிரி ஆயுதங்களை விற்பதால் வந்த வினை.

அவர்கள் எதோ ஒரு கருவிகை கண்டு பிடித்தவர்களாம் அந்த கருவிக்கான தமிழ் மொழிபெயர்ப்பு சகிக்க முடில.

இதை எழிதியவரைக் கண்டால் நானும் சுடுவான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.