Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடன் அட்டை பின்(Pin) சிஸ்டம் மோசடி….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இப்போது வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடன் அட்டையை பயன்படுத்தி காசு கொடுக்கும் வசதி சிறு தெருக்களில் கூட வந்துவிட்டது இதற்காக அவர்கள் ஒரு பின் சிஸ்டம் உள்ள இயந்திரம் வாங்கி வைத்து நம் ஏடிஎம் அட்டையில் உள்ளதகவல்களை பயன்படுத்தி காசு எடுக்கின்றனர்.

ஆனால் ஒரு சில ஹக்கர்கள் நாம் பயன்படுத்தும் இந்த பின் சிஸ்டத்தின் தகவல்களை உலோகத்தில் ஏற்படும் பிழை மூலம் பின் சிஸ்டத்தின் தகவல்களை மாற்றியமைக்கப்பட்ட அட்டை மூலம் எளிதாக எடுத்து விடுகின்றனர் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்ததில் சரியாக சில மொடல் பின் சிஸ்டம் உள்ள இயந்திரத்தில் இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அட்டையுடன் வயர் இணைத்து கையடக்க ஹக்கிங் இயந்திரத்தில் சேர்த்துள்ளனர்.

இது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் நாம் பயன்படுத்தும் அனைத்து வகை பின் சிஸ்டத்துக்கும் துணை செய்கிற மாதிரி இவர்கள் ஒரு எக்ஸ்ட்ரனல் சிறிய வகை கருவி ஒன்றை தயார் செய்து விடுகின்றனர்.

அடுத்தும் எந்த பின் சிஸ்டம்-ஐ கொள்ளை அடிக்க வேண்டுமோ அந்த பின் சிஸ்டத்துக்கு சென்று அங்கு இவர்கள் தயார் செய்து வைத்திருக்கும் ஏடிஎம் அட்டையுடன் (ஹக்கிங் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்) இதை அந்த பின் சிஸ்டத்துன் இணைத்தவுடன் ஆத்தண்டிங்கேசன் கேட்கும் இவர்கள் ஏடிஎம் சங்கேத கோடு கொடுப்பது போல் ஆம் என்று உறுதிபடுத்திவிடுகின்றனர்.

இதன் பின் என்ன நடக்கிறது என்றால் இதுவரை அந்த பின் சிஸ்டத்தில் யாரெல்லாம் ஏடிஎம் அட்டை பயன்படுத்தினார்களோ அவர்கள் அத்தனைபேரின் கணக்கு எண்ணும் சங்கேத வார்த்தையும் சிலநொடியில் அவர்கள் எடுத்து வந்திருக்கும் ஹக்கிங் இயந்திரத்தில் பதிவாகிவிடும்.

அடுத்த சில மணி நேரத்திற்குள் அத்தனை பேரின் வங்கிகணக்கில் உள்ள பணத்தையும் எளிதாக கொள்ளை அடித்து விடுகின்றனர் இப்படி திருட்டு போனதும் உடனடியாக நமக்கு தெரிவது நாம் கடைசியாக ஏடிஎம் பயன்படுத்திய அந்த கடைதான் அதனால் இனி “பின் சிஸ்டம்” வைத்துள்ள கடைக்காரர்கள் மற்றும் டிக்கெட் பதிவு செய்யும் இடத்தில் பின் சிஸ்டம் இயந்திரம் வைத்துள்ளவர்கள் தாங்கள் இனி அதிக அளவு சோதனையுடன் விழிப்பாக இருந்தால் தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்.

அதுமட்டுமின்றி இவ்வாறு உங்கள் இயந்திரம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டால் இதற்கு புதிதாக அவர்கள் செயல்படுத்தியிருக்கும் கருவியை வாங்கி வைத்தால் கூட பிரச்சினைகளை பெரும்ளவு தவிர்க்கலாம் என்பது நம் எண்ணம்.

http://www.z9tech.com

இந்த மோசடி செய்கிறதில நம்மவர்களும் பலே திறமைசாலிகள் என்று கனடா காவல்துறை சொல்கிது.

கனடாவில இருக்கிற தமிழ் வியாபாரிகள். பல திருட்டுக்கள் பிடிபட்டு இருக்கிது. பூனை கண்ணை மூடிக்கொண்டு களவாய் பால் குடிச்ச கதை மாதிரி வல்வை அண்ணா :)

எல்லா நாடுகளுக்கும் இந்த குறுக்கு வழிமுறைகளை காட்டிக்கொடுத்த பெருமை இலங்கைத் தமிழனையே சாரும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை, இங்கை லண்டனிலை எனக்கு நல்ல அனுபவம்,நான் படிச்சுக் கொண்டிருக்கேக்கை ஒரு பெட்ரோல் செட்டிலை வேலை செய்தனான் அங்கை பின்பாட்டுக்கு(pin pad) மேலை கவர் இருக்கும் ஆனாலும் வாற வெள்ளையள் கையாலை மறைச்சுக்கொண்டு தான் பின் நம்பர் அடிப்பாங்கள் ஏனெண்டு கேட்டால் "because you are srilankan"எண்டுவாங்கள் எனக்கு அவமானமா இருக்கும்

ஒரு சில இலங்கை தமிழனிடம் இந்த கீழ்தர, குறுக்கு புத்தி மிக அதிகம்.

கள்ளமாக வெளிநாடு போக ஆரம்பித்ததிலிருந்து, களவாக எதையாவது செய்துவிட்டால் அது தப்பில்லை என்ற புலம் பெயர் தமிழர் ஒருசிலரின் கீழ்தர குறுக்கு புத்தி - தமிழன் கேவலமானவன் என்ற எண்ணம் வெளிநாடுகளில் ஏற்பட உதவிவிட்டது என்பது கசப்பான உண்மை.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது, நேர்மையாக கஷ்டப்பட்டு நேரம் காலம் பாராது உழைத்து வாழும் 80% ஆன புலம் பெயர் தமிழர்கள். இத்தகைய ஈனர்களை திருத்த புலம் பெயர் தமிழர்கள் முயலவேண்டும். இதுகளை விதிவிலக்கு என்று கணித்துவிடமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான், உங்கள் கூற்று தவறு. இந்த கள்ள மட்டை மாற்றும் இயந்திரங்கள் தயாரிக்கப்படுவது சீனா, தாய்வான் போன்ற நாடுகளிலே. இந்த மோசடிகளை முதலில் ரசிய, சீன குழுக்கள் மோசடி செய்யும்.

பின் ஊழல் பிடிபடத்துவங்க அவர்கள் பேராசையை தவிர்த்து பின்வாங்கி விடுவார்கள். அப்போது தான் நமது ஓட்டை வாய், பேராசை சிங்கங்கள் களத்தில் இறங்கும். சும்மா ஒரு ஐம்பது டாலர் சாமான் வாங்கி பிடிபட்டால், தனது சுற்றத்தையே காட்டிக்கொடுக்குங்கள்.

இந்த கள்ள கூட்டத்திற்கும் இப்ப கனடாவில ஆப்பு பலமாக அடிபடுவதாக அறிந்திருந்தேன்!

கிரடிட் கார்ட் திருட்டு விசயத்தில ஐம்பது டாலர் ஐயாயிரம் டாலர் என்று வேறுபாடு பார்க்க ஏலாது குளவி. திருட்டு நடைபெற்றால் அதை செய்தது தமிழராய் இருந்தால் என்ன, சீனராய் இருந்தால் என்ன காவல்துறையிடம் முறைப்பாடு செய்யவேணும்.

நம்மவர்கள் திறமையான முறையில வியாபாரம் செய்து பல்வேறுவிதமாக கனடாவில் முன்னேறிவிட்டார்கள். இப்படியான நிலமையில சிலர் செய்கிற திருட்டுக்களால பாதிப்பு எல்லாருக்கும்தான். கனடாவில நீண்டகாலமாக இருக்கிற ஆட்களை கேட்டால், குறிப்பாக வியாபாரிகளோட கதைத்தால்.. எப்படியான வகைகளில நம்மட ஆக்கள் சுத்துமாத்துக்கள் செய்கிறீனம் என்று அறியலாம்.

பலருக்கு தங்கட கிரடிட் கார்டில திருட்டு போகிற விசயமே தெரியாது. மாதாமாதம் அவர்கள் தங்கட வங்கிக்கணக்கை விரிவாக சரிபார்ப்பது கிடையாது. இந்த பலவீனங்களை அறிஞ்சு வைச்சுக்கொண்டு திருட்டுக்கள் நடக்கிது. கனடா போன்ற நாட்டில நம்மவர்கள் நல்லபடியாய் முன்னேறி வாழுறதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கிது.

பழைய செய்திகளை பார்த்தால் நம்மவர்கள் சம்மந்தப்பட்ட பல்வேறு [ கிரடிட் கார்ட் உட்பட] மோசடிகளை நீங்கள் அறிஞ்சு கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலருக்கு தங்கட கிரடிட் கார்டில திருட்டு போகிற விசயமே தெரியாது. மாதாமாதம் அவர்கள் தங்கட வங்கிக்கணக்கை விரிவாக சரிபார்ப்பது கிடையாது. இந்த பலவீனங்களை அறிஞ்சு வைச்சுக்கொண்டு திருட்டுக்கள் நடக்கிது. கனடா போன்ற நாட்டில நம்மவர்கள் நல்லபடியாய் முன்னேறி வாழுறதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கிது.

ஊரிலை கோயில்களுக்கை போய் புக்கைமோதகம் வாங்கின பழக்கத்திலை இதையும் வாங்கினால் இன்னும் வரும் இதுக்கு மேலையும் வரும்

உண்மைதான் குமாரசாமி அண்ணா. கோயிலிலை சுண்டல் வாங்கி தின்கிற மாதிரி ஆஆ என்று அவதிப்பட்டு மட்டையை எடுக்கிறது. மட்டையை பெறுகிறதுக்கு முன்னம் அதுபற்றிய விரிவான அறிவை பெற்று இருக்கவேணும். வானகங்களுக்கு எரிபொருள் நிரப்பும்போது மட்டையில காசு கொடுக்கிறதை தவிர்க்கிறது மிகவும் நல்லது. கூடுதலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்காலதான் திருட்டு நடக்கிது. இதேமாதிரி வலைத்தளம் ஊடாக பொருட்களை, சேவைகளை பெறும்போது, நேரடியாக மட்டையை பயன்படுத்தாமல் பேபல் போன்ற வசதிகளை பயன்படுத்துவதும் பாதுகாப்பானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரன் மச்சான், சரியா சொன்னீங்கள். ஒரு சிலரால், கஷ்டப்பட்டு முன்னேறிய பல தமிழரின் மரியாதையும் குறைக்கப்படுகிறது. இந்த கடன் அட்டை மோசடி பேர்வழிகளை காட்டிகொடுப்பது நமது சமூகத்திற்கு செய்யும் உதவி.

"Maxed Out " என்று ஒரு படம் வந்திருக்கிறது, கட்டாயம் கடன் அட்டை கடித்து நொந்து போயிருப்போர் பார்க்கவேண்டிய படம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.