Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண மக்கள்பற்றிய ஒரு தவறான கருத்து நிலவுகிறது

Featured Replies

வணக்கம் யாழ் கள உறவுகளே!,

நான் கொளும்புக்கு வந்த புதுசில் எனது நண்பர் ஒருவருடன் கதைக்கும் போது அவர் யதார்தமாக கூறினார், "யாழ்ப்பாண பொடியங்கள இலகு வா கண்டுபிடிக்கலாம்" எண்டு, நானும் எப்படி? என கேட்ட போது அவர் சொன்னார் "அவங்க நடக்கேக்க நெஞ்சு நிமித்திதான் நடப்பாங்க, தடிச்ச மீசை வச்சிருப்பாங்க என கூறினார்" நானும் சிரித்துக்கொண்டே இவைதான் தமிழருக்குரிய இயல்பான குணம், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் தடித்த மீசையும் தானெ தமிழரின் அடயாளம் என கூறிவிட அந்தகதை அத்துடன் நிறைவடைந்தது...

எனது இன்னுமொரு நண்பர் ஒருவர், என்னைவிட வயதில் மூத்தவர், அவருக்கு யாழ்பாணத்து பொடியங்கள கண்ணில காட்ட ஏலாது.. ஏனேண்டா அவங்க மோட்டபைக்க முறுக்கி கொண்டு திரியுறாங்களாம், பொறுப்பு இலாதவங்களாம், எண்று பலமுறை சொல்லீருக்கிறார்.... எனக்கு அவரின் கூற்று பிடிக்கவில்லை... பிறகு சொன்னார்.. யாழ்ப்பாணத்தில இருக்கிறவங்க EPDP இடம் காசு வாங்கிறவங்களாம்... காசு கொடுத்துதான் வேலை எத்தவங்களாம்.. என பல முறைப்பாடுகள் பலமுறை கூறீருப்பார், அவர் சொல்வது அனைத்தையும் என்னால் மறுக்க முடியாது, ஆங்காங்கே சில சில செயற்பாடுகள் அவர் சொன்னது போல் நடக்கிறது.. ஆனால் அவரோ ஒட்டுமொத்த சமுதாயத்தை இளிவாக பேசிவிட்டார்..., அது மட்டும் பறவாயில்லை, கொளும்பில் வாளும் தமிழர்கள் மிகவும் நல்லவர்களாம், அவர்கள் ரவுடீசியம் செய்யுறது இல்லயாம்..., அதற்கு ஒரு உதாரணமா மொறட்டுவ கம்பஸில் ராகிங் செய்வது யாழ்பாண மாணவர்கள்தானாம், கொளும்பு மாணவர்கள் அப்படி செய்யுறது இல்லயாம்.. யாழ்ப்பாண மாணவர்களுக்கு வெளிநாட்டு காசு வாறதால தலைகால் புரியாம நடக்கிறாங்க.. என பல முறைப்பாடுகள்...

அதற்கு நான்கூறினேன்... இங்க(கொளும்பு) இருக்கிறவங்கள பத்தி நான் தப்பா கதைக்கல (பிறகு அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்), ஆனா யாழ்பாண கலாசாரம் வேற.. நாங்க சிறுவயதில இருந்து துணிச்சலுடன் தான் வாளுறம்... ஆன கொளும்பு மக்களுக்கு எல்லாம் இருந்தும் சுதந்திரம் இல்ல, தனியா ஒரு சிங்கள இடத்துக்கு கொளும்பு பொடியனால போக இயலாது, ஆனா யாழ்ப்பாணத்தில அப்படி இல்ல, எங்கும் தமிழ் எதிலும் தமிழ், எங்கயும் போகலாம், சுதந்திரமா வாழ்ந்தனாங்கள், அதாலதான் அந்த துணிச்சல் மனதளவில பதிஞ்சுட்டுது... என பல என்னால் முடிந்த காரணங்களை கூறினேன்,

அதற்கு அவர் சொன்னார், நீங்க யாழ்பாணத்தில இருந்ததுக்காக இப்படி கதைக்க ஏலாது, நானும் யாழ்ப்பாணம் தான்.. இதற்கு பிறகு என்னால் ஓண்டும் கதைக்க முடியல,( எனது பெற்றோர்கள் யாழ்பாணத்தில் இருந்து முடிந்தவரை சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அங்கேயே வாழ்கின்றனர், நான் தான் அங்க ஒளுங்கா படிக்காத காரணத்தால கொளும்புக்கு ஓடிவந்து இருக்கிறன்.. அதுகும் 2-3 வருடமாத்தான் இங்க இருக்கிறன்..)

பிறகு தான் எனக்கு தெரியும் எனது நண்பர் 1995 இல் யாழ்ப்பாணத்தை விட்டு வந்திட்டார்.. (ஒரு சண்டை, ஒரு இடப்பெயர்ச்சி காணாத ஒருவர்), அவர் கடைசியாக யாழ்ப்பாணம் போணது 2006 ஆம், அதுகும் 1 மாதம் தான் நிண்டவராம்.. அதுக்குள்ள அவருக்கு யாழ்பாண கலாவ்சாரம் விளங்கீட்டு :D, இவர் எனைப்பாத்து "உமக்கு கதைக்க உரிமை இல்லை எண்டு சொன்னது என்னை மிகவும் பாதித்துவிட்டது"

என்கருத்தில் பிழை இருக்கலாம்.. உங்கள் பின்னூட்டல்கள் கட்டாயமாக வேண்டும்..

யாழ்ப்பாணதமிழன் எண்ற இறுமாப்புடன்..

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டு மொத்த தமிழனும் கட்டியிருந்த கோவணமும் கழண்டு போய் அடிமையாய் இருக்கிறான். இதுக்குள்ள யாழ்ப்பாணத் தமிழன் எண்டு இறுமாப்பு வேற. :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்னங்க சொல்ல முற்படுறீங்க???

தமிழரே தமிழரை மதிப்பதில்லை என்கிறார் . உண்மைதானே.

யாழ்ப்பாணதமிழன் எண்ற இறுமாப்புடன்..

இந்த இறுமாப்பை பற்றி கொஞ்சம் விரிவாக எழுதுங்கள் அறிய ஆவலாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்

ஒட்டு மொத்த தமிழனும் கட்டியிருந்த கோவணமும் கழண்டு போய் அடிமையாய் இருக்கிறான். இதுக்குள்ள யாழ்ப்பாணத் தமிழன் எண்டு இறுமாப்பு வேற. :D

இப்படி நக்கலா பேசியே காலம் போட்டுது... :lol:

இப்ப என்னங்க சொல்ல முற்படுறீங்க???

உங்க கருத்து எனக்கு தேவை...

  • தொடங்கியவர்

தமிழரே தமிழரை மதிப்பதில்லை என்கிறார் . உண்மைதானே.

அவர் அப்படி கூறியதால் வந்த ஒரு கோபம், ஆதங்கமே இதை எழுத காரணம்.

இந்த இறுமாப்பை பற்றி கொஞ்சம் விரிவாக எழுதுங்கள் அறிய ஆவலாக இருக்கின்றது.

ஏன் உங்களுக்கு இல்லையோ? நிங்க கொழும்பு பிரஜியோ

ஏன் உங்களுக்கு இல்லையோ? நிங்க கொழும்பு பிரஜியோ

இல்லை. சாதாரண மனுசருக்கான இயல்பு நிலை கூட இல்லை. எப்போதும் ஒரு தாழ்வு நிலை சூழ்ந்து கொள்கின்றது. சிறுபிராயத்தில் எனக்கு அடித்தவர்களை திருப்பி அடித்திருக்கின்றேன் அது ஒருவேளை இறுமாப்பாக இருக்கலாம். பின்னர் எத்தனையோ ஆமிக்காரனிடம் அடிவாங்கி இருக்கின்றேன் இந்தியப் படைகளிடம் அடிவாங்கி இருக்கின்றேன் கடைசியாக இரண்டு வெள்ளையிடம் கூட அடிவாங்கி இருக்கின்றேன். அதை விட எத்தனை ஏச்சு பேச்சுக்கள். கூனிக் குறுகிய இந்த வாழ்க்கையில் இறுமாப்பு என்று நீங்கள் எழுதியது எனக்கு வித்தியாசமாக இருந்தது. அதனால் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட நண்பர் வெளினாடு வந்தால் இனி கொழும்புத் தமிழர்கள் சரியில்லை என்று சொன்னாலும் சொல்லுவார்.

"இறுமாப்பு" இதன் அர்த்தம் தான் விளங்கவில்லை.நான் பார்த்தமட்டில் பிரிட்டிஷ்காரனுக்குத்தான் தான் பிரிட்டிஷ் என்ற இறுமாப்பு இருந்தது.அதில் ஓரளவு நியாயம் கூட இருந்தது ஏனெனில் அவன் உலகத்தின் பெரும் பகுதியை ஒரு காலத்தில் ஆண்டவன்.

யாழ்ப்பாண தமிழனுக்கு நெஞ்சைநிமிர்த்த என்ன இருக்கின்றது என எனக்குவிளங்கவில்லை.(வடலிக்க இருந்து கள்ளடிச்சதை தவிர )

  • தொடங்கியவர்

இல்லை. சாதாரண மனுசருக்கான இயல்பு நிலை கூட இல்லை. எப்போதும் ஒரு தாழ்வு நிலை சூழ்ந்து கொள்கின்றது. சிறுபிராயத்தில் எனக்கு அடித்தவர்களை திருப்பி அடித்திருக்கின்றேன் அது ஒருவேளை இறுமாப்பாக இருக்கலாம். பின்னர் எத்தனையோ ஆமிக்காரனிடம் அடிவாங்கி இருக்கின்றேன் இந்தியப் படைகளிடம் அடிவாங்கி இருக்கின்றேன் கடைசியாக இரண்டு வெள்ளையிடம் கூட அடிவாங்கி இருக்கின்றேன். அதை விட எத்தனை ஏச்சு பேச்சுக்கள். கூனிக் குறுகிய இந்த வாழ்க்கையில் இறுமாப்பு என்று நீங்கள் எழுதியது எனக்கு வித்தியாசமாக இருந்தது. அதனால் கேட்டேன்.

அப்ப தமிழனா பிறந்ததுக்கு வெக்கபடுறியலா?

"இறுமாப்பு" இதன் அர்த்தம் தான் விளங்கவில்லை.நான் பார்த்தமட்டில் பிரிட்டிஷ்காரனுக்குத்தான் தான் பிரிட்டிஷ் என்ற இறுமாப்பு இருந்தது.அதில் ஓரளவு நியாயம் கூட இருந்தது ஏனெனில் அவன் உலகத்தின் பெரும் பகுதியை ஒரு காலத்தில் ஆண்டவன்.

யாழ்ப்பாண தமிழனுக்கு நெஞ்சைநிமிர்த்த என்ன இருக்கின்றது என எனக்குவிளங்கவில்லை.(வடலிக்க இருந்து கள்ளடிச்சதை தவிர )

நல்லது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப தமிழனா பிறந்ததுக்கு வெக்கபடுறியலா?

என்னப்பு நாய்க்குட்டி... நேற்றுத்தான் பிறந்திருக்கிறியள் போல கிடக்குது? :D

தமிழன் நாயிலும் கீழாகிப் போன நிலை கண்ணுக்குத் தெரியவில்லையோ?

யாழ்ப்பாணத் தமிழன் என்ற விசேட முத்திரை எந்தக்காலத்திலும் இருந்தே வருகின்றது. அது அழிந்து போகா.

  • கருத்துக்கள உறவுகள்

இக்கருத்தை எழுதியவர் தான் சொல்லவந்தவிடையத்தை அதாவது தனது சொந்தக் கருத்தை இங்கு கூறியிருக்கிறார் என்பது எனது கருத்து. அதாவது ஒருவிடையத்தை மறதலிப்பதன்மூலம் அதனது சாதகமான பகுதிகளை வாசகர்களது கவனத்திற்கு வரவைப்பது (இதனை நாசுக்காகச் செய்தல் வேண்டும் ஆனால் இவர் முயன்று தோத்துப்போய்விட்டார்) மற்றும் யாழப்பாணத்தார் எவ்வேளையிலும் ஒரேமாதிரியான தோற்றப்பாட்டுடன்தான் இருத்தல்வோண்டும் என்பது நியதி இல்லை. அவர்கள் காலத்திற்கக்காலம், காலத்தோடு ஒத்தே வாழ்ந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே இதுவரை தாக்குப்பிடித்துநிற்கிறார்கள். மற்றது ஏனையபிரதேசமக்களும் அவர்களைப்பின்பற்றியே காலாகாலமாக வாழந்து வந்திருக்கிறார்கள். அதேவேளை யாழ்ப்பாணத்துத் தமிழ்வர்க்கம் ஏனைய பிரதேசவாசிகளை தம்முடன் காலாகாலமாக அண்டவிடாது இருந்துவந்தது சிலவிடையங்களில் நன்மையே, அவை அவ்வப் பிரதேசங்களைச் சார்ந்தவர்கள் தங்களது, மிகவும் மெல்லிய உணர்வுகளால் மட்டுமே அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடிய சில மரபுசார்ந்த விடையங்களில் சிலவற்றையாவது அவர்களால் பேணிப்பாதுகாக்கக்கூடியதாகவிருந்தது. காரணம் தென்னிந்தியக் கலாச்சார இறக்குமதிகள் நேரடியாக இவர்களைச் சென்றடைவதில்லை. யாழப்பாணத்து ஈரொட்டிவியாபாரிகள் மூலமே காலாகாலமாக அவர்களது தேவைக்காக மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே கிடைத்துவந்தது. தற்போது பலம்பெயர் தேசங்களில் தமிழத் தொலைக்காட்சிமூலமாக அவர்கட்கும் இந்தக்கண்றாவிகள் இறக்குமதியாவது வேறுவிடையம். ஆனால் கட்டுரையாழர் இறுதியில் யாழப்பாணத் தமிழன் என்பதையிட்டு மிகவும் மித்பாகப் பெருமைப்பட்டு கூறியிருந்தார் இவைபோன்ற விடையங்கள் காலத்துக்குதவாததாகும். ஒருமுறை அமெரிக்கத் தூதராகவிருந்த ஒருவர் தமிழர்தரப்பினைப்பார்த்து ஒருவிடையத்தைக் கேட்டிருந்தார் அது எதுவெனில் "நீங்கள் என்ன காரணத்திற்காக, நாம் இலங்கைத்தமிழர் என்று கூறிப் பெருமைப்படுகிறீர்கள்?" ஆக, நாம் இலங்கைத்தமிழர்கள் எனக் கூறிப் பெருமைப்படுவதை மட்டுவே செய்வோம் தவிர பிரஆதசரீதியான பெருமைகள் எமைச் சிறுமைப்படுத்தவே செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கருத்து எனக்கு தேவை...

மனிதருக்கு கருத்து சொல்லி முடிஞ்சுது!

இனி நாய்க்குட்டிக்கா???

Edited by வல்வை லிங்கம்

  • தொடங்கியவர்

இக்கருத்தை எழுதியவர் தான் சொல்லவந்தவிடையத்தை அதாவது தனது சொந்தக் கருத்தை இங்கு கூறியிருக்கிறார் என்பது எனது கருத்து. அதாவது ஒருவிடையத்தை மறதலிப்பதன்மூலம் அதனது சாதகமான பகுதிகளை வாசகர்களது கவனத்திற்கு வரவைப்பது (இதனை நாசுக்காகச் செய்தல் வேண்டும் ஆனால் இவர் முயன்று தோத்துப்போய்விட்டார்) மற்றும் யாழப்பாணத்தார் எவ்வேளையிலும் ஒரேமாதிரியான தோற்றப்பாட்டுடன்தான் இருத்தல்வோண்டும் என்பது நியதி இல்லை. அவர்கள் காலத்திற்கக்காலம், காலத்தோடு ஒத்தே வாழ்ந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே இதுவரை தாக்குப்பிடித்துநிற்கிறார்கள். மற்றது ஏனையபிரதேசமக்களும் அவர்களைப்பின்பற்றியே காலாகாலமாக வாழந்து வந்திருக்கிறார்கள். அதேவேளை யாழ்ப்பாணத்துத் தமிழ்வர்க்கம் ஏனைய பிரதேசவாசிகளை தம்முடன் காலாகாலமாக அண்டவிடாது இருந்துவந்தது சிலவிடையங்களில் நன்மையே, அவை அவ்வப் பிரதேசங்களைச் சார்ந்தவர்கள் தங்களது, மிகவும் மெல்லிய உணர்வுகளால் மட்டுமே அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடிய சில மரபுசார்ந்த விடையங்களில் சிலவற்றையாவது அவர்களால் பேணிப்பாதுகாக்கக்கூடியதாகவிருந்தது. காரணம் தென்னிந்தியக் கலாச்சார இறக்குமதிகள் நேரடியாக இவர்களைச் சென்றடைவதில்லை. யாழப்பாணத்து ஈரொட்டிவியாபாரிகள் மூலமே காலாகாலமாக அவர்களது தேவைக்காக மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே கிடைத்துவந்தது. தற்போது பலம்பெயர் தேசங்களில் தமிழத் தொலைக்காட்சிமூலமாக அவர்கட்கும் இந்தக்கண்றாவிகள் இறக்குமதியாவது வேறுவிடையம். ஆனால் கட்டுரையாழர் இறுதியில் யாழப்பாணத் தமிழன் என்பதையிட்டு மிகவும் மித்பாகப் பெருமைப்பட்டு கூறியிருந்தார் இவைபோன்ற விடையங்கள் காலத்துக்குதவாததாகும். ஒருமுறை அமெரிக்கத் தூதராகவிருந்த ஒருவர் தமிழர்தரப்பினைப்பார்த்து ஒருவிடையத்தைக் கேட்டிருந்தார் அது எதுவெனில் "நீங்கள் என்ன காரணத்திற்காக, நாம் இலங்கைத்தமிழர் என்று கூறிப் பெருமைப்படுகிறீர்கள்?" ஆக, நாம் இலங்கைத்தமிழர்கள் எனக் கூறிப் பெருமைப்படுவதை மட்டுவே செய்வோம் தவிர பிரஆதசரீதியான பெருமைகள் எமைச் சிறுமைப்படுத்தவே செய்யும்.

அமெரிக்கத் தூதராகவிருந்த ஒருவர் தமிழர்தரப்பினைப்பார்த்து ஒருவிடையத்தைக் கேட்டிருந்தார்

நீங்கள் என்ன காரணத்திற்காக, நாம் இலங்கைத்தமிழர் என்று கூறிப் பெருமைப்படுகிறீர்கள்?" ஆக, நாம் இலங்கைத்தமிழர்கள் எனக் கூறிப் பெருமைப்படுவதை மட்டுவே செய்வோம் தவிர பிரஆதசரீதியான பெருமைகள் எமைச் சிறுமைப்படுத்தவே செய்யும்.

நல்லவிடயம்... அமெரிக்கத் தூதர் கேட்டல் நீங்கள் சொன்னது உண்மை, அனால் கேட்டது இன்னெரு தமிழனே?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தாருக்கு என்று பிரத்தியேக குணாதிசயங்கள் என்று ஒன்றும் இல்லை. புலம் பெயர் நாட்டில் உள்ள தமிழர்களில் யாழ்ப்பாணத்தாரை உடனடியாக அடையாளம் காணமுடியாது.

எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் இயல்புகள் யாழ்ப்பாணத்தாருக்கும் உண்டு. இதில் அது கூட, இது குறைய என்று சொல்லமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.