Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு :திருமதி மகேஸ்வரன்

Featured Replies

ஒஸ்லோ தீர்மானத் தின் அடிப்படையிலேயே தீர்வுத் திட்டத்தை முன் வைக்கவேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். இதனை வலியுறுத்த வேண்டிய தேவையும், அவசியமும் இன்று எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன். யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியவை வறுமாறு

இன்று அரசு தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைத் தீர்வுத்திட்ட விடயத்தில் கூட அக்கறை காட்டவில்லை.

குறிப்பாக முன்னர் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப் பட்ட தீர்வுகளைக்கூட அரசு தரத் தயாராக இல்லை.

யுத்த காலத்தில் நடைமுறைப்படுத்தப் பட்ட அவசரகாலச் சட்டத்தை நீக்காமல் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துகின் றது. அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் 10 ஆயிரம் புலிச்சந்தேக நபர்களை விடு தலை செய்ய வேண்டி வரும் என அமைச் சர் கூறுகின்றார். ஆனால் இந்த பொது மன் னிப்பின் அடிப்படையில் இளைஞர்களும், யுவதிகளும் விடுதலைசெய்யப்படவேண் டியவர்கள் என்றார்.

தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சி னைகள் தீர்க்கப்பட வேண்டும். விவசாயம், கைத்தொழில், கடற்றொழில் என அனைத்து தொழில்முயற்சிளும் வடக்கு, கிழக்கில் பாதிப் படைந்துள்ளன. இவற்றில் மாற்றத்தை ஏற் படுத்த ஐ.தே.கட்சியினாலேயே முடியும்.

குடாநாட்டிலிருந்து எமது கட்சியின் 6 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார் களேயானால் தென்பகுதி அரசியலும் நாடாளுமன்றத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இன்று சுயேச்சைக் குழுக்கள் பலவும் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. இவை தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கவும் மக்களைக் கூறுபோடவும் அரசி னால் ஏவிவிடப்பட்டவையே.தமிழ் மக்க ளின் பிரசினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றால் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றார்.

  • தொடங்கியவர்

பல்லாயிரம் தமிழரை படுகொலை செய்த,

யாழ் நூலகத்தை எரித்த, தமிழர் சொத்துக்களை கொள்ளையடித்த,

தமிழர்கள் தான் உழைத்து காசு கொடுத்து சேர்த்த சொத்துக்களை அடித்துப்பறித்த,

சிங்கள குடியேற்றங்களை நிறுவிய,

சிங்கள பயங்கரவா ஐ.தே. கட்சியில் துவாரகேஸ்வரனும், திருமதி மகேஸ்வரனும் நிற்பது தமிழர்களை மீண்டும் ஏமாற்றவா?

Edited by Aasaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடாநாட்டிலிருந்து எமது கட்சியின் 6 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார் களேயானால் தென்பகுதி அரசியலும் நாடாளுமன்றத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றார்.

(?)ஜனநாயக நாடு பாருங்கோ, எல்லாம் கருத்து சுதந்திரம் செய்யிற வேலை

அக்கா! ........ மண்ணெண்ணை போத்தலோடு மட்டும் நில்லுங்கோ!! .... ஏன் இந்த ஆசை!!

Maheswaran_0108.jpg

தங்கையே!

ஏன் இந்த ஆசை. எத்தனையோ பெண்கள் சிங்கள இரானுவத்தால் கற்பழிக்கபடுகிறர்கள்?

தமிழ் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். உங்களைப்போல் பல பெண்கள் விதவையாக்கபட்டுள்ளார்கள், தொடர்ந்தும் விதவையாக்கபட்டுக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர், இழந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த பெண்களின் வலியே தெரியாத தங்களுக்கு எப்படி தமிழர்களின் மன நிலை தெரிய வரும். சிங்களவன் எழுதிக்கொடுப்பதை வாசிப்பதை நிறுத்து.

அதற்கு முன் உங்கள் குடும்பத்தில் இரு கொலைகார கட்சிகளின் போட்டியிடுவதை நிறுத்தினாலேயே, தங்களின் ஆவலான 6 சீட் தமிழர்களுக்கு கிடைக்கும். ஆனால் 22 சீட் இருந்து 6 ஆக குறைப்பதையே ஐக்கிய் தேசிய கட்சி கொண்டுள்ளது என்பதை சுட்டி காட்டியமைக்கு நன்றி.

தமிழன் நக்கி பிச்சை எடுப்பவன் என்பதை நிரூபித்தமைக்கு நன்றி

யாழ்ப்பாணத்து மக்கள் மாக்களாக மாறாமல் ஒழுங்கா சிந்தித்து வோட்டு போட்டால் சரி.

இல்லையேல் வெளிநாட்டில் நாங்கள் கத்துவதற்கும் ஆப்பு வைத்த மாதிரி போய் விடும்.

மகேஸ்வரன் கூட புலிகள் சைகை காட்டியபடியால் தான் வென்று பாராளுமன்றம் வந்து கத்தி சூடு வாங்கினார்.

இவாவுக்கு என்ன பலம் இருக்கு.

சும்மா சோனியா மாதிரி வெளிக்கிட்டா.ஈழப்பெண்களும் பரவாயில்லை என்று சொல்லலாம். பிற்கும் கொன்ற இனத்தின் சார்பாக இன்னொரு கட்சியில் நிற்பது ஏற்கமுடியாது.

நல்ல கால்ம் இலவச முட்டை. இலவச தொல்லைகாட்சி எண்டு இன்னும் பரப்புரை வரவில்லை

தீர்வுக்காக இன்று தமிழர்கள் காத்து நிற்கவில்லை. அவர்கள் வாழ்வுக்காகக் காத்து நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு :திருமதி மகேஸ்வரன்

ம்.....கூட்டமைப்பும் இப்பிடித்தான் சொல்லுது , மிச்சாக்களும் இதயே சொல்லீட்டா பிரச்சனை இருக்காதே , எல்லாத்திலயும் புள்ளடிய போட்டு எல்லாரயும் பாராளுமன்றம் அனுப்பலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

ம்.....கூட்டமைப்பும் இப்பிடித்தான் சொல்லுது , மிச்சாக்களும் இதயே சொல்லீட்டா பிரச்சனை இருக்காதே , எல்லாத்திலயும் புள்ளடிய போட்டு எல்லாரயும் பாராளுமன்றம் அனுப்பலாம். :)

ஓய்.... மரமண்டை, உனக்கு சோத்திலை உப்பு போட்டு சாப்பிட்டு பழக்கமிருக்கா.....

ஆயுதக்குழுக்கள் ,அரச ஒட்டுண்ணிகள், இனவாத கட்சிகளின் தமிழ வேட்பாளர்கள்.அகதியாய் வந்து பாஸ்போட் எடுத்து போட்டு காசு வாங்கி கொண்டு சுயேட்சையாக நிற்கும் இலண்டன் காரன் செவ்வேள் போன்ற கழிசடைகள் ஒதுக்கப்பட்டு

தமிழர் வாழ்வுக்காக தனியே நிற்கும் சுயேட்சை தமிழர் ,தமிழ்தேசியக்கூட்டமைப்பு ,புதிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை தெரிவு செய்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இலண்டனில் இருக்கும் யாழ் இந்துக்கல்லூரி மாணவர் அமைப்பு

முன்னாள் தலைவர் செவ்வேள் காசு வாங்கி கொண்டு சுயேட்சையாக தேர்தலில் நிற்பதுகுறித்து இன்றைய யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

அங்கு தான் பழைய மாணவர் ஆமைப்பின் தலைவர் என்றும் தனக்கு ஆதரவாக மாணவர்களை திரட்டு வதாக தகவல்கள்

வருகின்றன.

  • தொடங்கியவர்

தமிழ் மக்களின் நிரந்திர விடிவுக்கு , நேர்மையாக, உண்மையாக, துணிச்சலாக, உறுதியாக, விவேகமாக, .... .... அர்ப்பணிப்புடன் உழைக்கக்கூடிய அரசியல்வாதிகள் உள்ளார்களா எனத் தேடித் தெரிந்து தமிழ் மக்கள் தமது முன்னுரிமை வாக்குகளை அளிக்கவேண்டும்.

அப்படிப்பட்டவர்கள்,

........ தமிழின படுகொலையாளர்களுடன்,

........ தமிழின விரோதிகளுடன்,

........ தமிழர் சொத்துக்களை அபகரிப்பவர்களுடன்,

........ தமிழரை இழிவு செய்பவர்களுடன்,

........ சுயநலத்துக்கு தமிழர் நட்பு தேடுபவர்களுடன்,

........ தமது அயோக்கியத்தனத்தை மறைப்பதற்கு தமிழர் நட்பு தேடுபவர்களுடன்,

........ தமிழரை அழிக்க / அழித்துக்கொண்டு தமிழர் நட்பு தேடுபவர்களுடன்,

........ ............,

........ ............,

நெருங்கிய தொடர்புகளை, நெருங்கிய நட்பை வைத்திருக்கக் கூடாது.

அத்தகையவர்கள் தயவில் தமிழர் தீர்வை தேடக் கூடாது.

அத்தகையவர்கள் அடிவருடிகளாக இருக்கக் கூடாது.

அத்தகையவர்கள் படுபாதகச் செயல்களை நேரடியாகவோ, மறை முகமாகவோ அங்கீகரிக்கக் கூடாது.

அத்தகையவர்கள் மேலுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்கள் விடுபட, நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவக் கூடாது.

அவசிய நேரங்களில் மட்டும் வெறும் சம்பிரதாயத் தொடர்புகளை வைத்துக்கொள்வதில் தவறில்லை. (கொள்கைகளைக் கைவிடாது).

தமிழருக்கு பரவலான நன்மைகள் கிடைக்குமென உறுதியானால், தொடர்புகளை வைத்து, பின்னர் விலகிவிடவேண்டும்.

ஆனால், சுயநலம் கருதி தொடர்ந்து நெருங்கிய தொடர்புகளை, நெருங்கிய நட்பை வைத்திருக்கக் கூடாது.

அத்தகையவர்களின் தவறுகளை, அயோக்கியத்தனங்களை, ........ தொடர்ந்து சுட்டிக்காட்டி, கண்டித்து வரவேண்டும்.

அத்தகையவர்களின் தவறுகளை, அயோக்கியத்தனங்களை, ........ நிறுத்த தொடர்ந்து விவேகமாகச் செயற்பட வேண்டும்.

மேலும், இதுவரை அரசிலில் இருந்தவர்கள் , புதிதாக வருபவர்கள் தமிழ் மக்களுக்காக என்னவெல்லாம் செய்தார்கள், சுனாமி, இடப்பெயர்வுகள் .... போன்ற இக்காட்டான நிலைமைகளில் தமிழ் மக்களுக்காக என்னவெல்லாம் செய்தார்கள், ...... எனத் தேடித் தெரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் மக்களின் நிரந்திர விடிவுக்கு , நேர்மையாக, உண்மையாக, துணிச்சலாக, உறுதியாக, விவேகமாக, .... .... அர்ப்பணிப்புடன் உழைக்கக்கூடிய இப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்கள் தமது முன்னுரிமை வாக்குகளை அளிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களோட மக்களா இருந்து மக்களுக்காக சேவைசெய்த ஒராள் கனகரத்தினம் ஐயாதான்....அந்தாளும் அரசாங்கத்தோடயாம்....தேர்தல பகிஸ்கரிக்க சொன்னாலும் 10 பேர் கதிரேல இருக்கத்தான் போறினம். இன்னும் 26 நாள்தான் இருக்கு. என்ர வோட்டு கனகரத்தினம் ஐயாவுக்குத்தான். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.