Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்ஷ வடக்கு விஜயம்

Featured Replies

மகிந்த ராஜபக்ஷ வடக்கு விஜயம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடபகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.

அங்கு யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.

இன்னும் ஒரு வாரத்தில் இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில், ''அரசியல் மறுசீரமைப்பை விட அபிவிருத்திக்குத்தான் முதலிடம்'' என்ற தனது வழக்கமான செய்தியையே அங்கும் அவர் வலியுறுத்தினார்.

ஆனால், இந்த அரசியல் மறுசீரமைப்புத்தான் நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைத்தரும் என்று சிலர் கருதுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் அவரது கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், ஆரவாரத்துடனான வரவேற்பை ஜனாதிபதி எதிர்கொண்டார்.

ஆனால், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் உள்ள இந்த மாவட்டம், யதார்த்தமாகவே அவரது ஆதரவாளர்கள் அதிகமுள்ளதாக அறியப்பட்ட ஒரு இடமல்ல.

யாழ்ப்பாணத்தில் அவரது கூட்டத்துக்காக கூடிய மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதுவும், ஒரு விளையாட்டு அரங்கில் அந்தக் கூட்டம் நடந்ததால், அந்தக் கூட்டம் மேலும் சிறிதாகவே தெரிந்தது. (வவுனியாவில் கூட்டம் பரவாயில்லை என்று கூறப்படுகின்றது.)

அங்கு கூடியவர்களில் பெரும்பாலானோர், ராஜபக்ஷவின் உள்ளுரில் உள்ள ஒரு கூட்டணிக் கட்சியின் ஆதரவாளர்கள்.

அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி பெரும்பாலான நேரம் தமிழிலேயே பேசினார்.

இன்றுமுதல் இலங்கையில் இன வேறுபாடு கிடையாது என்றும், எல்லாரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் அவர் அங்கு பேசினார்.

எதிர்காலத்தில் இன அரசியலுக்கு இடம் கிடையாது என்று பெரிதும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசினார்.

''தமிழ்'' அல்லது ''முஸ்லிம்'' என்ற பெயருடன் இருக்கும் கட்சிகளை தடை செய்வது தொடர்பாக அண்மையில் முன்வைக்கப்பபட்ட பிரேரணைக்கு அவர் மீண்டும் உயிர் கொடுப்பார் என்பதற்கான சாத்தியமான ஒரு சமிக்ஞையாக இது பார்க்கப்படுகின்றது.

வவுனியா கூட்டம்

இதற்கிடையே வவுனியாவில் பேசிய அவர், பிரதேச மக்கள் சபைகளின் மூலம் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். ஆயினும் இந்த மக்கள் சபை என்றால் என்ன என்பது பற்றிய விபரம் எதனையும் அவர் வெளியிடவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதியில் மக்களுக்கு பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் அங்கு உறுதி வழங்கியுள்ளார்.

அரசாங்கம் போரில் வெற்றிபெற்ற பின்னர் தமது ஊரில் வழமைநிலை திரும்பியுள்ளதாக பிபிசியிடம் பேசிய சில உள்ளூர் மக்கள் குறிப்பிட்டார்கள். அதனை அவர்கள் வரவேற்றார்கள்.

ஆனால், தமிழர்களுக்கு விசேடமான சில பிரச்சினைகள் இருப்பதாகவும், அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் வேறு சிலர் கூறினார்கள்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/04/100401_presidentinjaffna.shtml

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....நெஞ்ச காட்டியிருக்கிறார்...யாழ்ப்பாணத்தில. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....நெஞ்ச காட்டியிருக்கிறார்...யாழ்ப்பாணத்தில. :(

இப்ப என்ன சிங்கப்பூர் மாதிரி யாழ்ப்பாணம் வரும் எண்டுறியளோ? :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப என்ன சிங்கப்பூர் மாதிரி யாழ்ப்பாணம் வரும் எண்டுறியளோ? :wub:

1991 ல சந்திக்கு சந்தி சுட்டு போட்டிட்டு சிங்கப்பூர் மாதிரி எண்டு சென்னத ஞாபகமூட்டாதீங்கோ!!

1991 ல சந்திக்கு சந்தி சுட்டு போட்டிட்டு சிங்கப்பூர் மாதிரி எண்டு சென்னத ஞாபகமூட்டாதீங்கோ!!

ம நங் உமக்கு 1958 ,1977,1983, 1983--இன்றுவரை சிங்களவனும் சிங்களவனுக்கு வால் பிடிக்கும் உம்மை போன்றவர்களும் கொன்ற மக்களின் நிலை தெரியாது. இங்கு வந்து மக்கலை வம்புக்கு இழுத்து விளையாடுவதுதான் உமது பொழுது போக்கு. அது சரி உங்களுக்கு இப்பவும் மிச்சம் மீதி எலும்புகள் கிடைக்கிறதோ

  • கருத்துக்கள உறவுகள்

1991 ல சந்திக்கு சந்தி சுட்டு போட்டிட்டு சிங்கப்பூர் மாதிரி எண்டு சென்னத ஞாபகமூட்டாதீங்கோ!!

ஏன் இப்ப மட்டும் சந்தனம் பூசி அனுப்புனமோ என ஒரு சந்தேகமாய் இருக்கு. அது சரி டக்குவின் குட்டைக்கு இப்ப என்ன தடவுறார் என்பது தான் சின்ன கடையாட்களின் கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்

1991 ல சந்திக்கு சந்தி சுட்டு போட்டிட்டு சிங்கப்பூர் மாதிரி எண்டு சென்னத ஞாபகமூட்டாதீங்கோ!!

ஆச்சி ஆக்கள் அப்பம் சுட்டு வித்தத சொல்றீங்களோ?

அது எப்படி உங்களுக்கு தெரியும் 1991 நீங்கள் அங்கு இருந்திருக்க முடியாதே?

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் இந்தியக்காரணோட சேர்ந்து ஒங்கட தளபதி பெருமாள் மண்டையன் குழுவை வைத்து தெருவுக்குத் தெரு போட்டதைச்சொலலுறியளோ மதி கழண்ட வதனங். தமிழின அழிப்பு நாயகனும் உங்களுக்காக எலும்புத்துண்டு போடுபவருமாகிய சிறீலங்காவின் தலைவரை வரவேற்கத்தானே வவுனியாவிலையும் சாவகச்சேரியிலையும் இரண்டுபோரைப் போட்டுத்தள்ளினியள்! இல்லையில்லை அடித்தே சாவடித்தீர்கள் இன்னும் எத்தினை தமிழன் பிணம் வேணும் உங்களுக்கு? மதிகழண்டவதனம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் இந்தியக்காரணோட சேர்ந்து ஒங்கட தளபதி பெருமாள் மண்டையன் குழுவை வைத்து தெருவுக்குத் தெரு போட்டதைச்சொலலுறியளோ மதி கழண்ட வதனங். தமிழின அழிப்பு நாயகனும் உங்களுக்காக எலும்புத்துண்டு போடுபவருமாகிய சிறீலங்காவின் தலைவரை வரவேற்கத்தானே வவுனியாவிலையும் சாவகச்சேரியிலையும் இரண்டுபோரைப் போட்டுத்தள்ளினியள்! இல்லையில்லை அடித்தே சாவடித்தீர்கள் இன்னும் எத்தினை தமிழன் பிணம் வேணும் உங்களுக்கு? மதிகழண்டவதனம்.

இதனை மிகவும் காட்டமாக கண்டிக்கின்றேன்

அவர் ஒருபோதும் இவற்றை கொலை என்றோ சாவென்றோ வீண் இழப்பு என்றோ எழுதியதில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனை மிகவும் காட்டமாக கண்டிக்கின்றேன்

அவர் ஒருபோதும் இவற்றை கொலை என்றோ சாவென்றோ வீண் இழப்பு என்றோ எழுதியதில்லை

அண்ணே....அரசியலுக்காக தற்கொடை கொடுத்திருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.