Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் சனத் ஜயசூரியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் 20 பேர் கைது

Featured Replies

தமிழகத்தில் சனத் ஜயசூரியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் 20 பேர் கைது

கொழும்பு நிருபர்

புதன்கிழமை, ஏப்ரல் 7, 2010

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரியவுக்கு எதிராக தமிழகத்தில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 பேர்வரை தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

மும்பை இந்தியன் அணிக்காக விளையாடும் சனத் ஜயசூரிய சென்னையில் விளையாட அனுமதிக்கக்கூடாது எனக்கோரியே புதிய தமிழகம் கட்சியின் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் சனத் ஜயசூரிய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

போர்க்குற்றம் புரிந்துள்ள அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் சனத் ஜயசூரியவுக்கு விளையாட அனுமதிக்கக்கூடாது என புதிய தமிழகம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சனத் ஜயசூரியவுக்கு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்து சகோதரர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழ் எம்மவர்களில் சிலர் சனத்தின் ஆட்டம் பார்க்க சிறிலங்கா அணி பொறித்த ஆடை அணிந்து கொண்டு சிறிலங்கா தேசியக் கொடியுடன் செல்கிறார்கள்.

முரளீதரன் மட்டும் சென்னைக்காக விளையாடலாமா ? அந்த கோடாலிக்காம்பும் மகிந்தவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறதே ?

  • கருத்துக்கள உறவுகள்

முரளீதரன் மட்டும் சென்னைக்காக விளையாடலாமா ? அந்த கோடாலிக்காம்பும் மகிந்தவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறதே ?

முரளிதரன் தேர்தலில் போட்டி இடவில்லை.

முரளீதரன் மட்டும் சென்னைக்காக விளையாடலாமா ? அந்த கோடாலிக்காம்பும் மகிந்தவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறதே ?

செந்தமிழன்!

முரளிதரனில் பல குறைகள் இருந்தாலும், தமிழருக்கு உதவிகள் பெரிதாக செய்யாவிட்டாலும், சாதனைகள் பல படைத்த ஒரு தமிழன்.

சிங்கள துடுப்பாட்ட அணியில் இருந்தாலும், தமிழருக்கு எதிராக எதுவும் செய்யவில்லை, காட்டிக் கொடுக்கவில்லை, தமிழனை எதிர்ப்பவர்களை ஆதரிக்கவும் இல்லை. கண்டபடி விமர்சிப்பதற்கு முரளி ஒரு அரசியல் வாதியும் இல்லை, தன்னை தமிழர் பிரதிநிதியாகவும் இதுவரை காட்டிக்கொள்ளவில்லை.

முரளி வாழும் சூழ்நிலையை விளங்கி, தமிழர் முரளியை ஆர்ப்பாட்டம் இன்றி அரவணைக்க என்றும் முயலவில்லை.

திமிர்களை தூக்கி வீசிவிட்டு, முடிந்தளவு முன்னணியில் உள்ள தமிழர்களை அவர்கள் போக்கில், அவர்களுக்கு பிரச்சினைகள் கொடுக்காது, அவர்களது உரிமைகளில் தலையிடாது, அரவணைக்க முயலுங்கள், அரவணைக்க பழகுங்கள். நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தான் அனைத்து பிரச்சினைகளும் எழுகிறது.

முரளி முன்னர் கிளிநொச்சி சென்ற போதும் புலிகள் மகிழ்ச்சியுடன் அளவளாவினர் என்பதையும் மறந்துவிடவேண்டாம்.

அவருக்கு சிங்கள பெண்ணை திருமணம் செய்ய பல சிங்கள வெறியர் முனைந்தபோதும் அவர் ஒரு தமிழ் பெண்ணையே திருமணம் செய்தார். இந்திய பயங்கரவாதிகள் நீண்ட நாட்களாக வளைத்துப்போட முயன்றபோதும் சமயோசிதமாக தப்பி வருகிறார். மகிந்த குழு அன்பாக மிரட்டி, அழுத்தம் கொடுத்து தேர்தலில் நிற்கவைக்க முயன்றும் சமயோசிதமாக தப்பிவிட்டார். அவரது தகப்பன் மலையக ஏழை மக்களுக்கு முடிந்தளவு உதவிகள் செய்து வருவதை 1998 முதல் நான் நேரடியாக அறிவேன். இவற்றை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

அவசரப்பட்டு தமிழனுக்கு வலிந்து உபத்திரம் செய்யாத ஒரு புகழ் பெற்ற தமிழனை தூக்கி வீசிவிட வேண்டாம். மட்டமான கருத்துக்களை எழுதி தமிழரில் இருந்து அன்னியப்படுத்த வேண்டாம்.

பல வருடங்களின் முன்னரும், யாழ்களத்தில் ஒரு சிலர் மனம் போன போக்கில் முரளியை விமர்சித்ததை பார்த்து கவலைப்பட்டேன்.

புதிய எதிரிகளை உங்கள் கண்மூடித்தனமான கருத்துக்களால் நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள்.

அறியப்பட்ட தமிழனின் எதிரிகளை, தமிழின படுகொலையாளர்களை, தமிழரின் பிரதிநிதி என தமிழின படுகொலையாளருடன் இணைந்து தமிழர் சொத்துக்களை கொள்ளையடித்து வாழும் கூட்டத்தை, தமிழரின் உரிமைகளை அபகரிப்பவர்களை கண்மூடித்தனமான தாக்குங்கள். அது ஒருகாலத்தில் பலனைத் தரலாம்.

முரளிதரன் தேர்தலில் போட்டி இடவில்லை.

நன்றி ரதி. முரளீதரன் தேர்தலில் போட்டியிடுவதாக வந்த செய்தி மட்டுமே அறிந்திருந்தேன். அவர் விலகியது தெரியாது.

செந்தமிழன்!

முரளிதரனில் பல குறைகள் இருந்தாலும், தமிழருக்கு உதவிகள் பெரிதாக செய்யாவிட்டாலும், சாதனைகள் பல படைத்த ஒரு தமிழன்.

சிங்கள துடுப்பாட்ட அணியில் இருந்தாலும், தமிழருக்கு எதிராக எதுவும் செய்யவில்லை, காட்டிக் கொடுக்கவில்லை, தமிழனை எதிர்ப்பவர்களை ஆதரிக்கவும் இல்லை. கண்டபடி விமர்சிப்பதற்கு முரளி ஒரு அரசியல் வாதியும் இல்லை, தன்னை தமிழர் பிரதிநிதியாகவும் இதுவரை காட்டிக்கொள்ளவில்லை.

முரளி வாழும் சூழ்நிலையை விளங்கி, தமிழர் முரளியை ஆர்ப்பாட்டம் இன்றி அரவணைக்க என்றும் முயலவில்லை.

திமிர்களை தூக்கி வீசிவிட்டு, முடிந்தளவு முன்னணியில் உள்ள தமிழர்களை அவர்கள் போக்கில், அவர்களுக்கு பிரச்சினைகள் கொடுக்காது, அவர்களது உரிமைகளில் தலையிடாது, அரவணைக்க முயலுங்கள், அரவணைக்க பழகுங்கள். நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தான் அனைத்து பிரச்சினைகளும் எழுகிறது.

முரளி முன்னர் கிளிநொச்சி சென்ற போதும் புலிகள் மகிழ்ச்சியுடன் அளவளாவினர் என்பதையும் மறந்துவிடவேண்டாம்.

அவருக்கு சிங்கள பெண்ணை திருமணம் செய்ய பல சிங்கள வெறியர் முனைந்தபோதும் அவர் ஒரு தமிழ் பெண்ணையே திருமணம் செய்தார். இந்திய பயங்கரவாதிகள் நீண்ட நாட்களாக வளைத்துப்போட முயன்றபோதும் சமயோசிதமாக தப்பி வருகிறார். மகிந்த குழு அன்பாக மிரட்டி, அழுத்தம் கொடுத்து தேர்தலில் நிற்கவைக்க முயன்றும் சமயோசிதமாக தப்பிவிட்டார். அவரது தகப்பன் மலையக ஏழை மக்களுக்கு முடிந்தளவு உதவிகள் செய்து வருவதை 1998 முதல் நான் நேரடியாக அறிவேன். இவற்றை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

அவசரப்பட்டு தமிழனுக்கு வலிந்து உபத்திரம் செய்யாத ஒரு புகழ் பெற்ற தமிழனை தூக்கி வீசிவிட வேண்டாம். மட்டமான கருத்துக்களை எழுதி தமிழரில் இருந்து அன்னியப்படுத்த வேண்டாம்.

பல வருடங்களின் முன்னரும், யாழ்களத்தில் ஒரு சிலர் மனம் போன போக்கில் முரளியை விமர்சித்ததை பார்த்து கவலைப்பட்டேன்.

புதிய எதிரிகளை உங்கள் கண்மூடித்தனமான கருத்துக்களால் நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள்.

அறியப்பட்ட தமிழனின் எதிரிகளை, தமிழின படுகொலையாளர்களை, தமிழரின் பிரதிநிதி என தமிழின படுகொலையாளருடன் இணைந்து தமிழர் சொத்துக்களை கொள்ளையடித்து வாழும் கூட்டத்தை, தமிழரின் உரிமைகளை அபகரிப்பவர்களை கண்மூடித்தனமான தாக்குங்கள். அது ஒருகாலத்தில் பலனைத் தரலாம்.

உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. எனது கருத்தினை பின்னர் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முரளி கிளிநொச்சி போய் நிக்கேக்க எடுத்த படங்கள்..

2004112800160101.jpg

muraliphotos073.jpg

முரளி கிளிநொச்சி போய் நிக்கேக்க எடுத்த படங்கள்..

2004112800160101.jpg

muraliphotos073.jpg

ஐநா உலக உணவு திட்ட கௌரவ பிரதிநிதியாக இருந்த போது வன்னி போய் சிலவாரங்கள் தங்கி இருந்து வந்தார்.

இந்த செயற்பாட்டினால் ஒருவருடம் முரளி இலங்கை அணியில் காயம் காரணமாக எண்று சொல்லி சேர்க்கப்படவில்லை. ஆனால் இங்கிலாந்தில் லங்கசெயார் அணியில் விளையாடினார்.

Edited by பொய்கை

செந்தமிழன்!

முரளிதரனில் பல குறைகள் இருந்தாலும், தமிழருக்கு உதவிகள் பெரிதாக செய்யாவிட்டாலும், சாதனைகள் பல படைத்த ஒரு தமிழன்.

சிங்கள துடுப்பாட்ட அணியில் இருந்தாலும், தமிழருக்கு எதிராக எதுவும் செய்யவில்லை, காட்டிக் கொடுக்கவில்லை, தமிழனை எதிர்ப்பவர்களை ஆதரிக்கவும் இல்லை. கண்டபடி விமர்சிப்பதற்கு முரளி ஒரு அரசியல் வாதியும் இல்லை, தன்னை தமிழர் பிரதிநிதியாகவும் இதுவரை காட்டிக்கொள்ளவில்லை.

முரளி வாழும் சூழ்நிலையை விளங்கி, தமிழர் முரளியை ஆர்ப்பாட்டம் இன்றி அரவணைக்க என்றும் முயலவில்லை.

திமிர்களை தூக்கி வீசிவிட்டு, முடிந்தளவு முன்னணியில் உள்ள தமிழர்களை அவர்கள் போக்கில், அவர்களுக்கு பிரச்சினைகள் கொடுக்காது, அவர்களது உரிமைகளில் தலையிடாது, அரவணைக்க முயலுங்கள், அரவணைக்க பழகுங்கள். நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தான் அனைத்து பிரச்சினைகளும் எழுகிறது.

முரளி முன்னர் கிளிநொச்சி சென்ற போதும் புலிகள் மகிழ்ச்சியுடன் அளவளாவினர் என்பதையும் மறந்துவிடவேண்டாம்.

அவருக்கு சிங்கள பெண்ணை திருமணம் செய்ய பல சிங்கள வெறியர் முனைந்தபோதும் அவர் ஒரு தமிழ் பெண்ணையே திருமணம் செய்தார். இந்திய பயங்கரவாதிகள் நீண்ட நாட்களாக வளைத்துப்போட முயன்றபோதும் சமயோசிதமாக தப்பி வருகிறார். மகிந்த குழு அன்பாக மிரட்டி, அழுத்தம் கொடுத்து தேர்தலில் நிற்கவைக்க முயன்றும் சமயோசிதமாக தப்பிவிட்டார். அவரது தகப்பன் மலையக ஏழை மக்களுக்கு முடிந்தளவு உதவிகள் செய்து வருவதை 1998 முதல் நான் நேரடியாக அறிவேன். இவற்றை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

அவசரப்பட்டு தமிழனுக்கு வலிந்து உபத்திரம் செய்யாத ஒரு புகழ் பெற்ற தமிழனை தூக்கி வீசிவிட வேண்டாம். மட்டமான கருத்துக்களை எழுதி தமிழரில் இருந்து அன்னியப்படுத்த வேண்டாம்.

பல வருடங்களின் முன்னரும், யாழ்களத்தில் ஒரு சிலர் மனம் போன போக்கில் முரளியை விமர்சித்ததை பார்த்து கவலைப்பட்டேன்.

புதிய எதிரிகளை உங்கள் கண்மூடித்தனமான கருத்துக்களால் நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள்.

அறியப்பட்ட தமிழனின் எதிரிகளை, தமிழின படுகொலையாளர்களை, தமிழரின் பிரதிநிதி என தமிழின படுகொலையாளருடன் இணைந்து தமிழர் சொத்துக்களை கொள்ளையடித்து வாழும் கூட்டத்தை, தமிழரின் உரிமைகளை அபகரிப்பவர்களை கண்மூடித்தனமான தாக்குங்கள். அது ஒருகாலத்தில் பலனைத் தரலாம்.

இந்தக் கருத்துடன் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.