Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்கி பகவான் மற்றும் அவரது ஆசிரமங்களில் போலீசார் அதிரடி விசாரணை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்கி பகவான் மற்றும் அவரது ஆசிரமங்களில் போலீசார் அதிரடி விசாரணை!

Sunday, April 11, 2010 at 1:02 am | 356 views

kalki-frauds-300x267.jpg

கல்கி பகவான் மற்றும் அவரது ஆசிரமங்களில் போலீசார் அதிரடி விசாரணை!

ஹைதராபாத்: கல்கி பகவான் என்று தன்னை கூறிக் கொள்ளும் ஆசாமி மற்றும் அவரது ஆசிரமத்தில் நடக்கும் சமாச்சாரங்கள் குறித்து தீர விசாரித்து அறிக்கை தருமாறு ஆந்திர மாநில போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தில் கல்கி ஆசிரமம் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

சாதாரண எல்ஐசி ஏஜென்டாக இருந்த விஜயகுமார் நாயுடு தன் பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்டார். புராணங்களில் சொல்லப்பட்ட கல்கி அவதாரம் நானே என்று கூறி ஆசிரமம் அமைத்து பெரும் பணம் மோசடி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவரது மனைவி புஜ்ஜம்மா, தன்னை அம்மா பகவான் என்றும் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வருகிறார்.

இந்த இருவரையும் தரிசனம் செய்ய நுழைவுக் கட்டணம் ரூ 5000க்கும் மேல் வசூலிக்கப்படுகிறது. பாத பூஜை செய்ய பல ஆயிரக்கணக்கில் வசூலிக்கிறார்களாம்.

மேலும் கல்கி பகவான் ஆசிரமத்தில் பக்தர்களுக்கு போதை மருந்து கலந்த பிரசாதம் கொடுத்து ஆட வைக்கிறார்களாம்.

இவற்றையெல்லாம் தனியார் தொலைக்காட்சிகள் புலனாய்வு செய்து, கல்கி ஆசிரம மோசடிகளை வீடியோ ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிட்டன.

இதுகுறித்து மனித உரிமை ஆணைய தலைவர் சுபாஷன் ரெட்டியிடம் பக்தர்கள் புகார் அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல், ஏழை எளிய மக்களுக்கு அரசு அளித்த நிலம், வனத்துறைக்கு சொந்தமான நிலம் போன்றவற்றை கல்கி பகவான் ஆக்கிரமித்துள்ளதாக ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஏராளமானோர் புகார் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “ஏழைகள் வனத்துறை நிலங்களை மோசடி செய்ததாக கல்கி பகவான் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுவரை போலீஸ் அதிகாரிகள் கல்கி பகவானிடம் விசாரணை நடத்தாதது ஏன்? வருகிற 23 ந் தேதிக்குள் போலீசார் கல்கி பகவானிடம் விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கல்கி விஜயகுமார் நாயுடுவின் ஆசிரமங்கள், அலுவலகங்கள் போன்றவை குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது ஆந்திர போலீஸ். ஆசிரம ஊழியர்களிடம் முதல்கட்ட விசாரணை நடக்கிறது.

-என்வழி செய்திகள்

You might also like:

ஒரு நல்ல பிஸீனஸ் சந்தர்ப்பம்..... விடுவார்களா தமிழ்நாட்டு பண்டிகள்..... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ்காரருக்கும் அதன் அதிரிகளுக்கும் ஆட்சியாளருக்கும் வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இல்லாது இருக்கலாம். அதற்காக எமது பகவானை வந்து விசாரணை நடத்த இவர்கள் யார்?

எமது பகவான் என்ன பொலிஸ்காரரையும் கட்டாயமாக வந்து வணங்குங்கள் என்று கட்டளை பிறப்பித்தாரா?

வேண்டுமானவர்கள் வாங்கள் வேண்டாதவர்கள் இப்போது போங்கள் ஆனால் பின்நாளில் அதன் வினைகளை அனுபவியுங்கள் என்றுதானே சொல்கிறார். இதில் ஏன் இந்த ஆட்சியாளர்கள் குத்துகரணம் அடிக்க வேண்டும்.

தமது அரசியல் கட்சிக்கு பகவான் ஆதரவு தரவில்லை என்ற கோபத்தையே இப்போது சாதிக்கின்றார்கள்.

சாமிக்கு அரசியல் ஒத்துவராதது என்று இந்த மூட்டாள்களுக்கு எப்படி விளங்கபடுத்துவது?

வேடம் போட்டு ஏமாற்றுபவர்களை தூக்கிலும் போடலாம்.

நல்லகாலம் தெரேசா மாதிரி இந்தாளுக்கும் நோபெல் பரிசு கொடுக்க உரியவர்கள் முன்வரவில்லை.

நல்லகாலம் தெரேசா மாதிரி இந்தாளுக்கும் நோபெல் பரிசு கொடுக்க உரியவர்கள் முன்வரவில்லை.

உண்மையில் சாய்பாபவுக்கோ அல்லது சங்கராச்சாரி நித்தியானந்தா கல்கி அம்மா மற்றும் பாம்பு சமியார் போன்ற எந்த ஒரு இந்துமத பெரியார்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதுதான். இது நோபல் குழுவின் பக்கச்சார்புத் தன்மையையே காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சாய்பாபவுக்கோ அல்லது சங்கராச்சாரி நித்தியானந்தா கல்கி அம்மா மற்றும் பாம்பு சமியார் போன்ற எந்த ஒரு இந்துமத பெரியார்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதுதான். இது நோபல் குழுவின் பக்கச்சார்புத் தன்மையையே காட்டுகின்றது.

உண்மையானதும் நியாயமானதுமான ஒரு கருத்து!

காரணம் நோபல் பரிசு ஒரு துறையனருக்கு மட்டும் கொடுக்கபடுவதில்லை. எல்லா துறையிலும் திறமையுள்ளவர்களுக்கு கொடுக்கபடும்போது.................?

இந்த திறமை வாய்ந்த சாமிகளின் தத்துவங்கள் புறக்கணிக்கபடுவெதென்பது எதன் அடிப்படையில் என்று அவர்களின் மதத்தை தழுவும் நாங்களே கேள்விகளை இதுவரையில் முன்வைக்கவில்லை. ஈமெயில் மூலமாகவோ கடிதங்கள் மூலமாகவோ நோபல் பரிசு கொமிட்டிக்கு இந்த பக்கசார்பு தன்மையை நாம் எடுத்து காட்ட வேண்டும்.

குறைந்தபட்சம் உலகறிந்த சாயிபாபவையோ அல்லது சந்திரசுவாமிஜியையோ கருத்தில் கொள்ளவேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நல்ல பிஸீனஸ் சந்தர்ப்பம்..... விடுவார்களா தமிழ்நாட்டு பண்டிகள்..... :lol:

ஒ நீங்கள் சொல்லுற ஆட்கள் இவர்கள்தானோ

Pig-Bush--36580.jpg

உவரை மாத்திரம் விசாரிச்சால் சரிவராது

எல்லாச்சாமி மாரையும் ஒருக்கா விசாரிச்சாத்தான் ஓரளவுக்கு உண்மை வெளில வரும்.

அல்லது விசாரிப்பாங்கள் என்ற பயம் இருந்தாலே போதும் பத்திச் சாமியார்கள் எல்லாம் ஓடிடுவாங்கள்.

ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுக் காரர்கள் இருப்பார்கள்.

உண்மையானதும் நியாயமானதுமான ஒரு கருத்து!

காரணம் நோபல் பரிசு ஒரு துறையனருக்கு மட்டும் கொடுக்கபடுவதில்லை. எல்லா துறையிலும் திறமையுள்ளவர்களுக்கு கொடுக்கபடும்போது.................?

குறைந்தபட்சம் உலகறிந்த சாயிபாபவையோ அல்லது சந்திரசுவாமிஜியையோ கருத்தில் கொள்ளவேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும்.

அவர்கள் மதம் மாற்றுவதில்லையே! அதனால் அவர்களுக்கு நோபெல் பரிசு கிடைக்காது.

சோவித் யூனியனை உடைத்தவர்களுக்கும், மதம் மாற்றியவர்களுக்கும், மேலைத்தேச கொள்கைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்தவர்களுக்குத் தான் நோபெல் பரிசு கிடைத்தது வரலாறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.