Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து வேலை செய்யும் - சம்பந்தன்

Featured Replies

கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து வேலை செய்யும் - சம்பந்தன்

வவுனியா நிருபர்

திங்கட்கிழமை, ஏப்ரல் 19, 2010

tnapress

பிளவுபடாத இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வு பற்றி அரசாங்கத்துடன் சேர்ந்து பணிசெய்ய தயாராக இருப்பதாக சம்பந்தன் கூறியுள்ளார். ஒற்றையாட்சிக்குள்ளான தமிழர்களுக்கான திர்வு பற்றி அரசாங்கம் யோசிக்குமாக இருந்தால் அரசுடன் நாம் மிகவும் நெருக்கமாக வேலை செய்ய தயாராக இருக்கின்றோம். இவ்வாறு கூறியுள்ளார் சம்பந்தன் அவர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பு திருமலையில் இடம்பெற்றபோதே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் இந்த தேர்தலில் 50 வீதத்திற்கு மேலான தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. காரணம் தமிழ் மக்கள் இந்த தேர்தலை தேவை என கருதவில்லை. அத்துடன் 50 வீதமான மக்கள் வாக்களிக்க முடியாமல் இருந்துள்ளனர். முகாம்களிலும் தடுப்பு நிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் வாக்களித்தோர் எம்மை தேர்வு செய்துள்ளனர். என்றும் கூறியுள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

வாக்களிக்காதவர்களைக் குறிவைத்து அடுத்த தேர்தலுக்கு தயாராகின்றார்களாம் கஜேந்திரன் அணியினர். அதற்குள் இவர் முந்திக் கொள்ளப் பார்க்கிறார். மக்களுக்கு ஏதாவது ஆறுதல் செய்யாவிட்டால் அடுத்த தடவை நீங்களெல்லாம் இல்லை.

கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து வேலை செய்யும் - சம்பந்தன்

இல்லாமல் எப்படி? :lol::D:lol: சம்பந்தன் ஐயா கவனம் யாழ் கள துரோகி பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கலாம். ஒரு தடவை விற்பனர்களுடன் நீங்கள் நேரடி விவாதத்தில் ஈடுபட்டால் தான் உங்கள் நிலை என்னவென்று தெரியும். ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்லிப்போட்டேன் இனி உங்க இஷ்டம்.

Edited by விடிவெள்ளி

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து வேலை செய்யும் - சம்பந்தன்

இல்லாமல் எப்படி? :lol::D:lol: சம்பந்தன் ஐயா கவனம் யாழ் கள துரோகி பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கலாம். ஒரு தடவை விற்பனர்களுடன் நீங்கள் நேரடி விவாதத்தில் ஈடுபட்டால் தான் உங்கள் நிலை என்னவென்று தெரியும். ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்லிப்போட்டேன் இனி உங்க இஷ்டம்.

இந்த நாள் வரைக்கும் அரசோடை சேர்ந்து முகாமில் இருக்கும் மக்களுக்கும், மீள் குடியேற்றம் எண்ற பெயரின் அடிப்படை வசதிகளை பெற கூட முடியாது தவிக்கும் மக்களுக்கும் சம்பந்தன் ஒண்றும் செய்ய வில்லை. ஆனால் அரசோடு சேர்ந்து தீர்வை வாங்க போறாராம் எண்டு சொல்லுறியள். :D

Edited by பொய்கை

முகாமில் இருப்பவர்களுக்காக, அடைபட்டுக் கிடப்பவர்களுக்காக யாரால் என்ன செய்ய முடிந்தது? வழிகள் பற்றிச் சிந்திக்கலாமே தவிர முடிவுகள் தமிழர் கைகளில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாள் வரைக்கும் அரசோடை சேர்ந்து முகாமில் இருக்கும் மக்களுக்கும், மீள் குடியேற்றம் எண்ற பெயரின் அடிப்படை வசதிகளை பெற கூட முடியாது தவிக்கும் மக்களுக்கும் சம்பந்தன் ஒண்றும் செய்ய வில்லை. ஆனால் அரசோடு சேர்ந்து தீர்வை வாங்க போறாராம் எண்டு சொல்லுறியள். :lol:

அவருடைய கருத்தை மீண்டும் மீண்டும் வாசித்து பாருங்கள். ஒரு விடயத்தை சம்மந்தன் ஐயா திரும்ப திரும்ப சொல்கிறார்.

"அதாவது அவர்கள் தந்தால் வாங்குவதற்கு நாம் தயார இருக்கிறோம்" என்பதே அது.

அவர்கள் எதையும் தரமமாட்டார்கள் என்பது சின்னபுள்ள எனக்கே தெரியும்போது ஏதோ அரசியல் என்று காலம் கடத்திய அவருக்கு தெரியாதா என்ன?

ஆக தன்னால் எதையும் புதுசா புடுங்க முடியாது என்பதை அவரே நேரடியாக சொல்லிவிட்டார். ஆனால் நம்மவர் சும்மா லேசுபட்டவர்களோ..... அவர் பொண்ணு என்றால் இவர்கள் திருமணமே முடித்து வைப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து வேலை செய்யும் - சம்பந்தன்

இனி டக்ளஸ் பாடு திண்டாட்டம் தான்.....

டக்ளஸ் இனி மூட்டையை கட்டிக்கொண்டு, மூலையிலை இருந்து பார்க்க வேண்டியது தான்..... ஐயாவுன்ரை விளையாட்டுக்களை.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து வேலை செய்யும் - சம்பந்தன்

இல்லாமல் எப்படி? :lol::D:lol: சம்பந்தன் ஐயா கவனம் யாழ் கள துரோகி பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கலாம். ஒரு தடவை விற்பனர்களுடன் நீங்கள் நேரடி விவாதத்தில் ஈடுபட்டால் தான் உங்கள் நிலை என்னவென்று தெரியும். ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்லிப்போட்டேன் இனி உங்க இஷ்டம்.

சம்பந்தருக்கு தமிழர்களுக்கான தலைவருக்கான எந்த தகுதியும் இல்லை.ஏதொ 30 வருடம் கட்சியில் இருந்தார்.ஆங்கிலம் சிங்களம் தமிழ் தெரிந்தால் தலைவராக முடியுமா? எங்களது பேக்கரியில் பாண் போடும் குணேரிசுக்கும் தான் 3 மொழியும் அத்துப்படி. :D

தலைவர் என்பவர் மக்களின் கஸ்ட துன்பங்களில் இருந்து பிறக்க வேண்டும்.அவர்களோடு வாழ வேண்டும்.மக்களை படிக்க வேண்டும்.பின்னர் அதற்கான அணுகு முறைகளை நாட்டுக்கு ஏற்ப செயல் திறன் மூலம் வகுத்து அதற்காக உயிரையும் கொடுக்க தயங்க கூடாது. இது வரலாற்றின் எந்த சிறிய நாடு முதல் பெரிய நாடு வரை மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர்களின் குணாம்சங்கள்.

முதலாவது எதிரியின் வலைக்குள் அல்லது எதிரிக்கு அடிபணிய கூடாது.தனது மக்களை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் காட்டி கொடுக்க கூடாது.மக்களை படிப்பது தான் உயர்ந்த படிப்பு.ஆங்கிலம் தெரிந்தவன் தலைவன் என்றால் டாக்சி ஓட்டுபவர்கள் பல மொழிகளில் விற்பன்னன்.ஆகவே அவர்கள் தலைவருக்கு உரிய தகுதியை பெற்று விடுகிறார்களா?

ஒரு சில மேற்கு நாடுகளில் ஜனநாயகமான போராட்டங்கள் ஏற்க படுகின்றன.ஏனெனில் போரின் தாக்கங்களை அனுபவ ரீதியாக கண்டவர்கள் மட்டுமல்ல எப்ப்படி திரும்பவும் நிஜ வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என செயல் வடிவம் கொடுத்தவர்கள்.

இலங்கை போன்ற நாடுகளில் மக்களை அது யாராக இருக்கட்டும், பகடை காய்களாக பயன்படுத்தி இன மோதல்களை ஏற்படுத்தி தனது குடும்ப நலனில் அக்கறை மட்டும் கொண்ட ஒரு செயல் திட்டம் மேற்கு நாடுகளில் இருக்கவே இருக்காது.இல்லா விட்டால் தரை மட்டமாக்கப்பட்ட ஜேர்மனி எப்படி இன்று உயர்ந்து நிற்கிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.