Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பயமில்லாத் துணிவால் எழும் கலாசாரச் சீரழிவைக் கட்டுப்படுத்துவது யார்

Featured Replies

புலிகளின் பயமில்லாத் துணிவால் எழும் கலாசாரச் சீரழிவைக் கட்டுப்படுத்துவது யார்?

விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என்பதற்காக அவர்களால் கட்டுப்படுத்தப் பட்ட சில விடயங்களை மறப்பதற்கும் மறுப்பதற்கும் முடியாமல் உள்ளது. அதில் ஒரு விடயம் கலாசாரச் சீரழிவை அவர்கள் கட்டுப்படுத்திய விதமாகும்.

அதாவது பாலியல் வல்லுறவு, கொள்ளை, கசிப்பு, கோஷ்டி மோதல் போன்ற சமூக சீரழிவை அவர்கள் பூரண மாகக் கட்டுப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக அச்சமற்ற வாழ்வை மக்கள் அனுபவித்தனர். இரவு வேளையிலும் பெண்கள் தனித்து நடமாடக்கூடியதாக இருந்தது. சந்திகளில் கூடி நின்று இளைஞர்களுடன் சேட்டைகள், கோஷ்டி சண்டைகள் இல்லாமல் போக சந்திகள் நல்ல சங்கதிகளை பேசக்கூடிய இடமாக மாறின.

இவ்விதம் சமூகச் சீரழிவை அடியோடு அழித்த பெருமை விடுதலைப்புலிகளையே சாரும். இப்போது அவர்கள் இல்லாத துணிவில் சமூகச் சீரழிவு யாழ். குடாநாட்டில் எழுந்து நின்று ஆடத் தலைப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவு, களவு, கொள்ளை, தனிமையில் இருப்பவர்களை கொலை செய்தல், கோஷ்டி மோதல், மதுபோதை, சந்திச் சண்டித்தனம் என எல்லாம் தலை விரித்தாடுவதை காணும் போது நெஞ்சம் வெடிக் கின்றது.

நிலைமை இப்படியே போகுமாயின் தென்பகுதியில் இருக்கக் கூடிய பாதாள உலகக் கோஷ்டி யாழ். குடாநாட்டில் உருவெடுக்கலாம் என்ற அச்சம் நியாயமானதாகவே இருக்கும். எனவே யாழ். குடாநாட்டில் உருவெடுக்கும் கலாசாரச் சீரழிவை அச்சமான வாழ்வை மூலவேருடன் பிரட்ட யாழ்ப்பாணச் சமூகம் முன்வரவேண்டும்.

இதுவிடயத்தில் நீதி பரிபாலனத்தின் பங்கோ மிகவும் அவசியமானதாகும். காவல்துறையினர் சட்டத்தை நிலைநாட்ட திடசங்கற்பம் பூண வேண்டும். இலஞ்ச ஊழல், பக்கச் சார்பு என எவையும் பொலிஸாரிடம் இருக்குமாயின் சமூகச் சீரழிவில் ஈடுபடுவோர் தப்பித்துக் கொள்ளவும் வலுவடையவும் வாய்ப்பு ஏற்படும். எனவே பொலிஸாரின் முன் பாரிய பொறுப்பு உள்ளது. பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் தங்கள் நிர்வாகக் கடமைகளை நேர்மையுடன் செய்யும் போது அவர்களின் கட்டுப்பாட்டில் கடமையாற்றும் பொலிஸார் சுயலாபம் தேடுவதில் இறங்க மாட் டார்கள்.

இதற்கு அப்பால் சமூகச் சீரழிவில் ஈடுபட்டவர் களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவது தொடர்பில் யாழ்.குடாநாட்டு சட்டத்தரணிகள் ஒரு தீர்க்கமான முடிபினை எடுக்க வேண்டும். பணத்திற்காக எவரையும் மீட்டுவிடுவது என்னும் கொள்கை அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் பாதிக்கும்.

இவை யாவற்றுக்கும் மேலாக சமூக உறவு, இளைஞர்களுக்கான வழிகாட்டல், வேலைவாய்ப்பு, புரள்வான வாழ்விலிருந்து மீள்வதற்கான ஆத்மீகச் சிந்தனை, பெற்றோரின் கண்காணிப்பு, பாசமான குடும்ப உறவு, நம்பிக்கை தரக்கூடிய நட்பு என பல வகை சமூக நலமேம்பாடுகளையும் சமநேரத்தில் சமாந்தரமாக கட்டியயழுப்புவது கட்டாயமானதாகும்.

இது விடயத்தில் பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், கலாசார அலுவலர்கள், பிர தேச சபைகள், அரச சார்பற்ற அமைப்புகள் போன் றன அனைத்தும் தனித்து கூட்டாக இணைந்து பணியாற்றுமாக இருந்தால் கலாசார சீரழிவை மூல வேருடன் பிடுங்கிவிடுவது மிக எளிதாகும். இதனைச் செய்வதற்கு அரசியற்பலம் உதவி தேவையென்பது மறுப்பதற்கில்லை.

http://www.pathivu.com/index.php/news/6569/54//d,view/

மகிந்த மனம் வைதால் தான் பாதாள உலக குழுவை, பலரை இல்லாமல் ஆக்கியது போல் இவர்களையும் இனி இல்லாமல் ஆக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கருணாவை அமைச்சர் ஆக்கியதே இந்த கடத்தல், கொள்ளை , கற்பளிப்பு போன்றவற்றை அவர் மூலம் நடாத்துவதற்கும் என்பது ஒரு காரணம்.டக்கிளசை வைத்திருப்பதும் அதற்கே.பிறகெப்படி இவை நிறுத்தப்படும்? மகிந்த என்ன மனதில் வைத்திருக்கிறார் என்பது அவரது நடவடிக்கைகளே காட்டுகிறதே!!

reason for edit: spelling mistakes.

Edited by nunavilan

மகிந்த கருணாவை அமைச்சர் ஆக்கியதே இந்த கடத்தல், கொள்ளை , கற்பளிப்பு போன்றவற்றை அவர் மூலம் நடாத்துவதற்கும் என்பது ஒரு காரணம்.டக்கிளசை வைத்திருப்பதும் அதற்கே.

அப்போ நீர் நல்லவன், வல்லவன் என்பதால் நாட்டைவிட்டு பிளைச்சு போ என்று விரட்டி விட்டாரோ? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நீர் நல்லவன், வல்லவன் என்பதால் நாட்டைவிட்டு பிளைச்சு போ என்று விரட்டி விட்டாரோ? :lol::lol::lol:

நான் குடும்பத்தவரின் கடுமையான சுகவீனம் காரணமாக தான் போனேன்.அங்கு உங்களை போல் எங்கு விபச்சாரிகள் இருக்கிறார்கள் என்று தேடி அலையவில்லை. :lol::lol: எனது விடயம் முடிந்ததும் உயிர் தப்பினேன் இம்முறை என்று நினைத்து கொண்டு வந்து விட்டேன்.

மீள்பதித்தமைக்கு காரணம் எழுத்து பிழை.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் அராஜக ஆட்சியில் தமிழின அழிப்பு, தமிழரின் கலாச்சாரச் சீரழிவுகள்

தவிர்ந்த வேறு ஒன்றையும் நான் எதிர்பார்க்கவில்லை.

வாத்தியார்

..............

நீங்கள் வெளிநாட்டில குளிருக்க..மழக்க நின்று கஸ்டப்பட்டு பணம் அனுப்பும் போது.... அவர்கள் அதை ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டு... பின்னேரத்திலும் , இரவிலையும் இந்த சேட்டைகள்.....கஸ்டப்பட்டு உழைத்தால் அந்த களைப்பின் பின் இவ்வாறு நைட் டியூட்டி பாக்க மாட்டார்கள்...சோ நீங்கள் அங்கே காசு அனுப்பாதையும்....

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கருணாவை அமைச்சர் ஆக்கியதே இந்த கடத்தல், கொள்ளை , கற்பளிப்பு போன்றவற்றை அவர் மூலம் நடாத்துவதற்கும் என்பது ஒரு காரணம்.

கருணா விடுதலை புலிகளில் தலைவரிடம் பயிற்சி பெற்றவர் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான போராளிகளுக்கு பயிற்சி அளித்தும் இருக்கிறார்.

கருணா விடுதலை புலிகளில் தலைவரிடம் பயிற்சி பெற்றவர் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான போராளிகளுக்கு பயிற்சி அளித்தும் இருக்கிறார்.

துரியோதனனும் அர்ச்சுனனும் கூட ஒருவரிடம் தான் பயற்சி பெற்றார்கள்

  • தொடங்கியவர்

கருணா விடுதலை புலிகளில் தலைவரிடம் பயிற்சி பெற்றவர் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான போராளிகளுக்கு பயிற்சி அளித்தும் இருக்கிறார்.

புலிகளில் இருந்தவரைக்கும் கருணா அப்படியான குற்றங்களில் ஈடுபட்டார் என்பதுக்கு எதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா...??? அப்படி இருந்தாலும் அது புலிகளால் கருணா வெளியேற்ற பட காரணமாக இருந்தது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.