Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனைச் சந்திக்க மகிந்த ஆர்வம்

Featured Replies

இனப்பிரச்சினைக்கு ஒருமித்த இலங்கைக்குள் தீர்வு காணத் தயாராக இருப்பதாக நேற்றைய தினம் சம்பந்தன் முன்வைத்த கருத்திற்கு இளைஞர் வேலைவாய்ப்பு அமைச்சர் டளஸ் அளகப்பெரும பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அளகப்பெரும இது ஒரு முன்னேற்றகரமான பேச்சு எனவும் குறிப்பிட்டார்.

கடந்த நாற்பது வருடங்கில் தமிழர் தரப்பிடமிருந்து வந்துள்ள சாதகமான சமிக்ஞை இதுவெனவும் இது குறித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்ட அளகப்பெரும சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள பூட்டான் செல்லும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்தப் பேச்சு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

SOURCE: http://www.eelamweb.com

  • கருத்துக்கள உறவுகள்

.

சம்பந்தனின் இந்தப் பேச்சுக்குப் பின் , மகிந்த ஆர்வம் காட்டுவதில் வியப்பு ஒன்றுமே... இல்லை.

எமக்குத் தான் ஆர்வமாய் உள்ளது. :lol:

.

இதுக்கு மேலையும் சம்பந்தன் ஏதோ செய்வார் எண்டு இள(ழ)வு காத்தை தமிழ் கிளியள் நிறையப்பேர் இருக்கினம்... அவர் மகிந்தவை சந்திச்சால் தமிழ் மக்களுக்கு எதையோ பெற்றுக்கொடுக்க சந்திக்காவிட்டால் மறத்தமிழன்..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தனைச் சந்திக்க மகிந்த ஆர்வம்

வட்டுக்கோட்டையார் கைவிட்டிட்டினம் நாடு கடந்தவையும் சந்திக்க மறுத்தா ஆர்வமுள்ளவைய சந்திக்கிறது பெரிய பிரச்சனையே இல்ல. கொள்கை கோட்பாடு கொண்டவை பந்தயத்தில தோத்திட்டபடியா 6 வருசத்துக்கு நீங்கள்தான் ராசா.......குட்லக் ஐயா. :lol:

இவ்வளவு இழப்புகளின் பின்பும் தமிழர்களுக்கு எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்ற கொள்கைப்பிடிப்பாளர்களை இங்கே காண்கின்றேன். பெறுவதற்கு வழியும் தெரியாது, பெற்றுக் கொடுக்க முயற்சிப்பவர்களுக்கு வழியும் விடாது தடுத்தாட்கொள்ளும் ஜீபும்பா பேர்வழிகளை எப்படி எதைச் செய்து தமிழருக்கு உரிமை பெற்றுக் கொடுக்கப்போகின்றோம் என்பதை எங்களைப் போன்ற அறிவிலிகளுக்குக் கொஞ்சம் விளக்கும்படி கேட்கின்றேன்.

இனி சம்பந்தரை நம்பிப் பயனில்லை உங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள் மக்கள்.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு இழப்புகளின் பின்பும் தமிழர்களுக்கு எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்ற கொள்கைப்பிடிப்பாளர்களை இங்கே காண்கின்றேன். பெறுவதற்கு வழியும் தெரியாது, பெற்றுக் கொடுக்க முயற்சிப்பவர்களுக்கு வழியும் விடாது தடுத்தாட்கொள்ளும் ஜீபும்பா பேர்வழிகளை எப்படி எதைச் செய்து தமிழருக்கு உரிமை பெற்றுக் கொடுக்கப்போகின்றோம் என்பதை எங்களைப் போன்ற அறிவிலிகளுக்குக் கொஞ்சம் விளக்கும்படி கேட்கின்றேன்.

இனி சம்பந்தரை நம்பிப் பயனில்லை உங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள் மக்கள்.

எனக்கும் விளங்கவில்லை...பாராளுமன்ற முதல் நாள் அமர்வில் என்னதான் பேசவேண்டும் என்று சம்பந்தனுக்கு சொன்னால் நல்லம்..சிலவேளைகளில் சம்பந்தன் கூறும் ?தமிழ் விளங்கவில்லையோ தெரியவில்லை :lol:

இவ்வளவு இழப்புகளின் பின்பும் தமிழர்களுக்கு எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்ற கொள்கைப்பிடிப்பாளர்களை இங்கே காண்கின்றேன். பெறுவதற்கு வழியும் தெரியாது, பெற்றுக் கொடுக்க முயற்சிப்பவர்களுக்கு வழியும் விடாது தடுத்தாட்கொள்ளும் ஜீபும்பா பேர்வழிகளை எப்படி எதைச் செய்து தமிழருக்கு உரிமை பெற்றுக் கொடுக்கப்போகின்றோம் என்பதை எங்களைப் போன்ற அறிவிலிகளுக்குக் கொஞ்சம் விளக்கும்படி கேட்கின்றேன்.

இனி சம்பந்தரை நம்பிப் பயனில்லை உங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள் மக்கள்.

அட வன்னியிலை இருந்து இடம்பெயந்து அவல பட்ட மக்களுக்கு ( மலசல கூடத்தை கட்டி குடுத்த கிசோர் அளவுக்கு தன்னும்) என்ன செய்தார் எண்டு கேட்டால் சொல்ல உங்களால் சொல்ல முடியேல்லை, காணாமல் போனோர் பற்றி மனோகனேசன் ஐயா வின் செயற்பாடுகளில் எத்தினை பங்கை உவை செய்தவை எண்டு கேட்டால் பதில் தெரியாது... ஆனால் சம்பந்தர் ஏதோ புடுங்க போறார் எண்டு மட்டும் கீறல் விழுந்த றக்கொட் மாதிரி திரும்பதிரும்ப சொல்லுறீயள்...

உது சம்பந்தன் மீது இருக்கும் உங்கள அளவு கடந்த நம்பிக்கை மட்டும் தானே ஒளிய வேற ஒண்டும் இல்லை...

சரி மகிந்தவுக்கு மாலை போட்டு சில விசயங்களை சாதிச்ச கிசோரை ஏன் சம்பந்தர் கழட்டி விட்டவர்...??? அதுக்கு நீங்கள் என்ன வியாக்கியானம் சொன்னனீங்கள்....?? அந்த நேரமே கிசோரோடை சேர்ந்து தமிழ் மக்களுக்காக மகிந்தவிட்டை போய் நிண்டு இருந்தால் என்ன...?? இப்ப என்ன புதுசா வந்தது...??

அட வன்னியிலை இருந்து இடம்பெயந்து அவல பட்ட மக்களுக்கு ( மலசல கூடத்தை கட்டி குடுத்த கிசோர் அளவுக்கு தன்னும்) என்ன செய்தார் எண்டு கேட்டால் சொல்ல உங்களால் சொல்ல முடியேல்லை, காணாமல் போனோர் பற்றி மனோகனேசன் ஐயா வின் செயற்பாடுகளில் எத்தினை பங்கை உவை செய்தவை எண்டு கேட்டால் பதில் தெரியாது... ஆனால் சம்பந்தர் ஏதோ புடுங்க போறார் எண்டு மட்டும் கீறல் விழுந்த றக்கொட் மாதிரி திரும்பதிரும்ப சொல்லுறீயள்...

உது சம்பந்தன் மீது இருக்கும் உங்கள அளவு கடந்த நம்பிக்கை மட்டும் தானே ஒளிய வேற ஒண்டும் இல்லை...

சரி மகிந்தவுக்கு மாலை போட்டு சில விசயங்களை சாதிச்ச கிசோரை ஏன் சம்பந்தர் கழட்டி விட்டவர்...??? அதுக்கு நீங்கள் என்ன வியாக்கியானம் சொன்னனீங்கள்....?? அந்த நேரமே கிசோரோடை சேர்ந்து தமிழ் மக்களுக்காக மகிந்தவிட்டை போய் நிண்டு இருந்தால் என்ன...?? இப்ப என்ன புதுசா வந்தது...??

இதெல்லாம் செய்த பின்புதானே வெளித் தெரிந்தது. கிஷோர் என்ன மலசல கூடம் கட்டிக் கொடுக்கப்போறன் என்று சொல்லிப் போட்டோ செய்தவர். அவரால் முடிந்த மலசலம் கட்டுகிற வேலையை அவர் செய்து முடித்தார். அது அவர்ஏற்பாடுகள்.

மனோகணேசன் அவர்களும் தன்னால் முடிந்ததைச் செய்து முடித்தார்.

சம்பந்தரும் மலசலகூடம் கட்ட வேண்டும் என்றுமான் எதிர்பார்க்கின்றீர்களோ? சம்பந்தரினால் மலசலம் கூடக் கட்டமுடியாது போனாலும் போகலாம். ஆனால் பேச்சுத் தொடங்குவதற்கான ஒரு அடிப்படையைச் சம்பந்தர் இடலாம். எல்லோருமே புடுங்கிக் களைச்சுப் போட்டாங்கள் சம்பந்தரும் தன்னால் புடுங்கக் கூடியதைப் புடுங்கட்டும். அதுவரைக்கும் நாங்கள் புடுங்குப்படுவதை குறைப்பம்.

அகிம்சாவாதி..கொள்கைசிங்கம் ..வீரத்தமிழன்..மறத்தமிழன் சம்பந்தன் ஜயாவுக்கு வாழ்த்துக்கள் ..

ஜயா உங்களால் முடிந்தால் மகிந்தாவின் ஒரு மயிரையாவது புடுங்கிகொண்டு வந்து இந்த டமிழ்ஸ்க்கு காண்டுங்கோ?அப்பதான் நம்புவீனமாம்

இதெல்லாம் செய்த பின்புதானே வெளித் தெரிந்தது. கிஷோர் என்ன மலசல கூடம் கட்டிக் கொடுக்கப்போறன் என்று சொல்லிப் போட்டோ செய்தவர். அவரால் முடிந்த மலசலம் கட்டுகிற வேலையை அவர் செய்து முடித்தார். அது அவர்ஏற்பாடுகள்.

மனோகணேசன் அவர்களும் தன்னால் முடிந்ததைச் செய்து முடித்தார்.

சம்பந்தரும் மலசலகூடம் கட்ட வேண்டும் என்றுமான் எதிர்பார்க்கின்றீர்களோ? சம்பந்தரினால் மலசலம் கூடக் கட்டமுடியாது போனாலும் போகலாம். ஆனால் பேச்சுத் தொடங்குவதற்கான ஒரு அடிப்படையைச் சம்பந்தர் இடலாம். எல்லோருமே புடுங்கிக் களைச்சுப் போட்டாங்கள் சம்பந்தரும் தன்னால் புடுங்கக் கூடியதைப் புடுங்கட்டும். அதுவரைக்கும் நாங்கள் புடுங்குப்படுவதை குறைப்பம்.

அப்ப சம்பந்தர் எதையுமே செய்யாமல் விட்டாலும் பறவாய் இல்லை எண்டுறீயள்... நல்ல தலைவனும் நல்ல ஆதரவாளர்களும்....!

அப்ப சம்பந்தர் எதையுமே செய்யாமல் விட்டாலும் பறவாய் இல்லை எண்டுறீயள்... நல்ல தலைவனும் நல்ல ஆதரவாளர்களும்....!

சம்பந்தர் தன்னால் முடியக் கூடியதைச் செய்யட்டும் என்கிறேன். முடியாமல்போனால் போகிறது. இதுவரையில் எதுவும் தமிழர்கள் போராட்டத்தினால் முடியவில்லையே. அதோடு இதுவுமொன்று. முடியக் கூடிய வழியில் முயற்சிக்க வேண்டியதுதான்.

அடா நீங்கள் எதிர்ப்பாளரா? நல்லாய்த்தான் இருக்கு போங்க.

சம்பந்தர் தன்னால் முடியக் கூடியதைச் செய்யட்டும் என்கிறேன். முடியாமல்போனால் போகிறது. இதுவரையில் எதுவும் தமிழர்கள் போராட்டத்தினால் முடியவில்லையே. அதோடு இதுவுமொன்று. முடியக் கூடிய வழியில் முயற்சிக்க வேண்டியதுதான்.

அடா நீங்கள் எதிர்ப்பாளரா? நல்லாய்த்தான் இருக்கு போங்க.

சிங்களவன் சம்பந்தருக்கு எதையும் இனாமாக கொடுக்க போவது இல்லை... அப்படி கொடுத்தாலும் அதுக்காக தமிழ் மக்களின் தலைவிதியையும் இவ்வளவுகாலம் போராடியவர்களின் தியாகங்களையும் அடகு வைத்து தான் செய்ய போகிறார்... அது தமிழர்களுக்கு நலனை எப்போதும் கொண்டு வராது...

குறைந்தது பிடி பட்டு இருக்கும் போராளிகள் வெளியில் வருவது கூட சம்பந்தருக்கு நல்லதல்ல...

அட நான் சம்பந்தனின் எதிர்ப்பாளன் எண்டது உங்களுக்கு இதுநாள் வரைக்கும் தெரியாதா...??? நல்லாத்தான் விசயத்தை உள்வாங்குகிறீயள்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பொம்மலாட்டாக்காரன் மாதிரி இருக்கும்போது, மகிந்தவும் கொடுப்பது மாதிரிக் கொடுப்பார்; சம்பந்தரும் வாங்குவது மாதிரி வாங்கித் தமிழர்களுக்குத் தருவார். ஏதோ வாங்கின மாதிரி இருக்கும். ஆனால் திறந்து பார்த்தால் மாயமாய் மறைந்திருக்கும்.

இந்தியா பொம்மலாட்டாக்காரன் மாதிரி இருக்கும்போது, மகிந்தவும் கொடுப்பது மாதிரிக் கொடுப்பார்; சம்பந்தரும் வாங்குவது மாதிரி வாங்கித் தமிழர்களுக்குத் தருவார். ஏதோ வாங்கின மாதிரி இருக்கும். ஆனால் திறந்து பார்த்தால் மாயமாய் மறைந்திருக்கும்.

மகிந்தா கொடுக்கமாட்டார்,கொடுத்தால் அடுத்த தேர்தலில் எதிர்கட்சி மகிந்தாவை ஒரம்கட்டிபோடுமல்லோ?

அகிம்சாவாதி..கொள்கைசிங்கம் ..வீரத்தமிழன்..மறத்தமிழன் சம்பந்தன் ஜயாவுக்கு வாழ்த்துக்கள் ..

ஜயா உங்களால் முடிந்தால் மகிந்தாவின் ஒரு மயிரையாவது புடுங்கிகொண்டு வந்து இந்த டமிழ்ஸ்க்கு காண்டுங்கோ?அப்பதான் நம்புவீனமாம்

புடுங்கினாலும் அந்த முடியைத்தானே புடுங்கினவர்.. வேணுமென்றால் மத்தமுடியைப் புடுங்கச் சொல்லிக் கேட்பாங்கலாக்கும்.

எண்டிக்கும் தங்களைத் தவிர மத்தவங்களை அங்கிகரிக்கிரவங்கள் இல்லை உவங்கள். வெறும் வெத்து வேட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தனைச் சந்திக்க மகிந்த ஆர்வம்

தலைப்பு சரியாத்தானே இருக்கு..... மகிந்தவை சந்திக்க சம்பந்தன் ஆர்வம் எண்டு வந்திருந்தா ரவுண்டு கட்டி அடிக்கலாம்.

சைக்கில் ஆக்சிடெண்டான கோவத்த காட்டுறீங்களோ? :D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

வெகு விரைவில் மகிந்தவிற்குப் பல பொன்னாடைகள் போர்த்தப்படும்.

வாத்தியார்

...............

புடுங்கினாலும் அந்த முடியைத்தானே புடுங்கினவர்.. வேணுமென்றால் மத்தமுடியைப் புடுங்கச் சொல்லிக் கேட்பாங்கலாக்கும்.

எண்டிக்கும் தங்களைத் தவிர மத்தவங்களை அங்கிகரிக்கிரவங்கள் இல்லை உவங்கள். வெறும் வெத்து வேட்டுக்கள்.

கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடுகிறம் எண்டு இந்தியாவிலை ஒரு கூட்டம் திரியும். பாம்பாடிகள் கூட்டம். அதிலை இதோ ஆரம்பிக்கிறது அதோ ஆரம்பிக்கிறது எண்டு நல்லா படம் காட்டுவினம். ஆனால் சண்டையை மட்டும் ஒருநாளுன் காட்ட மாட்டினம். அது மாதிரித்தான் நீங்களும்.

அதோ புடுகிறார் இதோ புடுங்கிறார் எண்டு படம் மட்டும் நல்லா காட்டுறீயள். ஆனால் அதுக்கான அசுமாத்தத்தையே காணம். (கடைசியா மகிந்த புடுங்க விடுகிறான் இல்லை எண்டு வந்து நிப்பியள் எண்டதும் எங்களுக்கு தெரியும். வேணும் எண்டால் குறிச்சு வைச்சு கொள்ளுங்கோ. )

அதோடை சம்பந்தரை விட்டால் புடுங்க ஒருத்தராலையும் ஏலாதும் எண்டு திரியுறீயள். ஆனால் அவர் புடுங்கிற நிலையிலை இருக்கிறாரோ எண்ட நாசம் கூட உங்களுக்கு விளங்கிறது இல்லை. அவருக்கு யாராவது புடுங்கி குடுத்தால் வாங்கி வந்து தருவார்.

வெகு விரைவில் மகிந்தவிற்குப் பல பொன்னாடைகள் போர்த்தப்படும்.

வாத்தியார்

...............

அதை இந்தியாவிலை இருந்து வந்து பாலுவும் கனிமொழியும் போத்தினால் தான் குற்றம். எங்கட ஆக்கள் போத்தினால் இராச தந்திரம் எல்லோ.

கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடுகிறம் எண்டு இந்தியாவிலை ஒரு கூட்டம் திரியும். பாம்பாடிகள் கூட்டம். அதிலை இதோ ஆரம்பிக்கிறது அதோ ஆரம்பிக்கிறது எண்டு நல்லா படம் காட்டுவினம். ஆனால் சண்டையை மட்டும் ஒருநாளுன் காட்ட மாட்டினம். அது மாதிரித்தான் நீங்களும்.

அதோ புடுகிறார் இதோ புடுங்கிறார் எண்டு படம் மட்டும் நல்லா காட்டுறீயள். ஆனால் அதுக்கான அசுமாத்தத்தையே காணம். (கடைசியா மகிந்த புடுங்க விடுகிறான் இல்லை எண்டு வந்து நிப்பியள் எண்டதும் எங்களுக்கு தெரியும். வேணும் எண்டால் குறிச்சு வைச்சு கொள்ளுங்கோ. )

அதோடை சம்பந்தரை விட்டால் புடுங்க ஒருத்தராலையும் ஏலாதும் எண்டு திரியுறீயள். ஆனால் அவர் புடுங்கிற நிலையிலை இருக்கிறாரோ எண்ட நாசம் கூட உங்களுக்கு விளங்கிறது இல்லை. அவருக்கு யாராவது புடுங்கி குடுத்தால் வாங்கி வந்து தருவார்.

அதை இந்தியாவிலை இருந்து வந்து பாலுவும் கனிமொழியும் போத்தினால் தான் குற்றம். எங்கட ஆக்கள் போத்தினால் இராச தந்திரம் எல்லோ.

சம்பந்தர் புடுங்கமல் போனால் நீங்கள் உங்கட ஆட்களை வைத்து புடுங்கிறது?

இல்லாட்டி நீங்களே போய்ப் புடுங்கிறது?

உங்களால் எதுவும் புடுங்கேலாது எண்டுதானே மத்தவன் புடுங்கேள்ள எண்டு புலம்பிரிங்கள். நீங்கள் அவர்களை விமர்சிப்பது அவர்களை திருத்துவதுக்கா அல்லது உங்கட இயலாமையை மறைப்பதுக்கா?

சம்பந்தர் புடுங்கிறார் வெட்டுறார் என்று யாரும் படங்காட்ட இல்லை. படம் காட்டினது கஜேந்திரன் கோஸ்டிதான். கடசில மண் கவ்வினதுதான் மிச்சம்.

சம்பந்தர் புடுங்காவிட்டாலும் யாரும் பரவா இல்லை... மற்றவர்கள் வந்து சிதைக்காமல் தடுத்தாலே போதும்.

Edited by Sooravali

சிங்களவன் சம்பந்தருக்கு எதையும் இனாமாக கொடுக்க போவது இல்லை... அப்படி கொடுத்தாலும் அதுக்காக தமிழ் மக்களின் தலைவிதியையும் இவ்வளவுகாலம் போராடியவர்களின் தியாகங்களையும் அடகு வைத்து தான் செய்ய போகிறார்... அது தமிழர்களுக்கு நலனை எப்போதும் கொண்டு வராது...

குறைந்தது பிடி பட்டு இருக்கும் போராளிகள் வெளியில் வருவது கூட சம்பந்தருக்கு நல்லதல்ல...

அட நான் சம்பந்தனின் எதிர்ப்பாளன் எண்டது உங்களுக்கு இதுநாள் வரைக்கும் தெரியாதா...??? நல்லாத்தான் விசயத்தை உள்வாங்குகிறீயள்...

சரி வேண்டாம் முட்டல் மோதல். நானும் உங்களுடைய வழிக்கே வருகிறேன். சம்பந்தரால் முடியாதுதான். வயதும் போய்விட்டது. அப்படியென்றால் தமிழருக்கு இலங்கையில் உரிமைகளையல்ல, சலுகைகளையாவது யாரால் பெற்றுக் கொடுக்கலாம்.?

கூட்டமைப்பை ஓரங்கட்டுமளவிற்கு, போராளிகளை விடுவித்து, அடைக்கப்பட்டுள்ள மக்களை மீள் குடியேற்ற வேறு எவராவது இருக்கிறார்களா?. இந்த இரு வேலைகளையும் இலங்கையும் இந்தியாவும்தான் செய்யப்போகிறது.

இந்த உலகத் தமிழர் பேரவை கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றப் போவதாக இமானுவல் அடிகளார் அறிவித்துள்ளாரே. ஏதும் தப்பான முடிவுகளை எடுத்துவிட்டாரோ? இவரைத் தொடர்ந்து நாடுகடந்த அரசும் கூட்டமைப்புடன் இணைந்துதான் பணியாற்றும். அறிவிப்பு வெகுவிரவில் வருமென எதிர்பார்க்கிறேன்.

சரி வேண்டாம் முட்டல் மோதல். நானும் உங்களுடைய வழிக்கே வருகிறேன். சம்பந்தரால் முடியாதுதான். வயதும் போய்விட்டது. அப்படியென்றால் தமிழருக்கு இலங்கையில் உரிமைகளையல்ல, சலுகைகளையாவது யாரால் பெற்றுக் கொடுக்கலாம்.?

கூட்டமைப்பை ஓரங்கட்டுமளவிற்கு, போராளிகளை விடுவித்து, அடைக்கப்பட்டுள்ள மக்களை மீள் குடியேற்ற வேறு எவராவது இருக்கிறார்களா?. இந்த இரு வேலைகளையும் இலங்கையும் இந்தியாவும்தான் செய்யப்போகிறது.

இந்த உலகத் தமிழர் பேரவை கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றப் போவதாக இமானுவல் அடிகளார் அறிவித்துள்ளாரே. ஏதும் தப்பான முடிவுகளை எடுத்துவிட்டாரோ? இவரைத் தொடர்ந்து நாடுகடந்த அரசும் கூட்டமைப்புடன் இணைந்துதான் பணியாற்றும். அறிவிப்பு வெகுவிரவில் வருமென எதிர்பார்க்கிறேன்.

உங்களிட்டை கேக்க விரும்பும் கேள்வியும் அதுதான்... போராளிகளை விடுவிக்க கூட்டமைப்பு ஏதாவது செய்வதாகவோ அல்லது முகாம்களுக்கு எதையாவது செய்வதாகவோ நீங்கள் அறிந்து தன்னும் இருக்கிறீர்களா...??

உண்மை என்ன எண்டால் டக்கிளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி போண்றவர்கள் போராளிகள் விடயத்திலும் , முகாம் மக்கள் விடயத்திலும் செய்தவைகளையும் பார்க்க கூட்டமைப்பு ஏதும் செய்யவில்லை...

நாங்கள் ஏதும் செய்யவில்லை எண்று கேக்கிறீர்கள்.... பலர் இங்கை அடிக்கடி கேக்கும் விடயமாக உங்களிட்டை போச்சுது... (அது உங்கட இயலாமை) ஆகவே உங்களை நம்பி சிறு தகவலை உங்களுக்கு சொல்லாம்... ஆனால் சிலரின் பாதுக்காப்பு காரணங்களுக்காக அதை யாழில் சொல்ல முடியவில்லை... மன்னிக்கவும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம் இல்லாத அரசியல் அடக்குமுறை அரசியல்.

மக்களின் விமர்சனங்களை ஆராய்ந்து அரசியல் செய்பவன் தான் உண்மையான அரசியல்வாதி.

நாங்கள் விமர்சிப்பது அவர்களின் அழிவிற்காக அல்ல.

அவர்களின் ஊக்கமான அரசியலிற்கே.

எனக்கு கஜேந்திர குமாரின் கொள்கை பிடித்திருக்கின்றது அதனால் அவரை ஆதரிக்கின்றேன்.

அவர் கொள்கை மாறினால் நிச்சயமாக அவரையும் எதிர்ப்பேன்.

விமர்சனம் செய்வேன்.

இப்போது சம்பந்தரின் சில நடவடிக்கைகளை எதிர்க்கும் நான் நாளை அவர் எடுக்கும் நல்ல முடிவுகளை கட்டாயம் ஆதரிப்பேன்.

எங்களுக்குள் விமர்சனங்கள் இருக்கலாம்.

ஆனால் அது வேற்றுமை என்று அர்த்தமல்ல.

வாத்தியார்

...............

விமர்சனம் இல்லாத அரசியல் அடக்குமுறை அரசியல்.

மக்களின் விமர்சனங்களை ஆராய்ந்து அரசியல் செய்பவன் தான் உண்மையான அரசியல்வாதி.

நாங்கள் விமர்சிப்பது அவர்களின் அழிவிற்காக அல்ல.

அவர்களின் ஊக்கமான அரசியலிற்கே.

எனக்கு கஜேந்திர குமாரின் கொள்கை பிடித்திருக்கின்றது அதனால் அவரை ஆதரிக்கின்றேன்.

அவர் கொள்கை மாறினால் நிச்சயமாக அவரையும் எதிர்ப்பேன்.

விமர்சனம் செய்வேன்.

இப்போது சம்பந்தரின் சில நடவடிக்கைகளை எதிர்க்கும் நான் நாளை அவர் எடுக்கும் நல்ல முடிவுகளை கட்டாயம் ஆதரிப்பேன்.

எங்களுக்குள் விமர்சனங்கள் இருக்கலாம்.

ஆனால் அது வேற்றுமை என்று அர்த்தமல்ல.

வாத்தியார்

...............

இது சரியான போக்கு வாத்தியார்,

இதைப் படிக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. யாரும் எவருக்கும் பின்னால் போகத்தேவையில்லை என்ற பிடிவாதம் இருக்கக் கூடாது. யாராயினும் எவராயினும் தமிழர்களுக்கு முடிந்ததைச் செய்ய வேண்டும். சம்பந்தர் எதைக் கிள்ளியெடுத்துத் தமிழர்களுக்குப் போட்டாலும் எனது தனிப்பட்ட முறையில் நான் சந்தோஷப்படுவேன். அதைவிடுத்து சம்பந்தரை எதிர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்களைத்தான் இங்கு சிலரை என்னால் பார்க்க முடிகிறது.

விமர்சனம் என்பது எதிர்ப்பது அல்ல என்ற உங்களது முடிவு ஆக்கமான சிந்தனை.

அப்ப நல்லது செய்தால் டக்கிளஸ் தேவானந்தாவையும் பாராட்டுவியள் தானே...? காரணம் அவரும் கூட்டமைப்பிலை சேரப்போகிறாராமே...??

வரதராஜபெருமாளை யும் இதிலை சேத்துக்கொள்ளுங்கோ...

Edited by தயா

உங்களிட்டை கேக்க விரும்பும் கேள்வியும் அதுதான்... போராளிகளை விடுவிக்க கூட்டமைப்பு ஏதாவது செய்வதாகவோ அல்லது முகாம்களுக்கு எதையாவது செய்வதாகவோ நீங்கள் அறிந்து தன்னும் இருக்கிறீர்களா...??

உண்மை என்ன எண்டால் டக்கிளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி போண்றவர்கள் போராளிகள் விடயத்திலும் , முகாம் மக்கள் விடயத்திலும் செய்தவைகளையும் பார்க்க கூட்டமைப்பு ஏதும் செய்யவில்லை...

நாங்கள் ஏதும் செய்யவில்லை எண்று கேக்கிறீர்கள்.... பலர் இங்கை அடிக்கடி கேக்கும் விடயமாக உங்களிட்டை போச்சுது... (அது உங்கட இயலாமை) ஆகவே உங்களை நம்பி சிறு தகவலை உங்களுக்கு சொல்லாம்... ஆனால் சிலரின் பாதுக்காப்பு காரணங்களுக்காக அதை யாழில் சொல்ல முடியவில்லை... மன்னிக்கவும்...

டக்ளஸ்இ ஆனந்தசங்கரி போன்றோரின் செயற்பாடுகள் முகாமில் உள்ள மக்களுக்குக் கிடைக்கின்றது என்பதை நானும் அறிவேன். கூட்டமைப்பை அவ்வாறு செயற்படுவதற்கு அரசு அனுமதிக்காது.

இனிமேல் கூட்டமைப்பினர் தமிழர் நலன்களில் அவர்களால் முடிந்தளவில் அக்கறை கொள்ள வேண்டும். அக்கறை கொள்வார்கள் என்றே நம்புகிறேன். அப்படி செய்யாது போனால் கூட்டமைப்பினரின் அரசியல் எதிர்காலமென்பது கேள்விக்குறியாகிவிடும். இயலாமை எல்லோரிடத்திலுமுண்டு.

அப்ப நல்லது செய்தால் டக்கிளஸ் தேவானந்தாவையும் பாராட்டுவியள் தானே...? காரணம் அவரும் கூட்டமைப்பிலை சேரப்போகிறாராமே...??

வரதராஜபெருமாளை யும் இதிலை சேத்துக்கொள்ளுங்கோ...

வாடும் பயிருக்கு நீரூற்றுபவனை வஞ்சகனென்றாலும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியுடன் பார்ப்பேன். எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வஞ்சகர்களுக்கும்தான் இது காலமென்றால் தேவைப்படும்போது அவர்களையும் பாராட்டலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.