Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன வசதியாக முக்கியமானவற்றை மறைத்துவிட்டு கதையளக்கின்றீர்கள். ஏற்கனவே சிவாஜிலிங்கம் இலங்கையில் பார்வதியம்மாவிற்கு இந்திய விசா பெற முயன்று மறுக்கப்பட்டதனாலேயே மலேசியா சென்று முயற்சித்தனர். இது கூட தவறான முயற்சி என்பது தங்களுக்கு தெரியாதா?? இவ்விடயம் கூட வைகோவிற்கோ, நெடுமாறனுககோ தெரியாதென்று கதையளக்க வேண்டாம். முதலில் வைகோ ஜெயலலிதாவோடு 2003இல் கூட்டில்லையென்று கதையளந்தீர்கள். இப்போ வைகோ தமிழக ஆட்சியில் இருந்தவரில்லையென அடுத்த கதையளப்பு. அவரின் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அன்று இருந்தது தங்களுக்கு இலகுவாக மறந்து விட்டது போலும். தமிழக அரசு ஒரு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்புவதென்றால் அதனைச் சட்டமன்றத்தில் விவாதித்து தீர்மானம் எடுத்தபின் தான் அதனை மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்க முடியும். இந்தத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் விவாதிக்கும் போது மதிமுக உறுப்பினர்கள் ஒருவேளை தூக்கத்தில் இருந்தினமோ?? இன்றுவரை இந்த விடயம் தமக்குத் தெரியாதென்று வைகோவோ,நெடுமாறனோ புலம்பவில்லை. ஆனால் தாங்கள் தான் தங்கள் பங்கிற்கு புகுந்து விளையாடுகின்றீர்கள்.

நான் ஆரம்பத்திலேயே இதுதான் விடயமென போட்டுடைத்து விட்டேன். ஆனால் 2 பக்கங்களை தாண்டியும், தங்களுக்கு இன்னும் சரியாகப் புரியவில்லையென்பது இப்போது புரிகின்றது.

அண்ணோய் நீங்கள் சிவாஜிலிங்கம்.. வைகோ.. நெடுமாறன் எல்லோரோடும் நெருங்கி இருந்து பெற்றுவிட்டு வைக்கும் கருத்தோடு நாம் கருத்தாட முடியாது. ஆம் நீங்கள் சொல்வது போல் எல்லாம் அவர்களின் தவறே. கருணாநிதி செய்வதெல்லாம் நியாயமே. போதுமா. மனத்திருப்தியா..???! :lol::D:lol:

பல ஈழ தமிழர்கள் கேட்காததை வை.கோ கேட்டுள்ளார். தமிழ் நாட்டில் ஈழ தமிழர்களின் அரசியலை வைத்து மட்டும் அரசியல் நடாத்த முடியாது. இதற்கு நல்ல உதாரணம் ஜெயலலிதா சந்தர்ப்ப வாதியாக மாறி தேர்த்தலில் தோல்வி அடைந்தது. மேலும் பழ நெடுமாறன் அவர்கள் தமிழர்களுக்காக பல காலமாக குரல் கொடுக்கும் ஒருவர். அவரின் அரசியல் கட்சியின் பெயர் என்ன? எனக்கு தெரிந்து அவருக்கு அரசியல் கட்சி இருந்ததாக தெரியவில்லை.எந்த அரசியல் கட்சியுடன் கூட்டாகவும் இருக்கவில்லை. எப்படி அவர் அரசியல் பேச முடியும்?.

இப்போ தெரியுமே யார் மௌனித்தார்கள் என்று?

நுணா.. ஆயிரம் ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக உலகுக்குக் காட்டிக் கொண்டிருந்த கருணாநிதியே உலகத்தமிழர்களின் பாதுகாவலன். அவரை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கோ. வைகோ.. நெடுமாறன்.. சீமான்.. பாரதிராஜா எல்லாம் என்ன செய்தவை. சும்மா ஆக்களை தூண்டிவிட்டு தீக்குளிக்க வைச்சதைத் தவிர. இப்படிச் சொல்லுங்கோ.. இங்க சில பேர் அதுதான் உண்மை என்றும் காட்ட இருப்பினம். இப்படிப்பட்ட ஜென்மங்களோட கருத்தாடி நேர விரயமே அன்றி பலன் ஏதும் இல்லை. :blink::wub:

  • Replies 54
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பக்க வாதத்திற்கு தமிழ்நாடு.. கேரளாவில் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியுமாம்... இது பலரின் வாதம்... இந்த நவீன காலத்தில் அப்படி ஒரு மண்ணங்கட்டியும் இல்லை.... என்பதே சரி...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

பல ஈழ தமிழர்கள் கேட்காததை வை.கோ கேட்டுள்ளார். தமிழ் நாட்டில் ஈழ தமிழர்களின் அரசியலை வைத்து மட்டும் அரசியல் நடாத்த முடியாது. இதற்கு நல்ல உதாரணம் ஜெயலலிதா சந்தர்ப்ப வாதியாக மாறி தேர்த்தலில் தோல்வி அடைந்தது. மேலும் பழ நெடுமாறன் அவர்கள் தமிழர்களுக்காக பல காலமாக குரல் கொடுக்கும் ஒருவர். அவரின் அரசியல் கட்சியின் பெயர் என்ன? எனக்கு தெரிந்து அவருக்கு அரசியல் கட்சி இருந்ததாக தெரியவில்லை.எந்த அரசியல் கட்சியுடன் கூட்டாகவும் இருக்கவில்லை. எப்படி அவர் அரசியல் பேச முடியும்?.

http://www.youtube.com/watch?v=epHQ-_9plNg&feature=channel

இப்போ தெரியுமே யார் மௌனித்தார்கள் என்று?

நான் இங்கு குறிப்பிட்டது யாழ்கள சில அங்கத்தவர்களை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஆரம்பத்திலேயே இதுதான் விடயமென போட்டுடைத்து விட்டேன். ஆனால் 2 பக்கங்களை தாண்டியும், தங்களுக்கு இன்னும் சரியாகப் புரியவில்லையென்பது இப்போது புரிகின்றது.

நீங்கள் ஒரு அறிவுக்கொழுந்து அண்ணை!

எப்பிடித்தான் நீங்கள் உறைக்க உறைக்கச்சொன்னாலும் உந்த,இந்த ஊமல் கோம்பையளுக்கு எங்கை விளங்கப்போகுது :D

உங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் ஆதங்கம் தான் ஏன் என்று புரியவில்லை.

வசம்பு உங்கள் கருத்து புரிகிறது ஆனால்

சுகவீனமான ஒருவருக்கு அவர் சார்பாக வேறொருவர் ஏதோ ஒருவகையில் உதவி செய்வதை தாங்கள் பரிகசிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன்

அவர்கள் செய்வது சரியோ பிழையோ அரசியலோ இல்லையோ அதனால் அந்தத்தாய்க்கு நன்மை கிடைத்தால் நல்லதுதானே

இயலாத ஒருவருக்கு அல்லது இயலக்கூடிய ஒருவருக்கூட அவர் சார்பாக கடிதம் எழுதுவது மனுக்கொடுப்பது வேறொருவராக இருப்பார்

என்பது தாங்கள் அறியாததல்ல. இது நடைமுறைதான் சட்டவிரோதமல்லவே

அவரது பிள்ளைகளின் சார்பாகக்கூட அக்கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாம் அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.