Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா: போரில் விடுதலைப் புலிகளை ராணுவம் தோற்கடித்த கையோடு, வடக்கு இலங்கையில் உள்ள அனைத்து தமிழர் அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து வரும் மே 18ம் தேதியுடன் ஓராண்டு நிறைவுறும் இந்தத் தருணத்தில், தமிழரின் சோகத்தை தங்களின் வெற்றி விழாவாகக் கொண்டாடி வருகிறது சிங்கள பேரினவாதம்.

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின், தமிழரின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளை சிங்கள ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக வல்வெட்டித் துறையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை குண்டு வைத்து தகர்த்தது. பிரபாகரன் கடைசியாக தங்கியிருந்த வீட்டையும் அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

விடுதலைப் போராட்டத்துக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாகம் செய்த திலீபன் நினைவிடம், பல ஆயிரம் புலிகளின் நினைவிடங்கள் என அனைத்தையும் புல்டோசர் வைத்து இடித்து தள்ளிவிட்டது ராணுவம்.

கடந்த மாதம் கிளிநொச்சி, யானைஇறவில் உள்ள நினைவிடங்கள் அழிக்கப்பட்டன.

தற்போது வன்னிப் பகுதியில் முள்ளியவளையில் உள்ள மிகப்பெரிய நினைவிடம் அழிக்கப்பட்டுள்ளது. வன்னி் பகுதி தமிழர்கள் இந்த நினைவிடத்தை புனித இடமாக கருதி வழிபட்டு வந்தனர். அந்த வழியாகச் சென்றால் கூட வணங்கி விட்டுத்தான் செல்வார்கள்.

முள்ளிய வளையில் இருந்த பெண் புலியின் நினைவுத் தூணும் நொறுக்கப்பட்டுவிட்டது.

thatstamil.com

----------------------------------

சம்பந்தன் போன்றவர்கள் இதைப் பற்றியெல்லாம் பேசுற அளவிற்கு தரமிறங்கி வரத் தயார் இல்லை. இதெல்லாம் அவர் பார்வையில் புறக்கணிக்கப்பட வேண்டிய புலிகளோடு சம்பந்தப்பட்ட சின்ன விடயங்கள். ஆனால் போரை முடித்து வைத்ததற்கு சிங்களத்திற்கு பாராட்டும் வெற்றி விழாவை உணர்வு பூர்வமாகக் கொண்டாட ஆலோசனையும் வழங்கி வருகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

இவர்களை எல்லாம் தலைவர் நம்பினார் பாருங்கள்.. அவரைச் சொல்லனும். :wub::(:o

Edited by nedukkalapoovan

தமிழர் வாழ்ந்த அடையாளங்களே இருக்க கூடாது எண்று கங்கணம் கட்டி நிக்கிறது சிங்களம்... தமிழர் தலைமை எண்று சொல்லிக்கொள்ளும் யாரும் இதைப்பற்றி கவலைபடுவதே கிடையாது...

எதையும் அழியவிடாது தடுக்க வளி தெரியாதவர்கள் புதிதாக ஒரு கட்டிடம் எழுவதை தடுப்பதில் மட்டும் தான் குறியாக இருக்கிறார்கள்... ஒருவேளை அழிவை தடுக்க முடியாது ஆக்கத்தை எதிர்த்தால் சிங்களம் செவி சாய்க்கும் எண்று நம்புகிறார்களோ என்னவோ...

எப்படியோ தமிழன் நாசமாக போவதில் யாராவது அரசியல் வியாதி தமிழன் நலன் அடைகிறார்களே எண்று நிம்மதி அடைய வேண்டியதுதான்...

Edited by தயா

வெளிவரும் செய்திகளைப் பாருங்கள்.

கொல்லத்தில்,இத்தாலியில்,மலேசியாவில்,இந்தோனீசியாவில் வெளிநாடுகளூக்கு செல்ல இருந்த இலங்கைக்தமிழர் கைது.

இது ஏறக்குறைய 1976 களில் தொடங்கியது என நினைக்கின்றேன்.அதற்கு முதல் மிக படித்த சிலரும், ஒருசிலர் வியாபாரத்திற்காகவும் வெளிநாடு சென்று வந்தார்கள்.

பின் 70 களில் மேல் படிப்பிற்கென்று ஒரு நடுத்தர வகுப்பினர் கூட லண்டன் போக வசதி வந்தது.அதுவும் பெரிய இலகுவான காரியமல்ல.ஸ்பொன்சர் லெட்டர்,அட்மிசின் காசு,அக்கமடேசன் லெட்டர் என் பெரிய எடுபாடுகள்.(எனது அண்ணரும் அத்தானும் இந்த காலகட்டத்தில் தான் லண்டன் போனார்கள்).அந்த நேரம் லண்டனுக்கு வெளிக்கிட்டு விஸா கிடைக்காத இளைஞர்கள் சிலர் இந்தியா சென்று பாகிஸ்தானூடா மேற்குகுககிற்கு செல்ல வெளிக்கிட்டார்கள்.நான் நினக்கின்றேன் இவர்கள் தான் பெரும்பாலான தமிழர் பின் புலம் பெயர பாதை கண்டுபிதவர்களாவார்கள்.

இப்படி புறப்பட்ட பலர் கப்பலுக்கு போனதும்,ஈரானில் தங்கியதும்(கொமெயினிக்கு முதல்)இத்தாலி,ஜேர்மனி,பிரான்ஸ் என தொடர்ந்து 83 கலவரத்துடன் இலங்கை தமிழருக்கு நாட்டில் பிரச்சனையென்று உலகமறியவெளிக்கிட பின் உலகம் முழுக்க தமிழன் புகலிடம் தேடினான்.

யார் தனது நாட்டை பற்றி யோசித்தான்.ஒரு சிலரை தவிர(ஜ்யரின் பதிவைப் பார்க்கவும்)

இவை இன்னமும் தொடர்வதுதான் சோகத்திகும் சோகம்.பின் யார்தான் தமிழனின் அடையாளத்தை பாதுகாப்பது.நாங்களெல்லாம் ஓடிவந்துவிட்டுஅங்கிருக்கும் இருக்கும் தலைவர்களத் திட்டுவதில் ஒரு பிரயோசனமுமில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.