Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் வசந்தப் பாடல் -- வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வசந்தப் பாடல்

வ.ஐ.ச.ஜெயபாலன்

சுனாமிக்குச் பிந்திய வசந்தத்தில்

மீனவ குப்பங்களில்.

பூத்த மரங்களின் எச்சங்களில்

குயில்கள் பாட

மாலைசூடிய குழந்தைகள்

எசப்பாட்டுப் பாடியதை

கண்ணீரூடு பார்த்தது போல

இன்றும் கரைந்தபடி..

.

மனிதனின் வாழும் ஆசையை

எந்தக் கொம்பனாலும் கொம்பியாலும்

பறித்து விட முடியாது என்றபடி

வருடந் தோறும்

கீரோசீமா நாகசாக்கியில்

செறிகள் மலர்கிறதுபோல

என் மண்ணிலும் முறிந்த வேம்புகள்

மலர்கின்றன.. .

.

இற்றை வசந்த இப்பூந் தென்றலில்

சுட்டெரிக்கப் பட்ட எங்கள்

சோலைகளின் எச்சங்களில்

பிள்ளைகளின் மதளைக் கூவலில் காமுற்று

குயில்கள் பாடுகின்றன

பாதைகளில் கால் மிதிக்க

உயிர் கிழிகிறது.

குலதெய்வங்களின் கல்லறைகளை உடைத்து

எலும்புகளோடும் தலை மயிரோடும்

வீதிகளை நிரவுகிறார்கள் கொடியவர்கள்.

இரணியா இரணியா

எங்கள் பிள்ளைகளின் கனவுகள்

ஒவ்வொரு தூணிலும் இருக்கும்

துரும்பிலும் இருக்குமடா..

சாம்பலை உதறியபடிக்கு

இடிபாடுகளை விலக்கிக்கொண்டு

உயிர்தெழுகிறது வாழ்வு,.

.

ஊர் உலகோடு பாரிபோல் பகைத்த

இருண்ட நாட்களே போ..

எங்கள் கிரேத யுகத்து முதல் வசந்தமே வா..

இற்றை வசந்த இப்பூந்தென்றலில்

வைகலும் சுதந்திர

வாழ்வையே எண்ணினோம்.

  • கருத்துக்கள உறவுகள்

குலதெய்வங்களின் கல்லறைகளை உடைத்து

எலும்புகளோடும் தலை மயிரோடும்

வீதிகளை நிரவுகிறார்கள் கொடியவர்கள்.

அவர்களின் கல்லறைகளும்கூட காவியமாகிறது -- நம்

கால்களைத் தாங்கிடும் சாலைகளுமாகிறது!

ஆம்! அவர்கள் மரிப்பதில்லை.

நன்றி ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே உங்கள் கவிதை சிறந்த கருத்துச் செறிவோடு எழுதப்பட்டுள்ளது. இலையுதிர் காலத்தின் பின் வசந்தம் வருவதுபோல் எம் இனம் உதிர்ந்த கழிந்துபோன வசந்த காலத்தின் சுவடுகளோடு இவ் வசந்தத்தை வரவேற்கத் தயாராகி விட்டோம். முறிந்த வேப்பமரம் பூப்பதுபோல என்ற மண்ணின் மணத்தோடு கவிதையை படித்தேன்.உங்கள் ஆக்கங்களை எல்லாம் படிப்பேன்.பொறுமையாக இருந்து கருத்தெழுத நேரம் கிடைப்பது குறைவு.பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உலகோடு பாரிபோல் பகைத்த

இருண்ட நாட்களே போ..

எங்கள் கிரேத யுகத்து முதல் வசந்தமே வா..

எங்கோ கேட்ட வரிகள்

எதையோ தேடும் நோக்கம்

எங்கோ இடித்தும் - இனி

எவர் வருவார் பதில் சொல்ல ஐயா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவே கண்மணி விசுக்கு, உங்கள் அன்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. கடந்த காலம் (1996-2009) என்னுடைய எழுத்தையும் தொழிலையும் வாழ்வையும் புறக்கணித்துவிட்டு முக்கியமான பணி ஒன்றில் உழைத்தேன். ஆனாலும் கேட்ட்க்க வேண்டியவர்களுக்கு கேட்க்க வேண்டிய நேரங்களில் காதடைத்துப் போய்விட்டதால் என்னுடைய பணிகள் விளலுக்கு இறைத்த நீராயிற்று. எஞ்சிய வருடங்களிலாவது என்னுடைய காலத்தை எதிர்கால சந்ததிக்காக காவியங்களாகவும் நாவலகளாகவும் பதியலாம் என்றால் அதற்க்கான ஆய்வு எழுத்துப் பணிகளுக்கு ஆதரவில்லை. யாழ்க்களத்தின் ஊடாக எனது படைப்புகளை வாசகர்களுக்கு விற்பதன்மூலம் எனது ஆய்வு எழுத்துப் பயணங்களுக்கும் பணிகளுக்கு வளம் சேர்க்கும் முயற்ச்சியும் வெற்றி பெறவில்லை. எல்லா தடவையும் அதே 16 பேர் மட்டும் முன்வந்தனர். என்போலவே பல கலைஞர்கள் நிலையும் இருக்கும் என்பதை உணர்கிறேன். இதுதான் ஈழத் தமிழனின் விதிகளுக்கெல்லாம் அடிப்படையான விதிபோலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரணம் வெற்றிபெற்ற நாட்க்கள் நெருங்க நெருங்க மனசு கனக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கருத்துக்களுக்கு கொலை அச்சுறுத்தலையும் பிளாக் மெயிலிங்கையும் பதிலாக்கி தாக்குதலில் ஈடுபடும் இந்த இணைய பயங்கரவாதத்தை யாழ்க்களம் ஆதரிக்கிறதா மோகன்? யாழ்க்கலத்தை கொலை அச்சுறுத்தல்களுக்கும் பிளாக் மெயிலிங்கிற்க்கும் அனுமதிக்காதீர்கள் இதன் விழைவுகள் பயங்கரமானவை. இத்தகைய ஜனநாயக விரோத பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தமிழர்களது எதிர்காலம் பொறுத்து முக்கியமானது மோகன். ஆராவமுதன் மன்னிப்புக் கோரவேண்டும் அல்லது அவரது பெயரை நீங்கள் வெளியிடவேண்டும். சட்டரீதியாக பெறுவது சாத்தியம். இந்த பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பலத்த மன உளைச்சலையும் தருகிற திட்ட மிட்ட முயற்ச்சி அதிற்ச்சி தருகிறது. உங்கள் பதிலுக்குகாக காத்திருக்கிறேன்.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய மோகன், பெருகும் மன உழைச்சலும் விரக்தியும் ஆழுமையின் ஈடுசெய்யமுடியாத சரிவாகிவிட்டது. உங்கள் மவுனம் சம்மதத்தின் அறிகுறி என்றே நம்புகிறேன். முதற்கண் இந்த இணைய தளத்தை வாசிக்கும் நண்பர்களதும் சட்ட வல்லுனர்களின் ஆலோசனையை கோருகிறேன். உங்கள் ஆதரவுக்கான முகவரி visjayapalan@hotmail.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.