Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்??

ஜனாதிபதிதேர்தலில் தமிழிழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? 28 members have voted

  1. 1.

    • ரணிலுக்கு ஆதரவளிக்கவேண்டும்
      7
    • மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்கவேண்டும்
      5
    • தேர்தலை புறக்கணிக்கவேண்டும்
      16

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அண்மையில் யாழ்ப்பாண மாணவர் பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் வரும் ஜனாதிபதிதேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்கவேண்டும் எண்டு தெரிவித்திருந்தார்கள்,, இது பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்,,,வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? :!: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது பெரிய சிக்கலான விசயம்.

கடசியா தமிழர்களினர் தலையில மிளகாய் அரைச்ச மாதிரித்தான் உது. எந்த முடிவும் சொல்லப்படவில்லை.

ஒருபக்கம் தேர்தலைப் புறக்கணியுங்கள் எண்டமாதிரி எழுதப்படுது. ஆனா விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை வேணும் அவர்களைத் தடுக்கக்கூடாது எண்டும் சொல்லப்படுது.

நான் தாயகத்தில இருக்கிற ஆக்கள் சிலரோட கதைக்கேக்க ஒருத்தரும் தெளிவா இல்லை. சிலர் ரணிலுக்குப்போடுறம் எண்டுகினம். சிலர் ஒருத்தருக்குமில்லை எண்டுகினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தலைப்புறக்கணிக்கவேணும். :?

மகிந்தாவின் வரவால் விபரீதம் நிகழுமென்றால்.. வாக்களிக்கத்தான் வேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கு மகிந்தாவுக்கா. :lol: பழையபடி கிபீருக்கு உயிர் கொடுக்கவா. இப்ப நினைச்சாலும் நடுக்குது. :?

ஐயோ! குய்யோ!! முறையோ!! இது நியாயந்தானோ? :lol:

எங்கள் வோட்டு மகிந்தவுக்கு..! அப்பதான் தமிழீழம் விரைவாக் கிடைக்கும்...ரணில் குள்ளநரி..! :P :wink:

மகிந்தவுக்கு வாக்களிக்க வேணும்,ஏனெண்டால் அப்பத் தான் சர்வதேச ஆதரவு எமது பக்கம் திரும்பும்.ரணில் வந்தால் மீண்டும் சர்வதேசம் பேச்சுவார்த்தை என்று போக்குக் காட்டி , சர்வதேச வலைப் பின்னல் இறுகும்.

ஆனா யாரு வந்தாலும் நடக்கப் போறது ஒண்டு தான் ,

அது தமிழ் ஈழம் மலருவது.அது சண்டை பிடிச்சுத் தான் நடக்கும் எண்டா சண்டை தான்.ரணில் வந்தால் காலம் தாழ்த்தி சண்டை நடக்கும், மகிந்த வந்தால் சர்வதேச ஆதரவு எம் பக்கம்.சண்டை கெதியாக எமக்கு சாதகமாக சர்வதேச ஆதரவோட நடக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் வோட்டு மகிந்தவுக்கு..! அப்பதான் தமிழீழம் விரைவாக் கிடைக்கும்...

ம்.. சண்டையில் நிறைய அப்பாவி மக்களும் செத்தப்போவார்கள். நான் அப்பாவி மக்கள் என்றது இலங்கையில் இருக்கின்ற மக்களை.. லண்டனிலோ சுவிசிலோ கனடாவிலோ உள்ள மக்களை அல்ல;நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.. யுத்தத்தின் எந்த ஒரு கொடுர நேரடி விளைவும் சந்திக்காத இடங்களில் இருந்து கொண்டு.. அதே நேரம் யுத்தத்தின் கொடுரம் எப்பிடியிருக்கும் எண்டதையும் அறிந்து கொண்டு.. எப்படி உங்ஙகளால்.. மகிழ்ச்சி பொங்க கதைக்க முடிக்கிறது இப்பிடி..?

ராஜபக்சவிற்கு இரு வாக்குகள். ஆச்சரியம் தான், ஆனால் விவேகம்மாக வாக்களித்திருக்கிறார்களோ!. எனெனில் ராஜபக்ச வென்றால் தமிழீழம் வெகுவிரைவில் கிடைத்து விடும், ரணில் வென்றால், இடைக்கால சபை, சமஷ்டி என்று காலங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.

ம்.. சண்டையில் நிறைய அப்பாவி மக்களும் செத்தப்போவார்கள். நான் அப்பாவி மக்கள் என்றது இலங்கையில் இருக்கின்ற மக்களை.. லண்டனிலோ சுவிசிலோ கனடாவிலோ உள்ள மக்களை அல்ல;நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.. யுத்தத்தின் எந்த ஒரு கொடுர நேரடி விளைவும் சந்திக்காத இடங்களில் இருந்து கொண்டு.. அதே நேரம் யுத்தத்தின் கொடுரம் எப்பிடியிருக்கும் எண்டதையும் அறிந்து கொண்டு.. எப்படி உங்ஙகளால்.. மகிழ்ச்சி பொங்க கதைக்க முடிக்கிறது இப்பிடி..?

இதற்கு அண்மையில் பொட்டம்மான் பதில் அளித்திருக்கிறார்..! எனி யுத்தம் என்று ஒன்று தொடங்கினால்..அது குறுகிய காலத்தில் தீர்வை எட்டத்தக்க வகையில் முடிக்கப்படும் என்று..! அதுபோக மக்களுக்கும் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன..! வியட்நாம் போல...! :idea:

பல இடத்தில் வழமையாக முரண்படுபவர்கள் இந்தவிடயத்தில் ஒத்த கருத்தை கொண்டிருப்பது பழய கசப்பான கருத்தாடல்களை உணர்ச்சிவசப்பட்டு எழுதிய விபத்தாக கருத இடமுண்டா? :? 8) :lol:

இதற்கு அண்மையில் பொட்டம்மான் பதில் அளித்திருக்கிறார்..! எனி யுத்தம் என்று ஒன்று தொடங்கினால்..அது குறுகிய காலத்தில் தீர்வை எட்டத்தக்க வகையில் முடிக்கப்படும் என்று..! அதுபோக மக்களுக்கும் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன..! வியட்நாம் போல...! :idea:

அப்ப நிர்மலா நித்தியானந்தம் தரப்பினர் உம்மை எடை போட்டது சரியாகத்தான் என்றீர்? :wink: :P

தேசிய தலைவரை எவரும் எடை போடமுடியாது...! போட்டிருந்தா போராட்டம் இந்தளவுக்கு நகர்ந்திருக்காது...! நிர்மலா என்ன நித்தியானந்தன் என்ன...எவரும் நிரந்தர எதிரிகளும் அல்ல...நண்பர்களும் அல்ல...போராட்டத்தைப் பொறுத்தவரை... அடைய வேண்டிய மாறாத இறுதி இலட்சியம் தான் பிரதானம்..! :P :idea:

பல இடத்தில் வழமையாக முரண்படுபவர்கள் இந்தவிடயத்தில் ஒத்த கருத்தை கொண்டிருப்பது பழய கசப்பான கருத்தாடல்களை உணர்ச்சிவசப்பட்டு எழுதிய விபத்தாக கருத இடமுண்டா? :? 8) :lol:
:lol::lol:

ரணிலுக்கு குத்திட்டன்.. :roll:

பல இடத்தில் வழமையாக முரண்படுபவர்கள் இந்தவிடயத்தில் ஒத்த கருத்தை கொண்டிருப்பது பழய கசப்பான கருத்தாடல்களை உணர்ச்சிவசப்பட்டு எழுதிய விபத்தாக கருத இடமுண்டா? :? 8) :lol:

கருத்து முரண்பாடுகள் கருத்துக்களாள்,

கருத்தாடுபவருடன் அல்ல.

கலகம் மாற்றத்துக்கு,மாற்றங்கள் களத்தில் நிகழ்ந்ததனால்

கலகம் இனித் தேவயில்லை.ஆரோக்கியமான கருத்தாடல் களத்தை வளப்படுத்தட்டும்.எதிர்க் கருத்துக்கள் இன்றி கருத்தாடல் இல்லை.எல்லோரும் உறவுகளே.

:lol::lol: :wink:

மேலும் தேர்தலைத் தமிழர்கள் புறக்கணிப்பது ரணிலுக்கே கெடுதலாக அமையும்.அந்த நோக்கதுடனேயே இந்த புறக்கணிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கலாம்.

தேர்தலை புறக்கணிப்பதால் நீங்கள் இனவாதிகளுக்கு நாட்டை ஆளுவதுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறீங்கள்

மகிந்தாவுக்கு போட்டால்

1. நீங்கள் எமது துரோகிகளுக்கு ஆதரவாகச் செயல்பாடுகிறீங்கள் (டக்ளஸ் ஆதரிப்பது மகிந்தாவை அவரின் பிரச்சாரத்தாலதான் மகிந்தா வந்ததெண்டு இன்னும் கொஞ்சம் அள்ளுறத்துக்கு வழி விடுகிறியள்

2. தமிழ்ஈழம் விரைவில் கடைக்கும் என்கிறீர்கள் சாதாரணமாக கிடைக்குமா எவ்வளவு தமிழ் உயிர்கள் இன்னும் இழக்கப்படும் முன்னையபோல் அல்லாமல் இனவாதிகளால் தென்இலங்கையில் இருக்கும் எமது இனங்கள் இன்னோரு 83 யை சந்திப்பதை இவ்வளவு நாளும் அழிந்த உயிர்களே அதிகம்

3. ரணில் - எமது யுத்த துன்பத்pலிருந்து ஒரளவு நிம்மதியை தந்தவர் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஈழம் விரைவில் கிடைப்பதில் ஆவா ஆனா ஈழத்தில் இருப்பவர்களுக்கு யுத்தமின்றி சத்தமின்றி வாழத்தான் விரும்புகிறார்கள் (கொஞ்சநாளுக்காவது ) இந்த சந்தர்பத்தையும் வழங்கிப் பாப்போமே என்னதான் செய்யிறார் எண்டு...............

முகத்தார் இப்படித் தான் சந்திரிகாவுக்கும் முந்திப் போட்டனியள்.இப்படி மாத்தி மாத்தி அவர் செய்வார் இவர் செய்வார் எண்டு நம்பி எத்தனை வருசமா ஏமாறுறுறியள்.

விடிவு நாமாகத் தான் பெற வேணும்.தட்டத்தில தூக்கி ஒருத்தரும் தராயினம்.ஏன் ஆயிதப் போராட்டம் ஏன் இவ்வளவு இழப்புக்கள் எல்லாம் என்னத்துக்கு.சுதந்திரமா வாழத்தானே.சுதந்திரம் இல்லாத சமாதானம் ,சரணகதி அல்லோ.அது தான் வேணும் எண்டா ஏன் போராட்டம்?சண்டை இல்லாம சுதந்திரம் வரும் எண்டா அது எப்பவோ வந்திருக்கும். நாங்கள் எல்லாரும் ஓடி வந்தனாங்கள் தான் சண்டை பிடிக்கச் சொல்ல எங்களுக்கு தகுதி இல்லைத் தான்.ஆனா சண்டை பிடிகிறதா இல்லை சரணகதியா என்டு தீர்மானிக்கிறது இந்தப் போராட்டதுக்காக தங்கட உயிரையும்,உதிரத்தையும் ஈந்தவை, அவர்களின் குடும்பத்தாரும்.அவர்கள் சொல்லட்டும் இந்தப் போராட்டம் வேண்டாம் எண்டு, எல்லாரும் கேக்கிறம்.

இந்தத் தெர்தலில வெற்றி பெற்று ரணில் என்ன தரப் போகுறார் பிரதேசை சபை எண்டு சொல்லுறார்,இதுவோ வேணும் எங்களுக்கு.

நான் இன வெறியன் என்று சொல்லுறவரை இலகுவா அடயாளம் காட்டலாம்.ஆனா நான் சமாதானப் பிரியன் எண்டு சொல்லிக் கொண்டு சர்வதேச பாதுகாப்ப் வலைப் பின்னலை உருவாகிறவனை இலகுவா அடயாளம் காட்டேலாது.சந்திரிகா வரேக்க சமாதானம் எண்டு சொல்லிக் கொண்டு தானே வந்தவா,வந்து என்ன செய்தவா சமாதானத்துக்கான யுத்தம் அல்லோ.

நாரதரே உமது கருத்துத்தான் எந்த ஒரு சுறனையுள்ள தமிழ் மகனும் ஏற்றுக் கொள்வான் எமது போராட்டத்தின் இறுதி என்னவெண்டு எல்லாருக்கும் தெரியும் ஆனா ஒரேயடியாக பெறமுடியாததை படிப்படியாகத்தான் பெற முடியும் ஏனெணில் எமக்கு எந்த ஒரு வெளி நாட்டுச சக்திகளின் ஆதரவுமில்லை நான் இங்கு ரணில் வரவேண்டும் எண்டு வக்காளத்து வாங்கேலை ஆனா மகிந்தா வரப்பிடாது என்பதில்தான் அப்பிடிச் சொன்னன் இனவாதிகள் கூட்டுச் சேர்ந்தவுடனேயே இன்று கொழும்பில் என்ன நடக்கு தமிழ் இளைஞர்கள் எல்லாரையும் யாழ் போகச் சொல்லி ஆயுதக்குழு மிரட்டியிருக்கு இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மிரட்டப்பட்டவர்கள் காணாமல் போவார்கள் யுத்தம் நடந்தால் எமது வெற்றிகள் கிட்டும்தான் ஆனா அதேநேரம் எத்தனையோ தேவைகளுக்காக வெளியிடங்களில் இருக்கும் அப்பாவிகளின் நிலை என்ன முன்னைய போராட்ட காலங்களில் ஈழத்தில் சண்டை நடந்தாலும் வெளியிடங்களில் பயமில்லாமல் தமிழ்ர் போய்வர முடிந்தது இனவாதிகளிடம் நாடு போனால் இப்படியான தன்மை வருமா....................

நான் இங்கு இனவாதிகள் எண்டு கூறுவது ஜே.வி.பி யை

  • கருத்துக்கள உறவுகள்

போடுங்கய்யா வோட்டு மகிந்த மாத்தையவைபார்த்து,,, குத்துங்கய்யா வோட்டு ஒட்டுன்னி தலைவன் டக்கி***சை பார்த்து... 8)

முகத்தார் நீங்கள் பயப்படுற மாதிரி ஒண்டும் நடக்காது எல்லாம் நல்ல படியா நிதானமா படிப்படியா நடக்கும்.சர்வதேசத்தின் கண் இலங்கை மேல் இருப்பதால் 83 போல் நடக்காது.அப்படி நடந்தால் நாடு இரண்டு படும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.மேலும் மகிந்தர் என்ன தான் இனவாதம் பேசினாலும்,கடசியில காசு கொடுக்கிறது வெளி நாடுகள்.பாப்பமேன் என்ன நடக்குது எண்டு.மாவீரர் நாளோட எல்லாம் தெழிவா இருக்கும்.

ஈழம்வாழ் தமிழர்கள் விவேமாகம் என நினைத்துக்கொண்டு ராஜபக்சவிற்கு வாக்குகளை போட்டால் நாம் ஒற்றையாட்சியை ஆதரிக்கிறோம் என ஆகிவிடும். ஆதலால் இவ்தேர்தல் நாளில் நன்கு வீட்டில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

ராஜபக்சதான் வெற்றிபெற வேண்டும் என எல்லோரினதும் அவா, ஆனால் அவர் வட,கிழக்குவாழ் மக்களின் வாக்குகளால் வெல்லக்கூடாது.

தேர்தலை புறக்கணிப்பதால் நீங்கள் இனவாதிகளுக்கு நாட்டை ஆளுவதுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறீங்கள்

மகிந்தாவுக்கு போட்டால்

1. நீங்கள் எமது துரோகிகளுக்கு ஆதரவாகச் செயல்பாடுகிறீங்கள் (டக்ளஸ் ஆதரிப்பது மகிந்தாவை அவரின் பிரச்சாரத்தாலதான் மகிந்தா வந்ததெண்டு இன்னும் கொஞ்சம் அள்ளுறத்துக்கு வழி விடுகிறியள்

2. தமிழ்ஈழம் விரைவில் கடைக்கும் என்கிறீர்கள் சாதாரணமாக கிடைக்குமா எவ்வளவு தமிழ் உயிர்கள் இன்னும் இழக்கப்படும் முன்னையபோல் அல்லாமல் இனவாதிகளால் தென்இலங்கையில் இருக்கும் எமது இனங்கள் இன்னோரு 83 யை சந்திப்பதை இவ்வளவு நாளும் அழிந்த உயிர்களே அதிகம்

3. ரணில் - எமது யுத்த துன்பத்pலிருந்து ஒரளவு நிம்மதியை தந்தவர் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஈழம் விரைவில் கிடைப்பதில் ஆவா ஆனா ஈழத்தில் இருப்பவர்களுக்கு யுத்தமின்றி சத்தமின்றி வாழத்தான் விரும்புகிறார்கள் (கொஞ்சநாளுக்காவது ) இந்த சந்தர்பத்தையும் வழங்கிப் பாப்போமே

என்னதான் செய்யிறார் எண்டு...............

நாமளும் சண்டைய விரும்பல.....

3 வருடங்களிற்கு மேலாக சந்தர்ப்பம் வழங்கியாச்சு- கொஞ்சநாளென்றால் இன்னும் எவ்வளவு காலத்திற்கு?

கொஞ்சநாள் யுத்தமின்றி சத்தமின்றி வாழ்வதா துன்பங்களை இன்னும் ஒரு குறுகிய காலங்கள் சுமந்தபின் காலம் முழுக்க யுத்தமின்றி சத்தமின்றி மகிழ்வுடன் வாழ்வதா சிறந்தது? :idea:

ஒரு விடுதலைப் போராட்டத்தை அரசாங்கங்கள் இழுத்தடிப்பது அப்போராட்டத்திலிருந்து மக்களைப்பிரிப்பதற்கும், அப்போராட்டத்தில் ஈடுபடும் போராளிகளின் மனவலிமையைச் சிதைப்பதற்குமேயன்றி வேறல்லை :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.