Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு விழா: பங்கேற்கும் நடிகர்கள் படங்களுக்கு தென் இந்தியாவில் தடை!

Featured Replies

கொழும்பு விழா: பங்கேற்கும் நடிகர்கள் படங்களுக்கு தென் இந்தியாவில் தடை!

சனிக்கிழமை, மே 29, 2010, 10:15[iST]

சென்னை: கொழும்பு விழாவில் இந்திய திரை நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது. மீறி பங்கேற்போர் படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது, என தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு நிர்வாகிகள் அதிரடியாக அறிவித்துள்ளது.

மேலும், சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் இது தொடர்பாக இந்த விழாவை நடத்தும் முக்கிய அமைப்பான இந்திய ஐ.ஐ.எப்.ஏ. நிர்வாகிகளைச் சந்தித்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாகவும் தென்னிந்திய திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

வரும் ஜூன் 4,5,6 ஆகிய தேதிகளில் இலங்கையில் இந்திய ஐ.ஐ.எப்.ஏ. அமைப்பு சார்பி்ல் சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இதில் இந்திய திரை நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழ்த் திரை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதையடுத்து இந்த விழாவின் சிறப்புத் தூதர் பதவியிலிருந்து அமிதாப் விலகினார். ஆனால் ஷாருக், சல்மான் கான் உள்ளிட்ட இந்தி நடிகர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந் நிலையில் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட திரை அமைப்புகள் கலந்து கொண்ட கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய மொழி படங்களின் படப்பிடிப்புகள், கலை விழாக்கள் எதையும் இலங்கையில் நடத்தக் கூடாது. சர்வதேச திரைப்பட விழாவுக்கு தென்னிந்திய திரைப்படத் துறையினர் ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களின் படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது.

இலங்கையில் விழாவை நடத்தாமல் வேறு எந்த நாட்டிலாவது விழா நடந்தால் தென்னிந்திய சினிமா உலகம் சர்வதேச திரைப்பட விழாவை வரவேற்கும்.

இவ்விழாவை நடத்தக் கூடாதென சர்வதேச இந்திய திரைப்பட அகாதெமி (ஐ.ஐ.எப்.ஏ.) குழுவினரை மும்பை சென்று சந்தித்து வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணன், நடிகர் சங்கம் சார்பில் ராதாரவி, பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரைக் கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படப் பத்திரிகைத் தொடர்பாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து திரை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

http://thatstamil.oneindia.in/movies/news/2010/05/southern-cinema-chamber-ban-actors-attend-iifa.html

தமிழர், குறிப்பாக புலம் பெயர் தமிழர், கொழும்பு விழாவில் பங்குபற்றுபவர்களினதும், அனைத்து ஹிந்தி படங்கள், ஹிந்தி தொடர்களை முற்றும் முழுதாக புறக்கணிக்க முன்வரவேண்டும்.

Edited by ஆராவமுதன்

போகிற போக்கை பார்த்தால் தமிழ் நாட்டுக்கு மீண்டு(ம்) சினிமாக்காரனால் தான் விடிவு (???) வரும் போல இருக்கே !!! :wub::lol::wub:

தமிழர், குறிப்பாக புலம் பெயர் தமிழர், இவர்களதும், அனைத்து ஹிந்தி படங்கள், தொடர்களை புறக்கணிக்க முன்வரவேண்டும்.

புலம் பெயர் தமிழர் வெளியிட்டா ( விநியோகம் ) கூடவா ???

இது பிற மொழிகலைஞர்கள் தமிழனை மதிப்பதில்லை என புலம்புபவர்களுக்காக ஒரு முக்கிய செய்தி இதில் கன்னடம் , மலையாளம் , தெலுங்கு உள்ளது )

செய்தியின் முக்கிய கரு

தென்னிந்தியாவின் பிற மொழிக் கலைஞர்களான மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், நாகார்ஜூன், புனித் ராஜ்குமார் போன்றவர்கள் ஏற்கெனவே இந்த விழாவைப் புறக்கணித்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

முழு செய்தி மற்றும் மூல திரி கீழே

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/05/29-list-participants-iifa-colombo-edition-ban.html

தமிழர், குறிப்பாக புலம் பெயர் தமிழர், கொழும்பு விழாவில் பங்குபற்றுபவர்களினதும், அனைத்து ஹிந்தி படங்கள், ஹிந்தி தொடர்களை முற்றும் முழுதாக புறக்கணிக்க முன்வரவேண்டும்.

முதல் கருநாநிதி குடும்பத்தை *****. அவன் தான் காரணம். துரோகி வட இந்தியருக்கு தமிழனை பதவிக்காக காட்டி கொடுத்தவன்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு இந்தியத்திரைப்பட விழாவில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் விபரம்

கொழும்பில் வரும் ஜூன் 3,4,5 தேதிகளில் நடக்கும் ஐஃபா விழாவில் ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான், கத்ரீனா கைஃப், லாரா தத்தா, ப்ரியங்கா சோப்ரா, அக்ஷய் குமார் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஐஃபா இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில், ஐஃபாவின் புதிய தூதராக சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வட இலங்கையின் நடக்கும் அபிவிருத்திப் பணிகளில் ஐஃபா அறக்கட்டளையுடன் இணைந்து அவர் செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ஷாரூக்கான் பங்கேற்று நடனம் ஆடுகிறார். நடிகைகள் தீபிகா படுகோன், மல்லிகா ஷெராவத், 3 இடியட்ஸ் படக்குழு, சாயிஃப் அலிகான், ஜான் ஆப்ரகாம் போன்ற கலைஞர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

ஐஃபா விழாவில் பங்கேற்கும் இந்திய நடிகர்களின் எந்தப் படமும் இனி தென்னிந்தியாவில் வெளியாகாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்திப் படங்களுக்கு பெங்களூர், மைசூர், சென்னை, ஐதராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி நகரங்கள் முக்கிய வருவாய் ஆதாரங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஷாரூக்கானுக்கு சென்னையில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சன் என அமிதாப் குடும்பத்துக் கலைஞர்கள் மட்டுமே தமிழ் அமைப்புகள் வேண்டுகோளை மதித்து ஐஃபா விழாவில் பங்கேற்க மாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளனர். மற்ற நடிகர்கள் இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

தென்னிந்தியாவின் பிற மொழிக் கலைஞர்களான மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், நாகார்ஜூன், புனித் ராஜ்குமார் போன்றவர்கள் ஏற்கெனவே இந்த விழாவைப் புறக்கணித்துவிட்டதாகக் கூறியுள்ளனர். தங்களின் நிலையை சம்பந்தப்பட்ட திரைப்பட சங்கங்களுக்கும் தெரிவித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதா ரவி நேற்று கூறினார்.

திரையுலக அமைப்புகளின் இந்த அறிவிப்பையும் தாண்டி பாலிவுட் பிரபரலங்கள் ஐஃபா விழாவில் பங்கேற்பார்களா… அப்படி பங்கேற்றால் கண்டிப்பாக தடை அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- http://meenakam.com/?p=17536

வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்!-நமீதா

ஐஃபா விழாவில் பங்கேற்க வருமாறு நடிகை நமீதாவுக்கு ஐஃபா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை புறக்கணித்துள்ளதோடு, தமிழர் நலனுக்கு எதிரான எந்த நிகழ்விலும் நான் பங்கேற்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஐஃபா விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு நடனமாட நடிகை நமீதாவுக்கு ஐஃபா அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக பெரும் தொகை ஒன்றையும் வழங்க இலங்கை அரசு மற்றும் ஐஃபா நிர்வாகம் நமீதாவை அணுகியுள்ளது.

ஆனால், இந்த வாய்ப்பை அவர் ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டார். இதுகுறித்து நமீதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐஃபா விழாவுக்காக என்னை சில தினங்களுக்கு முன்பே அணுகினார்கள். என்னை இந்த விழாவில் நடனமாட அழைத்தார்கள். அதற்காக பெரும் தொகையும் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இங்கே இந்த பிரச்சனை இருப்பது தெரிந்த பிறகும் எப்படி நான் போக முடியும்.

எனக்கு சோறு போட்டது தமிழ் மக்கள்தான். இன்று இந்த அந்தஸ்து வந்தததும் அவர்களால்தான். எனவே யாரும் சொல்வதற்கு முன்பே மறுத்துவிட்டேன். வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

http://meenakam.com/?p=17541

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.