Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே

Featured Replies

யூன் 01, 2010

அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே!

உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள்

கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம்.

இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் ;செலவு செய்யும் நேரத்திற்கும் எமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சம்பந்தமேயில்லாத அளவிற்கு நாங்கள் பல மணித்துளிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இப்போது இடம்பெறும் இந்த நிகழ்வு நூற்றுக்கு மேற்பட்ட எங்களது வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ள படியால் உங்கள் முன் உண்மைகளை வைக்கிறோம்.

தாயகத்தில் எமக்காகப் போராடிய உறவுகள் மௌனித்துப் போனதும் இங்கே நிலைமை தலைகீழாக மாறியது. இந்த மூன்று ஊடகங்களையும் நிர்வகிக்க என தாயகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தனிமனிதனால் அடக்கு முறையாகவே நடத்தப்பட்டு வந்தோம்.

இந் நிலையிலேயே இந்த ஊடககங்களை தனது சொந்தச் சொத்து எனக் கூறி “அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி சுவீகரிக்க முற்பட்டார். எங்களிடமே பலமுறை இது பொதுப் பணமல்ல, எனது சொந்தப் பணம் என்று உண்மைக்கு மாறாக கதைக்க முற்பட்டார். ஆனால் அவர் எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த நிலையிலேயே இந்த மூன்று நிறுவனங்களையும் ஒரு பொது நிறுவனம் கையேற்க வேண்டுகோள் எங்கள் மத்தியில் வலுப்பெற்றது. எங்களது உணர்வுகளைப் பிரதிபலித்து இதையே தான் ரி.வி.ஐ. நிர்வாகமும் தற்போது செய்திருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.

மக்களாகிய நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரி.வி.ஐ. நிர்வாகத்தினர் ஏதோ தனியாகப் பிரிந்து போவதாகக் கூறப்படும் கதையில் உண்மையில்லை. ரி.வி.ஐ நிர்வாகத்தினர் தனியார் கபடமாக அபகரிக்க முற்பட்ட தமிழர்களின் சொத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே முழுப்பிழையும் சி.எம்.ஆர் – சி.ரீ.ஆர் நிறுவனங்களை இப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நபரையே சாரும்.

ரி.வி.ஐ நிர்வாகம் கேட்பது தான் எமது கோரிக்கையும் என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறோம். இந்த மூன்று நிர்வாகங்களையும் ஒரு பொது அமைப்பின் (trustee company) கீழ் கொண்டு வாருங்கள். ஊழியர்களிற்கு தகுந்த சம்பளம் வழங்குங்கள். தனியான ஒரு ஆள் அமைப்பின் பேரால் சுருட்டிச் செல்லும் அநியாயத்தை தடுக்க விரும்புகிறோம்.

ஒரு கிழமையில் ஒரிரு நாட்கள் அலுவலகத்திற்கு வரும் “தாயக அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி 150,000 டொலர்களை வருடச் சம்பளமாகவும் கார், விமானச்சீட்டு என ஏனைய வசதிகளையும் ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு பெற நாங்களோ மணிக்கு 15 டொலர்களையே பெறுகிறோம். இந்த நபர் இரண்டு வருடங்களிற்கு முன்பே திடீரெனக் கொண்டு வந்து புகுத்தப்பட்டவர். ஆனால் நாங்கள் 7 வருடங்களிற்கு மேலாக இந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறோம். இதைவிடக் கொடுமைபல ஊதிய விவகாரத்திலும் ஏனையவற்றிலும் இடம்பெறுகின்றன.

குறிப்பாக 3,500 டொலர்கள் பெறப்படும் ஒரு மணி நேர நேரடி விளம்பர ஒளிபரப்பிற்கு நாங்கள் குறைந்தது 6 மணித்தியாலங்களை அந்த நேரடி ஒளிபரப்பு நடைபெறும் கடையில் செலவளிப்போம். ஆனால் எங்களிற்கு தரப்படுவது வெறும் 100 டொலர்கள் மட்டுமே. இது ஒரு ஜனநாயக விரோத செயலாக இருந்தும் நாங்கள் தொடர்ந்து பணி புரிகிறோம்.

எனவே ரி.வி.ஐ. நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த மூன்று நிறுவனங்களiயும் கனடாத் தமிழ் மக்கள் ஒரு பொது நிறுவனத்தின் மேற்பார்வையில் கொண்டு வந்து தனிநபர்கள் பொது மக்களின் சொத்துக்களை அபகரிப்பதைத் தடுக்க பணிவாக வேண்டிக் கொள்கிறோம்.

இந்தப் பிரச்சினையை மக்கள் முன் கொண்டு வந்து எமது பிரச்சினையை முன்னெடுத்து நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்.

- பாதிக்ப்பட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் விசன் தொலைக்காட்சி, கனடியப் பல்கலாச்சார வானொலி, கனடியத் தமிழ் வானொலி.

www.cmr.fm www.tamilvision.tv www.ctr24.com

வர வர மொட்டை கடிதங்களின் தொகை அதிகரிச்சு கொண்டே போகுது... எழுதியவர்களுக்கு இப்ப எல்லாம் பெயர் எண்ட ஒண்டு கூட இல்லாமல் எவனாவது எவனது பெயரிலையும் எதையும் எழுதலாம் எனும் நிலை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிதனிய கடிதம் எழுது குழப்ப நாள் பிடிக்கும் என ஒரேயடியாக இரண்டு வானொலி, ஒருதொலைகாட்சி என்று ஒரு கடிதத்தில் குழப்ப நினைத்து ஒரு கடிதம், என்னமா யோசிக்கிறாங்கள், யோசிக்கிறதயாவது ஒழுங்க யோசிங்கோவன், தாற காசுக்கு ஏற்றமாதிரி கூவ பழகவும் குடுத்த காசுக்குக்கு மேல கூவிறாண்டா கொய்யாலே. :D:D

என்ன நடக்கின்றது என தெரியாமல் உடனே மறுப்பறிக்கை.பழைய ஞாபங்கள் போலும்.

டாம் எழுதியது அத்தனையும் நூற்று நூறு உண்மை வாயை மூடிக் கொண்டு 7 டொலருக்கு வேலை செய்த உங்களை என்ன செய்வது? அதுவும் கனடாவில் இருந்து கொண்டு.நான் இது பற்றி முன்பும் பெயர்கள் எல்லாம் போட்டு எழுதினேன் நிர்வாகம் தூக்கி விட்டது.எனக்கு இவர்களின் முழுசரித்திரமும் தெரியும்.சீ.எம்.ஆர் அனுமதி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்க மக்களிடம் கையெளுத்து வேட்டையில் திரிந்ததில் நானும் ஒருவன்.அனுமதி கிடைத்ததும் அவர்கள் அராஜக ஆட்சிக்கு வழக்கம் போல் தொடங்கிவிட்டார்கள்.

  • தொடங்கியவர்

இதை நான் எழுதவில்லை. ஈமெயிலில் வந்ததை இணைத்து விட்டேன். அவ்வளவுதான்.

  • தொடங்கியவர்

பிரச்சனை அம்பலத்துக்கு வந்திட்டு பாருங்கோ. சீ.டி.ஆர். இப்ப தங்கட வானொலியில இந்தப் பிரச்சனை பற்றி சொல்லத்தொடங்கிட்டினம். உங்களுக்கு புரியா தெரியா விசயத்த யாராவது சொனஈனா உடனே அவன் துரோகி. உஙஈகளுகஈகு விருப்பம் இல்லாத ஒணஇடை யாராவது சொன்னாலுமஇ அவன் உங்கட பாசையில துரொகிதான். எல்லாரையும் துரோகி துரோகி எண்டு சொல்ல்ிததான் நாங்கள் 30 வருசத்த ஓட்டினம். இனியாவது திருந்தி எல்லத்தையும் கொஞ்சம் நிதானமா யோசிக்கக் முடியலுவோமே...

தூக்கத்தைத்தொலைத்து இரவு பகலாக பாடுபட்ட சீ ரீ ஆர் ஐ உருவாக்கியவன்

எங்கேயோ கிடந்து அல்லல்படுகிறான்

மற்ரவை ம்..ம்...நடக்கட்டும்

என்ன நடக்கின்றது என தெரியாமல் உடனே மறுப்பறிக்கை.பழைய ஞாபங்கள் போலும்.

டாம் எழுதியது அத்தனையும் நூற்று நூறு உண்மை வாயை மூடிக் கொண்டு 7 டொலருக்கு வேலை செய்த உங்களை என்ன செய்வது? அதுவும் கனடாவில் இருந்து கொண்டு.நான் இது பற்றி முன்பும் பெயர்கள் எல்லாம் போட்டு எழுதினேன் நிர்வாகம் தூக்கி விட்டது.எனக்கு இவர்களின் முழுசரித்திரமும் தெரியும்.சீ.எம்.ஆர் அனுமதி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்க மக்களிடம் கையெளுத்து வேட்டையில் திரிந்ததில் நானும் ஒருவன்.அனுமதி கிடைத்ததும் அவர்கள் அராஜக ஆட்சிக்கு வழக்கம் போல் தொடங்கிவிட்டார்கள்.

நீங்கள் ஒருவரை பார்த்து தூற்றினால் அது உண்மை நிதர்சனம் அதையே மற்றவர் உங்களை பாத்து சொன்னால் விசிலடிச்சான்கள்.. படமளிப்வர்கள் அப்படியே...?? நீங்கள் சொன்னால் மட்டும் உண்மை அதையே நாங்கள் சொன்னால் துரோகி பட்டமளிப்பவை...!

யாழில் எதை இனைப்பதாக இருந்தாலும் அதுக்கான இணைப்புக்கள் இருக்க வேண்டும்... இணைப்பு இல்லாமல் கதைகள் கவிகளாக இருந்தால் அவை உங்களதாக இருக்க வேண்டும்... இது எப்படி...?

யாரால் எழுதப்பட்டது...??

என்னடப்பா போற்ற போக்க பார்த்தா ஆபத்தா இருக்கு. இங்க ஜ,பி..சி நொந்து போய் கிடக்கு. ராஜன் தனி ரேடியோ அதுக்கு தாசியஸ் குரல் கொடுக்கிறார்.

நோர்வே தமிழ் பள்ளி க்கூடம் என்ரையா, உன்ரையா எண்டு பிரச்சனை

அப்ப ஒண்டும் தமிழர் சொத்து இல்லை. ஆண்டவனே காப்பாற்று.

  • தொடங்கியவர்

சி.ரி.ஆர். காரர் ஒருக்காலமும் திருந்தபோறதில்லை. சனத்தை முட்டாள்கள் எண்டு நினைச்சுக்கொண்டு இருக்கிறாங்கள்....சீ.டி.ஆர் வானொலியை உருவாக்கி அதை தேசியத்தின் பாதையில திறமையா நடாத்திச்சென்ற கலாதரனை வெளியேற்றி சக்தியா சக்களத்தி சண்டையை உருவாக்கின நேரத்திலயே இந்த வானொலிட சீத்துவம் விளங்கி இத ஓரம்கட்டி இருக்கவேணும். எங்கட சனம் எப்பவுமே டியு!ப்லைட்டுகள்தானே

நோர்வே தமிழ் பள்ளி க்கூடம் என்ரையாஇ உன்ரையா எண்டு பிரச்சனை

நன்றி

எல்லாவற்ரையும் மூடி மறைத்து.

உண்மைக்கு சாவுமணி அடித்து.

முடவர்களுக்கு முடி சூட்டு விழா நடந்தேறும்

முன்வரிசை பிரமுகர்களாக முன் அமர்வதற்கு.

முகவரி அற்ற தமிழர்க்கு முகவரியிட்டு அழைப்பு வரும்.

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.