Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேபிடல் கேட் - மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்!

gallerye_183746835_14486.jpg

துபாய்: அபுதாபியில் கட்டப்பட்டுள்ள "கேபிடல் கேட்" என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்கு "கேபிடல் கேட்'என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன.

அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்த கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதை கட்டுவதற்கு, 10 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்

மேலதிக விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்..

கேபிடல் கேட்

img_location.jpg

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

கேபிடல் கேட் - மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்!

gallerye_183746835_14486.jpg

அரேபியர்களுக்கு இயற்கை கொடுத்த வரமான எண்ணை வள வருமானத்தை வைத்து கடலின் நடுவில் செயற்கையான தீவு,ஏழு நட்சத்திர உல்லாச விடுதி, சாய்ந்த கோபுரம் என்று எவ்வளவு அழகான கட்டிடங்களை கட்டுவிக்கிறார்கள்.

தமிழர்களுக்குத்தான் இயற்கை ஒரு வளத்தையும் கொடுக்கவில்லை.

இணைப்பிற்கு நன்றி ராஜவன்னியன். :)

  • கருத்துக்கள உறவுகள்

அரேபியர்களுக்கு இயற்கை கொடுத்த வரமான எண்ணை வள வருமானத்தை வைத்து கடலின் நடுவில் செயற்கையான தீவு,ஏழு நட்சத்திர உல்லாச விடுதி, சாய்ந்த கோபுரம் என்று எவ்வளவு அழகான கட்டிடங்களை கட்டுவிக்கிறார்கள்.

தமிழர்களுக்குத்தான் இயற்கை ஒரு வளத்தையும் கொடுக்கவில்லை.

இணைப்பிற்கு நன்றி ராஜவன்னியன். :D

இயற்கை வளம் இருந்திருந்தாலும் தமிழர்கள் அதை பாதுகாக்க துப்பில்லாமல்.. ஒற்றுமையில்லாமல்.. ஆளாளுக்கு அந்நியருக்கு அள்ளிக் கொடுத்து தாம் அடிமைகளாக வாழ்ந்து கெட்டிருப்பார்கள். நிச்சயமாக இவ்வாறு முன்னேறி இருக்கமாட்டார்கள். :):huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை வளம் இருந்திருந்தாலும் தமிழர்கள் அதை பாதுகாக்க துப்பில்லாமல்.. ஒற்றுமையில்லாமல்.. ஆளாளுக்கு அந்நியருக்கு அள்ளிக் கொடுத்து தாம் அடிமைகளாக வாழ்ந்து கெட்டிருப்பார்கள்.

தவற விட்டது இயற்கை வளத்தை மட்டுமல்ல... முப்பது வருடங்களாக வழியிருந்தும், பேக்குகளாக ஒற்றுமையில்லாமல் தான்தோன்றித்தனமாக இருந்து, தலைவனை இழந்து இன்னமும் அடிபட்டு, அடிமையாகவே வாழும் இனமாக மாறிக்கொண்டுவருவது கசப்பான உண்மை.

Edited by ராஜவன்னியன்

தமிழர்களுக்குத்தான் இயற்கை ஒரு வளத்தையும் கொடுக்கவில்லை.

யார் சொன்னது?

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று ஒரு கவிஞன் பாடியது கேட்க்கவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.