Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணமேடையில் இருந்து காதலனுடன் வெளியேறிய மணமகள்-எதிர்வீட்டு பெண்ணுடன் மணமகன் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழுப்புரம்: மணமகன் தாலி கட்டும் போது அதை தட்டிவிட்டு விட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண் [^]. தனது காதலருடன் வெளியேறினார். இதனால் மணமகன் தனது எதிர் வீட்டு பெண்ணுக்கு தாலி கட்டினார்.

சினிமாவில் வருவது போன்ற இந்த பரபரப்பான சம்பவம் [^] பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் உத்திராபதி (27). இவருக்கும் அவருடைய மாமா சின்னதுரையின் மகள் சுதாவுக்கும் திருமணம் [^] நிச்சயிக்கப்பட்டது.

நேற்று தியாகதுருகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.

காலை 7.15 மணியளவில் அய்யர் மந்திரம் ஓதி தாலியை எடுத்து உத்திராபதி கையில் கொடுத்தார். அதை சுதாவின் கழுத்தில் கட்ட முயன்றபோது, அதை மணமகள் சுதா தட்டிவிட்டார். கழுத்தில் அணிந்திருந்த மாலையையும் கழற்றி வீசினார்.

மணமேடையில் இருந்து எழுந்து நின்ற சுதா, எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை, திருமணத்துக்கு வந்திருக்கும் அத்தை மகன் பாக்கியராஜை நான் காதலிக்கிறேன், அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

இதனால் மண்டபத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ந்தனர்.

அவரை சமாதானம் செய்ய பெற்றோர் முயன்றனர். ஆனால் பாக்கியராஜையே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிய சுதா, அவருடன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுதாவின் இந்த முடிவால் அதிர்ந்து போன மாப்பிள்ளை உத்திராபதிக்கு அதே மேடையில் திருமணம் செய்ய அவரது பெற்றோரும், உறவினர்களும் முடிவு செய்தனர்.

திருமணத்துக்கு வந்திருந்த மணமகனின் எதிர் வீட்டைச் சேர்ந்த நிர்மலாவின் பெற்றோரிடம் தங்கள் மகனுக்கு பெண் தருமாறு உத்திராபதியின் பெற்றோர் பெண் கேட்டனர்.

நிர்மலாவின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே, நிர்மலா அவசர அவசரமாக திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

வேகவேகமாக அவருக்கு அலங்காரம் நடந்தது. நிர்மலாவுக்கு உத்திராபதி தாலி கட்டினார்.

சினிமா மாதிரி நடந்த இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி முழுவதுமே பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது.

thatstamil.com

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் தான் பிரபல்யமாக வேண்டும் என விரும்பி இருக்கிறார் போல கிடக்குது...கல்யாணத்தில் விருப்பம் இல்லா விட்டால் முதலே மாட்டேன் என சொல்லியிருக்கலாம்...மணமேடை வரை வந்திருக்கத் தேவையில்லை :lol:

வெரி இண்டரஸ்டிங் ஸ்ரோரி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் நடக்கிறது! :lol:

விழுப்புரம்: மணமகன் தாலி கட்டும் போது அதை தட்டிவிட்டு விட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண் [^]. தனது காதலருடன் வெளியேறினார். இதனால் மணமகன் தனது எதிர் வீட்டு பெண்ணுக்கு தாலி கட்டினார்.

...

ஆனால் பாக்கியராஜையே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிய சுதா, அவருடன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார்...

thatstamil.com

நல்ல காலம், ஐயர் அருந்தப்பு... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு வந்திருந்த மணமகனின் எதிர் வீட்டைச் சேர்ந்த நிர்மலாவின் பெற்றோரிடம் தங்கள் மகனுக்கு பெண் தருமாறு உத்திராபதியின் பெற்றோர் பெண் கேட்டனர்.

நிர்மலாவின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே, நிர்மலா அவசர அவசரமாக திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

வேகவேகமாக அவருக்கு அலங்காரம் நடந்தது. நிர்மலாவுக்கு உத்திராபதி தாலி கட்டினார்.

முகூர்த்த நேரம் போறதுக்குள்ளை நிர்மலாவுக்கு அலங்காரம் முடிஞ்சதே பெரிய விசயம்.geburtstag-smiley-76.gif

00010017.gifநிர்மலாவுக்கும், உத்தராபதிக்கும் சாதகப் பொருத்தம் பார்க்கவில்லையோ.......

.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.