Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழக் கோரிக்கையை அழிக்க முடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழக் கோரிக்கையை அழிக்க முடியாது - கல்ப் நியூஸ் (Gulf News)

தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து அழிக்க முடியாது எனவும், அது என்றும் உயிர்வாழ்ந்து கொண்டு இருப்பதால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் எனவும், டுபாயில் இருந்து வெளியாகும் கல்ப் நியூஸ் (Gulf News) பத்திரிகை இன்றைய தனது தனது அபிப்பிராயப் பத்தியில் தெரிவித்துள்ளது.

கொழும்பு அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருந்தாலும், தமிழ் மக்களிடையே தமிழீழக் கோட்பாடு தொடார்ந்தும் கனன்றுகொண்டு இருப்பதால், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தாமதிக்காது விரைந்து நடவடிக்கை எடுத்து இனப்பிரச்சனைக்கு தீர்வைக்காண வேண்டும் என இந்தப் பத்திரிகை கூறுகின்றது.

வரலாறு கடந்த கால அரசியல் எனவும், தற்கால அரசியல் எதிர்கால வரலாறு எனவும் சுட்டிக்காட்டும் பத்திரிகை, தமிழீழக் கோரிக்கை தமிழர் தாயகத்தில் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் வலுவாகக் காணப்படுவதை கடந்த சில மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் உணர்த்தி நிற்பதாகத் தெரிவிக்கின்றது.

முன்னர் வன்முறை கலந்த போராட்டமாகக் காணப்பட்ட தமிழ் மக்களின் விடுதலை முயற்சி, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் நகர்வுகள், நிதி சேகரிப்புக்கள் என்ற புதிய வழி முறைகளில், மிகுந்த பிரயத்தனத்துடன் வெளிநாடுகளில் நடைபோட ஆரம்பித்துள்ளன.

தமிழ் மக்களிற்கான தீர்வை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும். முகாம்களிலுள்ள மக்கள் தாங்கள் முகாம்களைச் சேர்ந்தவர்கள் அல்ல இலங்கையைச் சேர்ந்த குடிமக்கள் என்று எண்ணும் நிலை ஏற்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் அரசியலில் ஈடுபடுவது உடனடித் தேவையாகின்றது. வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, மின்சாரம், குடிநீர், கல்வி போன்றவற்றுடன் தமிழ் மக்களின் வாக்குரிமையும் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இவற்றைச் செய்ய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கால தாமதம் இன்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கல்ப் நியூஸ் தனது அபிப்பிராயப் பத்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி - மனிதனிணையம்

http://gulfnews.com/opinions/editorials/rajapakse-can-t-afford-to-ignore-tamils-1.647976

இந்த மாதிரி செய்திகளை வாசித்து கனவு கண்டுகொண்டிருப்பதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து அழிக்க முடியாது

நான் நினைக்கிறன் விடுதலைப் புலிகள் வீர தீரம் அர்ப்பணிப்பு மற்றும் விடுதலைக்காகப் போராடிய இனங்களின் வரலாறு இவற்றை வைத்து உலகம் எங்களைத் தப்புக்கணக்கு போடுகின்றது. ஆனால் நாங்கள் நாலு நாளில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஓடும் சுயநலக் கூட்டம் என்பது இவ்வுலக்குக்கு தெரியாதோ என்னமோ?

போராட்டம் இன்று தாயகத்திலுமில்லை. புலத்திலுமில்லை என்ற நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் விடுதலைப் புலிகள் வீர தீரம் அர்ப்பணிப்பு மற்றும் விடுதலைக்காகப் போராடிய இனங்களின் வரலாறு இவற்றை வைத்து உலகம் எங்களைத் தப்புக்கணக்கு போடுகின்றது. ஆனால் நாங்கள் நாலு நாளில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஓடும் சுயநலக் கூட்டம் என்பது இவ்வுலக்குக்கு தெரியாதோ என்னமோ?

சரியா சொன்னீங்க அப்பு. தனக்கு யாரும் துரோகி பட்டம் தந்திடுவான்களோ என்ற பயத்திலே மற்றவனை துரோகி ஆக்கும் கூட்டம். :lol: :lol: இவங்களுக்கு எல்லாம் நாடு ஒரு கேடா :lol:

தமிழ்த் தேசியத்திற்கான குறுகிய விளக்கங்கள் தமிழீழம் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகளின் உள்நோக்கங்கள் என்பன ஜனநாயகத்தின் குறியீடுகளாக இல்லை. அதுமட்டுமல்லாமல் அவை மக்கள் சார்ந்ததாகவும் இல்லை. பதிலாக அவை மண் சார்ந்த தாகவே உள்ளன. தமிழ்ப்பிரதேசத்தின் 70சதவீத நிலப்பரப்பின் கட்டுப்பாடு தம்வசம் இருப்பதாகவும் வன்னியில் ஓர் அரசு இருப்பதாகவும் முன்வைக்கப்படும் வாதங்கள் அந்த நிலப்பரப்பில் எத்தனை சதவீத தமிழ்மக்கள் வாழ்கிறார்கள்? இந்த மக்களுக்கும் அங்குள்ள அரசுக்கும் இடையே நிலவும் உறவு என்ன? இவை எதுவுமே முன்வைக்கப்படுவதில்லை. எனவே இம்முரண்பாடுகள் மேலும் மேலும் பல சிக்கலான நிலைமைகளையே உருவாக்குகின்றன. ஒற்றையாட்சிக் கோட்பாடு நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு நம்பிக்கையைத் தரவில்லை.

அதே போன்றே தமிழ்ஈழக் கோட்பாடு சிங்கள மக்களுக்கு சந்தேகத்தையும் வளர்த்துள்ளதே தவிர தமிழ்பேசும் மக்களுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தைத் தரவில்லை. ஆகவே தமிழ்பேசும் மக்கள் புதிய வழிகளில் பிரச்சினைக்கான தீர்வுகளை நோக்கித் தமது கவனத்தைச் செலு;த்தவேண்டும். சுதந்திரத்துக்குப் பின்னர் அமைந்த அரசுகள் மேற்கொண்ட இனவாத அரசியல் சிந்தனைகள் அவர்களது இலட்சியங்களை நிறைவேற்ற உதவவில்லை. பதிலாக நாடு பின் நோக்கித் தள்ளப்பட்டது. இதேபோன்று சிங்கள பேரினவாதத்திற்கெதிராக உருவாகிய தமிழ்த் தலைமைகளால் அப்பேரினவாதத்திற்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தைத் தோற்றுவிக்க முடிந்ததே தவிர உறுதியான தமிழ்த் தேசியக்கட்டுமானத்தை உருவாக்கத் தவறிவிட்டது. இவை யாவும் தோல்வி அடைந்தமைக்குக் காரணம் அவை மக்கள் சார்ந்ததாக அமையவில்லை. பதிலாக இருபுறத்திலும் காணப்பட்ட அதிகார வர்க்கங்கள் தமது இருப்பைப் பேணுவதற்காக மேற்கொண்ட உத்திகளாகும். சிங்களத் தேசியவாத அதிகார சக்திகளும் தமிழ்த் தேசியவாத அதிகார சக்திகளும் ஒன்றில் மற்றொன்று தங்கியே செயற்பட்டன. இன்றும் செயற்படுகின்றன. சாதாரண சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இணைந்து செல்ல முடியாதவாறு இந்த அதிகார வர்க்கங்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. சிங்களவர்களோடு வாழமுடியாதென ஒரு புறத்திலும் தமிழர்கள் சிங்கள தேசத்தைப் பிரிக்கிறார்கள் என மறுபுறத்திலும் இந்த அதிகார வர்க்கங்கள் தமது சூழ்ச்சி அரசியலை நடத்தி வருகின்றன.

இச் சூழ்ச்சி அரசியலில் பலிகொள்ளப்படுவது சாதாரண குடும்பங்களைச் சார்ந்த சிங்கள> தமிழ்> முஸ்லிம் மக்களாகும். இக் கூறுபோடும் அரசியலை இனம்கண்டு அதற்கு எதிராகச் செயற்படவேண்டியது இந்த மூன்று இனஙக்ளிலும் காணப்படும் ஜனநாயக சக்திகளாகும். மக்களின் நலன்களுக்கு எதிராகச் செற்படும் அரசியற் சக்திகளையும் அவர்களது அரசியல் கோட்பாடுகளை யும் நிராகரிக்க வேண்டியது இவ் ஜனநாயக சக்திகளின் கடமையாகும். ஒற்றையாட்சிக் கோட்பாடுகளும் தமிழ் ஈழக் கோட்பாடுகளும் தோல்வி அடைந்துள்ளதை நாம் வற்புறுத்த வேண்டும். கோட்பாடுகள் நிலைக்க முடியாதவை என்பது நிதர்சனமாய் உள்ளதால் தமது இறுதி ஆயுதமாக இராணுவ வலிமையை பயன்படுத்த தயாராக உள்ளனர். இந்த இரு சாராரும் நடத்தும் இப்பேரம் மக்களுக்கு உதவப் போவதில்லை. அப்பாவி மக்களே இக்கொடுமையான பரிசோதனைக்கு இரையாகப் போகிறார்கள். எனவே இதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும்.

இந்த கட்டுரை எழுதப்பட்டது 2006 ஆவணியில்! இதை படித்துவிட்டு கட்டுரையாளர் சிவலிங்கத்தை அரசின் கைக்கூலி என்றும் டக்களசின் ஆள் என்றும் முத்திரை குத்தினோம்! அனால் நடந்தது முடிந்தது என்ன? நாம் இன்னமும் பழைய பாதையில் போய் இன்னுமொரு முள்ளிவாய்கலை திறக்கவே விதண்டாவாதமாக நிற்கிறோம்!

தெடர்ந்து வாசித்தால் இதற்கான விடையும் அன்றே கூறப்பட்டது புலனாகிறது!

இதற்கான ஒரே வழி இலங்கையில் ஜனநாய கத்தைப் பலப்படுத்துவதற்கான மாற்றுவழிகளைத் தேரந்தெடுப்பதுதான். ஒற்றையாட்சியில் காணப்பட்ட இனவாத அம்சங்கள் ஜனநாயக விரோத அம்சங்கள் முற்றாக நீக்கப்பட வேண்டுமாயின் மத்திய அரசில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். குறிப்பாக தமிழ்ப்பிரதேசங்களில் நிர்வாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அங்கு மீண்டும் ஜனநாயகம் தழைக்க வழி கோல வேண்டும். இதன்மூலமே மத்தியில் சர்வாதிகார ஆட்சி தோற்றாமலும் பிரதேசங்களில் பிரிவினைவாதம் தலைதூக்காமலும் தடுக்க முடியும். இவ்வாறான அம்சங்கள் சமஷ்டி ஆட்சித்

தத்துவங்களில் நிறையவே காணப்படுகின்றன. இலங்கையில் சமஷ்டி ஆட்சி தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தைவிட சமஷ்டி ஆட்சித் தத்துவங்கள் இலங்கை அரசியல் அமைப்பில் இணைக்கப்படவேண்டும் என்பதை வற்புறுத்துவதே பொருதத் மான அணுகுமுறையாகவும் இருகக் முடியும.; சமஷ்டிக் கோட்பாடுகள் அல்லது சமஷ்டி ஆட்சி முறை நாட்டுப் பிரச்சினைக்கான வாய்ப்பாக அமையும் என்பது பெரும்பான்மையினரின் கருத்தாக உள்ளது. அதில் சில நியாயங்கள் உண்டு.

ஆனால் இனப்பிரச்சினையின் கூர்மையைத் தணிப்பதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் எடுக்காமல்> முன்வைக்கும் கருத்துகளை இனரீதியாகப் பார்ப்பதும் எதிர்ப்பதும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. உதாரணமாக> அதிகாரப் பரவலாக்கத்

தையோ சமஷ்டி ஆட்சி முறையையோ தாம் ஏற்கப்போவதில்லை எனவும் இவை யாவும் மேலும் இன விரிசல்களை ஏற்படுத்து எனவும் வாதிக்கின்றனர். வடக்கு கிழக்கிற்கு வெளியில் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழ்வதால் வடக்கு கிழக்கிற்கான அதிகாரப் பரவலாக்கமோ அல்லது சமஷ்டி ரீதியிலான தீர்வுகளோ தமிழர்களில் சிறுபான்மையினருக்கான தீர்வாக அமையும் எனவும் இதனால் ஏனைய ஏழு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் வட கிழக்கு மக்களுக்கும் இடையே விரிசல்கள் ஏற்படும் என்பதே அவர்ளது வாதமாகும்.

சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிக் கோட்பாடு களை இனரீதியான பார்வையினூடாக மட்டுமே ஜேவிபியினர் பார்க்கின்றனர். அதற்கு அப்பாலும் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். நாட்டை இனப்பிரச்சினை மட்டுமல்ல> பெரும்பான்மை என்கின்ற சர்வாதிகாரம் ஜனநாயக வழிகளைத் தனது நலன்களுக்கு உபயோகப்படுத்துவதும் நடந்தேறுகிறது. சிங்களப் பெரும்பான்மை என்பது சிறுபான்மை

இனங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. வாக்குப் பெரும்பான்மை என்பதால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி என்ற பேரால் சர்வாதி கார ஆட்சி நிறுவப்பட்டது. இதனால் ஜேவிபியின் தலைவர்கள் ஒழிக்கப்பட்டார்கள். கடந்த 25ஆண்டு களுக்கு மேலாக இலங்கையில் ஒரு நிலையான அரசு தோற்றம் பெறவில்லை. இதன் காரணம் நாட்டில் நிலவிவரும் ஆட்சி அமைப்பு முறையாகும்.

இந்த ஆட்சி அமைப்பு முறை மாற்றப்படவேண்டும் என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியிலே வாழும் ஜனநாயக சக்திகள் மத்தியிலே ஆழமாக வேரூன்றி வருகிறது. இவ் ஆட்சிமுறை மாற்றம் நாட்டின் தேசிய இனங்களின் நலன்களுக்கும் உகந்தது என்பதால் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இவ் ஜனநாயக நீரோட்டத்தில் இணைய வேண்டும். பெரும் சக்தியாக மாற்றம் பெறவேண்டும் இந்த இறுதி நேரத்திலாவது இம்முயற்சிகள் தீவிரமாக்கப்படாவிடில் நிலைமை மோசமாகிவிடும்.

Edited by Bond007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.