Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் மீது வன்முறைத்தாக்குதல்!

Featured Replies

யூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர் தாக்கி உள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து பேர்மிங்காம் கவுன்சிலர் பொலிஸ் மற்றும் மருத்துவ ஊர்திக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

வெள்ளை நிற ரிசேர்ட் அணிந்த குமரன் மற்றும் அவரின் பின்புறமாக உள்ள பச்சைநிற கோடுள்ள ரீசேர்ட் அணிந்த மோகன் ஆகியோர்களும் இந்த நீலநிற வாகனத்தில் வந்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்ட தனம் மற்றும் கமல் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என தேசம்நெற்க்கு தகவல் வழங்கியவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வந்தவர்கள் தங்களுக்கு அறிவிக்காமல் எவ்வாறு கூட்டம் கூட்ட முடியும் என வாக்குவாதப்பட்டதாகவும் அதன் பின் வன்முறையில் இறங்கியதாகவும் தெரிவித்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கைத்தொலைபேசியில் படம் எடுக்கவும் விவாதத்தில் ஈடுபட்டவர் கைவரிசையைக் காட்டி உள்ளார்.

இத்தாக்குதல் சம்பவத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த செல்வா அண்ணாவுக்கு சொண்டு வெடித்து பல்லுடைந்ததாகவும் அதனால் இரத்தம் வெளிவந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவித்தது. மேலும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.

இச்சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் இருவரும் பேர்மிங்காம் பகுதியைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் பற்றியும் வாக்குவாதப்பட்டதாக இன்னுமொரு செய்தி தெரிவிக்கின்றது. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவருக்கு கிடைத்த வாக்குகள் மோசடியானவை என தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டு இருந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

Thanks Thesam.

Edited by Bond007

இச்செய்தி உண்மையானால் .... காஸ்ரோக்கள் திருந்த இடமே இல்லை!!!! பிரான்ஸ், நெதர்லாந்து, .... போன்று தேசங்களில் உள்ளுக்குள் தள்ளப்படும் நிலையை தாமே எடுக்கின்றனர்!!! ... படிப்பறிவற்ற கூட்டம்!!! :(

Edited by Nellaiyan

இச்செய்தி உண்மையானால் .... காஸ்ரோக்கள் திருந்த இடமே இல்லை!!!! பிரான்ஸ், நெதர்லாந்து, .... போன்று தேசங்களில் உள்ளுக்குள் தள்ளப்படும் நிலையை தாமே எடுக்கின்றனர்!!! ... படிப்பறிவற்ற கூட்டம்!!! :(

என்ன குழப்புறீயள்...??

ஆக்களை நல்லா பிரிக்கிறீயள்... இதுவும் ஒரு வகை குழப்பவாதம் தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் முடிந்த பின்னர் சில சலசலப்புகள் வாறது வழமைதானே அதிதானே ஜனநாயகம் , செய்ய வேண்டிய வேலை எவ்வளவோ இருக்கு, உதுகளை விட்டுபோட்டு நாடுகடந்த அரசின் உறுப்பினர்கள் செயலில் தீவிரமாக இறங்க வேண்டிய நேரம் இது, பொழுது போகாதவர்கள் உப்பிடி கதை பேசித்திரியட்டும்.

என்ன குழப்புறீயள்...??

ஆக்களை நல்லா பிரிக்கிறீயள்... இதுவும் ஒரு வகை குழப்பவாதம் தான்...

தயா, ... இச்சம்பவம் நடந்ததென்றால் ... அதை பிழை என்று முதலில் ஒத்துக்கொள்ளுங்கள்! இல்லை இச்செய்தி பொய்மையானால் ... இச்செய்தியை வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கலாம்! ... அதை விடுத்து என்ன உது? பிழையை சொன்னால் அது குழப்பவாதமா???? ... சிங்களவன் எதை விரும்புகிறானே அதை செய்கிறார்கள் இங்குள்ள காஸ்ரோக்கள்! ... என்னைப் பொறுத்தவரை இவர்களுக்கு, இச்சம்பவம் உண்மையாயின், பொலிஸ் நடவடிக்கை எடுப்பின் ... அதனை முழுமையாக ஆதரிப்பேன்! ...

தயா, ... இச்சம்பவம் நடந்ததென்றால் ... அதை பிழை என்று முதலில் ஒத்துக்கொள்ளுங்கள்! இல்லை இச்செய்தி பொய்மையானால் ... இச்செய்தியை வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கலாம்! ... அதை விடுத்து என்ன உது? பிழையை சொன்னால் அது குழப்பவாதமா???? ... சிங்களவன் எதை விரும்புகிறானே அதை செய்கிறார்கள் இங்குள்ள காஸ்ரோக்கள்! ... என்னைப் பொறுத்தவரை இவர்களுக்கு, இச்சம்பவம் உண்மையாயின், பொலிஸ் நடவடிக்கை எடுப்பின் ... அதனை முழுமையாக ஆதரிப்பேன்! ...

இதை யார் செய்தார்கள் அவர்கள் நீங்கள் குறிப்பிடும் ஆக்கள் தான் எண்டு எல்லாம் எப்பிடி முத்திரை குத்துறீயள்....! உங்களை பாத்து அவர்கள் யாராவது துரோகி எண்டுறார்கள் அது பிழை எண்டுறீயள் சரி... அப்படி ஒண்டை நீங்கள் செய்வது எந்தவகையில் சரி...??

உங்களோடை கூட வேலை செய்தவன் ஒருவர் செய்யும் பிழைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பாளி எண்டு சொல்ல வாறியளோ...??

"படிப்பறிவற்ற கூட்டம்!!! -நெல்லையன்

எங்கேயோ இடிக்குது.

"படிப்பறிவற்ற கூட்டம்!!! -நெல்லையன்

எங்கேயோ இடிக்குது.

அட மெத்தபடித்தவர் எண்டு உங்களை பிரகடனப்படுத்தி கொள்ளுகிறீர்களோ...?? :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இப்படியான செய்தி தேசம் நெற்றுக்கு உடனே போகுது ஆனால் 22 இராணுவ காடையரால் வல்லுறவு கொள்ளப்பட்ட தமிழ் யுவதி பற்றி ஒரு செய்தி இல்லை. கிழறி விட வெளிக்கிட்ட கூட்டம் என்று மட்டும் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.