Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தி வெறியர்களின் மற்றுமொரு ஆட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ru2.jpg

வட இந்திய இந்தி ஆதிக்க வெறியின் அடுத்த கட்டம். அமெரிக்கா, பிரிட்டன், யூரோவுக்கு உள்ளது போல் இந்திய ரூபாயுக்கு குறியீடு என்பது இதுவரை இருந்தது இல்லை. அதை போன்று ஒரு குறியீடு தேவை என்று சென்ற வருடம் முடிவு செய்யப்பட்டு, வடிவமைக்க போட்டியும் நடத்தப்ப்ட்டது. இதில் இந்திய மூழுவதும் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த் உதயகுமார் வடிவமைத்த மேலே உள்ள குறியீடு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இது பார்க்க R என்பதின் பாதிவடிவமும் = என்ற குறியீடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் இது "र"இந்தி எழுத்து.

_48369207_009808103-1.jpg

உதயகுமார் தனது பேட்டியிலேயே இதை தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார்.

ஆங்கில நாடுகள் அவர்களின் பொது மொழியில் அவர்களின் பணத்திற்கான குறியீட்டை வைத்துள்ளார்கள். ஆனால் இந்தியாவில் இந்தி இன்னும் பல மாநிலங்களில் பொது மொழியாக ஆங்கிகரிக்கப்படவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் இந்தி எழுத்தை அனைவரும் பயன்படுத்தும் பணத்திற்கு குறியீடாக வைக்கிறார்கள் இந்தி ஆதிக்க வெறியினர்.

இந்தியா என்ற நாடு பல இன மொழி மக்கள் இணைந்து வாழும் நாடு என்று வாய்கிழிய கத்தும் இவர்கள். (Unity in Diversity)இப்படி சொல்பவர்கள் இந்தியாவின் அத்தனை கலாசாரம் மற்றும் பண்பாட்டை வெளிபடுத்தும் ஒரு குறியீட்டை தான் தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆனால் இங்கு அவர்கள் கடைசிகட்டமாக 5 வரைபடங்களை தேர்வு செய்துள்ளனர் அந்த ஐந்துமே இந்த இந்தி எழுத்தை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.

24-rupee-signs200.jpg

இந்த குறியீட்டை இனி அனைவரும் பயன் படுத்த வேண்டும். புறக்கடை வழியாக அனைவரையும் இந்தியை பயன் படுத்தவைக்கும் முயற்சி. இந்த இந்தி ஆதிக்க வெறியர்களின் இந்த முயற்சிக்கு நமது தமிழ் மகனும் துணை போய் உள்ளது தான் மிகவும் கொடுமை. இதற்காக இவருக்கு கிடைத்த பரிசுபணம் இரண்டரை லட்ச ரூபாய்.

udhay.jpg

- தறுதலை

Edited by மதுரை மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

.

திராவிடம் பேசி, முழுத்தமிழனையும் அழிக்க வெளிக்கிட்ட போதே....

இந்த, பம்பாத்து அரசியல் வாதிகள் திருந்தாத பிறப்புகள் என்று தெரியுது.

இதுகள் இதுக்காக தன்னும் குரல் கொடுக்கும் என்று நம்புகின்றீர்களா......

அவிச்ச, சோத்தை சாப்பிட்டுட்டு ஏவறை விடத்தான் லாயக்கு.

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம் மக்கள் தெரிந்து கொள்ளட்டும் இவர்கள் என்று இந்தியை எதிர்ப்பார்கள் என்று ஒன்றும் பேசாமல் வாயை மூடி அமர்ந்து இருப்பார்கள் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய ரூபாய் நோட்டிற்கு புது குறியீட்டை மந்திரிசபையும் அனுமதித்து விட்டதாம். பேரம் பேசி மந்திரி பதவி வாங்கிய தமிழக மந்திரிகள் இந்தி திணிக்கப்படுவது கண்ணுக்கு தெரியவில்லை போலும். எப்படி தெரியும் பேரம் பேசி சோரம் போனவர்கள் தானே.

இந்த் புது குறியீட்டின் அர்த்தம் என்று மூன்று விசயங்கள் சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1."र" என்ற இந்த எழுத்து, தேவநாகரி எழுத்துவடிவம்.

2.மேலே உள்ள கோடு தேவநாகரியில் சிர்ரேகா என்ற தலமை கோடு ஆகும்

3.அதற்கு அடுத்து இடைவெளிவிட்டு கிழே கொடுக்கப்பட்டுள்ள கோடு மேல் கோடு, இடைவெளி அனைத்தும் சேர்த்து மூவர்ணகொடியை குறிக்கிறதாம்.

தேவநாகரி எழுத்து என்று சொல்லும் "र" எழுத்து இன்று வரை பயன்பாட்டில் உள்ள ஹிந்தி எழுத்து. சமஸ்கிருதத்திலும் இதே எழுத்து தான் குறிக்கப்படுகிறது.. இதன் ஒலி தமிழில் "ர"வை ஒத்து வரும். இந்தியாவின் இறையாண்மை அனைத்து மக்களையும் அனைத்து சமூகத்தை காப்பாற்றுவதாக சொல்லும் பொழுது. ஒரு சில மொழிகளில் மட்டும் வரும் எழுத்தை அடிப்படையாக வைத்துக் கொள்ளலாமா.

ஏற்கனவே ஒருத்தர் கேள்வி எழுப்பினார், முதல் மூன்று மொழிகள் என்று சொல்லி. இந்திய தற்போதைய ரூபாய் நோட்டை எடுத்து பார்த்திர்கள் என்றால் அந்த ரூபாய் நோட்டின் மதிப்பை ஒரு பகுதியில் பதினைந்து மொழிகளில் பதிந்து இருப்பார்கள். இப்படி அனைத்து மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்திய ரூபாயை குறிக்க ஒரு சில மொழிகள் பயன்படுத்தும்(வடமொழிகள்) எழுத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கலாமா??

இரண்டவதாக சொல்லி உள்ளதும் தேவநாகரி எழுத்தில் தலைமை வரி கோட்டை குறிப்பிடுகிறார்கள்.. ஹிந்தி யில் கடிதம் எழுதும் பொழுதோ இல்லை ஒரு பத்தியாக எழுதும் பொழுதோ இந்த கோட்டை பயன்படுத்துவதில்லை. ஆனால் ஹிந்தி படிக்க ஆரம்பிக்கும் பொழுது அதாவது தமிழில் அரிச்சுவடி இருப்பது போல் அங்கும் உண்டு. அதில் கோட்டுடன் எழுதத்தான் சொல்லி கொடுப்பார்கள். ஹிந்தி பேப்பர்கள் அனைத்திலும் பார்த்தால் கோட்டுடன் தான் இருக்கும். ஹிந்திக்கு இதற்கும் சம்பந்தமில்லை தேவநாகரி தான் பிரதானம் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள்.

எனென்றால் இன்று வரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவு தேவநாகரி, கிரந்த எழுத்துகள் போன்றவைதான் பழமையானது என்று முடிவுக்கு வந்துள்ளனர். ஆதிச்சநல்லூர் அகல்வராய்ச்சி2005ம் ஆண்டு நடந்தது இன்று வரை அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை (அந்த இடத்தை பாதுகாப்பன பகுதியாக அறிவித்து வேறு யாரையும் ஆராய்ச்சி செய்ய கூடாது என்று தடை விதித்துள்ளனர்). இந்த மொழிகளில் இருந்து தான் அனைத்தும் தோன்றியது என்பது தான் ஆராய்ச்சிகளின் முடிவு. சம்ஸ்கிருதம் தான் முதல் மொழி என்பதை நிலைப்படுத்தவே இந்த குறியீட்டு விளையாட்டு.

அடுத்து மூவர்ணகொடியை குறிக்க இரண்டு கோடுகளும் அதன் நடுவில் உள்ள இடைவெளியாம். மூவர்ண கொடியை குறிக்க கருப்பு கோடுகள். கருப்பு என்பது துக்கத்தை குறிக்க தானே??? சின்ன சந்தேகம் ஹி ஹி ஹி இதைப் பற்றி நான் பேசவேண்டாம் இந்திய தேசியவாதிகள் பேசிகொள்ளட்டும்.

ஒரு நாட்டில் அனைத்து மக்களும் பயன் படுத்தும் பணத்தின் குறியீடு அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அப்படி ஒன்றை வைக்கும் பொழுது அதை ஆதரிக்கலாம்.

இப்படி எழுதுவதால் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு ஹிந்தி எழுதப் படிக்க பேசத் தெரியும். அனைத்து மொழிகளையும் அனைவரும் படிக்க வேண்டும் என்பதே என் வாதம். ஆனால் அது கட்டயமாக திணிக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது.

கடைசி தகவல் ராண்டி என்னும் இந்தி சொல் இதே எழுத்தில் தான் ஆரம்பிக்கும், அதன் தமிழ் அர்த்தம் விலைமாது. பணமும் கைக்கு கை மாறுவதால் இந்த எழுத்தை தேர்ந்து எடுத்து இருப்பாரோ முத்துகுமார்

வாழ்க ஹிந்தியா.

இந்தக் குறியீட்டினை வடிவமைத்த உதயகுமார் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் இருந்து ஒரு சிறு பகுதி

===================

"ஒரு தமிழராக இந்தக் கேள்வியைத் தவிர்க்க முடியலை... தமிழராக இருந்தும் ஏன் இந்தி எழுத்துருவைப் பயன்படுத்தி நீங்க குறியீட்டை வடிவமைச்சு இருக்கீங்க?"

"போட்டியின் நிபந்தனைகளுள் ஒன்று, குறியீடு இந்திய கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்பது!

இந்தி எழுத்துருக்களால்தான் ஒட்டுமொத்த இந்தியாவின் பாரம்பரியம் பளிச்சிடும்னு நம்பி னேன். நம்ம புராணங்கள், வேதங் கள்னு மக்களோட கலாசாரக் கூறுகள் எல்லாமே 'இந்தி'ங்கிற மொழி அடிப்படையிலேயே இருக்கு. பொதுவா, இந்தியாவுக்கு வெளியே, 'இந்தியா'ன்னு சொன் னதும் இந்தி பேசறவங்களும், இந்தி சினிமா உலகமும்தான் நினைவுக்கு வருது. ஓர் இந்தியனா யோசிச்சதால், இந்தியின் தாக்கத்தை என்னால் தவிர்க்க முடியலை. நீங்க ஏன் அப்படிப் பார்க்குறீங்க? ஒரு தமிழன்தான் இந்தி மொழியின் சிறப்பை உலகுக்கு எடுத்துச் சொன்னான்னு பாருங்க. தமிழர்களுக்கு இதில் ஒரு செய்தி... இந்தி நாம் தவிர்க்கக்கூடிய மொழியல்ல. எனக்கு இந்தி தெரிஞ்சதால மட்டும்தான் இந்த வெளிச்சம் சாத்தியமாச்சு! அதே சமயம், தமிழுக்கும் என்னால முடிஞ்ச சேவையைப் பண்ணிட்டுதான் இருக் கேன். இப்போ நான் பண்ணிட்டு இருக்குற பிஹெச்.டி., ஆராய்ச்சிப் படிப்பே தமிழ் மொழி மீதுதான். தோன்றியதில் இருந்து இன்று வரை நாம் எழுதிட்டு இருக்குற தமிழ் எழுத்துக்கள் மாறிட்டே இருக்கு. அந்த மாற்றங்களுக்கான காரணம்பற்றியும் அதில் எந்த எழுத்துக்களை நம்மால் கணினி யில் சுலபமாகப் பயன்படுத்த முடியும் என்பதைப்பற்றிய டைப்போகிராஃபி மீதும்தான் என் ஆய்வுப் படிப்பு!"

நன்றி: விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய விரைவில் இவர் அந்தபல்டி அடித்து தமிழ் எழுத்து " ர" வை இந்தப்பக்கமா திருப்பி போட்டேன் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கில்லை... ஏனெனில் இவரது நதிமூலம் "உடன்பிறப்பு" அதாவது தமிழ் ஈன தலைவரின் சிஸ்ய கோடிகள்.. :( :( :(

ஹிந்தி "ர" என்பதன் மூலம் - ரவுடி அல்லது காட்டுமி"ரா"ண்டி இந்தியர்களின் நாணயம் என்கிறார்கள் போல.

செம்மொழியான தமிழ் மொழியைப் பயன்படுத்துவது தான் அழகு.

செம்மொழியான தமிழ் மொழியைப் பயன்படுத்துவது தான் அழகு.

செம்மொழியான தமிழ் மொழியைப் பயன்படுத்துவது தான் அழகு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.