Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்பாலில் திருக்குறள்.

Featured Replies

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவள் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

மலர்மிசை ஏகினாள் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ்வார்.

கொல்லாள் புலாலை மறுத்தாளை கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்.

+++

நீங்களும் மிச்சம் சொல்லுங்கோ.

Edited by கரும்பு

  • தொடங்கியவர்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மங்கையர்க்கு

கற்றனைத் தூறும் அறிவு.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையாள் அரசருள் ஏறு.

வினைவலியும் தன்வலியும் மாற்றாள் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

.

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

நற்குண நற்செயல்களுடன், தன்னுடைய கணவனின் வருவாய் வளத்திற்கு ஏற்ப, நல்லறம் நடத்துபவளே சிறந்த இல்லத்தரசி ஆவாள்.

தெய்வம் தொழாஅள்; கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

விடிகாலை எழுந்து தன் கணவனை மட்டுமே தொழுது,தன் கடமைகளை செய்யும் கற்புக்கரசியானவள், வேறு எந்த தெய்வத்தை வணங்காத விடத்தும்,பெய் என்று கட்டளை இட்டதும்......... மழை கொட்டோ கொட்டென்று கொட்டும்.

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.

தன்னுடைய கணவன் நல்லறவாழ்வால் தேவருலகம் பெறுவானாயின், அத்தகைய பெருஞ்சிறப்பை நல்லறம் நடத்திய இல்லாளாகிய அவளும் பெறுவாள்.

.

  • கருத்துக்கள உறவுகள்

.

தற்காத்துக் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

தன் கணவுனுக்கு உரியபணிவிடைகளை செய்து..... தன்னையும், தன் கற்பையும் காத்துக் கொள்வதோடு.... எப்பொழுதும் அன்புடன் கூடிய இனிய சொற்களைப் பேசி, சோர்வு இன்றி இல்லறம் நடத்துபவளே நல்லறத்தாள் ஆவாள்.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள, கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெரின்?

ஒரே ஓர் ஆணுடன் உடல் இன்பம் கொள்ளும் கற்பென்னும் நெறியில் உறுதியாக நிற்கக்கூடிய, இல்லாளின் பெருமை தரும் பொருள் ஒருவனுக்கு இவ்வுலகில் வேறு யாது உளது?

.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தாள்

தாளை வணங்காத் தலை.

  • கருத்துக்கள உறவுகள்

.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும், தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

தன் மகன், அற நெறிகளில் உயர்ந்த அறிவுடையவன் என்று அனைவராலும் புகழப் படும் பொழுது, அவனை ஈன்றெடுத்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியிலும் பன்மடங்கு அவன் தாய் மகிழ்ச்சி அடைவாள்.

.

  • கருத்துக்கள உறவுகள்

உலக தமிழ் பொதுமறை எனப்படும் திருக்குறள்.. முப்பால்களை உள்ளடக்கியது. ஆண் பால் பெண் பால் இரண்டுக்கு அது நீதி வகுக்கிறது.

இப்படிப் பெண்பால் என்று காட்டினீங்க.. கற்பு கணவன் பணிவிடை அன்பு போன்ற பெண்கள் இன்று தமது அடக்குமுறையின் சின்னமாகக் கருதச் சித்தரிக்கப்படும் சொற்பதங்களைக் காட்டினீங்க.. உலக தமிழ் பொதுமறை.. என்ற நற்பெயரை திருக்குறள் இழக்க பெண்ணிலைவாதிகள் கிளர்ந்துவிட்டுள்ளமை... கிறுகிறென்று யாழிலும் உயர்ந்திடும்..! :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கண்நிறைந்த காரிகைக் காம்பு ஏர்தோள் பேதைக்குப்

பெண் நிறைந்த நீர்மை பெரிது.

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

அ : . துஆண்டு அவள்செய் தது.

பெண்ணினால் பெண்மை உடைத்துஎன்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.

  • தொடங்கியவர்

நேற்றைக்கு ஏதோ யோசனையில இருந்தபோது இந்த பெண்பால் திருக்குறள் பற்றி சிந்திச்சுப்பார்த்தன். வேறு ஒன்றும் இல்லை. கூட்டிக்கழிச்சுப்பார்த்தால் உண்மையச் சொல்லப்போனால் பழசுகள் பெண்களை நல்லாய் பேக்காட்டி இருக்கிதுகள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைக்கு ஏதோ யோசனையில இருந்தபோது இந்த பெண்பால் திருக்குறள் பற்றி சிந்திச்சுப்பார்த்தன். வேறு ஒன்றும் இல்லை. கூட்டிக்கழிச்சுப்பார்த்தால் உண்மையச் சொல்லப்போனால் பழசுகள் பெண்களை நல்லாய் பேக்காட்டி இருக்கிதுகள். :lol:

அப்படி ஒரேயடியா வள்ளுவர் ஆணாதிக்கவாதி என்று சொல்ல முடியாது. அன்றைய காலத்தின் தேவை அப்படி இருந்திருக்கலாம். இன்றைய காலம் விவாகரத்துக்களால் கள்ளக் காதல்களால்.. பெருகிவிட்ட காலம்.. ஏனெனில்.. திருக்குறள் கூட ஆணாதிக்கமாக சித்தரிக்கப்படும் காலம் என்பதால்.

நாங்கள் பெண்கள் விடுதலை என்று பேசும் அதேவேளை பெண்களால் சமூகச் சீரழிவுகள் பெருகி வருவதைப் பற்றி மூச்சும் விடுவதில்லை. முதலில் அதற்கான விளிப்புணர்வை கொண்டு வந்துவிட்டு பழசுகளை திட்ட ஆரம்பிப்பதே நியாயமானது..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன பெண்களால் மட்டும் தான் கலாச்சார சீரழிவு,கள்ளக்காதல் விவாகரத்து போன்றன ஏற்படுதா?

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன பெண்களால் மட்டும் தான் கலாச்சார சீரழிவு,கள்ளக்காதல் விவாகரத்து போன்றன ஏற்படுதா?

நான் எங்கே பெண்கள் மட்டும் என்று எழுதி இருக்கிறேன். பெண்களால் நிகழ்த்தப்படும் சமூகச் சீரழிவுகள் குறித்தும் பேசுங்கள் என்றே எழுதி இருக்கிறேன். பெண்கள் மட்டுமே சமூகச் சீரழிவை செய்கின்றனர் என்றும் சொல்லவில்லை.. பெண்கள் சமூகச் சீரழிவை செய்யவில்லை என்பது போன்றும் பெண்களின் இன்னொரு முகத்தை மறைக்கவும் முற்படவில்லை அக்கா. :D :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.