Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக நினைவுகள். புகையிரத நிலையங்கள்: வவுனியா-யாழ்ப்பாணம்

Featured Replies

.

JaffnaHindu_NorthRailway_Jaffna02.jpg

மேலதிக படங்களைப் பார்க்க : கிளிக்

வடபகுதி இரயில் பாதையின் இன்றைய நிலை.

நன்றி ‍ யாழ் இந்து இணையத்தளம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஈசன்! படித்த பாடசாலையையும் கொஞ்சம் பார்க்க முடிந்தது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தச்சன்தோப்பு இது நாவற்குளிக் அடுத்ததாகவரும் தொடரூந்து நிலையம். எனக்கும் எனது தம்பிக்கும் சிறுவயது அனேகமாக எனக்கு ஏழுவயதும் தம்பிக்கு ஐந்துவயதும் இருக்கலாம் வருடாவருடம் வரும் வைகாசி விசாகத்துக்க பண்டித்தளைச்சி அம்மன் கோவிலுக்கே எங்களுக்குப் போகக்கூடிய பொருளாதார பலம் எங்கள் குடும்பத்தில் அவ்வேளை இருந்ததில்லை ஒவ்வோர் வைகாசி விசாகத்துக்கும் பௌர்ணமி நிலவு வரும் ஆனால் எங்களால் பண்டித்தளச்சிப்பக்கம் போகமுடியாது. திடுதிப்பென எங்கள் வீட்டுக்கு நால வீடு தள்ளி இருக்கும் பராசக்தி அக்காவின் (பராத்தியக்கா) இளையமகள் நாகேஸ்அக்கா (நாகேசக்கா) தான் தச்சன் தோப்பு கிராமத்தில் அருகில் அமைந்துள்ள வேலம்பரை அம்மன் கோவிலில் வைகாசி விசாகப் பொங்கள் வருடம்தோறும் நடக்கும் அங்குபோகலாம் என ஐடியா தந்தவ அதன்பின்பு ஒவ்வொரு வருடமும் அங்கதான் நாங்கள்போவம். எங்கடைவீடு யாழ் தொடரூந்து நிலையத்துக்கு அண்மையில் இருந்தாலும் அந்தவயசிலை ஒருநாளும் தொடரூந்தில ஏறுனதில்லை. ஆக தொடரூந்துப்பயணத்தின் தொடக்க காலங்கள் இப்படித்தான் எனக்கும் தம்பிக்கும் ஆரம்பித்தது. பின்நேரம் கூட்ஸ் தொடரூந்தில் இறுதியாக ஒரு பயணிகள்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் அதில் ஏறி தச்சக்தோப்பு நோக்கிப் பயணம்செய்ததே எனதும் எனது தம்பியதும் முதல் தொடரூந்துப் பயணமாக இருக்குமென நான் நினைகிறேன். கைவிடப்பட்ட தொடரூந்ததின் ஒரு பipய பெட்தான் அப்போதைய தச்சன்தோப்பு தொடரூந்து நிலையத்தின் அடையாளம் வடக்குப்பக்கம் ஏ9 னும், தெற்கில் வயல்களுடன் தொடங்கி தென்னந்தோட்டத்துடன் தொடரும் குடிமனைகளைக் கடந்து சென்றால் வேலம்பராய் எனும் அழகான கிராமத்தில் ஒரு அம்மன் கோவில் இதில் தான் வைகாசி விசாகத் திருவிழா இரவிரவாக காத்தவராஜன் கூத்து காலையில் பொங்கல்மடை ஒரே அமர்களமாக இருக்கும். இயற்கை எமக்கு இவற்றையெல்லாம் அனுபவிக்கவே அவ்வேளையில் மட்டுப்படத்தப்பட்ட பொருளாதார பலத்தை எமக்கத் தந்ததோ என இப்போது நான் நினைப்பதுன்டு. யுhழ தொடரூந்து நிலையம் பற்றிய நினைவுகள் வரும்போதோ அன்றேல் அதைப்பற்றிய செய்திகள் வரும்போதோ அதன் முன்மண்டபத்தில் நானும் தம்பியும் அம்மாவுடன், வேலம்பராய்க் கிராமம் நோக்கிச்செல்வதற்காக நாகேசக்கா நாகரத்தினம் அக்கா அவரது தாயர் பராத்தியக்கா ஆகியோருடன் காற்றார அமர்ந்திருந்த நினைவுகளே கண்களில் வழயும் கண்ணீருடன் நினைவுவரும். தற்போது காலப்பெரும் சுழலில் தம்பி, அண்ணர், அக்கா, எந்தை, தாய் என இனவழிப்பிற்காய் இரைகொடுத்து, அசைலம் கேட்கும்போது அவர்களது பெயர்களையும் சொல்லி கேவலப்பட்டு வாழவதை நினைக்க எனக்கே வெட்கமாக இருக்கு.

  • தொடங்கியவர்

.

கண்கள் கலங்குகின்றன எழுஞாயிறு.

கோரையான நெஞ்சோடும், ஏக்கத்தோடும் தான் எங்கள் வாழ்க்கை முடியப்போகிறதா ?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யுhழ தொடரூந்து நிலையம் பற்றிய நினைவுகள் வரும்போதோ அன்றேல் அதைப்பற்றிய செய்திகள் வரும்போதோ அதன் முன்மண்டபத்தில் நானும் தம்பியும் அம்மாவுடன், வேலம்பராய்க் கிராமம் நோக்கிச்செல்வதற்காக நாகேசக்கா நாகரத்தினம் அக்கா அவரது தாயர் பராத்தியக்கா ஆகியோருடன் காற்றார அமர்ந்திருந்த நினைவுகளே கண்களில் வழயும் கண்ணீருடன் நினைவுவரும். தற்போது காலப்பெரும் சுழலில் தம்பி, அண்ணர், அக்கா, எந்தை, தாய் என இனவழிப்பிற்காய் இரைகொடுத்து, அசைலம் கேட்கும்போது அவர்களது பெயர்களையும் சொல்லி கேவலப்பட்டு வாழவதை நினைக்க எனக்கே வெட்கமாக இருக்கு.

எழுஞாயிறு உங்கள் எழுத்துக்கள் மனதில் என்றும் மாறாத வடுக்கள்

இருந்தாலும் உங்கள் பெயருக்கேற்றவாறு நீங்கள் மீண்டும் புத்துணர்வுடன் எழவேண்டும்.

நாம் இழந்தவையை ஒரு நாளும் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாது.

ஆனாலும் இனியும் இழப்புக்களைத் தவிர்க்க நாம் மீண்டும் எமது கடமைகளைச் செய்யவேண்டும்.

ஈசன் உங்கள் இணைப்பிற்கு நன்றி.

கண்கள் கலங்குகின்றன எழுஞாயிறு.

கோரையான நெஞ்சோடும், ஏக்கத்தோடும் தான் எங்கள் வாழ்க்கை முடியப்போகிறதா ?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

எமக்கும் ஒரு நாள் விடிவு உண்டு.

அதை விரைவாகப் பெற்று கொள்வதும் நம் கைகளிலே தங்கியிருக்கின்றது

வாத்தியார்

*********

தச்சன்தோப்பு இது நாவற்குளிக் அடுத்ததாகவரும் தொடரூந்து நிலையம். எனக்கும் எனது தம்பிக்கும் சிறுவயது அனேகமாக எனக்கு ஏழுவயதும் தம்பிக்கு ஐந்துவயதும் இருக்கலாம் வருடாவருடம் வரும் வைகாசி விசாகத்துக்க பண்டித்தளைச்சி அம்மன் கோவிலுக்கே எங்களுக்குப் போகக்கூடிய பொருளாதார பலம் எங்கள் குடும்பத்தில் அவ்வேளை இருந்ததில்லை ஒவ்வோர் வைகாசி விசாகத்துக்கும் பௌர்ணமி நிலவு வரும் ஆனால் எங்களால் பண்டித்தளச்சிப்பக்கம் போகமுடியாது. திடுதிப்பென எங்கள் வீட்டுக்கு நால வீடு தள்ளி இருக்கும் பராசக்தி அக்காவின் (பராத்தியக்கா) இளையமகள் நாகேஸ்அக்கா (நாகேசக்கா) தான் தச்சன் தோப்பு கிராமத்தில் அருகில் அமைந்துள்ள வேலம்பரை அம்மன் கோவிலில் வைகாசி விசாகப் பொங்கள் வருடம்தோறும் நடக்கும் அங்குபோகலாம் என ஐடியா தந்தவ அதன்பின்பு ஒவ்வொரு வருடமும் அங்கதான் நாங்கள்போவம். எங்கடைவீடு யாழ் தொடரூந்து நிலையத்துக்கு அண்மையில் இருந்தாலும் அந்தவயசிலை ஒருநாளும் தொடரூந்தில ஏறுனதில்லை. ஆக தொடரூந்துப்பயணத்தின் தொடக்க காலங்கள் இப்படித்தான் எனக்கும் தம்பிக்கும் ஆரம்பித்தது. பின்நேரம் கூட்ஸ் தொடரூந்தில் இறுதியாக ஒரு பயணிகள்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் அதில் ஏறி தச்சக்தோப்பு நோக்கிப் பயணம்செய்ததே எனதும் எனது தம்பியதும் முதல் தொடரூந்துப் பயணமாக இருக்குமென நான் நினைகிறேன். கைவிடப்பட்ட தொடரூந்ததின் ஒரு பipய பெட்தான் அப்போதைய தச்சன்தோப்பு தொடரூந்து நிலையத்தின் அடையாளம் வடக்குப்பக்கம் ஏ9 னும், தெற்கில் வயல்களுடன் தொடங்கி தென்னந்தோட்டத்துடன் தொடரும் குடிமனைகளைக் கடந்து சென்றால் வேலம்பராய் எனும் அழகான கிராமத்தில் ஒரு அம்மன் கோவில் இதில் தான் வைகாசி விசாகத் திருவிழா இரவிரவாக காத்தவராஜன் கூத்து காலையில் பொங்கல்மடை ஒரே அமர்களமாக இருக்கும். இயற்கை எமக்கு இவற்றையெல்லாம் அனுபவிக்கவே அவ்வேளையில் மட்டுப்படத்தப்பட்ட பொருளாதார பலத்தை எமக்கத் தந்ததோ என இப்போது நான் நினைப்பதுன்டு. யுhழ தொடரூந்து நிலையம் பற்றிய நினைவுகள் வரும்போதோ அன்றேல் அதைப்பற்றிய செய்திகள் வரும்போதோ அதன் முன்மண்டபத்தில் நானும் தம்பியும் அம்மாவுடன், வேலம்பராய்க் கிராமம் நோக்கிச்செல்வதற்காக நாகேசக்கா நாகரத்தினம் அக்கா அவரது தாயர் பராத்தியக்கா ஆகியோருடன் காற்றார அமர்ந்திருந்த நினைவுகளே கண்களில் வழயும் கண்ணீருடன் நினைவுவரும். தற்போது காலப்பெரும் சுழலில் தம்பி, அண்ணர், அக்கா, எந்தை, தாய் என இனவழிப்பிற்காய் இரைகொடுத்து, அசைலம் கேட்கும்போது அவர்களது பெயர்களையும் சொல்லி கேவலப்பட்டு வாழவதை நினைக்க எனக்கே வெட்கமாக இருக்கு.

இனிமை எனக்கும் ஊருக்க போக ஆசை ஆனால் பயமாக இருக்கு இன்னும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.