Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுரோட்டில் பிரசவம் துடிதுடித்து இறந்த பெண்

Featured Replies

டெல்லியில் நடுரோட்டில் குழந்தை பெற்ற ஏழை பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து மாநிலங்களவையில் நேற்று காங்கிரஸ் எம்.பி. வேதனை தெரிவித்தார்.

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. அஸ்வினி குமார் நேற்று பேசியதாவது: டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சங்கர் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏழை கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார். ஆனால், அவரை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ஆனால், ஒருவர் கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யவில்லை. சிறிது நேரத்தில் நடுரோட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு, வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது. சிறிது நேரத்தில் அந்த பெண் இறந்துவிட்டார்.

பாலுக்காக குழந்தை அழுதுள்ளது. இறந்து போன பெண்ணையும், குழந்தையையும் தெரு நாய் கூட்டம் சுற்றத் தொடங்கி உள்ளன. அதையும், மக்கள் வேடிக்கை பார்த்தது வெட்கக்கேடானது. யாருமே உதவிக்கு வரவில்லை. போலீசுக்கோ, ஆம்புலன்சுக்கோ தகவல் தரவில்லை. டெல்லிவாசிகளின் மனிதாபிமானம் எங்கே போனது.

மனித உரிமையை நிலைநாட்ட அரசு பாடுபடுகிறது. ஆனால், இதுபோன்ற சம்பவங்களும் இங்கே நடக்கின்றன. டெல்லியில் அபலை பெண்ணுக்கு நேர்ந்த கதி இனி வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அஸ்வினி பேசினார்.

tamilcnn.com

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கூட்டத்தில் ஒருமனிதம ...........கூடவா இல்லை. :o கேடு கேட்ட் இனமா மனித இனம்.

ஒரு இனமே துடி துடித்து அழிந்ததை வேடிக்கை பார்த்த மட்டுமன்றி அப்படி துடி துடித்து அழிபட உதவி செய்த ஒரு தேச மக்களிடம் இருந்து, இதனை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனமே துடி துடித்து அழிந்ததை வேடிக்கை பார்த்த மட்டுமன்றி அப்படி துடி துடித்து அழிபட உதவி செய்த ஒரு தேச மக்களிடம் இருந்து, இதனை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? :o:wub:

ஆமாம் அண்ணா நீங்கள் எழுதியது முற்றிலும் உண்மையான வரிகள்.நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெல்லியில் நடுரோட்டில் குழந்தை பெற்ற ஏழை பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து மாநிலங்களவையில் நேற்று காங்கிரஸ் எம்.பி. வேதனை தெரிவித்தார்.

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. அஸ்வினி குமார் நேற்று பேசியதாவது: டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சங்கர் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏழை கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார். ஆனால், அவரை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ஆனால், ஒருவர் கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யவில்லை. சிறிது நேரத்தில் நடுரோட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு, வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது. சிறிது நேரத்தில் அந்த பெண் இறந்துவிட்டார்.

பாலுக்காக குழந்தை அழுதுள்ளது. இறந்து போன பெண்ணையும், குழந்தையையும் தெரு நாய் கூட்டம் சுற்றத் தொடங்கி உள்ளன. அதையும், மக்கள் வேடிக்கை பார்த்தது வெட்கக்கேடானது. யாருமே உதவிக்கு வரவில்லை. போலீசுக்கோ, ஆம்புலன்சுக்கோ தகவல் தரவில்லை. டெல்லிவாசிகளின் மனிதாபிமானம் எங்கே போனது.

மனித உரிமையை நிலைநாட்ட அரசு பாடுபடுகிறது. ஆனால், இதுபோன்ற சம்பவங்களும் இங்கே நடக்கின்றன. டெல்லியில் அபலை பெண்ணுக்கு நேர்ந்த கதி இனி வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அஸ்வினி பேசினார்.

tamilcnn.com

இன்றிய நாகரிக உலகத்தில் நடக்கும் அநாகரிக நிகழ்சியால் இறக்கும் மனிதம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பெற்றோர் இந்தியாவில் இருந்தபோது என் தந்தைக்கு ஐம்பது நாலு வயது. மதுரையில் இரண்டு வருடமாக இருந்தார்கள் (வெளிநாடு வர முன்பு). மது சிகரட் எதுவும் இல்லை, திடீரென்று மார்புவலி(ஹார்ட் அட்டாக்) வந்து ரோட்டில் விழுந்து விட்டார். கூட்டம் கூடியதே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை, அதிர்ஷ்ட வசமாக தெரிந்த ஒருவர் தற்சமயம் அந்த வழியால் வந்தார், உடனே தனது சயிக்கிளில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயி சேர்த்தார். பிறகு மாறு அறுவை சிஹிச்சை செய்யபட்டது(தனியார் மருத்துவ மனையில்) உயிர் பிழைத்தார், ஆனால் இருதயம் ஒருபக்கம், மிக பாதிக்க பட்டுவிட்டது. உடனேயே மருத்துவமனைக்கு யாராவது கொண்டு சேர்த்து இருந்தால். இருதயம் பழுதடைத்து இருக்காது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இது நடந்தது எண்பத்து எழாம் ஆண்டு.

அதன் பிறகு எனது தந்தையாரின் இருதயம் ஏழு வருடமே தாக்கு பிடித்தது.

இந்தியர்கள் மன்னிக்கவும். எமது அனுபத்தின்படி பெரும் பாலானவர்கள், போலிஸ் கேஸ் வரும் என்று பயந்து யாரும் உதவ முன்வரவில்லை.

ஆனால், ஒரு இந்திய பெண்மணிக்கு அதுவும், ஒரு குழந்தையை பிரசவிக்கும் பொது உதவாத மனிதர்கள் இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறார்களா? அல்லது மனித சமுதாயமே சுயநலம் பிடித்த மிருகங்களாக மாறுகிறதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய திரைப்படங்களில் வரும் கதை போல் உள்ளது.

அந்த தாய்க்கு எனது அஞ்சலிகள் :rolleyes:

ஐயோ! மகா கொடுமை!!!

இந்திய தலைநகரத்து மக்களும் மனிதாபிமானம் இல்லாதவர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.