Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

18வது சீர்திருத்தம் எவ்வாறு தமிழர்களை பாதிக்கும் - கூட்டமைப்பு சட்டரீதியாக விளக்கம்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 7, 2010 ஈழ நாதம்

புதிய அரசியல் சீர்திருத்தம் நூற்றுக்கு நூறு ஒர் சர்வாதிகார தன்மைக்கு இட்டு செல்கின்றது சட்டத்திருத்தம் பதவியில் உள்ள ஜனாதிபதி இரண்டு தடவைகளுக்கு மேலும் பதவி வகிக்க வகை செய்து சர்வாதிகாரத்துக்கு வழி கோலுகிறது . நிறைவேற்று, நீதி அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட அலகுகளில் அரசியல் செல்வாக்குக்குவகை செய்யும் பகுதிகளை உள்ளடக்கியதால் ஜனநாயக ஆட்சி முறைக்குக் குந்தகம் ஏற்படுத்துகின்றது.

13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நற்பலன்களையும் ஊறுபடுத்துகின்றது. இதனால் கூட்டமைப்பு இந்த சீர்திருத்தத்தினை எதிர்க்கின்றது என கூறியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் கொழும்பு அலுவலகத்தில் நேற்றுமாலை 5 மணிக்கு ஆரம்பமாகி 7 மணி வரை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதி ராஜா, சுரேஷ் பிரே மச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவண பவன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராஜா, அ.விநாயகமூர்த்தி, பொ.பியசேன ஆகியோர் கலந்துகொண்டனர். வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட காரணத்தால் எஸ். யோகேஸ்வரன், வினோ நோதராகலிங்கம், எஸ்.சிறிதரன் ஆகியோர் இதில் பங்கேற்க முடிய வில்லை. சுகயீனம் காரணமாக சென்னையில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வழிகாட்டலிலேயே இக்கூட்டத்தின் முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட உள்ள 18 ஆவது அரசமைப்புத் திருத்தம் ஒருவர் ஜனாதிபதியாக இரண்டு தடவைகளுக்கு மேலும் பதவி வகிக்கலாம் என்பதையே உள்ளடக்கியதாகக் கூறப்பட்டாலும், அது பல்வேறு வகைகளிலும் தமிழர்களின் நலனுக்கும், நாட்டு மக்களின் நலனுக்கும் பாதகமான அம்சங்களையே கொண்டுள் ளது.

பேரளவில் ஐவர் குழு

13 பக்கங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள 18 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் ஒரே ஒரு வரி மாத்திரமே ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் தடவைகளை அதிகரிப்பது பற்றி கூறுகிறது. இது தவிர அது இன்னும் பல விடயங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக 17 ஆவது அரசமைப்புத் திருத் தம் ஊடாக கொண்டு வரப்பட்ட அரசியல் சாசன சபையை இல்லாமல் செய்கிறது. இதனூடாக நாட்டின் நிர்வாக மட்டத்தின் அதியுயர் பதவிகளுக்கான சகல நியமனங் களையும் மேற்கொள்ளும் அதிகாரம் ஜனா திபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் என் பவற்றுக்கான நீதிபதிகள், தேர்தல் ஆணையாளர், பொலிஸ்மா அதிபர் போன்ற சகல உயர் நிலைப்பட்ட நிய மனங்களும் ஜனாதிபதியே வழங்க, 18 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வழி செய்கிறது.

பேரளவில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட் சித் தலைவர் மற்றும் பிரதமராலும் சபா நாயகராலும் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் கொண்ட ஐவர் இந்தக் குழுவில் இருப்பர். இது பேரளவில் மட்டுமே இருக்கும். இந்தக் குழுவுக்கு தலைவர் கூட கிடையாது. இந்தக் குழுவின் கருத்தையோ, சிபாரிசையோ ஜனாதிபதி கேட்க வேண்டும் என்ற கட் டாயமும் இல்லை. எனவே, தான் விரும்பிய நபர்களை, விரும்பிய பதவிகளுக்கு ஜனாதிபதி நியமிக்கலாம்.

மாகாண பொலிஸ் ஆணைக்குழு அற்றுப்போகிறதுதேசிய பொலிஸ் ஆணைக்குழு என்ற விடயமும் ஒழிக்கப்பட்டு, இது தொடர்பான சகல அதிகாரங்களும் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதே வேளை, பொலிஸ்மா அதிபர் ஜனாதிப தியால் நியமிக்கப்பட்டவராகவே இருப்பார். இதனூடாக பொலிஸ் அதிகாரமும் ஜனாதிபதியின் கையிலேயே இருக்கும். தேசிய பொலிஸ் ஆணைக்குழு என்ற விட யம் இல்லாமல் செய்யப்பட்டதன் ஊடாக 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் உள்ள மாகாண பொலிஸ் ஆணைக்குழு என்ற விடயமும் இல்லாமல் செய்யப்பட் டுள்ளது.

13 ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்கள் பறிப்பு

இதே போன்று மாகாண பொது நிர்வாக ஆணைக்குழுவும் இல்லாமல் செய்யப் பட்டுவிட்டது. 13 ஆவது திருத்தச் சட் டத்தை நிறைவேற்றுவோம்; அதற்கப்பா லும் பல விடயங்களைக் கொடுப்போம் என இது நாள் வரையும் இலங்கை அரசு கூறி வந்தது. ஆனால் இப்போது 18 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பல விடயங்கள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழர்களின் அதிகாரப்பகிர்வுக்காக பாடுபடக் கூடிய கட்சிகள் எதுவும் 18 ஆவது அரச மைப்புத் திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முடியாது.

தமிழர் நலனைப் பாதிக்கும் வகையில் 18 ஆவது அரசமைப்புச் சட்டத்தை கொண்டு வந்து, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்களை இல்லாமல் செய்வதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இன்னும் அதிகதொலைவுக்கு அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது.

ஆதரித்தால் அது வரலாற்றுத் தவறு

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதன் பங்குதாரராக மாறமுடியாது. அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத் துமாறு கோரும் சில தமிழ்க் கட்சிகள் கூட 18 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட் டத்தை ஆதரிக்க முடியாது.

ஏனென்றால் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை எல்லாம் புதிய திருத்தச் சட்டம் பறித்துவிடப் போகிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்தபோது அது ஜனநாயகத் துக்கு எதிரானது என்று எதிர்த்தவர் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஆனால் இப்போது கொண்டுவரப்படும் திருத்தம், அதைவிட மோசமாக ஜனநாய கத்தைப் பாதிக்கக் கூடியது. 18 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பது என்பது வரலாற்றுத் தவறாகவே அமையும். தமிழ் மக்களுக்காக உழைக்கும் எந்தவொரு கட்சியும் இத்தகைய வரலாற்றுத் தவறை செய்ய முடியாது.

ஆகவே சிறுபான்மை மக்களின் உரிமைகளை மிகமோசமாகப் பாதிக்கக் கூடிய, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கக் கூடிய 18 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முடியாது; அதனை எதிர்ப்பது என்ற முடிவினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளது என்றார்.

ஈழ நாதம்

,

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கக் கூடிய 18 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முடியாது; அதனை எதிர்ப்பது என்ற முடிவினை தமிழ்த்தேசிய

எதோ ஜனநாயகம் இருப்பது போலவும் இப்பதான் குழிதோண்றி புதைக்கப்படுகிற மாதிரியல்லோ இருக்கு இவர்களின் அறிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிதான் ஜனநாயகத்தை பாய்ஞ்சு பாய்ஞ்சு மேய்ஞ்சுது..............

இப்பதான் புலியே இல்லையே............... இப்பவும் ஜனநாயகத்திற்கு பிரச்சனையா? ஒன்ணுமே புரியுதில்ல

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி எத்தனை வரலாற்றுத் தவறுகளை இழைச்சாச்சு.இப்ப என்ன புதுசாய் இருக்குது? இப்ப என்ன மகிந்த நினைச்சதைச் செய்ய ஏலாமலோ இருக்கிறார்?மகிந்த 3அல்2 பெரும்பான்மை பெற்றால் தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வை அரசியல் திருத்தத்துனூடாக வழங்குமாறு சர்வதேசம் வலியுறுத்தலாம்.கூத்தமைப்பு நம்புற இந்தியாவே அதை வற்புறுத்தலாம்.மகிந்தர் சாட்டுச் சொல்ல முடியாது.அப்படியொரு சங்கடமான நிலைக்கு இந்தியாவைத் தள்ளி விடாமல் இருக்க கூட்டமைப்பு விரும்புகிறதா?இப்ப இருக்கிற நிலைiயில் சிறிலங்கா எதைச் செய்தாலும் தமிழருக்கு விமோசனமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உந்தச் சட்டங்களும் சரத்துக்களும் இருக்கிறதாலை தான் எல்லாரும் அந்தச் ச்ட்டம் இந்தச் சரத்து எண்டு பிரச்சனையைக் கிளப்பினம்.

அது தான் மகிந்த பார்த்தார் எல்லாத்தையும் எடுக்கிறார்.

மீண்டும் ஒரு மாதனமுத்தா

வாத்தியார்

*********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.